Tamil Sanjikai

மூச்சுத் திணறல் காரணமாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் பரோக் இ உத்வாடியா கண்காணிப்பில் லதா மங்கேஷ்கர் சிகிச்சையில் உள்ளார்.

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பின் பாடத்திட்டத்தையும் தேர்வு முறையையும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) திருத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பாடநெறியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும். …

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை மோசமாக உள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். …

அரசின் நிர்வாக சுணக்கத்தால் (procrastination) அந்நாட்டின் பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. …

மராட்டிய மாநிலத்தில் வேகமாக மாறிவரும் அரசியல் முன்னேற்றங்களை அடுத்து, இதுகுறித்து ஆலோசிக்க டெல்லியில் அவசரமாக காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது. …

சென்னை விமானநிலையத்தில் ரூ. 71.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 63.6 லட்சம் மதிப்பிலான இரானியன் குங்குமப்பூவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். …

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் வீடு புகுந்து மூதாட்டி மீனாட்சியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு 15 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்றுள்ளார் …

கள்ளக்குறிச்சி அருகே வாகன சோதனையின் போது போலீசார் தடுத்ததில் மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். …

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக கிடைத்த செய்தியை தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேலையில் ஈடுபட்டுள்ளனர் இந்திய ராணுவத்தினர். …

இஸ்ரேல் நாட்டில், புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் , பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகித்து வந்த அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். …

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி, சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை தமிழக அரசு பேணிக் காத்து வருகிறது. …

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில், கடந்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. …

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், இந்து-முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- …

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்து உள்ளது. …

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த எப்-16 ரக விமானத்தை இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தார். இந்த நடவடிக்கையின் போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பாராசூட் மூலம் இறங்கிய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர். …

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. …

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. …

பரத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் சிம்பா இவர் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘ராதே’ என்ற படத்தில் நடிக்க பரத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். …

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் கடந்த அக்டோபர் 20ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் ஆளும் MAS-IPSP கட்சியைச் சேர்ந்த அதிபர் ஈவோ மொராலெஸ் 47.08% வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தல் முடிவுகளில் முறைகேடு ஏற்பட்டதாக எதிர்கட்சியின் அதிபர் வேட்பாளரான கார்லோஸ் மேசா-வின் ஆதரவாளர்களுக்கும், அதிபர் ஈவோ மொராலெஸ்-ன் ஆதரவாளர்களுக்குமிடையே போராட்டம் வெடித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வந்த இப்போராட்டத்தில் கார்லோஸ் மேசா-வின்ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டதாக …

நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.69 ஆயிரம் கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், விருப்ப ஓய்வு திட்டமும் அடங்கும். …

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா …

சென்னை ராயப்பேட்டை அருகே வாகன சோதனையின் போது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டார். …

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று, தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நாசர், கார்த்தி உள்ளிட்டோர் வடபழனியில் பேட்டியளித்தபோது, நாசர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

கோவை மாவட்டத்தில் மிலாதுன் நபி தினத்தன்று மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி உத்தரவிட்டுள்ளார். …

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் பட மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியாகியுள்ளது.. …

சென்னை ஆலந்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தல் ஆலந்தூர் - கத்திப்பாரா பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. …

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவருடைய மகன் ராஜ். இவர் விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோடு மூன்று லாம்ப் பஸ் நிறுத்தம் பகுதியில் ரத்தினா என்ற பெயரில் நகைக்கடை ஓன்று வைத்து உள்ளார். நேற்று முன்தினம், இரவு ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்து சென்ற பின்னர் இவர் கடையை வழக்கம்போல் பூட்டுப்போட்டு பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். …

ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்‌ஷ்மி என்பவர் நேற்று தனது 11 மாத குழந்தை மோகாரினிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். …

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான வரலாற்று பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி வர்ணனையாளராக அறிமுகமாகலாம் என்ற தகவல் …

அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர்கள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. …

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் இன்று வெளியிடவுள்ளனர். …

நடிகை இஷா கோபிகரும் தற்போது பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் நெஞ்சினிலே படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர். பிரசாந்த் ஜோடியாக காதல் கவிதை, அரவிந்த சாமியுடன் என் சுவாச காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். …

மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் …

சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி அனுப்பப்பட்ட விண்கலம் வாயேஜர் 2. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கிரகங்களையும் மிக அருகில் நெருங்கி சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் இதுவாகும். …

மூன்று நாள் சுற்று பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடி, இந்தியாவின் நலன் கருதி, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து இருக்கிறார். …

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதியை காப்பாற்றுங்கள் என்று டெல்லி ஆளுநர் அனில் பெய்ஜால் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.56 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு தங்களுக்கு …

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. …

தெலங்கானாவில் லஞ்சம் கேட்டதாக பெண் வட்டாட்சியர் ஒருவரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. …

சர்வதேச அளவில் பிரபலமான நடிகைகள் ஒரு சிலரே உள்ளனர். அதில் முக்கியமாணவர்களில் ஒருவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தி ஒயிட் டைகர் என்கிற நெட்ஃபிளிக்ஸ் தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,300 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. …

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிகளில் அதிக ரன்கள் குவித்து கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். …

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி பெற்றுள்ளன. …

ஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் கருத்த பின்னனி மற்றும் கருத்த ஸ்ப்ளாஷ் திரைகளுக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளது வாட்ஸ்ஆப். …

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் நாடோடிகளின் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதில் பிரபல இயக்குனர்கள் பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். ஏ.எல் விஜய் , கௌதம் மேனன், பிரிய தர்ஷன் உள்ளிட்ட பலர் இயக்குனர்கள் ஜெ வாழ்க்கை வரலாற்றை இயக்க தயாராகவுள்ளனர். …

இந்தியாவின் உள்கட்டமைப்பு உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீதம் சரிந்து உள்ளது. இது இந்த ஆண்டின் மிக மோசமான செயல்திறன் ஆகும். தொழில்துறை உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மிக விரைவான விகிதத்தில் குறைந்து உள்ளது. …

விக்ரம் நடித்த தூள் படத்தின் ‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. …

குடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பீகார் மாநில போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். …

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் இருவரும் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவிருப்பதாக உறுதியளித்துள்ளனர். …

இன்று தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று காஷ்மீரில் உள்ள பள்ளிக்கு பயங்கரவாதிகள் தி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பெரியநாயக்கன்பாளையம் அருகே நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண் ஒருவர். …

கடந்த 2012 ஆம் ஆண்டின் நிர்பயா பலாத்கார வழக்கில், சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான அனைத்து வழிமுறைகளும் முடிந்து விட்டதாகவும், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் (வயது 74) கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில், …

இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக 3 -இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. …

ஜார்க்கண்டில் பா.ஜனதா அரசின் பதவி காலம் வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். …

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். …

இந்தியாவில் ஏ.டி.பி. 1000 ரோலக்ஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா …

2024ஆம் ஆண்டில், மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக புதன் கிழமை நடந்த ஆண்டுக் கூட்டத்திலும் …

பிரதமர் மோடி சவுதி அரேபிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா - சவுதி அரேபியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. …

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கட்டப்படவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். …

மகாராஷ்டிராவில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தபின் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். …

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்ட முறைப்படி 2 யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிந்த நிலையில், நாட்டின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. …

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. …

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் ஓன்று நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். …

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி (வயது 50). இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன்கள் பாபு(26), மாதவன். …

வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் சிறை காவலை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.280 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தது. இதனிடையில், நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடியின் சொத்து மற்றும் ஆவணங்களை கைப்பற்றி, அவர் மீது வழக்கு பதிவு செய்து …

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் பகல்-இரவு டெஸ்ட போட்டியை விளையாடவுள்ளது. …

வங்கதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசன் 2 ஆண்டுகள் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முத்தரப்பு தொடர், ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்திற்கு தரகர்கள் தன்னை அணுகியது குறித்து தகவலை அவர் தெரிவிக்கவில்லை என வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் மீது புகார் தெரிவித்த ஐசிசி, அவர்மீது 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. …

நாளை பணிக்கு மருத்துவர்கள் திரும்பாவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், எங்கள் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை அறிவித்துள்ளது. மருத்துவர்களின் போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டாம் என்றும் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது. …

கடந்த திங்களன்று டெல்லியில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும், நேரில் சந்தித்து கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை சேர்ந்த 27 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு, செவ்வாய்கிழமை அன்று காஷ்மீர் மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக காஷ்மீர் பயணம் மேற்கொண்டிருந்தது. …

சவுதி மன்னரின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் சவுதி அரேபியா சென்றார். சவுதியின் தலைநகரமான ரியாத்தில் நடைபெற்ற …

காஷ்மீர் பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் அணைத்து நாடுகள் மீதும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மந்திரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். …

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் மனோ. இவர் புழல் என்கிற படத்தில் மூன்று நாயகர்களுடன் ஒருவராக நடித்திருந்தார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் மனோ புழல் என்கிற படத்தில் மூன்று நாயகர்களுடன் ஒருவராக நடித்திருந்தார். …

விவசாயிகளின் என்ன தான் வியர்வை சிந்த பாடுபட்டாலும் அவர்களின் வருமானம் என்பது மிக குறைவு தான், அனைவருக்கும் சோறு போடும் விவசாயி சோறு இல்லாமல் சாகும் கொடுமை நம் நாட்டில் தினம்தோறும் நாடாகும் சம்பவங்களில் ஓன்று. இதை சரி செய்ய, விவசாயிகளின் …

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெண்கள் சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து உருவாக்கி வருகிறார். அந்த வகையில் …

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பற்றிய காட்டுதீ . மளமளவென பரவி அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு பரவியுள்ளது. அதோடு கடந்த திங்களன்று அந்நகரத்தின் புகழ்பெற்ற கெட்டி சென்டர் அருங்காட்சியகத்தையும் தீ சேதப்படுத்தியுள்ளது. …

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் 2 வயதான குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். …

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்று இருக்கும் கங்குலி, மின்னல் வேகத்தில் செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றத்துக்கான நடவடிக்கை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக கூட்டம் வர நடவடிக்கை எடுப்பேன் என பிசிசிஐ தலைவராக பதவி ஏற்கும் முன்பே கூறி இருந்தார் …

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக வெகு விரைவில் காஷ்மீர் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் சந்தித்து உரையாடினர். …

கேரளாவில் மாவோயிஸ்டுகள் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்த தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்பட்டுள்ளது. …

இந்தியாவின் எல்லை பகுதியான காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள், தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து, அம்மாநில சோபோர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் நேற்று 20 பேர் படுகாயம் அடைந்ததுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. …

குழந்தை சுஜித் மீட்பு பணிகள் நடந்து வருவதின் காரணமாக இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்எல்ஏக்களின் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. …

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் குறித்தான தகவல்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். …

பெங்களூருவில் தாக்குதல் நடத்த வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. …

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். அங்கு தங்கி இருக்கும் அவர், ரியாத்தில் நடை பெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3 வது அமர்வில் கலந்து கொள்கிறார். …

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. …

பிரபல நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றினர். ஆனால் அந்த வழக்கில் …

அரபிக்கடலில் உருவாகியிருக்கும் கியார் புயலால் கோவாவில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. …

உலகின் மிகவும் பிரபலமான நபரான பயங்கரவாதத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தப்பிக்கும் முயற்சியின் போது உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார். …

பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடினார். …

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது. …

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது. இதனிடையே, நேற்று முன்தினம் பிரிட்டோவின் 2வது மகனான சுஜித் வில்சன் (வயது 2) ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த அவனை மீட்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. பின்னர் சுஜித் 70 அடி …

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவரது வீட்டின் அருகே விவசாய பணிகளுக்காக சொந்த நிலத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது. …

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் குடிமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் அயோத்தியில் நேற்று சிறப்பு விழா (தீபோத்சவ்) கொண்டாடப்பட்டது. ராமபிரான் வனவாசம் சென்று திரும்பியதை நினைவுகூரும் வகையில் நடந்த இந்த சிறப்பு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், பிஜி தீவுகளின் துணை சபாநாயகர் வீணா பட்நாகர் மற்றும் மாநில மந்திரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். …

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. …

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களால், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆள்வது பாகிஸ்தான் அரசு அல்ல பயங்கரவாதிகளே என்ற கருத்தை முன்வைத்துள்ளார் இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத். …

முன்னாள் பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷரீஃப், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லாகூர் நகரில் உள்ள ஓர் மருத்துவமனையில் உடல்நிலை குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் வழங்க பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளியை கொண்டாடவிருக்கும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது பின் ரஷீத் அல் மக்தூம். …

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க மதுரையை சார்ந்த மணிகண்டன் என்பவர் கண்டறிந்த கருவி பயன்படுத்தப்பட உள்ளது. …

இயக்குனர் சுந்தர் சியுடன் விஷால் இணைந்துள்ள மூன்றாவது படம் ஆக்சன். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார். …

இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து தனது மூக்கை நுழைத்து வருகிறது பாகிஸ்தான், அப்பகுதியில் அதன் அத்துமீறல் மற்றும் ஊடுறுவல்களையும் அதிகரித்துள்ளது. …

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா என்பவர் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் சரிவர செயல்படுத்தவில்லை என்று கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். …

லைசென்ஸ் எடுப்பதற்கு ஆடைக் கட்டுப்பாடு இல்லையென்றாலும், ஒழுங்கான ஆடை அணிந்து வர வேண்டும் என ஆர்.டி.ஓ அதிகாரிகள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கே.கே.நகரில் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்காக சோதனை ஓட்டத்தில் கலந்துகொள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்துள்ளார். …

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதல் உள்ளாட்சி தேர்தலில், 99.5 சதவீத வாக்களிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. …

வங்கதேச அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷிகார் தவான், கே எல் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், க்ருனால் பாண்டிய , வாஷிங்டன் சுந்தர், சஹால், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் அணியில் …

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டர் முதலமைச்சராக தொடர்வார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்கள் புதிய உயரத்தை அடையும். ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் முதலமைச்சராக தொடர்வார்’ என்று அறிவித்துள்ளார். …

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. …

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது என்று, கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். முதல்வரின் பேட்டியில் மேலும், ‘இடைத்தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நல திட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் தான் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடவில்லை. பொய்களைச் சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் …

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கணேசனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மேலும் 6 நாள் காவலை நீட்டித்து ஸ்ரீரங்கம் நீதிமன்றம் உத்தரவு. …

சிரியாவின் வடக்கு எல்லையில் வசிக்கும் குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. …

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 -ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. …

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா போன்ற பயங்கரவாத அமைப்புகள், …

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். …

தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். …

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் குற்றவாளியான சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றம் முன்பு காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். …

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ரபி பிர்ஜடா. இவர் இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், இடுப்பில் கைகளை வைத்தபடி, உடலில் டைமருடன் (கடிகாரம்) கூடிய வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு உள்ளார். மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் விரும்புகிறேன் என்று அதனருகே பதிவிட்டு உள்ளார். …

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுகொண்டார். …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. …

2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை உள்ளது. …

திருச்செந்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். …

பிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். …

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நாஷீரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷனட் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். …

நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, படத்துக்கு தடை விதிக்கக் கோரி உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். …

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வரதப்பாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நத்தம் என்ற ஊரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். …

ஜப்பானை ஹகிபிஸ் புயல் கடந்த 12 ஆம் தேதி கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், புயல் கரையை கடந்தது. இதனால், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. …

கல்கி ஆசிரமத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. சென்னை, பெங்களூரூ, சித்தூர் நகரங்களில் 40 இடங்களில் 5 நாட்கள் சோதனை நடைபெற்றது. …

‘பிகில்’ திரைப்படத்தை வெளியிட தடைகோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றியின் விளிம்பில் உள்ளது. …

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார் ஆடை என்கிற படத்தை இயக்கியிருந்தார். அதிக விமர்சனங்களுக்கு ஆளான இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருந்தார். …

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 18ந்தேதி முதல் டிசம்பர் 13ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. …

மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. …

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் ஜிஸ்கா பெரெல்லோ என்பவரை நேற்று காதல் திருமணம் செய்து கொண்டார். …

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனாமற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. …

திமுக தொடர்ந்த வழக்கால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். …

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய ராணுவம் மேற்கொண்ட எதிர்தாக்குதலில், மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. …

அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் ஜியோசைன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறி இருப்பதாவது …

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புத்தாடைகளும், நகைகளும் வாங்குவதற்காக சென்னை தியாகராயநகரில் மக்கள் தற்போதே கூட்டமாக வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக ரெங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. …

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தலை ஆளும் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து சந்திக்கின்றன. அதேபோல பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கைகோர்த்து இழந்த ஆட்சியை கைப்பற்ற தேர்தல் களத்தில் மல்லுகட்டுகின்றன. …

விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என அறிவித்துக்கொண்டு, பூந்தமல்லி அருகே கல்கி ஆசிரமத்தை தொடங்கினார். …

ஆதித்ய தாக்கரே! - மராட்டிய மாநில தேர்தல் அரசியலில் சிங்கக்குட்டியாக புறப்பட்டிருக்கிறார், இந்த இளம் தலைவர். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி பால் தாக்கரேயால் தொடங்கப்பட்ட காலம் தொட்டு, இன்று வரை மராட்டிய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக சிவசேனா இருந்து வருகிறது. …

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத்திந்திய நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்குப்பின் நேற்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்பீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டது. …

அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேடு கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த பதிவேட்டில் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த பதிவேட்டில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். …

தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டன. இதில் ஒழுங்காற்றுக்குழு அடிக்கடி கூடி நதிநீர் விவரங்களை பரிமாறி வருகிறது. …

வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமையகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இன்றைக்கும் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில், மிகச்சிறப்பான, திறமையான மனித வளமும், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் என்னவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிற அரசாங்கமும், எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் இருக்கிறது” என்று கூறினார். …

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL ) ரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக திகழ்கிறது. …

ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். …

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பல பயன்பாட்டுச் செயலிகளில், கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த பயன்பாட்டுச் செயலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. …

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் (வயது 74), 2007-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தார். …

தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் பொருட்டு, 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. …

சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை தொடங்கி உள்ளது. காலை 8 .55 மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட விமானம், யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. …

சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களுக்கு மீது துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. …

அ.தி.மு.க வின் 48-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். …

சென்னை தொழில் நுட்ப கல்லூரியில் வான்வெளி ஆராய்ச்சி குழு ஆலோசகராக பணியாற்றினார். ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு உதவி செய்தார். துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஆர்வம் காட்டி வந்தார். இப்படி பல துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறார் நடிகர் அஜித் குமார். …

நாடாளுமன்றத்தில் வருடத்தின் இறுதியில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. …

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழந்துள்ளன என யுனிசெப் அறிக்கை தெரிவித்து உள்ளது. …

பணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான பிற அச்சுறுத்தல்களை எதிர்த்து 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு நிதி கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) ஆகும். இந்த அமைப்பு பாரீசை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. சூப்பர் ஓவரில் இனிமேல் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது. …

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுருதிஹாசன், ஒரு காலத்தில் தான் மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும் . அதனால் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட காரணத்தினால் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்று கூறி இருந்தார். …

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ், என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி. …

பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புகின்றனர், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுகின்றனர். …

பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் திடீர் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. …

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், வரும் 23-ந்தேதி பொறுப்பு ஏற்க உள்ளார். …

நிதி நிறுவன அதிபர் செல்வராஜையும், அவருடைய மனைவியையும் கொன்று புதைத்ததாக செல்வராஜின் உடன் பிறந்த அக்காள் கண்ணம்மாள் மற்றும் கண்ணம்மாளின் மருமகன் சதீஷ் என்கிற நாகேந்திரன் ஆகியோரை வெள்ளகோவில் போலீசார் கைது செய்தனர். …

தனி நாடு கேட்கும் குர்திஷ் இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என கருதுகிறார் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் . குர்திஷ் இனப் போராளிகளை ஒழித்துக்கட்ட தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த …

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் …

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து ஓன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். …

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். …

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தாங்கும் விடுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். …

அமிஷா படேல், குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து . அதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கி இருந்தார்.. …

2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி ஆவார். …

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், துருக்கி அரசாங்கம் தனது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தின. …

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள அமித் ஷா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை மந்திரியானார். …

மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் சமூக பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். …

கடந்த மாதம் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான மூலமாக தாக்குதல்கள் நடைபெற்றது. இதற்கு தாக்குதலுக்கு காரணம் ஈரான் என சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம்சாட்டின. …

இந்திய அரசியல் தலைவர்களில், டுவிட்டரில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்தொடர்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பிற்குப் பிறகு உலகிலேயே டுவிட்டரில் அதிகம் பின்பற்றப்பட்டு வரும் இரண்டாவது அரசியல்வாதியாக பிரதமர் மோடி உள்ளார். டுவிட்டரில் 5.07 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர். …

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று , தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. …

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரம் புது பொலிவுடன் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மாமல்லபுரம் சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. …

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, மக்கள் மத்திய அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே அவர்களை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். …

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- …

சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்தார். கோவளத்தில் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி. …

பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை போல் தற்போதும் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, தமிழகம் வந்துள்ளார். …

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருபவர் காஜல் அகர்வால். தற்போது சில படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். …

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. …

துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் , இருநாடுகளுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கும் என கூறியுள்ளார். …

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து நம் நாட்டு கலாச்சாரம் குறித்து விளக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. …

சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வரவேற்றனர் …

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை எளிதில் வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். …

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு, இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். …

அக்டோபர் 11 அன்று, சீன அதிபர் ஜி பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். தற்போது அமெரிக்க-சீனா வர்த்தகப்போர் நடைபெறும் இக்கட்டான சூழலில், இது ஒரு முறைசாரா பேச்சுவார்த்தை என்றாலும் இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. …

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த 2 ந்தேதி அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் உள்ள மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள கோவிலுக்கு அருகே பாம்பின் தோல் ஒன்று கிடந்து உள்ளது காலையில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த கோயில் ஊழியர் இந்த தோலைக் கண்டு உள்ளார். கோயில் வளாகத்திலிருந்து 10 அடி தூரத்தில் இது கிடந்து உள்ளது. …

இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. …

இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமானம் ஒன்றை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. பாரீஸ் நகரில் இதை பெற்றுக்கொண்ட ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அதில் பூ, தேங்காய் வைத்து பூஜை செய்தார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. …

அக்டோபர் 26 மற்றும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் 26ஆம் தேதி பள்ளி வேலைநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. …

பேனர் விழுந்ததால், லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுபஸ்ரீ தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். …

ஊக்க மருந்து உட்கொண்ட காரணத்தால் இந்திய தடகள வீராங்கனை, நிர்மலா ஷியோரனுக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. …

சேலம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் திடீர் மழை மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் அதிக அளவிலான மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். …

தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. …

சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பானிய ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம் போனது. …

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரிகோம் காலியிறுத்திக்கு முன்னேறினார். …

நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை என்பது குறித்து பதிலளிக்க விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. …

சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதி ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். …

தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின், கைபேசி, கைப்பை உள்ளிட்டவை இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்களால் பறிக்கப்படுவதும், தடுக்க முற்படும் பெண்கள் பலத்த காயம் அடைவதும் தினந்தோறும் நடைபெறக்கூடிய வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. …

ரஃபேல் போர் விமானத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் பயணித்ததாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். …

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாமல்லபுரம் வரவிருக்கும் சீன அதிபருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத்திய பேராசிரியரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். …

விராட் கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் ஒரு பெரிய சக்தியாக மாறியுள்ளதுடன், ஒரு புதிய சகாப்தத்தை முன்னெடுத்து உள்ளதாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், கேப்டன் விராட் கோலியை பாராட்டி வருகின்றனர். …

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில், கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். …

அக்டோபர் 21 ம் தேதி நடந்த மராட்டிய மாநிலம் மற்றும் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல்காந்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதாகக் கூறியதுடன், கட்சியும் அவரை ஒரு நட்சத்திர பிரச்சாரகராக பட்டியலிட்டுள்ளது. …

இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே எல்லை தகராறு உள்ளிட்ட சில பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பொருளா தாரம் உள்ளிட்ட உறவுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இரு நாடுகளின் தலைவர்களும் பரஸ்பரம் நல்லுறவை பேணி பாதுகாக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஏற்கனவே சில முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள். …

தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. பெரும் காடான இங்கு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பூங்காவிற்குள் ஹயூ நரோக் என்ற அருவி உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த அருவியின் அருகே யானை கூட்டம் உலாவிக்கொண்டிருந்தது. அப்போது 3 வயதான குட்டியானை அருவியில் இருந்து தவறி விழுந்தது. …

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெங்கடேஷ் நாயக் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். கைது செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள், அமைப்புகளின் தலைவர்கள், அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், அவற்றின் முகவரி, அவர்கள் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரம் ஆகியவற்றை கேட்டிருந்தார். …

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. …

வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூன்றாவது தலைவர் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். …

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவர் துபாயில் வசித்து வருகிறார். அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியையும் அவர் நடத்தி வருகிறார். …

மத்திய உள்துறை மந்திரி வெளியூர் செல்லும் போதெல்லாம், எல்லை பாதுகாப்பு படையின் விமானப் பிரிவு, தனது விமானத்தில் அவரை ஏற்றிச்செல்லும். உள்துறை மந்திரியின் விமானத்தை இயக்குவதற்கு ஆயிரம் மணி நேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் இருக்க வேண்டும். …

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்களும் விளாசினர். …

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ந் தேதி அதிகாலை இந்த கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் 2 பேர் உள்ளே புகுந்து 30 கிலோ எடை கொண்ட ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டை …

பீகாரில் முசாபர்பூர் நகரில் கோபர்சஹி பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று பணிகள் நடந்து கொண்டிருந்தன. …

கேரளாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களது உடல்களை தோண்டி எடுத்து விசாரணை நடத்தியதில் சொத்துக்கு ஆசைப்பட்டு உறவுக்கார பெண்ணே 6 பேருக்கு விஷம் வைத்து தீர்த்து கட்டியது அம்பலமானது. இதுதொடர்பான உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். …

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதில் அவ்வப்போது உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. …

மதுரை கோ.புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்தவர் பூமிநாதன். போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர் இறந்து விட்ட காரணத்தினால், வாரிசு அடிப்படையில் இவருடைய மனைவி வெங்கடேஸ்வரிக்கு வேலை வழங்கப்பட்டது. …

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டாலஸ் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் ஆம்பர் கைகெர் (வயது 31). வெள்ளை இனத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி, தனது வீட்டின் அருகே வசித்து வந்த கருப்பின வாலிபரான போதம் ஜீன் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். …

காஷ்மீரின் தெற்கு பகுதி நகரமான அனந்த்நாகில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த பகுதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. …

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்களை எடுத்துள்ளது. …

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காஷ்மீரில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி ராகேஷ் குமார் பதாரியா தெரிவித்துள்ளார். …

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில், ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தை விஷ்ணு வர்தன் தயாரிக்கிறார் , ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், …

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட, மத்திய குழுவினர், அது குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். …

ஆந்திராவில், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலன் அடையும் வகையில், 'ஒய்.எஸ்.ஆர்., வாகன மித்ரா' திட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று துவங்கி வைத்தார். …

மஹாராஷ்டிராவில் முக்கிய எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் தினா பாட்டீல், அந்த கட்சியிலிருந்து விலகி, சிவசேனாவில் இணைந்துள்ளார்.. …

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இன்று ஒரே நாளில் 60 மி.மி.,க்கு மேல் மழை பெய்தது. குறிப்பாக 1.5 மணி நேரத்தில், 44 மி.மி., மழை பெய்ததினால், நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. …

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆலோசனை நடத்தினார். …

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர். …

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன் பிடித்த 18 இலங்கை மீனவர்கள், கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 படகுகள் கைப்பற்றப்பட்டன. …

இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத பிரமாண்டமான படங்களாக ‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 படங்களும் அமைந்தன. இந்த படத்தில், ‘கட்டப்பா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருந்தார். அது, கதாநாயகனுக்கு இணையான குணச்சித்ர வேடம். 2 படங்களிலும் சத்யராஜின் திறமையான நடிப்பு பேசப்பட்டது. …

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. …

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவடைந்தது. …

பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பல நாடுகளின் ஆதரவை கோரி வரும் இந்தியா தற்போது, சவுதி அரேபியாவின் ஆதரவை பெற முயற்சிகள் மேற் கொண்டு வருகிறது. …

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கானிற்கு தடைவிதிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து, பிரான்ஸ் அதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், அவரின் உரையாற்றலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், கிரிக்கெட் அணிக்கான ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். …

உ.பி. மாநிலத்தில், தான் விரும்பிய பெண் உட்பட மூன்று பேரை கொன்ற டிக்டாக் வெறியனை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். …

அக்னிச்சிறகுகள் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ள படக்குழுவினரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. …

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் சென்று வர கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. …

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சத்யவதி என்ற மனைவியும், அக்சயா, நந்தினி, தர்ஷினி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் அக்சயா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார், சிறுகுழந்தைகளான நந்தினி, தர்ஷினி ஆகியோர் தாய் சத்யவதி பராமரிப்பில் வீட்டில் வளர்ந்து வந்தனர். …

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முடித்துக்கொள்ளப்பட்டது. …

கோவை மாவட்டத்தில் பொருள் வாங்குவதுபோல் சென்று, இனிப்பு கடையில் இருந்த பெண் அணிந்திருந்த 6.5 சவரன் தாலி சங்கிலியை இளைஞர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. …

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை புரிந்துகொண்டதாகவும், மத்திய அரசுடன் நடந்த பேச்சு சுமுகமாக இருந்ததாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருப்பதாகவும், சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. …

உப்பூர் அனல்மின் நிலைய பணிக்காக கட்டப்படும் பாலத்தினை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். …

சமீப காலமாக தேனியில், வடமாநில கொள்ளையர்களால் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கிராமம் அம்மாபட்டி. அங்குள்ள என்.எஸ்.எஸ் சாலையில், …

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி,`தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ மூலம் சசிகலா - சந்திரலேகா சந்திப்பு பற்றிய சிறைக் குறிப்பைப் பெற்றிருக்கிறார். …

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி நகை கடை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வணிக வளாகங்கள் மற்றும் கடைகளும் உள்ளன. இந்நிலையில், நகை கடையில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்டரூ.40 முதல் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. நகை கடையின் பின்புறம் வழியாக துளையிட்டு கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. …

பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சை அரசு தொலைக்காட்சியான தூர்தர்‌ஷனில் நேரலை செய்யவில்லை என புகார் எழுந்தது. …

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரின் ஒரு வார தலைமறைவுக்கு பின்னர் சிபிசிஐடி தனிப்படை போலீசாறால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் பல இடங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு …

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. …

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. …

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். …

சினிமா வசன கர்த்தாவாக இருந்த புகழ்மணி என்பவர் தன்னுடைய முதல் படமாக ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்கிரா புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், அறிமுக நாயகன் ராம்சுந்தரம், இவருக்கு ஜோடியாக பிரியங்காவும் நடித்து இருக்கிறார்கள். …

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி மற்றும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. …

கள்ளத்துப்பாக்கி விற்பனையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பான்சிங் தாக்கூர், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …

வரும் அக்டோபர் மதம் 21 ஆம் தேதி நாங்குநேரியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்த கங்காதரன் என்ற காவலர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. …

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:- …

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிகிறது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. …

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் வெப் தொடராக எடுப்பதாகவும் இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. …

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் அந்நாட்டின் பகுன்டோ போக்னிசை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த சுமித் நகால் (வயது 22) விளையாடினர். …

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. …

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக கூறப்படுகின்றது. …

இந்திய விமானப்படையின் தளபதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பி.எஸ்.தனோவா நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய விமானப்படையின் 26வது புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா இன்று(29.09.2019) பதவியேற்றுக்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. …

டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்க அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். …

சிவகங்கை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றிய விவகராத்தில் கிராம நிர்வாக உதவியாளர் வெட்டிக்கொல்லப்பட்டார். …

கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று, சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்த மனுவில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். …

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாட்னா நகரின் எஸ்.கே. பூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. …

பழம்பெரும் நடிகரான விஜு கோட்டே (வயது 77) 1964 ஆம் ஆண்டில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ஷோலே திரைப்படத்தில் காளியா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். …

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தெற்கு நோக்கிச் சென்றால், கூடல்மாநகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வீடுகள் எதுவும் கட்டப்படாததால், வீட்டுமனைக்காக பிரிக்கப்பட்ட, பல ஏக்கர் நிலத்தில் காட்டுச்செடிகளும், மரங்களும் வளர்ந்து காடு போல் காணப்படுகிறது. நேற்று இந்த பகுதியில் புதர்களுக்குள் ஒரு இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக, அலங்கியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. …

காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் உள்ள படோட் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். …

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. …

கூகுள் நிறுவனம் உலகெங்கிலும் 18 புதிய எரிசக்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமானவை. இவை நிறுவனத்தின் உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தங்கள் கூகிளின் உலகளாவிய காற்று மற்றும் சோலார் ஒப்பந்தங்களின் போர்ட்ஃபோலியோவை மேலும் 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க உதவும். அதுமட்டுமின்றி கூடுதலாக 5,500 மெகாவாட் வரை மின் உற்பத்தியும் செய்கிறது. இன்னும் கொஞ்ச்ம் ஆழமாக பார்த்தால் இதனால் கிடைக்கக்கூடிய …

உன்னாவோவில், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார், சம்பவ தினத்தன்று இருந்த இடத்தை, வரும் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கண்டுபிடித்துக் கூறுமாறு, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஆப்பிளிடம், டெல்லி உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது …

சுற்றுலா வரும் வெளி நாட்டு சுற்றூலாப் பயணிகள் பொது இடத்தில் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது உள்ளிட்ட 19 வகையான சட்டதிட்டங்களை வகுத்துள்ளது சவுதி அரேபியா. …

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். …

சென்னை பள்ளிக்கரணையில்,பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். …

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொறுப்பு துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் பேசியதாவது:- …

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் சிங் தலிவால், வயது 40. இந்திய வம்சாவளி சீக்கியரான இவர், அங்குள்ள காவல்துறையில் பணியாற்றி வந்தார். டெக்சாஸின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியான இவர், வடமேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார். …

தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி, இரண்டு மாதங்களாக ஓய்வில் இருக்கும் முன்னாள் கேப்டன் தோனி, பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்டத்தை தொடர்ந்து. விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின் 'கைதி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். …

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றவர் அபிராமி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களிலேயே வெளியேறினார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதற்கு முன்னர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். …

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ என்டர் இளம் வயது பெண் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். …

மும்பையில் இருப்பதைவிட தமிழகம் பிடித்திருப்பதால் சென்னையில் குடியேற விரும்புவதாக, பிரிவு உபசார விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி பேசினார். …

பூடான் நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்த பொது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. …

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. …

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "உலக அளவில் அதிக ஓட்டுகளை பெற்று எங்கள் கட்சி இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய அளவிலான தூய்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. …

சவூதி அரேபியா வெள்ளிக்கிழமை, முதல்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக கூறி உள்ளது. தனது பொருளாதாரத்தை எண்ணெயை மட்டும் நம்பி இருப்பதில் இருந்து விலக்கி வைப்பதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக சுற்றுலா விசாக்கள் வழங்க உள்ளது. …

‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். …

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில், முதன்முறையாக விமானத்தில் குழந்தையுடன் பயணிப்பவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டதுடன், அந்த தகவலை அறிய பிரத்யேக சின்னமும் காண்பிக்கப்படுகிறது. …

இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

உக்ரைனில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில், கைதான உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. …

காய்ச்சல் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் வீட்டில் உள்ள மருந்தை கொடுக்க வேண்டாம் என்றும், டெங்கு காய்ச்சல் குறித்து பேட்டியளித்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். …

இந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மாதவன். இவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பல பதங்கங்களை வென்று சாதித்து வருகிறார். …

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ரத்து செய்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், வதந்திகள் பரவி வன்முறை வெடிக்காமல் இருப்பதற்காக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்பட்டன. …

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர வினிதா, வயது 20. இவருக்கும், காளையார்கோவில் அருகே உள்ள சானாஊருணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ (25) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. …

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 22 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ஜெய்ப்பூரில் சந்தித்தது. …

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் தன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து கொண்டார். …

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான, "மலபார் 2019" என்று பெயரிப்பட்டுள்ள கடற்படை பயிற்சி, மேற்கு பசிபிக் கடல் பகுதியில், நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. …

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் முதன்மை வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றோடு வெளியேறி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார். …

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ரா வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துளளார். …

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் சென்றிறங்கிய பிரதமர் மோடியை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கு அவருக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடியிடம் தங்களது கோரிக்கைகளை வைத்ததுடன் பிரதமருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர். இதன்பின்பு பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள …

தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ், வயது 39, உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூர்யாபேட்டை மாவட்டத்தில் கோடாட்டில் பிறந்த வேணு மாதவ், 1996-ல் 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதுவரை …

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. …

பிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 21 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் அபயாம் உருவாகியுள்ளது. உலகச் சுற்றுலாப் பயணிகளின் முன்னோடி அறிஞரான தாமஸ் குக் மூலம், 1881 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தாமஸ் குக் நிறுவனம், 1927-ம் ஆண்டு தனது விமானப் பயணத்தை தொடங்கியது. ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல வங்கிகள் கடன் பெற்று தனது நிறுவனத்தை விரிவுபடுத்திய தாமஸ் …

அரசுப் பள்ளி வகுப்பறையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட சம்பவத்தால் தேனி மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டி வாய்க்கால்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு, அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். …

உலகளவில் நடைபெற்ற ‘தி வேல்ர்ட்'ஸ் பெஸ்ட்' (The World's Best) என்ற நிகழ்வில், தன் பியனோ இசைத் திறமையால் டைட்டில் வென்று, சர்வதேச அரங்கில் மிளிர்ந்தவர் 13 வயதே ஆன சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். லிடியன் இசை பயின்றது சென்னையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி. லிடியனை ஊக்குவிக்கும்பொருட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவருக்குப் பாராட்டு விழா நடத்தினார். அப்போது பேசிய ரஹ்மான்,"லிடியன் தற்போது சர்வதேச கவனத்தை சென்னை இசைக்கலாசாரம் …

சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

பாலிவுட் சூப்பர்ஸ்டார், நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. …

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். …

முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று 12 ஆண்டுகள் ஆகின்றன, அதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தனது குழந்தை பருவ நினைவுகளை நினைவுப்படுத்தும் ஒரு வேடிக்கையான வீடியோவை தோனி பகிர்ந்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றி நேற்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது. இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில், தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி …

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை, விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது …

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் கோபத்துடன் பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு உடனடியாக டிரம்ப் உங்கள் கேள்வி ஒரு அறிக்கையைப் போலவே தெரிகிறது என்றார். …

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் : "பிரதமர் மோடி தலைமையில், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. …

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில், கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். …

பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இனி செயல்தான் என்றும், ஐ. நா.வின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். …

இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக குறைந்தது 500 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் எல்லையோரம் தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. …

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கல்லூரி அருகே மாணவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

மும்பையில் தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை, பெண் கல்லூரி விரிவுரையாளர் துணிச்சலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டார். …

வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. …

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. …

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். …

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 இளம்பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். …

2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருத்திற்கு 28 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட அதில் அதிகாரப்பூர்வமாக "கல்லி பாய்" திரைப்படம் தேர்வாகியுள்ளது. …

விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் டகால்டி. இந்த படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல பெங்காலி நடிகை ரித்திகா சென் அறிமுகமாகிறார் …

மேற்கு வங்கத்தில் 7வயது சிறுவனை சூனியம் செய்வதற்காக பலி கொடுத்த, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

பிரான்சிடம் இருந்து வாங்கும் முதல் ரபேல் போர் விமானத்திற்கு புதிய ஏர் மார்ஷல் ஆர்.எஸ்.பாதாரியாவை கௌரவிக்கும் வகையில் அதற்கு ஆர்.பி.- 01 என்று பெயரிடப்பட்டுள்ளது. …

நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமிதே பலர் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். …

சென்னையில் வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதும், எதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியை சிக்க வைக்கும் நோக்கத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. …

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. …

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). …

“சந்திரயான்-2 விண்கல திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் ஆர்பிட்டர் ஓராண்டுக்கு செயல்பட திட்டமிட்டிருந்தாலும் மேலும் 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு உள்ளது” என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார். உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 7-ந் தேதியன்று திட்டமிட்டபடி நிலவின் தென்துருவ பகுதியில் மெல்ல தரை இறங்க முடியாமல் போய்விட்டது. அதன் தகவல் தொடர்பு எதிர்பாராத வகையில் துண்டிக்கப்பட்டது. …

சிறுமியின் நெற்றியில் பைத்தான் வகை பாம்பு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. செல்ல பிராணிகளை வளர்க்கும் வீடுகளில் குழந்தைகள் அவற்றுடன் விளையாடி மகிழ்வது வழக்கம். இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி அவை பலரால் ரசிக்கப்படுவது உண்டு. எனினும், சமீபத்தில் வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. …

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 30ந்தேதி முடிவடைகிறது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்றும், …

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித்சூர்யா (வயது 21). தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார். …

சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தது. அந்த தடை ஈரானின் மத்திய வங்கி மற்றும் செல்வ நிதியை இலக்காகக் கொண்டது ஆகும். …

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. …

ஹௌடி மோடி நிகழ்ச்சிக்கு எதிராக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பேரணி நடத்த போவதாக , அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். …

இந்திய விமான படைக்கு தேவையான, ரபேல் ரக முதல் போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப்பின், இந்த விமானம், நம் நாட்டு விமானப் படையுடன் சேர்க்கப்படும். …

மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. …

கேரளாவின் அலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையின் பணிபுரியும் ஆறு ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ .300 மதிப்புள்ள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற 52 கிலோ எடை ஆண்கள் பிரிவின் அரையிறுதிபோட்டியில், சாகேன் பிபோஸினோவை எதிர்கொண்ட பாங்கல் 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பாங்கல் ஆவார். …

'சந்திராயன் 2' வின் விக்ரம் லாண்டரை தேடி பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆர்பிட்டர், அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. …

பாகிஸ்தானில் மனித உரிமை மீறல் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது எனக் கூறியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த குலாலாய் இஸ்மாயில். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெண்கள், அந்நாட்டு இராணுவத்தினால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்த படுவதாகவும், முகநூல் மற்றும் ட்விட்டரில் தகாத வார்த்தைகளினால் திட்டப்படுவதாகவும் கூறி பெண் ஆர்வலரான குலாலாய் இஸ்மாயில் தனது சமூக வளைதளங்களில் குறிப்பிட்டதை தொடர்ந்து, தவறான செய்திகள் பரப்ப முயல்வதாகவும், சொந்த நாட்டிற்கு எதிராக செயல் படுவதாகவும் …

ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க அரசு விலகியதை அடுத்து அந்நாட்டின் முக்கிய வளமான எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. இதனால், ஈரானில் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. …

`எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை அசின். அந்த படத்தில் அவர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். …

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் பாபர் மசூதி அமைந்திருந்தது. அந்த மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்து கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. …

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. …

6 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞனுக்கு ஒடிஸா சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. …

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். …

பிஃஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சிபிடி என்ற அமைப்பு தீர்மானிக்கிறது. அந்த வகையில் வருங்கால வைப்பு நிதியின் கீழ் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு இதுவரை பிஃஎப் 8.55% வட்டி விகிதமாக இருந்தது. …

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்மணியான மெலிகன், தூங்காமல் தொல்லை கொடுத்த தனது ஒரு வயது குழந்தைக்கு ஹெராயின் போதை மருந்தை கொடுத்து கொலை செய்துள்ளார். அமெரிக்கா மெயின் என்ற பகுதியைச் சேர்ந்த மெலிகன் என்ற பெண்மணிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஓன்று இருந்தது . தன்னை தூங்க விடாமல் அடிக்கடி தொல்லை கொடுத்த அவருடைய ஒரு வயது குழந்தைக்கு ஹெராயின் போதை மருந்தை கொடுத்து கொலை செய்துள்ளார் மெலிகன். …

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(Pok) பகுதியில் பாகிஸ்தான் புதிய ராணுவ விமானத்தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் ராணுவ விமானத்தளம் அமைக்கப்படவுள்ளதாக்க தகவல்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீர் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசு 1600 மில்லியன் பாகிஸ்தானி ரூபாய் …

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வந்தது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தரப்படும் என்று ஆன்லைன் மூலம் இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியது. …

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘ரூட் தல’ தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் சில மாணவர்கள் பட்டாகத்தியுடன் பஸ்சில் பயணம் செய்த, வேறு சில மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதி போட்டியில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கார்லோ பாலமை எதிர்கொண்டார். ஆட்டம் தலா 3 நிமிடம் வீதம் 3 ரவுண்ட் கொண்டது. …

கடந்த ஆகஸ்ட் 5 ந்தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் சீனாவுடன் சர்ச்சைக்குரிய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் லடாக்கிற்கு யூனியன் பிரதேச அந்தஸ்தை வழங்க முடிவு செய்தது. …

ஆந்திரா மாநிலம் கர்ணூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. …

இந்தி குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். …

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை, இந்நிலையில், …

கோவை அருகே பல் வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் விமானத்தை தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என, பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. …

ஹிந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக திமுக அறிவித்திருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் வந்தபோது அந்த மாணவனிடம் ஹெல்மெட் ஏன் அணியவில்லை? என கேட்டு போலீசார் அந்த மாணவனின் சைக்கிளை பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி ஓன்று பரவி, பரபரப்பாக பேசப்படுகிறது. …

பாகிஸ்தான் சிந்த் மாகாணம், லார்கானாவில் நம்ரிதா சாந்தினி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண், விடுதியில் தங்கியிருந்து பல் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். …

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிபிர் பிரிவில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் அதிரடி எல்லை படையினர் ஊடுருவ முயன்றுள்ளனர். …

சென்னை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. …

திருச்சியில் காவல்துறையினர் லாரியை துரத்தியதால் தாறுமாறாக ஓடிய லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. …

கும்பகோணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தான் பெட்ரா இரு பெண் குழந்தைகளை தந்தை குடிபோதையில் ஆற்றில் வீசினார். இதில் ஒரு குழந்தையை அங்கிருந்த இளைஞர்கள் காப்பாற்றினர், மாயமான மற்றொரு பெண் குழந்தையை தேடி வருகின்றனர். …

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அஞ்சலி சிங் இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதராகி நியமிக்கப்பட்டுள்ளார். …

சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, இனி பிரியாணி சாப்பிட அனுமதி இல்லை என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் அதிரடி முடிவெடுத்துள்ளார். …

வெளிநாட்டில் இருந்து வரும் நிதி தொடர்பான விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. …

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். …

ரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. …

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு சொந்தமான (DRDO) ருஸ்தம் - 2 என்ற ஆளில்லா விமானம் சோதனை ஓட்டத்துக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின் போது இன்று அதிகாலை 6 மணியளவில் விமானம் அதன் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. …

கொலம்பியா நாட்டில் பொபையன் என்ற நகரில் சிறிய விமானம் ஒன்று திடீரென விபத்துக்குளாகி அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 9 பயணிகள் பயணித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. …

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. …

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா; திரைப்படத்தின் டீசர் வெளியானது. துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதன் பிறகு நரகாசூரன் என்ற படத்தை அவர் இயக்கினார். …

மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …

நம் தாய்மொழியாகிய இந்தி நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்திருந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியே முதன்மையானது என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். …

பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்த போது 1978-ம் ஆண்டில் பொது பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தார். அந்த சட்டத்தில், காஷ்மீரில் மரங்களை வெட்டி கடத்துபவர்களை கடுமைக்கியாக தண்டிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. …

மியான்மரில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, உள்நாட்டு வீரர் Nay டிவே ஓவை எதிர்கொண்டார். …

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து நேற்று முன்தினம் ஆளில்லா விமானம் மூலமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. …

அயோத்தி வழக்கை தொலைக்காட்சியில் நேரலை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கே.என். கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். …

சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்கிற இளம் பெண் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையின் நடுவே ஆளும் கட்சியான அதிமுக சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. …

இதுவரை தமிழ் நகைச்சுவை நடிகர்கள் ஒருவருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பு ஒன்று நடிகர் யோகிபாபுவுக்கு கிடைக்கவுள்ளது. மிக விரைவில் அமீர்கானின் இந்திப்படம் ஒன்றில் நடிக்க மும்பை செல்லவுள்ளார் யோகி பாபு. ஏற்கனவே இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதியின் சிபாரில்தான் இந்த வாய்ப்பு யோகிபாபுவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. …

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி 20 போட்டிதொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டி-20 போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடைபெற இருந்தது. …

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு முன்பாக, பிரதமர் மோடி, அமெரிக்காவில் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். …

ஏற்காடு ஒன்றிய பா.ஜ.க துணைத்தலைவர் சின்ராஸ் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். …

தாதா 87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ தற்போது, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி என்கிற கேமை மையமாக கொண்ட 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற நகைச்சுவை கலந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். …

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். …

காஷ்மீர் எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். …

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: …

இந்தோனேசியாவில் உள்ள ஹல்மாஹேரா தீவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. …

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் டி.பார்ம் படித்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். …

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. …

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). இவருக்கும், வேலை விஷயமாக கோவை சென்ற சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி புனித அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாய்அன்பன் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. …

டெல்லி சாக்தாரா பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இளைய மகள் மோனிசா (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). …

உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? என்பதை அறிவதற்காக டைம்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 92 நாடுகள் அடங்கிய 1,396 கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. அதன் தரவரிசைப் பட்டியலை டைம்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. …

வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. …

டெல்லியில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு, மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி ரூ. 2,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. …

குஜராத்தில் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சிங்கங்கள், ஜூனாகத் நகர சாலையில் ஜாலியாக உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. …

சென்னையை சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் இரு பெண் குழந்தைகளுடன், வியாசர்பாடி பகுதியில் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். …

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. …

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்மவிபூஷண் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷண் விருதும் வழங்க விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. …

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். …

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டு பின்னர் லண்டனுக்கு தப்பி சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, தற்போது இந்திய அரசின் முயற்சியால் லண்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். …

ஜார்கண்டின் கார்வா மாவட்டத்துக்கு உட்பட்ட பஸ்சி கிராமத்தில் திடீரென இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 10 பேர் அங்குள்ள ஒரு மரத்தடியில் மழைக்காக ஒதுங்கி நின்றனர் . அப்போது திடீரென பலத்த மின்னல் ஒன்று அந்த மரத்தை தாக்கியது. …

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். …

சேலத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் ஐந்து பேரை சேலம் மாவட்ட போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். …

தோனி ஓய்வு பெறுவதாகக் கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று அவரது மனைவி சாக்க்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …

இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது. …

சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் மீது பேனர் விழுந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். …

டைம்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் டைம்ஸ் நிறுவனம், உலகளவில் தலை சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலை தரவரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை டைம்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது. …

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் பழனிச்செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தனியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

ஆகஸ்ட் 15, 2022க்குள், இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அரசாங்கம் ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது ஒரு புதிய கட்டிடம் அல்லது தற்போதுள்ள வரலாற்றுக் கட்டிடம் மறுவடிவமைப்பு செய்யப்படும். …

நடிகை அமலா பால் தனது சமீபத்திய படமான ஆடையின் வெற்றிக்குப் பிறகு கிளவுட் ஒன்பதில் இருக்கிறார், இந்த படம் பார்வையாளர்களிடமிருந்து ஒருமனதாக நல்ல வரவேற்பைப் பெற்றது, …

திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். …

சென்னை அம்பத்தூர் முருகன் இட்லி கடையின் உற்பத்தி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகன் காபி நிலையம் என்று 1991ல் மதுரையில் தொடங்கப்பட்ட கடைதான் முருகன் இட்லி கடை. அதன்பின் முருகன் இட்லி கடை என்று பெயர் மாற்றப்பட்டு தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. மிகவும் பிரபலமான இந்த உணவகத்திற்கு சென்னையில் 17 கிளைகள் உள்ளது. அதேபோல் மதுரையில் 3 மற்றும் சிங்கப்பூரில் இரண்டு கிளைகள் …

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் வழங்கினார். …

கம்யூனிஸ்டு நாடான சீனாவில் அலிபாபா நிறுவனம், ஆன்லைன் வழியேயான வர்த்தக சேவையில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் . உலகின் மிக பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் என்ற பெருமை பெற்ற இந்நிறுவனம், …

கோவை மாவட்டம், சூலூரில் ஏற்கனவே இரண்டு திருமண செய்து மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் தினேஷ் ( 26). இவர் ராசிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பேட்டன் மேக்கராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த …

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. …

ஆப்பிள் ஆர்கேட் சேவை, ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. …

சென்னை அண்ணாசாலையில் மீண்டும் இருவழிப்பாதை மாற்றப்படவுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. …

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை நாளை முதல் தொடங்கவிருப்பதாகவும் , ஜனவரி 10 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. …

பிரெக்ஸிட் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையிலான மோதல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மூன்று தோல்விகளை வழங்கியது. …

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. …

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பாக கூறியது. இந்த சூழலில், மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. …

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா. இவர், வட்டார பா.ஜனதா செயலாளராக பணியாற்றி வந்தார். அதுமட்டும் இல்லாமல் ஒரு கல்லூரியில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்தார். …

ரெயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ. தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. …

பிரிட்டிஸ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. …

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தை மூத்த இயக்குனரான மணிரத்னம் உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். …

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்பு மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட இலங்கை அணி வீரர்கள் 10 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். …

மதுரையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.25.10 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. …

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மாண்டோர்ஸ்வில்லி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் டிஃப்பனி வில்லியம்ஸ் தம்பதி. இவர்கள் வங்கிக்கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் 85 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இந்த தகவலை உடனடியாக வங்கிக்கு தெரிவித்திருக்க வேண்டும் ஆனால், இதை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், சேவி, ரேஸ் கார்கள் வாங்குவது என்றும், நண்பர்களுக்கு உதவியது என்றும் டெபாசிட் ஆன …

தென்னிந்தியாவில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே. சைனி கூறியுள்ளார். …

பாகுபலியில் அதிரடி சண்டை காட்சிகளில் வந்து ரசிகர்களை கவர்ந்தார் தமன்னா . இது அவரது திரையுலகை வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. இப்போது வழக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து ரூ.120 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய குயின் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘தட் இஸ் மகாலட்சுமி’ படத்தில் நடித்துள்ளார். …

நியூயார்க்கில் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் வருடாந்திர உயர்மட்ட ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஐ.நா. பொதுச்சபையின் 74வது அமர்வின் (யு.என்.ஜி.ஏ) பொது விவாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, செப்டம்பர் 27-ந்தேதி காலையில் உயர்மட்ட அமர்வில் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி, 2014ல் ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்களுக்கு மத்தியில் தனது முதல் உரையை நிகழ்த்தி இருந்தார். இது …

உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக அமைக்கப்பட்ட டைனோசர் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணை அருகே உள்ள ஆற்றுப்படுகையில் 182 மீட்டர் உயரத்தில் “Statue of unity” என்ற பெயரில் இந்தியாவின் இரும்பு மனிதர் என எல்லாராலும் அன்பாக அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை, 2989 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இதை கடந்த …

ஓமலூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை இருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ராமிரெட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மகள் சரண்யாவுக்கு உடல்நலமின்மையால் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தாரமங்கலம் அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த …

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மரங்களில் விளம்பர தட்டிகள் , பலகைகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்றவற்றை அமைப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் பி.ஜே.பி தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், செரீனா வில்லியம்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் பியான்கா. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், முன்னணி வீரங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதிக்கொண்டனர். …

பாலைவனச் சோலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் நேற்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜசேகர் பாரதிராஜாவின் முதல் படமான நிழல்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற ’இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலின் இவர் மிகவும் பிரபலமானார். …

அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே சந்திரயான்-1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்த இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) விஞ்ஞானிகள் அடுத்ததாக சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி, அங்கு தரை இறங்கச் செய்து ஆய்வு நடத்த தீர்மானித்தனர். …

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார். …

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பெருமைகள் மலைபோல் குவிந்திருக்கும் திருவண்ணாமலையில், ஏறுபோல் பீடுநடை போடும் தி.மு.க.வின் “முப்பெரும் விழா” செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறுகிறது. தி.மு.க.வை உருவாக்கி அதனைக் கவின்மிகு மாளிகையாகக் கட்டிக்காத்து, ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15. அந்த அண்ணாவை அரசியலில் ஆளாக்கிய அகிலம் போற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் …

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நேற்று அதிகாலையில் நிலவின் மேற்பரப்பில் இறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நிமிடங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லேண்டர் கருவி தொடர்பை இழந்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிகழ்வில் பின்னடைவு ஏற்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த ஏமாற்றமும், சோகமும் அடைந்துள்ளனர். அவர்களை பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தேற்றினர். …

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. பாகிஸ்தானின் சிந்தி பகுதியில் கடந்த 1923ம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த இவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணியாற்றினார். …

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார். …

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கள்ளக்காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் நுழைந்த தினகரன், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். இதனால் அதிமுகவில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். …

கோவா நீச்சல் சங்க பயிற்சியாளராக இருந்த சுராஜித் கங்குலி தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பய் ஏற்படுத்தியது . …

அமெரிக்காவை சேர்ந்த பழம்பெரும் ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான வூடி ஆலன் பல பன்முக திறமைகளை கொண்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட் திரையுலகில் பணியாற்றி வருகிறார். …

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. …

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மற்றும் அந்த அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். …

பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக கூறி ஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய கேரள அரசு தடை விதித்துள்ளது. …

கோவையில் நேற்று போலீஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், பாலின் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. …

டெல்லி மாநிலத்தின், சாந்தினி சவுக் தொகுதியின் எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். …

இந்தியா முழுவதும் திருத்தும் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. …

ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் திருமணமாகி 57 ஆடுகளுக்கு பின்னர் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். …

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோகுல் என்ற கோகுல்நாத் (வயது 23). இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. …

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு, 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற சாணிக்குமார்(வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் உள்ளன. …

இயக்குனர் கௌதம்மேனன் இயக்கித்தில் உருவாகியுள்ள தனுஷின் ’எனை நோக்கிப் பாயும் தோட்ட’ திரைக்கு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே சூர்யாவை நாயகனாக வைத்து கௌதம்மேனன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. …

மொகரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 11ஆம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. …

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அம்ராய்வாடி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று, இன்று திடீரென இடிந்து விழுந்தது . உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் …

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். …

சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் வெளிநாட்டினரை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு, அரசியல், சினிமா துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன. …

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.. …

இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் "அப்துல் பாசித்" ஆபாச நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரீ- டுவிட் செய்து காஷ்மீர் அனந்த் நாக் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப், …

போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கான அபராத தொகை உயர்வு, கடந்த 1-ந் தேதி நாடு, முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்காக ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் ரூ.47 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலியிறுதி போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். …

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான சிவகுமாரை ஒன்பது நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. …

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 64. …

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்து வெளியேறிய நடிகை மதுமிதா விஜய் டிவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். …

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடி அவ்வப்போது நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதித்து வருகிறது. இந்த வகையில் இதுவரை 14 கூட்டங்கள் நடைபெற்று உள்ளது. …

விளாடிவோஸ்டோக்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னிலையில் ரஷ்யாவும் இந்தியாவும் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன. …

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் சீனாவின் குவாங் வாங் ஆகியோர் மோதினர். …

பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார். …

காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரேக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் புனே, சிரூர் தாலுகாவில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …

சென்னை மடிப்பாக்கம் மூவரசன் பேட்டையை சேர்ந்தவர் சுமதி(வயது 43). இவரது கணவர் கோகுலகிருஷ்ணன்., தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். …

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவன் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்நிலையில், ராஜீவ் தவனுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததால் இது தொடர்பாக அவர் கோர்ட்டு அவமதிப்பு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். …

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்திற்கு தள்ளிவிட்டு, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். …

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். …

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக திங்கட்கிழமை அன்று நியமிக்கப்பட்டார். …

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைதானதை தொடர்ந்து கர்நாடகாவில் மூன்று பேருந்துகள் மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசியுள்ளனர். இதையடுத்து, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. …

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான மிதாலி ராஜ், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36-வயதான மிதாலி ராஜ் 32 இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார். …

சென்னை கே.கே.நகர் 8-வது செக்டார் 45-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தாம்பரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். …

மதுரையில் கடந்த சில மாதங்களாக மசாஜ் சென்டர், ஆயுர்வேதிக் சிகிச்சை மையம், ஸ்பா, ஹெல்த்கேர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. …

பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 1 தங்கம் மற்றும் 1 வெண்கலம் கிடைத்துள்ளது. …

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் பேபிசானா என்ற 8-ம் வகுப்பு மாணவி, கடந்த ஜூலை 18-ந்தேதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. …

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை, மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் விலை, 16 ரூபாய் உயர்ந்துள்ளது. …

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முன்னாள் வீரர் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார். …

சென்னையில் குடியிருப்புகள் அதிகம் உள்ள வளசரவாக்கம், ஆலப்பாக்கம், மதுரவாயல், நெற்குன்றம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில், நேற்று அதிகாலை 3 மணி முதல் மும்முனை மின்சார இணைப்பு உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மட்டுமே மின் சப்ளை இருந்தது , ஓர் முனை மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்பு இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். …

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறையை விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். …

"இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதம் பயன்படுத்தாது" என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். …

டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட் ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னில் தற்போது அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வருகிறது, இதில் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா மற்றும் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் விளையாடினர். …

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். …

ஒரே நாளில் அதிகம் பேர் ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்ததால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வருமானவரி தாக்கல் செய்ய கடைசி நாளான கடந்த 31-ஆம் தேதி ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக மட்டும் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. …

திருச்சி விமான நிலையத்தில் 458 கிராம் எடையுள்ள, 17.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. …

தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். …

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது …

உலகிலேயே பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகிறது. பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவி செய்ய தயாராக இருப்பதாக ஜி7 அமைப்பின் உறுப்பு நாடுகள் தெரிவித்திருந்தனர். ஆனால் பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரோ அந்த உதவியை ஏற்க மறுத்துவிட்டார். …

தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்தவர் கவுண்டமணி. இவர் பிரபுவின் சின்னத்தம்பி படத்தில் மாலை கண் உள்ளவராக நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘சிக்சர்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது. …

ஐ.ஆர்.சி.டி.சி.யில் ஆன்லைன் வழியே டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.30 மற்றும் ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு ரூ.15 சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. தனியாக வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. …

பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுவுக்கு வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது மின்சார ஷாக் ஏற்பட்டது. …

திருச்சி அருகே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மின் மோட்டார் திருடிய 3 பேர் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர். …

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் அதிதீவிர புயலான டொரியன், வருகிற திங்கட்கிழமை புளோரிடாவில் கரையை கடக்கும் என்று தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. …

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …

கோவையில் தனியர் கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக மாணவர்கள் முன்பு கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. …

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு என்கிற தகவலில் உண்மையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. …

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். …

இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் நிகோலா டவுன்சென்ட் (வயது 50). இவரது தந்தை டெரன்ஸ் (வயது 78). நிகோலாவிற்கு தனது தந்தை மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் திடீரென கையில் கிடைத்த டி.வி. ரிமோட் ஒன்றை எடுத்து வீசியுள்ளார். …

போர் விமானங்களில் இருந்து தரையை நோக்கி வீசி, பிரமாண்ட கட்டடங்களை குறிவைத்து தாக்கி அழிக்கும், அதிநவீன வெடிகுண்டை, இந்திய விமானப்படை இஸ்ரேல் நாட்டிடமிருந்து வாங்கவுள்ளது. …

தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதை வழங்கி கௌரவித்தார் …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கலின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. …

சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த குற்றத்திற்காக பிக்பாஸ் புகழ் கவினின் தாயார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. …

குஜராத்தின் கட்ச் பகுதியில் கடல் வழியாக சிறிய படகுகள் மூலம் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நம் நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. …

சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப விஞ்ஞானி என பலரது பாராட்டுகளுக்கு புகழ்களுக்கு சொந்தக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ் இவர், கடந்த 2011-ம் ஆண்டு, தனது 56 வயதில் புற்றுநோய் காரணமாக உயிர் இழந்தார். …

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக கடுமையான சொற்களை பயன்படுத்தும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள், இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என கூறி வருகின்றனர். …

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் அதிரடியாக நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனால், அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார். …

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்லவிருக்கிறார். …

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு புகுந்து தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பானது. …

சேலம் ஈஷா மையத்தில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட காவிரி குரல் அமைப்பின் பணிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அனைத்து மட்டங்களிலும் உதவ தனது ஆதரவை தெரிவித்துள்ளது. …

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். …

வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டுகளை தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகமாகி உள்ள நிலையில், இவ்வாறு நடைபெறும் சம்பவங்களை தடுக்க வங்கிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …

மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இணையதளங்களில் வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அதில் சிறிதும் உண்மையில்லை என மின் வாரியம் சார்பாக மறுப்பு தெரிவிக்கப்படுள்ளது. …

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதில் சம்பந்தம் இல்லாமல் யாரும் தலையிட வேண்டாம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தானின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் …

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். சசி தரூர் கூறும் போது, “பிரதமர் நரேந்திர மோடி நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது கண்டிப்பாக பாராட்ட வேண்டும். தவறான திட்டங்களை கொண்டு வரும்போது எதிர்க்க வேண்டும். கண்களை மூடிக் கொண்டு மோடியை எதிர்ப்பது சரியாக இருக்காது” என்றார். …

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக அரசு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஊதியத்தை உயர்த்துதல், பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். …

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன், பள்ளி வேலை நேரத்தில் தன் அலுவலக அறையில் உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் உள்ள ஓர் அரசு உயர்நிலை பள்ளியில், தலைமை ஆசிரியர் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை தருவதாக பரவலாக புகார் எழுந்தது. எனினும், தலைமை ஆசிரியர் மீது பகிரங்கமாக …

திருச்சியில் இளைஞர் ஒருவரை சக நண்பர்கள் கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. …

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. …

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபா சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது. கஜகஸ்தான் நாட்டின், பாய்கோர் மாகாணத்தில் உள்ள, ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இதில், 'ஃபெடோர்' என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது. …

கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது கெவின் ஜோசப் - நீனு இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். …

தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டபல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். …

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட் ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமாக வருவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகும். இந்த சீசனுக்கான 139-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்கிறது. …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. …

தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள ’ஆயிரம் ஜென்மங்கள்’ என்னும் ஹாரர் கலந்த காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். …

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் என வந்தால் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை கையாள தயங்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்துள்ளார். …

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகரங்களில் 500 பேட்டரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பேட்டரி பேருந்துகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. …

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு , ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீத் விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது. …

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மோகமா ஆனந்த் சிங். பாட்னா மாவட்டம் லட்மா என்ற கிராமத்தில் இவரது பூர்வீக வீட்டில் உள்ளது. இங்கு, கடந்த 16-ந் தேதி ஏ.கே.47 துப்பாக்கி, கையெறி குண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். …

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 47). மதுரை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவருக்கு பாலவசந்தி என்ற மனைவியும், நாகசுமித்ரா, நாகஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர். …

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன. …

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். …

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை கவர்ந்தார். தற்போது மீண்டும் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். …

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். …

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைத்து பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடற்கரைகள் உள்பட நீர்நிலைகளில் போலீசார் அனுமதி வழங்கும் நாட்களில் கரைக்கப்படும். …

காஷ்மீரில் நிலைமையை நேரில் பார்வையிடவும், மக்களை சந்திக்கவும் ராகுல் காந்தி தலைமையில் விமானத்தில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த 5-ந் தேதி அறிவித்தது. …

ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், துலா மற்றும் யூரிய் தோல்கோருகி என்ற இரு நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளான புலாவா மற்றும் சினேவா ஆகியவை இன்று பரிசோதனை செய்யப்பட்டன என தெரிவித்து உள்ளது. …

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆன்டிகுவா மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஜடேஜா மற்றும் ரஹானே ஆகியோரின் பங்களிப்பின் காரணமாக இந்திய அணி 296 ரன்களை எட்டியது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சில் நிலை குலைந்து 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. …

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 9-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு எந்த முன்னேற்றம் இல்லை. …

இலங்கையில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு, மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. …

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி சர்ச் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய இந்த மனிதாபிமானமற்ற, கொடூரமான தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தார்கள். …

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனையான பீவென் ஜாங்கை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். …

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி .இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார். …

விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். …

‘இந்தியாவில் இனி தற்காலிகத்திற்கு இடம் இல்லை. இங்கு எல்லாம் நிரந்தரம் தான். இனி புதிய இந்தியாவை காணலாம்’ என்று, பிரான்ஸ் யுனஸ்கோ தலைமையகத்தில்பேசும் பொது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். …

ஜம்மு-காஷ்மீர் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரியங்கா சோப்ரா பகிரங்கமாக ஆதரித்ததால் சில நாட்களுக்கு முன்பு, ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ரா ஜோனாஸை நீக்கக்கோரி பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி யுனிசெப்பிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். …

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை (மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். …

உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யத் தவறியதற்காக "உலகளாவிய நிதி கண்காணிப்புக் குழு ஆசிய-பசிபிக் பிரிவு பயங்கரவாத மேம்பட்ட தடுப்புப்பட்டியலில்" பாகிஸ்தானை சேர்த்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். …

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலல் போன்று தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. …

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தி கைதாவதற்கு இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலமே முக்கிய காரணம். …

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவானந்தம், தனது மனைவி அன்னபூர்ணா மற்றும் 10 வயது மகளுடன் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோ எஸ்.சி.புதூரில் வசித்து வருகிறார். …

மதுரையில் சேவல் சண்டை போட்டி நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் மதுமிதா. இவர் கடந்த வார இறுதியில் தன்னை தானே காயப்படுத்தி கொண்ட காரணத்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். …

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த …

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. …

கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா தலைவராக இருப்பவர் துஷார் வெள்ளப்பள்ளி.இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். …

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து நேற்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிபிஐ அலுவலகத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. …

அமெரிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பால் இயக்கப்பட்ட எம்.கியு-9 டிரோன் ஏமன் நாட்டின் தலைநகரான சானாவில் நிலத்திலிருந்து ஆகாயத்தை தாக்கும் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். …

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 2,300 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டு, சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன என்றும், புலிகளைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை வலியுறுத்தியுள்ளது. …

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் அடுத்த பாண்ட் படத்திற்கு நோ டைம் டூ டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. …

ஏற்கனவே க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய. பிரான்சைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் தற்போது டிரைபர் என்ற பெயரிலான எஸ்.யு.வி. மாடலை அறிமுகப்படுத்துகிறது. இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இம்மாதம் 28-ந் தேதி அறிமுகம் செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. …

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீர் ஓட்டத்தை திருப்பி விட்டு, நம் விவாசிகள் மற்றும் தொழில்துறை பயன்பெறும் வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர், கஜேந்திர ஷெகாவத் தெரிவித்துள்ளார். …

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். …

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் நடிகை மதுமிதா. இவர் கடந்த வார இறுதியில் தன்னை தானே காயப்படுத்திய காரணத்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். …

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். …

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட உள்ள 3-வது அணு உலைக்கான, தொழில்நுட்பம் மற்றும் முக்கிய சாதனங்கள் வழங்கும் பணியை ரஷிய அரசின் அணுமின் உற்பத்தி கழகமான ‘ரொசாட்டம்’ நிறுவனத்தின் கிளை அமைப்பான ஏ.எஸ்.இ. ஏற்றுள்ளது. …

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். …

2007-ம் ஆண்டில் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன. …

சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஏமி சட்டர்த்வெய்ட் கர்ப்பம் ஆகியுள்ளார். …

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. …

தேனி அருகே இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் வைகை அணையில் குதித்து தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

மத்தியப்பிரதேச மாநிலத்தில், நல்ல போதையை ஏற்றிவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர், வகுப்பறையிலேயே தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

திருச்சி தெப்பக்குளம், சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மில் இன்று பணம் நிரப்ப கொண்டு வந்த ரூ.18 லட்சம் பணத்தை வங்கி ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளை கும்பலொன்று பணத்தைக் கொள்ளையடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. …

2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரரான பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. …

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்துகொலை செய்தார். …

லாவோஸ் நாட்டின் வியன்டியானே நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. …

"சன்சைன் கோஸ்ட் சினேக் கேட்சர்" பகிர்ந்த பேஸ்புக் பதிவில் ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையறையில் ஒரு பெரிய மலைப்பாம்பு எவ்வாறு ஓய்வெடுத்தது என்பது பற்றிய முழு சம்பவத்தையும் விவரித்து உள்ளார். …

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 26ந்தேதி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவி ஏற்றார். …

புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான்-2 சுற்றத்தொடங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான்-2 முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. …

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகிலேயே அழகான ஆண் யார்? என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் ஏராளமானோர் வாக்களித்தனர். …

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. …

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய ஓட்டல் ஓன்று இயங்கி வருகிறது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். …

சென்னையை அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மீது கற்கள் வீசி துன்புறுத்திய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. …

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. …

லார்ட்ஸ் மைதானத்தில்நேற்று நடந்த வரும் ஆஷஸ் போட்டியின் இரண்டாம் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் ஜோஃப்ரா ஆச்சர் பௌன்ஸராக அள்ளி வீசி வந்தார். ஒவ்வொரு பந்தும் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசப்பட்டது. …

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்ட கிராமத்தில் உள்ள கண்மாயை தூர்வாரும் செலவை தானே ஏற்றுக்கொண்டுள்ளார். …

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பகல் நேரங்களில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வந்தது . 16-ம் தேதி மாலையிலிருந்து சற்று வேகமாக மழை பெய்யத் தொடங்கியது. அன்றிரவு 11 மணிக்கு இடி மின்னல் பலத்த காற்று இல்லாமல் அடைமழை கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தது. …

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. …

கர்நாடக மாநிலம் கொப்பலில் தனியார் கட்டிடத்தில் அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 15-ம் தேதி சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. கொண்டாட்டம் முடிந்த பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றும் பணியை இன்று இரு மாணவர்கள் மேற்கொண்டனர். …

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். …

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலீபான் தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அரசுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பினரும் பொதுமக்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். …

உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி தற்போது தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான, 25-29 வயது பிரிவில் 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் தமிழக வீரர் அரவிந்த் நைனார் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். …

கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜெட்லியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. …

அரியர்ஸ் வைத்த பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. …

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா பூமியில் வேகமாக மூழ்கி வரும் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், உலக வெப்பம் அடைவதால் ஏற்படும் தாக்கம் காரணமாகவும், இந்த நகரம் கடலில் மூழ்கும் அபாய கட்டத்தில் உள்ளது. …

கொல்கத்தாவில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பியின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

அசாமில், 11ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கோவிலில் வைத்து, இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். …

பெண்கள் கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ’கென்னடி கிளப்’. இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். …

அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்" என ராம்லல்லா அமைப்புக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

லடாக் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மற்றும் பாக், ராணுவ படைகள் திடீரென குவிக்கப்பட்டுவருவதால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. …

முதலில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள். பேச்சு வார்த்தை அதன் பின் நடத்தலாம் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. …

முதலில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள். பேச்சு வார்த்தை அதன் பின் நடத்தலாம் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. …

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கில் உள்ள பிரதாப்காத் குடியிருப்பில் வசித்து வருபவர் பாவிசியா. இவரது மனைவி குயின்சியா(வயது28). அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர்களுக்கு 4 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். …

இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் அதிரடியாக ரத்து செய்தது. இதைப்போல அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. …

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். …

2015 இல் சுந்தர்.சி இயக்கிய ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் ஜோடி சேருகிறது சுந்தர் சி விஷால் கூட்டணி . இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். …

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குரல் எழுப்பியுள்ளது. …

விஜய் சந்தர் இயக்கத்தில், மக்கள் செல்வன், விஜய் சேதுபதி நடித்து வரும் 'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சங்கத்தமிழன் படத்தில், ராஷிகண்ணா ,நிவேதா பேத்துராஜ் , சூரி ஆகியோர் நடித்துள்ளார். …

எங்கேயும் எப்போதும்‘ படத்தை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில் ராங்கி என்னும் படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் …

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். …

தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் ராக்கி கயிறு கட்டி வருகிறார். …

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 57. …

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசுப்பேருந்துகளில் பெண்கள்அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். …

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவானி, இவர்களது 19 வயது மகள் வளர்மதி. தண்டையார் பேட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். …

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 73-ஆவது சுதந்திர தினம்இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். …

பாகிஸ்தானின் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி கேட்டுக்கொண்டுள்ளார். …

சென்னையில், காதலருடன் சேர்ந்து நடுரோட்டில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார், கல்லூரி மாணவி ஒருவர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …

சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாரதிய ஜனதா கட்சி தற்போது அங்கு எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. …

ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சேதமடைந்துள்ளன. …

பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். …

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது. காஷ்மீர் விடுதலைக்காக இந்தியாவுடன் போர் புரியவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது'' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாக பேசினார். …

நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளதையடுத்து, போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் தற்போதுள்ள ரூ.100 லிருந்து 10 மடங்கு அபராத தொகை அதிகரித்து ரூ.1000 அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. …

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக்கொண்டார் என டொனால்டு டிரம்ப் பேசியது கடந்த மாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை மறுத்த இந்திய அரசு, இது உள்நாட்டு விவகாரம் என அமெரிக்காவிற்கு பதிலுரைத்தது. …

சென்னை சைதாப்பேட்டை, ஜோதி தோட்டம், நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா.34 வயதான இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். மாநகராட்சி ஊழியரான இவருடைய தந்தை இறந்ததால் வாரிசு அடிப்படையில் ஜெயாவுக்கு இந்த வேலை கிடைத்தது. …

இம்மு காஷ்மீருக்கு சிறப்பு அநதஸ்து வழங்கும் 370வது சட் டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. …

வேதாளம், விஸ்வாசம் படங்களில் தாதா வேடம் ஏற்று வில்லன்களுடன் மோதினார் தல அஜித். தற்போது திரைக்கு வந்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார். …

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிரண்ட் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்ட கிங் ஸ்நேக் வகை பாம்பு ஒன்று, தனது இருப்பிடத்தில் சரியாக உணவு கிடைக்காததால், தீராத பசியில் தனது வாலை தானே சாப்பிட தொடங்கியது. …

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது தனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி இருக்கிறது. …

திருநெல்வேலி அருகே முகமூடி கொள்ளையர்களை விரட்டி அடித்த வயதான தம்பதியரை, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். …

கடந்த 2014 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஜிகர்தண்டா'. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். குறிப்பாக பாபி சிம்ஹா நடித்த, "அசால்ட் சேது" என்ற கதாபாத்திரம் அவருக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது. …

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. …

மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்ன முதலமைச்சர் பழனிசாமி தனது த்விட்டேர் பதிவில் தெரிவித்துள்ளார். …

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், இஸ்லாமிய நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு தான் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளன. …

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. …

ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசில், ’எபோலா’ கிருமியாழ் பரவும் கொடிய நோயான எபோலா’ பரவியதை தொடர்ந்து 1,800 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் 'எபோலா' நோய்க்கு எதிரான போராட்டத்தில், ஒரு வளர்ச்சியாக, இரண்டு பரிசோதனை சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. …

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் டி.வி. தொடர்களை, …

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் வீடுகளையும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு விரைவில் உரிய நிவாரணம் கிடைக்க, தன்னால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என வயநாடு எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். …

திருநெல்வேலியில், கொள்ளையர்கள் இருவரை, வயதான தம்பதியர் துணிச்சலாக போராடி துரத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த வீடியோ இணையத்தளத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.. …

தூத்துக்குடியில், இறந்துபோன தனது தாயின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால், அவரது உடலை மகன் குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. …

நேபாளத்தில் மலையேற்ற வீரர்களால் அண்மையில் கண்டறியப்பட்ட ஏரி ஒன்று, உலகத்தின் உயரமான ஏரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …

கூகுள் நிறுவனத்தில் தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு, ஏரி மற்றும் குளங்களை சுத்தம் செய்து வருகிறார், சென்னையை சேர்ந்த 32 வயதான இளைஞர் அருண் கிருஷ்ணமூர்த்தி. …

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ‘பக்ரீத்’. …

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெற்றது. …

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா, காஷ்மீர் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறியது. …

மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி …

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள துபா கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் ஜிதேந்திர குமார். சி.ஆர்.பி.எஃபின் 80 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். …

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. 58 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் சோனியா காந்தி நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தான் வரவேற்பதாகவும். …

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. 'பேட்ட' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஓர் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. …

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதுபோல் வைகோ பச்சோந்தி தான்; பதவிக்கு வந்தபின் காங்கிரசுக்கு எதிராக பேசுவது பச்சோந்தி குணமே என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார். …

கமல்ஹாசன், நடிப்பில் 1996ல் ஷங்கர் இயக்கத்தில் திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி கொடுத்த படம் இந்தியன். இந்த படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சங்கர். …

அமித்ஷாவும், மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புத்தகத்தினை வெளியிடுகிறார். …

சீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது. 22 பேர் பலியாகினர். 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சீனாவை ‘லெகிமா’ என்ற புயல் மையம் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் அங்கு மையம் கொண்ட 9-வது புயல் இது. இந்தப் புயல் காரணமாக நேற்று முன்தினம் தொடங்கி ஷாங்காய் நகரம் உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. …

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3 சிங்கக்குட்டிகள் மற்றும் 4 புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- …

பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிடும்படி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடந்த 6ம் தேதி ஐ.நா. மன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். …

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்கிறார். இவர் சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் அவர் ஓய்வை அறிவித்தார். இதனை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இணைந்துள்ளார். …

தனிநபர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று அறிவிப்பதற்கான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட மசோதா, கடந்த மாதம் 24-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2-ந் தேதி, மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளின் ஒப்புதலை பெற்றதால், அந்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்ததையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. …

காஷ்மீர் பற்றிய அமெரிக்காவின் கொள்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:- …

ஜம்மு மற்றும் லடாக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து , ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தின் எதிரொலியாக, இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் அதிரடியாக திடீரென நிறுத்தியுள்ளது. …

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். …

பணப்பட்டுவாடா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்தல், கடந்த 4-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு நடந்தது. …

சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது. …

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. …

கேரளாவில் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெயது பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ள சேதங்கள் மக்கள் மனதில் இருந்து இன்னும் முழுமையாக கூட நீங்காத நிலையில், நிகழாண்டும் கேரளாவை கனமழை மிரட்டி வருகிறது. …

1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல், பாபி தியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார். …

விஜய் நடித்து வரும் ‘பிகில்’ பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதில் விஜய் தந்தை-மகன் என்று இரட்டை வேடங்களில் வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லி இயக்குகிறார். …

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் பலர் முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒருவரையொருவர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் கடந்தும் காதலித்து, திருமணம் செய்து கொண்டது பற்றி நாம் அறிந்திருக்கிறோம். …

திருச்சியில் தங்கையை காதலித்த வாலிபரை ஆத்திரம் கொண்ட அண்ணன் நண்பர்கள் துணையுடன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்பரசு 3 முறை காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்துள்ளார். …

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி வீரர் ஹாஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். …

உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா பெருநகரில் கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கைப்பிடி சுவற்றின் மீது ஏறி நின்றுள்ளார். …

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. …

சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளக்கல். அவர் கேரளாவில் உள்ள கான்வென்டில் கடந்த 2014 முதல் 2016 வரை துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. …

நெக்ஸ்ட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பயிற்சி மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விஜயவாடாவிலும் பயிற்சி மருத்துவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். …

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் எம்.பி. ஆவார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் டெல்லியில் உள்ள பிரனீத் கவுருக்கு சில நாட்களுக்கு முன்னர் கைபேசியில் அழைப்பு வந்துள்ளது. பேசிய நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்தி, சம்பளத்தை டெபாசிட் செய்வதற்காக வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். …

கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்தில் 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார் மம்தா பானர்ஜி . அவர் பேசியதாவது:- …

அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் தமன்னாவை நாயகியாக வைத்து இயக்கி வரும் ஹாரர் படத்திற்கு 'பெட்ரோமாக்ஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இதை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. …

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிகொண்ட விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். …

கார், ஆட்டோ, மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து ஏர் கண்டிஷனிங் வசதியுடன் கூடிய பேருந்து சேவையை இந்தியாவில் உபேர் ( Uber) நிறுவனம் தொடங்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. …

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பவும், இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் பன்வாரி லால் ரோகித் உத்தரவிட்டுள்ளார். …

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. …

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. …

உலக அளவில் அதிக சம்பளம் பெரும் விளையாட்டு வீராங்கனைகள் முதல் 100 பேர் கொண்ட பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் அண்மையில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 13வது இடத்தை பிடித்துள்ளார். …

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும், நீதியின் முன் நிறுத்துவதற்கு அவரைப்பற்றிய தகவல்களை அளிப்போருக்கு 10 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.70 கோடி) பரிசு அளிக்கப்படும் எனவும் கூறியது. இருப்பினும் அவரை கைது செய்ய பாகிஸ்தான் மறுத்து வந்தது. …

மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. …

விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்‘ என்ற போட்டியை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது. …

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 - ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. …

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட உள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். …

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், 'அம்மா உணவகம்' என்ற பெயரில், மலிவான விலையில், தரமான உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறார். …

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து அதற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். …

பார்த்திபன் இயக்கி, தயாரித்து , நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்த்டுள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மாறுபட்ட கதை கருவை கொண்டுள்ள இந்த படத்தில் பார்த்திபனை சுற்றியே பெரும்பாலான கதை நகர்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது. …

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். …

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். …

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று கூடின. இதில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவின் 370 வது சட்டபிரிவு ரத்து, காஷ்மீருக்கான 35 ஏ சட்ட பிரிவு ரத்து செய்யப்படுகிறது என கூறினார். …

நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். …

திமுக, முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக இன்று அதிகாலை காலமானார். திமுக கட்சியில் சென்னையில் மிக முக்கியமான உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர் ஆயிரம் விளக்கு உசேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று முதல்முறை தோல்வி அடைந்த இவர், பின் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் வென்று எம்எல்ஏ ஆனார். …

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை மற்றும் தீவிர கனமழை பெய்ய கூடும். சென்னையில் இன்று மேகமூட்டமுடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்ட்டகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- …

கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. …

வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தமாக 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், கடந்த 2 தேர்தல்களை விட இந்த முறை 4% வாக்குப்பதிவு குறைந்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். …

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்டடாக எழுந்த புகாரின் எதிரொலியாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. …

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். …

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நேற்று பாங்காக்கில் நடந்து முடிந்தது . இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி …

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12–வது சுற்றான ஹங்கேரி கிராண்ட் ப்ரி பந்தயம் அங்குள்ள ஹங்காரோரிங் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. …

‘முத்தலாக்’ தடை மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த பா.ஜனதா பெண் எம்.பி. ரமா தேவியிடம் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி சர்ச்சைக்குள்ளாகி மன்னிப்பு கேட்டவர் அசம்கான் எம்.பி. …

இந்தியாவின் அதிநவீன விரைவு பதிலடி ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கவல்ல இந்த ஏவுகணையை இந்திய ராணுவத்துக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(DRDO) தயாரித்துள்ளது. …

அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில், கட்சித் தலைமை தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. …

அமெரிக்காவில் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியாகினர். …

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. …

திருச்சி அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போலி காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரில் மிக கனமழையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். 4 கல்லூரி மாணவிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்தனர். …

தருமபுரியில் அருகே பல்லாபுரம் என்ற இடத்தில் சாலையில் சென்ற 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த திருமூர்த்தி என்பவரின் மனைவி லதா என்ற பெண் பலியானார். இவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். …

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை …

அமெரிக்காவில் 'நியூயார்க் லவ் ஸ்டோரி' என்று திருமணத்திற்காக எடுத்த போட்டோ ஷூட் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இரு பெண்கள் தங்கள் ஓரின திருமணத்திற்காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள் தான் அவை. …

கூகுள் அதன் பண பரிவர்த்தனை தளமான கூகுள் பேவில் ஒரு புதிய அம்சத்தை சேர்ப்பதாக அறிவித்துள்ளது. இது பயனர்களுக்கு பரிவர்த்தனைகளை மிகவும் வெளிப்படையானதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் மாற்றும் என்று தெரிவித்துள்ளது. …

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் மூக்கையா. புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று, இவர் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். …

விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. …

உக்ரைனில், சிறுமி ஒருவர் கண்களை மூடிக்கொண்டு குத்து சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. …

பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுரா மாநிலத்தில் மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 85 சதவீத இடங்களை பா.ஜனதா போட்டியின்றி கைப்பற்றியது. …

சென்னை கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக பயணிகளுக்கு மாதாந்திர பயண அட்டை (சீசன் டிக்கெட்) வழங்கப்பட்டு வருகிறது. …

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவு முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடலில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. …

ராமநாதபுரத்தில் தாய், தந்தையை கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. …

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து, ஜம்முவை தனி மாநிலமாக அறிவிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருவதால், நாடு முழுவது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பனகமுட்லுவைச் சேர்ந்தவர் ஆசிரியர் செல்வம். இவர் 12 ஆண்டுகளாக காவேரிப்பட்டணம் அருகில் உள்ள சந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். …

400 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்ததும், சென்னை போக்குவரத்தில் முக்கிய வழித்தடமாக அமைந்துள்ள அண்ணா சாலை, கடந்த 2012-இல் நடைபெற்ற போது இருவழிச்சாலை, ஒருவழிச்சாலையாக்கப்பட்டது. 13 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இச்சாலையில், …

அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது. …

விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் தனது போலீஸ் படையுடன் விக்கிரவாண்டி கடைவீதி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். …

நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகன் ஆவது தமிழ் பட உலகுக்கு ஒன்றும் புதிதல்ல. மறைந்த நகைச்சுவை நடிகர்கள் சந்திரபாபு, நாகேஷ், மற்றும் கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம், யோகி பாபு ஆகியோர் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து, பின்னர் கதாநாயகன் ஆனார்கள். …

லண்டனில் எலிசபெத் ஹோட் என்ற பெண் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பதற்காக அங்குள்ள பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்றார். அங்கு திருமணம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இது லைவ் ஷோவாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சி தொடங்கியது. லைவ் ஷோவைப்பார்க்க தொலைக்காட்சி முன் ஏராளமானோர் குவிந்தனர். …

டெல்லியில் வக்கீலாக பணியாற்றி வரும் எஸ்.கே.சாமி என்பவர், சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- …

சென்னையைச் சேர்ந்த சிறுவனின் வாயில் இருந்து 526 பற்களை அகற்றி தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். …

பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர், தூத்துக்குடியில் நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். …

நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு எந்த தகவலும் வெளியிடாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. …

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசு ஆதரவுப் படைகள் மீது புரட்சி படை நிகழ்த்திய ஏவுகணை மற்றும் தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் பலியானார்கள். …

அமெரிக்காவில் நடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11, அன்று நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் அறியப்பட்டவர், ஒசாமா பின்லேடன். தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவை நிறுவிய இவர், பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் மறைந்திருந்தார். …

தன் மூன்றாண்டுக்கால காதலனைக் கரம்பிடிக்கவிருக்கிறார் 'அவெஞ்சர்ஸ்' நடிகை, எலிசபெத் ஒல்ஸென். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸில், ஸ்கார்லெட் விட்ச் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு வயது 30. …

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கிய நிதியில் நடந்துள்ள மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது. …

டெல்லியில் ஆன்லைன் மூலம் நூதன பண மோசடி நடப்பதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. …

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. …

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த பிரபாகர், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராகவும், …

தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் ரூ.130+ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். …

கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் தமிழர்கள் என்பதை மறைத்து வாழும் நிலையை ஒருபோதும் உருவாக்க கூடாது என்று, மக்களவையில் நதிநீர் பங்கீடு தொடர்பான மசோதா மீதான விவாதத்தின்போது கர்நாடக எம்பியம் முன்னாள் நடிகையுமான சுமலதா பேசினார். …

பொதுமக்கள் ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து இனிமேல் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. …

டெல்லியை சேர்ந்த வாலிபர் புனித் அகர்வால் (26) ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், மேலும் ஒரு சிறு வணிகத்தையும் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது மொபைல்போனுக்கு தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. …

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும், அவரின் 6-வது மனைவியான ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மே மாதம் ஹயா தலைமறைவானார். …

கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார். …

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60). விவசாயியான இவருடைய மகன் நல்லதம்பி (42) கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த முதலைப்பட்டி அய்யனார் கோவில் அருகே சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. …

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்த அரசு சந்தர்ப்பவசத்தால் குற்றம் இழைத்தவரை விடுவிக்க மறுப்பதேன்? …

நேபாள நாட்டில் போலி இந்திய ரூபாய் நோட்டுகள், அதாவது கள்ள நோட்டுகளை அச்சடித்து அவற்றை புழக்கத்தில் விட்ட பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். …

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஹஸன் அலி, ஹரியானவை சேர்ந்த பெண்ணை மணமுடிக்கிறார். இதன் மூலம், இந்திய பெண்ணை மணக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ரகள் பட்டியலில் அலியும் இணைகிறார். …

குடும்பக் கட்டுப்பாட்டு செய்த பெண் கர்ப்பம் தரித்தது குறித்த வழக்கில், தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. …

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில், இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தை கவனக்குறைவாக உட்கொண்டதால், அவருக்கு 8 மாதங்கள் விளையாட தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. …

முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக, மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வியல் முடிந்த காரணத்தினால், மாநிலங்களவையிலும் இம்மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. …

அமெரிக்காவை சேர்ந்த ‘பார்ட்நைட்’ என்ற ஆன்லைன் வீடியோ கேம் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் வீடியோ கேம் உலக கோப்பை போட்டியை நடத்தி வருகிறது. …

பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கால்பந்து கிளப் அணியில் ஆடி வரும் நெய்மர், உலகிலேயே மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். …

பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறை ஒன்றில் நேற்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் பயங்கர கலவரமாக மாறியது …

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கோல்ப் கிளப் அருகே, தனியார் ரெசிடென்ஷியல் பள்ளி ஓன்று இயங்கி வருகிறது. …

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவருடைய மனைவி தனலட்சுமி (46). சினிமாத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். …

சென்னை தலைமை செயலக போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர், தனது டிரைவர் செல்வராஜ் மற்றும் போலீஸ்காரர் ராஜசேகருடன் நேற்று அதிகாலை 2 மணியளவில் போலீஸ் வாகனத்தில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். …

புரட்சியாளர் சே குவேராவுக்கும் அவரது 2-வது மனைவி அலெய்டா மார்சுக்கும் பிறந்த 4 குழந்தைகளில் மூத்த மகளான அலெய்டா குவேரா ஜூலை 27ஆம் தேதி இரவு கேரளாவுக்கு வந்தார். …

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து, இப்போட்டி தொடரின்போது, அணி வீரர்களை எந்த வரிசையில் களமிறக்குவது, டாஸ் வென்றால் அணியின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் …

திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் 23ம் தேதி கேரள மகளிர் ஆணையத்தின் சார்பில் அதாலத் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 73 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் தனது 87 வயது கணவர் மீது புகார் கொடுத்துள்ளார். …

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது. இதில், பல்வேறு விதிமீறல்களுக்காக, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. …

சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆயிரம் ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் எடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனைப் படைத்துள்ளார். …

மறைந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா அஜிஸ் அல் சவுத்தின் மூத்த மகனான இளவரசர் பந்தர் பின் அப்துல்லா அஜிஸ், 1923 ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போதைய மன்னர் சல்மானின் மூத்த சகோதரரான இவர், எந்த ஒரு பதவியையும் ஏற்காமல் இருந்தவர். …

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை 11.45 மணிக்கு சந்தித்தார். …

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்ட டிரைலர் வெளியாகி உள்ளது. …

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது. …

கேரளாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 15 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அவர்களுக்கு உதவியாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி …

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பலிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதியுடன் இந்த யாத்திரை முடிவடையுள்ள நிலையில் நேற்றுவரை 3 லட்சம் பேர் மேற்கொண்டுள்ளனர். …

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மூத்த காவலர் ஒருவர், நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் நீதிபதிகள். வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கான கார்களுக்கான நுழைவு அனுமதிக்கான பாஸை வழங்கவில்லை எனத் தெரிகிறது. …

இந்தோனேஷியாவின் லபுயன் பாஜோ நகரில் நடைபெற்ற 23 -வது பிரைசிடன்சி கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மேரி கோம் …

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) வளாகம் உள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். …

கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே வெளியூர்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான இடம் உள்ளது. தினமும் இங்கு 300-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். …

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டைன். இவருக்கும் அகைமி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் கனவுகளோடும், கற்பனைகளோடும் மேற்கிந்திய தீவான செயின்ட் கிட்ஸ் தீவுக்கு தேனிலவு சென்றனர். நடைப்பயணம் அங்கு மேற்கொண்டபோது, சற்றும் எதிர்பாராத விதத்தில், செயல்படாமல் இருந்த ஒரு எரிமலை மீது கிளே சாஸ்டைன் தவறி விழுந்து அலறினார். …

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிக்கும் தொகையை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. …

பாகிஸ்தானுக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாட விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கும் தனது முடிவை பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள எஃப் 16 ரக விமானங்களுக்கு 24 மணி நேர தொழில்நுட்பக் கண்காணிப்பும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. …

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்பிலுள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் குடும்பத்தினர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். …

சர்வதேச கடல் எல்லையை வரையறை செய்வது தொடர்பாக, இந்தியா மற்றும் இத்தாலி இடையே நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்துவருகிறது. ஜூலை 20-ம் தேதி இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்திருக்கும் நிலையில், இத்தாலிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், …

தமிழகம் முழுவதும் 200 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு ஜாலியாக சுற்றுலாப் பயணங்கள் செல்லும் திருடர்கள் சிக்கினர். …

ஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக துளசி கப்பார்ட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த பிரசாரத்தின் மூலம் அவர் நிதியம் திரட்டி வருகிறார். …

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி யின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியின் விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்து விட்டதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. …

மழை வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 64 பேரும், பீகாரில் 102 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. …

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கொட்டகொம்பு கூடம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் லட்சுமணன். இவருக்கும் சுஜன்யா என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. பொறியாளரான லட்சுமணன் தனது அலுவலகத்தில் பணியாற்றும் இளம் மென்பொறியாளரான அனுஷா என்ற பெண்ணுடன் ரகசிய காதல் வைத்து இருந்தார். …

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதிலளித்து பேசுகையில், ‘ரெயில்வே துறைக்கு 2018-19-ம் ஆண்டில் விளம்பரம் மற்றும் கடைகள் மூலம் ரூ.230.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது. …

சென்னையில் ரூட்டு தல என்ற பெயரில் அரசு பேருந்துகளில் அராஜகம் செய்து வந்த கல்லூரி மாணவர்கள் இனி குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துள்ளனர். …

தென் தமிழகத்தின் முக்கிய உயர்சிகிச்சை மையமாக இருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின், மேல்தளத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி வந்து, மீன் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. …

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். …

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள 23 வயதான இமாம் உல்-ஹக் கடந்த 6 மாதங்களில் பல பெண்களை காதலித்து ஏமாற்றியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. …

நெல்லை வள்ளியூரில், தனது உறவினரின் !வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில், வீட்டை காலி செய்ய மறுத்த பெண்ணுக்கு ஒருமாதம் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. …

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேரை தகுதி நீக்கம் செய்வதாக, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். …

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு 11,114 கனஅடியாக அதிகரித்துள்ளது. …

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் இன்று 303 எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசயம் இந்த இம்மசோதாவுக்கு எதிராக 82 எம்.பி.,க்கள் வாக்களித்தனர். …

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். குடும்பத்தினரின் தொடர் கண்காணிப்பிலே இருந்து வந்துள்ள இவருக்கு இரண்டு மாதங்களாக வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறியுள்ளார். …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவரின் மகள், திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு சட்டம் படித்து வருவதுடன், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள 2வது முஸ்லிம் தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து, வகுப்புத் தோழியுடன் தங்கியுள்ளார். …

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகளின் திருமண தேவைக்காக தன்னை 6 மாத காலத்திற்கு பரோல் விடுவிக்குமாறு கேட்டிருந்தார். …

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் படகையும் சிறைபிடித்துள்ளனர். …

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இடையே, பிராட்வேயில் இருந்து பஸ்சில் வரும் மாணவர்களுக்கும், பூந்தமல்லியில் இருந்து பஸ்சில் வருபவர்களுக்கும் யார் பெரியவர்? என்பதில் கோஷ்டி மோதல் இருந்து வந்துள்ளது. …

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மேயால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாத காரணத்தால் அவர் பதவி விலகுவதாக அறிவித்தார். …

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதிசுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேர் செட்டில் தோல்வி அடைந்தார். இதனால் சிந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. …

திரிபுரா மாநிலம், ஹரினா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் தாஸ் (25). கொல்கத்தாவில் உள்ள ஒரு கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்தார். …

சிலைக் கடத்தல் விவகாரத்தில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். …

நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்த ஆடை பட காட்சி பரபரப்பானது. இப்படத்தை தடை செய்யக்கேட்டு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. …

கர்நாடக மாநிலத்தின் குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்குகிறது. …

கேரளாவின் கொல்லம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. ரெயிலில் பயணம் செய்த பூர்ணிமா என்ற பெண் தூக்க கலக்கத்தில் நடந்து சென்று ரெயில் பெட்டியில் இருந்து நடைமேடையில் இறங்கியுள்ளார். …

நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வரும் வாசிம் அக்ரம், 1997-ம் ஆண்டு முதல் தற்போது வரை இன்சுலின் ஊசியைப் பயன்படுத்தி வருகிறார். எங்கு சென்றாலும் இன்சுலின் ஊசிகள் அடங்கிய பையை எடுத்துச் செல்ல அவர் தவறுவதில்லை. …

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி எதிரே உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். …

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார். …

இலங்கை அணி சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. இதையடுத்து லசித் மலிங்கா ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. …

ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஹர்முஷ் நீரிணையில் ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பலில் இந்தியர்கள் 18 பேர் இருந்தனர். …

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை குறைத்துள்ளதாக தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. …

கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீரானது திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியே மேட்டூர் அணையை வந்தடைந்தது. …

25 லட்சம் லிட்டர் குடிநீருடன் 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. 50 வேகன் கொண்ட 2-வது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கத்துக்கு புறப்பட்டது. …

அமெரிக்காவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்றுள்ளார். இம்ரான் கான் வாஷிங்டனில் பாகிஸ்தான் வம்சவாளி மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். …

சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, பத்ரியன் தெரு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ அருகே முகமது சுல்தான் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். …

8 வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்த சென்னை ஐகோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. …

நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான …

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் அதனை மேலும் வலுவாக்கும் வகையில் ஈரான் தரப்பிலிருந்து செய்தியொன்று வெளியாகியுள்ளது. …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கிறார். …

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு பேட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். …

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் கிளையர் அவென்யு பகுதியில் உள்ள ஓர் குடியிருப்பில் தாயும், மகளும் வசித்து வந்தனர். …

இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்கள் நடைபெற ட உள்ளது. …

நிலவின் தென்துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, செய்வதற்காக ரூ.1,000 கோடியில் இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. …

சென்னையில், திரிபுரா சீட்டுக்கம்பெனியில் பணம் கட்டிய 25 ஆயிரம் வியாபாரிகள், 400 கோடி ரூபாயை இழந்து தவிப்பதாக வியாபாரிகள் சங்க பேரவையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். குருவி சேர்ப்பது போல சேர்த்த பணத்தை, கர்நாடகத்தைச் சேர்ந்த சீட்டு மோசடிக் கும்பலிடம் இழந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு …

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஷீலாதீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. …

பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த லால்ஜி டண்டன் ((Lal Ji Tandon)), மத்திய பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். …

3 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், பெற்றோரால் வேண்டாம் என்று பெயர் சூட்டப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி, பெண் குழந்தை குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மாவட்ட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். படிக்கும் போதே ஜப்பான் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வாகியுள்ளார் அந்த மாணவி... …

யாஜிடி இனப் பெண்களுக்காகப் போராடிய ஈராக்கை சேர்ந்த நாடியா முராத்திடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நீங்கள் எதற்காக நோபல் பரிசு வாங்கினீர்கள்" என கேட்டது பார்வையாளர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. …

மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும் போது, …

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் கட்சியின் தலைவராக இருந்த அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் பல்வேறு கட்சியில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை பாஜக தங்கள் கட்சியில் இணைத்து கொண்டுவருகின்றனர். …

உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சுட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை பார்க்க சென்ற பிரியங்கா காந்தியை உ.பி போலிசார் கைது செய்தனர். …

ஈரான், ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களுடன், 23 பணியாளர்களையும் கைப்பற்றிய பின்னர் அனைத்து இங்கிலாந்து கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழியை தவிர்த்துக் கொள்ளுமாறு இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. …

தமிழகத்தில் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். …

திருப்பூரை அடுத்த பல்லடம், பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுடைய மகன் விக்னேஷ்(வயது 34.. வேன் டிரைவராக. பணியாற்றும் இவருக்கும், பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அந்த சிறுமி பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறாள். …

பாபர் மசூதி கடந்த 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ந்தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரை ரேபரேலி நீதிமன்றம் விடுதலை செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ., உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. …

மேற்கு இந்திய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வை பிசிசிஐ திடிரென ஒத்திவைத்துள்ளது. …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுகளை வழங்கிவருகிறது. …

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. …

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ' FaceApp' என்ற செயலி வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஒரிஜினல் தோற்றத்தை நாம் விரும்பும் வயதிற்கும், தோற்றத்திற்கும் ஏற்ப மாற்றி கொள்ள முடியும். இந்த ஆப்பை பயன்படுத்தி பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். …

"பாட்டில் சேலஞ்ச்" என்ற பெயரில் பாட்டிலின் மூடியை கையால் தொடாமலேயே திறக்கும் வீடியோக்களை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஹாலிவுட், பாலிவுட் ஸ்டார்கள் பலரும் இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். …

"என்னுடைய வீட்டுத் தோட்டத்தில், பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென்று எனக்கு தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று, ஆம்பூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார். …

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்து 531 கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி புகார்கள், தேசிய பெண்கள் ஆணையத்துக்கு வந்துள்ளன. …

குஜராத் மாநிலத்தில் உள்ள தாக்கூர் சமூக மக்கள், தாங்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் உள்ள திருமணமாகாத தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். …

113 வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுள்ளது. …

வேலூரில், ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவானது வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜூலை மாதம் 11 ஆம் தேதி தொடங்கி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் இன்று மதியம் மூன்று மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்திருக்கிறது. …

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்பைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அல் கிரீன் என்ற உறுப்பினர் முன்மொழிந்தார். பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களே அதிகம் உள்ளனர். …

ஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள உள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு புகை எழுந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என க்யோட்டோ நகர போலீசார் தெரிவித்துள்ளனர். …

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் இன்று காலமானார். …

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரணவ் சிங் சாம்பியன். பா.ஜ.க., எம்.எல்.ஏ.வான இவர், இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் ‘வைரல்‘ ஆனது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். …

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் கோர்ட்டில் விசாரணை கைதிகளை 24 பேரை ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு ஒரு வேனில் அழைத்து சென்றனர். பனிதர் கிராமம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் வேன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். …

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை விலக்கிவிட்டு, ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டுமென பரவலாக கருத்து எழுந்துள்ளது. …

இந்த பூமியில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, அதனை பூகோளரீதியாக வரைபடத்தில் குறிப்பிட்டு அதை செயற்கைக்கோள் மூலம் அடையாளம் காண பயன்பட்டு வரும் அமெரிக்காவின் 'ஜிபிஎஸ்' தொழில்நுட்பத்துக்கு பதிலாக, இந்தியா விரைவில் தமது சொந்த கண்டுபிடிப்பான 'நேவிக்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. …

மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை, பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். …

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், இன்னும் மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

சென்னை கொளத்தூரை சேர்ந்த போதகர் ஒருவர் பிரைன் டியூமர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களை கை அசைவிலேயே குணப்படுத்துவதாகக் கூறி, ஏழை எளியோரை ஏமாற்றிவருவதாக, இந்திய மருத்துவ சங்கத்திற்கு புகார் ஓன்று அனுப்பப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. …

பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தை அரசு ஊழியர் ஆவார். அவனுடைய தாயார் பாட்னாவில் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார். சிறுவனின் தந்தை மற்றும் தாயார் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. …

இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மிக தீவிரம் அடைந்து உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாமில் பெய்து வரும் பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. …

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர். …

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கடப்பேரி, அற்புதம் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ன அப்புனு என்ற பிரதீப்குமார்(வயது 30). கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்ற புட்டி சுரேஷ் (29). இருவரும் நண்பர்கள் ஆவர். …

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், இன்னும், ஓரிரு வாரங்களில் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேரவையில் இன்று அறிவித்துள்ளார். மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், சென்னையில் 80, கோவை மற்றும் மதுரையில் தலா 10 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். …

தங்களது பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது, பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான மிகசிறந்த திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.ரூபாய் 96 க்கு ரீசார்ஜ் செய்தால் போதும். 6 மாதங்களுக்கு அன்லிமிடெட்டாக பேசும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. …

மத்திய அரசின் தபால்துறை சார்பில், தபால் அலுவலர் மற்றும் தபால் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த ஞாயிற்று கிழமை எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான கேள்விகள் அனைத்தும், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும் என்று தபால்துறை அறிவிப்பு வெளியிட்டது. …

2 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. …

சென்னை, நந்தனம் அருகே ஒரே பைக்கில் மூன்று பெண்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். …

மும்பை டோங்கிரி பகுதியில் நேற்று மதியம் 4 மாடி கட்டிடம் ஓன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். …

பிரதாப்கர் மாவட்டம் சோன்பூரை சேர்ந்தவர் ஓம் மிஸ்ரா. இவர் விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். …

நேபாளம் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. …

உலகக்கோப்பையை வெல்ல போகும் அணி என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி, இந்திய அணி... இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாகவே ரவுண்ட் - ராபின் சுற்று போட்டிகளில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வந்தது. நியூசிலாந்துடனான செமி ஃபைனல் மேட்ச்சில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்ததையடுத்து எல்லாம் தலைகீழாக மாறி போனது. …

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி டெல்லியில் 14 பேரைக் கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மேலும்,அவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். …

திருவள்ளூர் மாவட்டத்தில், காணாமல் போன 4 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

ஆஸ்திரேலியா, குயின்ஸ்லேண்டில் எடுக்கப்படட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது. …

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது சொந்த செலவில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி உள்ளார். …

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது. …

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில், தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் இங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. …

இலங்கை வழியாக மாலேவுக்கு கடத்தப்படவிருந்த போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மற்றும் சூப்பர் ஓவர் ஆட்டம் யாரும் எதிர்பாராத விதமாக டிராவில் முடிவடைந்ததையடுத்து, இப்போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. …

ஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. …

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், கார்களில் சீட் பெல்ட் போடாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினார்கள். உடனே அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருப்பி எதிர் திசையில் செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் …

சென்னை புளியந்தோப்பு கார்ப்பரேசன் சந்து-வை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 69). இவருடைய மனைவி ஜோதி(60). இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ராமகிருஷ்ணன்-ஜோதி இருவரும், மனைவியை பிரிந்து வாழும் தங்களது கடைசி மகனுடன் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர். ராமகிருஷ்ணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 சிறுநீரகங்களும் பழுதானதாக தெரிகிறது. இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். …

பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற காரை சினிமா பாணியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு மடக்கினர். …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாகின் மனைவி ஆர்த்தி. இவரது தொழில் கூட்டாளிகள், தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றிடம் ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளார்கள் என்றும் அந்தப் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் செய்துள்ளார். …

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன்-2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகக் கூறினார். …

கேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரள பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அகில் சந்திரன். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டார். …

நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 32). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். …

ஆளுநர் அதிகாரம் தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. …

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனியரசு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். …

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ராபர்டோ பாட்டிஸ்டாவை வீழ்த்து, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார். …

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் சுவிக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவரை நியமித்துள்ளது. …

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில், மூன்று வெவ்வேறு காரணிகளால், லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. …

சென்னை சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமேர்சிங் (வயது 23). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தார். …

மதுரை அருகே சமயநல்லூர் டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சுண்ணாம்பு பவுடர் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு பிரேமா (25) என்ற மனைவியும், தஸ்மா, சுசித்ரா ஆகிய 2 பெண் குழந்தைகளும், துஷ்யந்த் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். …

சவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை 5 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டார். …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு சென்றது. …

2019 ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின்னர், எம்.எஸ்.டோனி குறித்து …

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் க்ரோவர் ஆகிய 2 பேரின் வீடுகள் …

கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். …

கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. …

பாஸ்போர்ட் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மந்திரி முரளீதரன் பதிலளித்து பேசினார், அவர் பேசியதாவது …

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பணியில் திறமையின்மை போன்ற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. …

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், இந்தியா அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. …

கோவா மாநிலத்தில் திருமணம் செய்வதற்கு முன்னர், தம்பதிகள் இருவரும் கட்டாயமாக எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளும் வகையிலான சட்டத்தை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. …

காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் விக்ரம் பிரபுவின் 'வானம் கொட்டட்டும்' படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை மணிரத்னத்தின் உதவியாளரும், படை வீரன் படத்தின் இயக்குனருமான தினா இயக்கவுள்ளார். …

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்-ஜவாஹிரி வெளியிட்டு உள்ள வீடியோவில், காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கம் மீது இடைவிடாத தாக்குதலை நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளான். …

சுகோய் சூ-30 எம்.கே.ஐ. போர் விமானங்களை இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் இனைந்து ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த வகை போர் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. …

உலக கோப்பையை இந்தியா அணி வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவச பயண சேவை வழங்கப் போவதாக சண்டிகரில் உள்ள அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். …

போயிங் விமானம் ஒன்று எரிபொருள் லாரியுடன் மோதுவது போன்ற வீடியோவை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவர் எழுதிய ட்வீட் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. …

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். …

அமெரிக்காவின் ஒஹியோ நகரில் ஹியூபர் ஹைட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் இஜ்மிர் கோச் (வயது 34). இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் சின்சின்னாட்டி உணவு விடுதிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். …

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் (46.1 ஓவர்) எடுத்திருந்த போது பலத்த மழையின் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. …

திருச்சி அரியமங்கலம் அருகே காவலர் உடையில் இருந்த காவலரையே அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

ராஜினாமா கடிதங்களை அளித்துள்ள எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால், அவர்களுடைய ராஜினாமா கடிதங்கள் பரிசீலிக்கப்படும் என கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். …

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். கடந்த சனிக்கிழமையுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. …

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு வரலா என்பவர் வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். …

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் சரண் அடைவதில் இருந்து விலக்கு கோரும் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர் கோர்ட்டில் சரண் அடையவில்லை. அவரைத்தவிர 9 பேர் சரண் அடைந்தனர். …

சேலம் அருகே காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இந்த பள்ளியில் பிளஸ்-2 படித்தார். …

விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு 12-ம் வகுப்பு ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர செயலை அவரது மைத்துனரே செய்ததாக கூறப்படுகிறது. …

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் எண்ணெய் கப்பலை கடற்பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இத்தகவலை ஈரான் மறுத்துள்ளது. சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை கப்பல் சர்வதேச கடல்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என ஈரான் கூறுகிறது. கப்பலை விடுவிக்குமாறு ஈரான் கேட்டு வருகிறது. …

கொச்சியில் உள்ள சிறுவர்கள் விடுதியில் இயக்குநராக பணியாற்றிய பாதிரியார் ஜார்ஜ் டி.ஜே, என்ற ஜெர்ரி, அங்கு தங்கி படிக்கும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 6 மாத காலமாக இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. …

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்தார். …

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றார். தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க. …

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அதிமுக -பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 37 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். …

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. …

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். …

உடால்குரி மாவட்டம் கனாக்பூர் கிராமத்தில் பள்ளியாசிரியை ஒருவர் வீட்டில் விஷேச பூஜை ஒன்றை நடத்தியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னதாக அந்த வீட்டில் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது. அப்போது மூன்று வயது சிறுமியை பலியிட முயற்சி செய்துள்ளனர். …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் (கோகைன்) பழக்கம் உள்ளவர் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி சமீபத்தில் கூறியிருந்தார். இது காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர். …

மும்பை நாயர் மருத்துவமனையில் , மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல் (வயது26). இவர் கடந்த மே மாதம் 22-ந் தேதி மருத்துவ கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் தொடங்கியது. …

ஆஷா சரத் நடித்துள்ள ‘எவிடே’ என்ற மலையாள படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் ஆஷா சரத் தனது முகநூல் பக்கத்தில் மேக்கப் போடாமல் சோகத்தோடு ஒரு வீடியோவை வெளியிட்டார். …

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா. இவர் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது, பிரியாணிக்கான ஆர்டர் கேன்சல் ஆனதோடு அதற்கான 76 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. …

சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி, அந்நாட்டுக்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது. …

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒதுக்குபுறமான பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது சிறுமி ஒருவரின் அழுகுரல் கேட்டுள்ளது. …

முரசொலி நிர்வாகத்தின் இயக்குனராக பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியேறியது. …

கடந்த ஆண்டு இறுதியில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 43-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். …

மதுரையில் குடும்ப சண்டை காரணமாக உறவினர்கள் காதணி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என போஸ்டர் ஒட்டி வெளிக்காட்டிய குடும்ப தலைவனின் செயல் சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. …

புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 35 வயதான இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். …

ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு …

மகாராஷ்டிரா மாநிலம், கங்கௌலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான நிதீஷ் ராணே, தமது ஆதரவாளர்கள் சிலருடன், மும்பை - கோவா மாநில நெடுஞ்சாலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். …

அசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 14 வயது சிறுமியை ரயிலில் கடத்தி வந்த 2 இளஞ்சிறார்கள்ரயில்வே காவல் துறையினர் மீட்டுள்ளனர். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 42-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …

தமிழகத்தில் பிரபல நடிகர்களின் படம் ரிலீஸ் என்றாலே திருவிழா போல, திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் கலை கட்டும். …

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. …

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீனாவில் இருந்து ‘டிக்-டாக்‘ என்னும் செயலி 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அடுத்தவர்களை போல நடித்தும் , கேலி செய்தும் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே பல்வேறு வகையிலும் தீமையை தரும் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று …

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், பிற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிட வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் …

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சவால்கள் வைரலாவதும், அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமாகி விட்டது. டென் (10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. …

அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தலைவரும், வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் தலைவருமான மொஜ்தாபா சோல்னோர் மிரட்டல் விடுத்துள்ளார். …

கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 26). இவருக்கும் விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரதா(25) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் தனது மாமனாரின் ஊரான விழுப்புரத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். …

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் எந்த புகைப்படத்தையும் பதிவிறக்கமோ, பதிவேற்றம் செய்ய முடியவில்லை என புகார்கள் எழுந்த நிலையில், பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. …

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. …

இஸ்ரேல் நாட்டு ஒயின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று,தனது மதுபான பாட்டில்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தி வருவதாக, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். …

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தது. அதற்கு அம்பத்தி ராயுடு ஏற்கனவே வெளிப்படையாக தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். …

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் அங்கு உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. …

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று, பள்ளிகல்வித் துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். …

சபாநாயகர் தங்களுக்கு அளித்துள்ள நோட்ஸுசுக்கு தடை விதிக்க கோரி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. …

வங்கி கடன் வழக்கில் தேடப்பட்டு வரும் பொருளாதார குற்றவாளியான, மோசடி மன்னன் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதியளித்து லண்டன் மாநகர நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, லண்டன் ராயல் நீதிமன்றம் அவருக்கு இன்று அனுமதியளித்துள்ளது. …

பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிப்படி, பாதுகாப்புக் குழு அமைக்காமல் கடமை தவறிய, விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 40-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் கனமழை பெய்துள்ளது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. …

அடுத்த ஆண்டுக்குள் (2020) விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ககன்யான் என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்படும் விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் 300 முதல் 400 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். …

2 கோடி ரூபாய் காசோலை கொடுத்து மோசடி செய்ததாக நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

ஜம்மு-காஷ்மீரில், முதல்வர் மெகபூபா முப்தி தலைமையியிலான, மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு 6 மாத காலம் கவர்னர் ஆட்சியும், பின்னர் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது. …

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் பிரியங்கா சர்ம, அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை நடிகை பிரியங்கா சோப்ராவின் உடலில் ஒட்டி, கேலிப்படம் தயாரித்து, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டார். …

பிராந்திய திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சன்சார் சிங் (வயது 70) மேற்கு உத்தரபிரதேசத்தில் நேற்று பாக்பத் மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான ஜிமானாவுக்கு சென்று கொண்டிருந்தார். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 39-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். …

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் இடம் பெற்றிருந்தார். 3 உலக கோப்பாய் போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்து இருந்தார். …

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் விலையில் மாற்றம் செய்ய பட்டு வருகின்றன. …

இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள அட்டாரி எல்லையில், வர்த்தகத்துக்கு என தனிப்பாதை உள்ளது. அந்த பாதை வழியாக வரும் வணிக பொருட்களை இந்திய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி, இந்தியாவுக்குள் அனுமதிப்பார்கள். …

கொரிய எல்லையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். …

தெலங்கானா மாநிலத்தில் பெண் வன அதிகாரி ஒருவரை எம்.எல்.ஏ.வின் சகோதரரும், அவருடைய ஆட்களும் கம்பால் அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

நேற்று மாலை 5:40 மணியளவில் துபாயிலிருந்து மங்களூருக்கு வந்தடைந்தது. ஏர் -இந்தியா விமானம் ஒன்று, விமான நிலையத்தில் தரையிறக்கும்போது, எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் இருந்து விலகி அருகிலிருந்த கார்கள் செல்லும் சாலையில் ஓட தொடங்கியது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது இதன் மூலம், அந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் மீண்டும் நான்காவது இடத்துக்கு முன்னேறி, அரையிறுதியில் நுழைவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டுள்ளது. …

அமெரிக்காவில் பிரபல வாடகை கார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தவர் ஹர்பீர் பார்மர் (வயது 25). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் நகரில் இருந்து வொயிட் பிலைன்ஸ் நகருக்கு பெண் ஒருவரை தனது வாடகை காரில் அழைத்து சென்றார். பயணத்தின் போது அந்த பெண் பயணி அயர்ந்து தூங்கிவிட்டார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹர்பீர் …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ,ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரமத் ஷா மற்றும் குல்படின் நைப் களமிறங்கினர். இதில் குல்படின் நைப் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆக, அடுத்த பந்திலேயே ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி டக் அவுட்டாகி நடையை …

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் லண்டன் லார்ட்சில் நேற்று நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் (பகல்–இரவு ஆட்டம்) நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியுடன் , நியூசிலாந்து அணி மோதின. …

உ.பி.யில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும், இல்லையென்றால் அவர்களது சம்பளம் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். …

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லுவாலாபா மாகாணத்தில் தலைநகர் கோல்வெசியில் தாமிரம் மற்றும் கோபால்ட் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஓன்று செயல்பட்டு வருகிறது. …

சென்னை ஆவடி அருகே, 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

புதுக்கோட்டை மாவட்டம், பூசைத்துறை அருகே, ஓடும் ரயில் முன் செல்பி எடுத்த கல்லூரி மாணவர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களை அடித்தார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை விராட் கோலி முறியடித்துளார் இத்தொடரில், கோலி அடித்துள்ள நான்காவது அரைசதமாகும். …

நடந்துவரும் ஐ சி சி உலகக்கோப்பை கிரிக்கெட் ஒருநாள் சர்வதேச போட்டிகளில், பல்வேறு கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் அணியும் ஆடையின் நிறம் ஒன்றாக இருப்பதால், அணிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது. …

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுள் இவரும் ஒருவர். அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வந்தார். …

மும்பையில், 15 நாட்கள் தாமதமாக பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழையே பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. …

ஆந்திர மாநிலம் அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு உள்ளது. இந்த வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது, …

சர்வேதேச அளவிலான டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளை சேர்த்து அதிவேகமாக 20, 000 ரன்களை கடந்துள்ள வீரர் என்ற சாதனையை, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார். …

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக குடிநீர் தேவைக்காக்க திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குமுளி மலையின் இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர், முன்னறிவிப்பின்றி நிறுப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. …

பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனவத் அளித்த புகாரின் பேரில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்யா பாஞ்சோலி மீது மும்பை, வெர்சோவா போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். …

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை சிலரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். …

மான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன்களான இந்தியா அணியை, வெஸ்ட் இண்டீசும் எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். …

தனது கருப்பு பனியனுக்குள் தன் மகளைக் கைகளால் அணைத்தபடி ரியோ கிராண்டே நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார் ஆஸ்கார் அல்பெர்டோ. தனது மகளின் உயிரைக் காப்பற்றுவதற்கான முயற்சியில் தனது உயிரை இழந்த அந்தத் தந்தையின் புகைப்படம் பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைப்பதாக இருந்தது. …

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது …

சென்னை திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், திடீரென எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சாலையோர இளநீர் கடைக்குள் புகுந்து சுவற்றில் மோதி நின்றது. …

திருவனந்தபுரம் அருகே அட்டகுளங்கரை பகுதியில் பெண்கள் சிறை ஓன்று உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தியாவும், ஷில்பாவும் மாயமானது தெரிய வந்தது. …

நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களை (55 பேர்) கொண்ட கட்சியின் தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால்,நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்பட எந்த எதிர்க்கட்சிக்கும் அத்தனை எம்.பி.க்கள் இல்லாததால், எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவில்லை. …

டிடி எனப்படும் துார்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் ஆங்கர், கோ ஆர்டினேடர், கேமராமேன், காபி ரைட்டர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் இரு அணிகளின் வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் நிறம் ஏறக்குறைய ஒன்றாக இருக்கும்பட்சத்தில், களத்தில் விளையாடும் அணி வீரர்களை அடையாளம் காண்பதில் ரசிகர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க ஐசிசி போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வீரர்களுக்கு மாற்று உடைகளை ஐசிசி தற்போது ஏற்பாடு செய்துள்ளது. …

கோவை, மேட்டுப்பாளையத்தில் , வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டி கொன்று, தம்பியின் காதலியை தாக்கிவிட்டு தலைமறைவாகிய அண்ணன் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்தார். …

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். …

பாகிஸ்தானில் சீக்கிய மத பிரதிநிதிகள் தங்களது சமூகத்தினருக்காக தனியாக பள்ளி ஒன்றை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். …

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார். …

கோவை, மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிகாலை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

கோவையை அடுத்த அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). இவரது மனைவி காஞ்சனா (21). இவர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரை சேர்ந்தவர். கனகராஜ் சொந்தமாக ஒரு பொக்லைன் எந்திரம் வைத்து அதை வாடகைக்கு விட்டு வருகிறார் கனகராஜூம், காஞ்சனாவும் கோவை சரவணம்பட்டியை அடுத்த விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு அரும்பதா (2½) என்ற பெண் குழந்தை …

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல முன்னாள் வீரரான பிரையன் லாரா (வயது 50). இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. …

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், கெவுட்குடா என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு கவிழ்ந்தது. …

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 500 ரன்களை கடந்துள்ள முதல் வீரர் என்ற பெருமையை, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் பெற்றுள்ளார். …

வாகன விபத்தில், சம்பவ இடத்திலேயே மனைவி இழந்து , பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் உயிருக்கு உயிரான மகள். உலகமே இருண்டது போன்ற அந்த ரணமான சூழலில், ஒரு தந்தையால் என்ன செய்துவிட முடியும்? …

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சூத்திரதாரியாக விளங்கிய ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் சமீபத்தில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வரும் இவன், உடல் நலக்குறைவு காரணமாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். …

உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் தலா 6 போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. …

தெலுங்கானாவில் இந்த வருட தொடக்கம் முதல் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (சி.ஓ.பி.டி.ஏ.), 2003ன் படி தடை விதிக்கப்பட்டது. இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும். …

சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து கவுஹாத்தி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் திடிரென விமானத்தின் கதவை திறக்க முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி அமரவைத்துள்ளனர். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 31வது லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் காயம் காரணமாக விலகியுள்ளார். …

திருமணமாகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என்று, வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையேயான உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அது, இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. …

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் தொடங்கியது . கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர். …

வெளிநாட்டுக்காரர்கள் சவூதி அரேபியாவின் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அந்நாட்டின் அரசு தொடங்கி இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர். …

சென்னையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி, மக்களின் நன்மதிப்பை பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்த, நபரை போலீசார் கைது செய்துள்ளனர். …

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி, அங்கு உள்ள பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது. …

பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை மின்னணு முறையில் (இ -டிக்கெட்) வழங்கும் நடைமுறையை, அனைத்துவித திரையரங்குகளிலும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி வீரர் என்ற சாதனையை, நேற்று லண்டன், லாட்ஸ் மைதானத்தில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் நிகழ்த்தியுள்ளார். …

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) நடத்தும் போட்டி தொடரின் இறுதியாட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி வாகை சூடியுள்ளது. …

புதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்தவர் குருமூர்த்தி, தொழிலதிபர். இவர் புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் தனது மனைவியுடன் சேர்ந்து சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2011 முதல் 2013 வரை உள்ள காலங்களில் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து 34½ லட்சம் ரூபாய் பணம் காசோலை மற்றும் , பணம் எடுக்கும் செல்லான் மூலமாக போலியாக கையெழுத்திட்டு எடுக்கப்பட்டு இருந்தது. இது கடந்த சில மாதங்களுக்கு …

2007-ம் ஆண்டில், புனேயில் உள்ள விப்ரோ கால்சென்டர் நிறுவனத்தில் வேலைபார்த்த இளம்பெண் ஒருவரை இரவு பணி முடிந்து நிறுவனத்தின் ஒப்பந்த காரில் வீடு திரும்பும் போது கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து கற்பழித்து கொன்ற வழக்கு நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஊழியராக வேலை பார்த்து வந்தார். புனேயில் உள்ள விப்ரோ கால்சென்டரில் பெண் ஊழியர் ஒருவர் இரவு பணி முடிந்து திரும்பினார். …

23ஆம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் தென்சென்னை மாவட்ட பதிவாளர். ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை தொடர்ந்து தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி வழங்கப்பட்டது. …

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பத்திரிகையாளரான இ ஜீன் கர்ரோல் (75), நியூயார்க் பத்திரிகையில் எழுதி உள்ள பத்தியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். …

லண்டன் கூட்டம் ஒன்றில் இங்கிலாந்து கருவூலத்தின் அதிபர் (Chancellor of the Exchequer) என்னும் முக்கிய பொறுப்பிலிருக்கும் பிலிப் ஹம்மண்ட் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது , திடீரென கிரீன்பீஸ் அமைப்பைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து குரல் எழுப்பத் தொடங்கினர். இதனால் கூட்டத்திற்கிடையில் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டது. …

மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் , மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:– …

நிறுவன உரிமையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, இனி ஜிஎஸ்டி பதிவெண்ணை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 27-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …

பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண், அந்த கருவைக் கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

அருணாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் வினோத்தின் உடலுக்கு, கோவை, சூலூர் விமான படைத்தளத்தில் விமானப் படை அதிகாரிகள் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். …

சுவாதி கொலை சம்பவம் போல் சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (14-ம்தேதி) ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் தேன்மொழி என்ற கூட்டுறவு பெண் அதிகாரியை வெட்டி சாய்த்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …

ரூ.5,52,73,825 கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்து உள்ளது. …

நாடிங்ஹாமில் நடக்கும் 26வது உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (166), பின் (53), கவாஜா (89) ஆகியோர் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து, 381 ரன்கள் எடுத்தது. …

ஹிமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பேருந்து ஓன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓளரவு சரி செய்யும் வகையில், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கி உதவ, கேரள அரசு முன் வந்துள்ளது. …

கோயம்பேட்டில் இருந்து மெட்ரோ ரயில் பணிக்காக, இதுவரை மதுரவாயல் வழியாக சென்ற வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக இயக்கப்படும் என்று அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. …

சென்னையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநரை அடித்தனர். அதனால் அங்கு பரபரப்பான சூநிலை ஏற்பட்டது. …

மாமூல் வசூல் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்று இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. …

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது, அதுமட்டுமில்லாமல், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. …

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது தென்மேற்குப் பருவக்காற்றை வலுப்பெறச் செய்யும். …

ராஜாக்கமங்கலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அருள் செல்வன், இவர் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.. இவருக்கு ஆர்த்தி என்கிற சந்தியா (வயது 20) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஆர்த்தி, நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். …

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது.. …

நீட் விண்ணப்பப் படிவத்தில் ஓ.பி.சி என மாணவர் தவறாக குறிப்பிட்டிருந்தை எஸ்.சி.யாக மாற்றம் செய்து, எஸ்.சி பிரிவில் தர வரிசையை சேர்க்க வேண்டுமென தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. …

கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.. …

கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.. …

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிச் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். …

தன் மீது தொடரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்து வருகிறது. …

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது 2009-ல் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. …

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கையில் கஞ்சா பொட்டலத்தை வைத்துக் கொண்டு, தான் கஞ்சா விற்பதாக பகிரங்கமாக கூறும் ரவுடி ஒருவரின் வீடியோ குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் …

ஜப்பானில் உள்ள யமகட்டா மாகாணத்துக்குள்பட்ட சுரோகாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 -ஆக பதிவாகியுள்ளது. …

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை இந்தியா, செவ்வாய் முதல் அமல்படுத்தியுள்ளது. …

இந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். …

மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கக்கோரி கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களிடம் ஆட்சியர் வீரராகவராவ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். …

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 உயரதிகாரிகளை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பி, கடந்த வாரம் அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய நிதியமைச்சகம் . அதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 15 வருமான வரித் துறை உயரதிகாரிகள் அதே பாணியில் வீட்டுக்கு அனுப்பியுள்ளது.. …

டொரன்டோ ரேப்டர்ஸ் அணி முதன் முறையாக என்பிஏ கூடைப்பது சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அந்த அணியைப் பாராட்டும் நிகழ்ச்சி கனடாவின் டொரொன்டோவின் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் 10 லடசத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் …

சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி, நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன. …

எகிப்து நாட்டில், முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. …

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வாரகாலமாக அரசு மருத்துவர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. …

சென்னையில் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். …

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் தோட்டாக்களுடன் இருந்த 9 எம் எம் வகை துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

பிகார் மாநிலம், மூசாஃபர்பூர் நகரில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 100 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், அதில் அதிகம் இறந்துள்ளது குழந்தைகள் என்பதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

சென்னை விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக, பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மீது நிதி மோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. …

ஜப்பான் கார்ரொ தீபகற்ப பகுதியில் , ஆழ்கடலுக்குள் வீரர்கள் சிலர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆக்டோபஸ் ஒன்று வீரர் ஒருவரை பிடித்து இழுத்துப் பார்த்தது. ஆனால் அந்த வீரர் தொடர்ந்து நீந்திச் சென்று கொண்டிருந்தார். …

அப்துல் கலாம் ஐயா அவர்களது பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு பா.ஜனதா முன்னாள் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். …

நாடு விடுதலை பெற்ற பிறகு 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு உருவான அரசியல் சூழ்நிலைகள், மாநில சட்டசபைகள் கலைப்பு, கவிழ்வது போன்ற காரணங்களால் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. …

வருடாவருடம் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொள்வார்கள். இம்முறை இந்த பட்டத்திற்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலகியுள்ளார். …

உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி வென்றது கிடையாது என்கிற சரித்திரம் மீண்டும் நிஜமாகியது. பாகிஸ்தானை 7-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் வென்று சரித்திரம் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. ரோகித் சர்மாவின் அபார சதமும், இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ஹர்திக் ஆகியோரின் பந்து வீச்சும் இதற்கு கை கொடுத்தது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 11,000 ரன்களை கடந்து இந்திய கேப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். …

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மாவேலிக்காராவில் உள்ள வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் சிவில் காவல்துறையில் பணிபுரிந்து வருபவர் சௌமியா புஷ்பாகரன் …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த காலங்களில் பாகிஸ்தானிடம் தோற்காத, இந்தியா, இந்த போட்டியிலும், அந்த சாதனையை தொடர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். …

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் செல்கிறார்கள். …

பிரபல எழுத்தாளரும், திரைக்கதை, வசனகர்த்தாவுமான ஜெயமோகன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்திவபுரம் பகுதியில் வசித்து வருகிறார். …

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 19வது போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றது. சவுத்தாம்டனில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. …

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டதொழில் அதிபரின் மகளும், ஐ.டி பெண் ஊழியருமான ஒருவருக்கு சென்னை பெருங்குடி அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து காலில், அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, அந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர் ஒருவர், அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணின் 6 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பின்னர் மருத்துவமனை …

சத்தீ‌‌ஷ்கர் மாநிலம், கான்கெர் மாவட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நக்சல் ஒழிப்பு படையினர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். …

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரியை, அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. …

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், தனியார் நிதி நிறுவனத்தில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ள நிலையில், அந்நிறுவத்தின் தலைவர் வெளிநாடு தப்பியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. …

சேத்துபட்டு ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவரை, திடீரென அரிவாளால் தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் எதிரே வந்த மின்சார ரயில் முன் அந்த இளைஞர் பாய்ந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.. …

கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இச்சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும் என்றும், மாநில மொழியில் (தமிழில்) இருக்க கூடாது என்றும் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. …

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் பண மாேசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிரவ் மாேடி, தற்போது பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் வெளியே விட்டால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாக கூறி, பிரிட்டன் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. …

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக, கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பிஸ்கெக்கில், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார்.சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு நல்லுறவுகள் குறித்தும், அதனை மேம்படுத்துவது பற்றியும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். …

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து புதுமண தம்பதிகளின் நூதன முறையிலான விழிப்புணர்வு முயற்சி அனைத்து தரப்பினரிடையே பாராட்டினை பெற்றுக்கொடுத்துள்ளது. …

ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின், ஒசாகா நகரில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. …

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டிரன்ட் பிரிட்ஜில் நேற்று நடைபெறவிருந்த ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. …

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் ஜூன் 3-ம் தேதி மதியம் 12.25 மணி அளவில் காணாமல் போனது. …

அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடுகளையம் மிரட்டி வருகிறது அமெரிக்கா, அவர்களையும் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்கிறது. …

அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. …

நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து, ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து தலைமறைவான, பெண்ணை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். …

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவினை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. …

சேலம் மாவட்டம் கருமந்துரை மலைப்பகுதிகளில் உள்ள 20 கிராமங்களில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். …

ஜம்மு - காஷ்மீரில் ஏற்கனவே குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு அதை நீட்டித்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான நேற்று டவுன்டானில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொண்டது. …

தென்மேற்கு பருவமழை 8-ந் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக தற்போது மாறி இருக்கிறது. …

கோவையை அடுத்த துடியலூர் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது38). இவருடைய கணவர் அருண்ஜோ அமல்ராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். …

அரியானாவின் குர்காவன் பகுதியில் எமரால்டு எஸ்டேட் பகுதியில் 8 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசி எறிந்துள்ளார். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. …

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவு நன்றாக உள்ளது. குறிப்பாக ராணுவ உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. …

‘நீட்’ தேர்வு முடிவு கடந்த 5-ந் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகம் ஆகும். …

சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர், தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 8–ந் தேதி இவர், மடிப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் பொது ஷிகர் தவான் காயமடைந்தார், இந்த காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க தவானுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. …

லண்டன் மாநகரில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் விளையாட்டை கண்டு களித்துவிட்டு வெளியில் வந்த விஜய் மல்லையாவை அங்கிருந்த இந்திய வம்சாவழியினர் சூழ்ந்து நின்று விஜய் மல்லையா திருடன், "விஜய் மல்லையா திருடன் என்றும், திருடன் திருடன்" என்றும் கோஷமிட்டு கிண்டல் செய்துள்ளனர். …

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்வா எனுமிடத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …

பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.. …

பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ், இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. உடல்நிலை காரணமாக அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

கன்னட எழுத்தாளரும் பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் ( வயது 81) பெங்களூரில் இன்று காலை காலமானார். …

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். …

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் (வயது 67) காலமானார். நடிகர் கமல்ஹாசன் 3 வேடங்கள் ஏற்று நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். …

ஹாங்காங்கில் கொண்டுவரப்பட உள்ள நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் பல்லாயிரக் கணக்கானோர் ஓன்று திரண்டு போராட்டம் நடத்தினர். …

தலைக்கவசம் அணியாமலோ, குடிபோதையில் வாகனம் ஓட்டினாலோ வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். …

சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். …

கீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி மீண்டும் தொடங்க உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். …

லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைக்கு (நேற்று) நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் ஆட்டம் நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. …

மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதால் இரு தரப்புக்கும் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. …

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்து திடீரென பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- …

தென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். …

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. …

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் குமார் ஆகியோர் மீது, தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

துபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர் , அதில் 7 பேர் இந்தியர் என தகவல் வெளியாகியுள்ளது. …

தமிழகத்தில், அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. …

கிருஷ்ணகிரி, வரட்டன பள்ளியில் பெட்ரோலிய குழாய்கள் பதிப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

சத்தீஸ்கரில், சரியான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், மஞ்சள் காமாலையால் அவதிப்பட்ட சிறுவனை, 8 கி.மீ., துாரம் கட்டிலில் சுமந்து சென்று, சிகிகச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு கிராம மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். …

கோவையில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவிருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்று உள்ளார். இதன் மூலம் ஜனநாயக கட்சி எம்.பி. ஆன பிரமிளா ஜெயபால், அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிகள் சபையின் தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் தெற்கு ஆசிய பெண் என்கிற பெருமையை பெற்றுள்ளார். சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால், 1982-ம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் குடியேறினார். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 11-வது லீக் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. …

ஜெர்மனியில் 85 நோயாளிகளை கொன்ற புகாரில் செவிலியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …

இலங்கையில் நிலவும் மத ரீதியிலான பதற்றம் தமிழகம், கேரளாவில் பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. …

கோவை சரவணம்பட்டி அருகே மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்கை பார்த்து விரக்தி அடைந்த கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடம் மாறிய பயணத்தின் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. …

ஜீவாவின் 29-வது படம் 'கொரில்லா'. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இந்தப் படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார். …

தோனியின் கீப்பிங் கிளவுசில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. …

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் மோதிய செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. …

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில், 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். …

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார். …

மகாராஷ்டிராவில், தனது மகளின் திருமண செலவுக்காக தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 860 மரங்களை வெட்டிய நபருக்கு இருமடங்கு மரங்கள் நட வேண்டும் என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது. …

தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். …

உத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் பிரகாஷ் பந்த் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 58. …

குஜராத் மாநிலம், பலன்பூரில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். …

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் தனது முதல் ஆட்டத்திலேயே, தென் ஆப்பிரிக்கா அணியை, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது இந்திய அணி. …

அமெரிக்காவின், நியூயார்க் மாகாணம், குயின்ஸ் நகரில் வசித்து வருபவர் சுக்ஜிந்தர் சிங். இவரது 2-வது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் (வயது 55). இந்த தம்பதியருடன் சுக்ஜிந்தர் சிங்கின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் அஷ்தீப் கவுர் (9) ஒரே வீட்டில் வசித்து வந்தாள். …

தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி தனது வீட்டிலிருந்து மாயமானார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை தாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர். …

ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். …

நிதி ஆயோக்கின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …

திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறை குறித்து அரசு மருத்துவக்குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. …

சென்னையில் புதிதாக டீசல் ஆட்டோக்களை பதிவுசெய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எல்.பி.ஜி.யில் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. …

ஸ்விக்கி, உபெர் ஈட்ஸ் உள்ளிட்ட தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதால் அந்நிறுவளங்களின் மேலாளர்களுடன் போக்குவரத்து காவல் துறை இன்று ஆலோசனை நடத்தியது. …

தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் விலகியுள்ளார். …

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோ (prank video) ஸ்டார் கங்குவா ரென். இவரை பல லட்சம் பேர் யூடியூப்பில் பின்தொடர்கின்றனர். அதிக அளவிலான ரசிகர் பட்டாளமும் வைத்துள்ளார். …

ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியில் பேஸ்புக் பக்கம் ஓன்று தொடங்கப்பட்டது. அந்த பேஸ்புக் பக்கத்தில் சிறுநீரகங்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. சிறுநீரகங்கள் கொடுத்தால் 3 கோடி ரூபாய் தருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. …

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 17 கிராம மக்கள், கண்களில் கருப்பு துணி கட்டி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். …

கடந்த ஆண்டு ,கேரளா, கோழிக்கோடு மாவட்டத்தில் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிபா வைரஸ் நோயானது, பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. …

13 பேருடன் சென்ற ஏஎன்-32 (AN-32) ரக இந்திய விமானப்படை விமானம் மர்மமான முறையில் மாயமாகியுள்ளது. அதைத் தேடும் பணியில் 2 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது. …

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் எதிரொலியாக, கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. …

தனது 76 ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் நேற்று மாலை நடந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இசைக்கலைஞர்களின் சங்கத்திற்காக, தனது சொந்த செலவில் கட்டிடம் ஒன்றை கட்டிவருவதாக அவர் அறிவித்துள்ளார். …

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை, பாகிஸ்தான் வென்றது. …

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு, இங்கிலாந்தில் இன்று ஊக்க மருந்து (டோப் டெஸ்ட்) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. …

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டது. …

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கேரள பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. …

சென்னையில் நள்ளிரவில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட 15 இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். …

சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டாவளத்தில் கல்லை வைத்து மின்சார ரயிலைக் கவிழ்க்க சதி செய்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. …

தனுஷ் நாயகனாக நடிக்து, கடந்த மாதம் திரைக்கு வந்த படம் மாரி 2. இந்தப் படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். …

சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில், பாம்பன் ரயில் நிலையத்திலேயே இன்று நிறுத்தப்பட்டது. …

அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க இனி பேஸ்புக், ட்விட்டர் தகவல்களையும் வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. …

கேரள மாநிலத்தில், மதாரஸாவில் பயில வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். …

சென்னை கடற்கரை-திருமால்பூர் இடையே 10 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீண்டும் ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. சென்னை பரங்கிமலையில் கடந்தாண்டு ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற மின்சார ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த வழியாக மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. …

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்றும், அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். …

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய அறையில் நடைபெற்றது. …

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வரும் ஜூன் 5-ம் தேதியோடு ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். …

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனின் காலில் இருந்த 10 கிலோ எடைகொண்ட புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். …

உள்நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்தாக ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு மருத்துவருக்கு மரண தண்டனையும் மற்றுமொரு அதிகாரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

உலக பால் தினத்தை முன்னிட்டு ஜூன் 1- ஆம் தேதி, ஆவின் நிறுவனம், ஆவின் பால் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை மிக எளிதாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி. …

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வெவ்வேறு பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், அந்த இயக்கங்களில் இருந்து விலகி மீண்டும் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்துள்ளதாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். …

வசந்த பாமாதேவி என்ற இயற்பெயா் கொண்ட காஞ்சனா ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். 1960 மற்றும் 70 களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் காஞ்சனா. …

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, 303 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. …

மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்துக்காக சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. …

வாட்ஸ்ஆப் மூலமாக பரவிய வதந்தி ஒன்றை நம்பி, ஓய்வு பெறவுள்ள டிஜிபி ராஜேந்திரனிடம் ஆயிரக்கணக்கான காவலர்கள் மனு அளித்து வருகின்றனர். …

தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் முடிந்த நிலையில், ஒரு சில இடங்களில் பரவலான மழை பெய்தது. …

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட, உலக கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடும் 10 அணிகளின் கேப்டன்களுக்கும், இங்கிலாந்து ராணி எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் விருந்தளித்து கௌரவித்தார். …

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய மத்திய அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக பொறுப்பு வகித்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், அவரது புதிய அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளார். …

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது , இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. …

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, நேற்று (30 மே 2019) 2வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றார். …

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் கூட அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார். …

மும்பை நகரின் வசாய் பகுதியில் சிகரெட் வாங்குவதற்காக சுற்றி திரிந்த இருவரை தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் கைது செய்தனர். …

செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு தொழில் செய்து வந்த போலி டாக்டர் தம்பதிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு (நேற்று) சந்தித்து பேசினார். …

தமிழில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் 96 திரைப்படம். தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கவுள்ளனர். …

ஒடிசா முதல்வராக 5 வது முறையாக இன்று பதவி ஏற்றார் நவீன் பட்நாயக். அவருக்கு ஒடிசா ஆளுநர் கணேஷ் லால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். …

ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி என்னும் ராக்கெட் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அன்று வானிலை சற்றே மோசமாக இருந்தது. இருப்பினும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணியை தள்ளி வைக்காமல் திட்டமிட்டபடியே ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் இந்த ராக்கெட்டை மின்னல் ஒன்று தாக்கியது. …

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவில் யார் யாரை மத்திய அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். …

உத்தரகாண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த தம்பதியினர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கள் அறையில் இருந்த மின் விசிறியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். …

சென்னையில் 9 இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு போயுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. …

பிரேசில் நாட்டில் உள்ள அமேஸோனாஸ் மாகாண சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …

ஐதராபாத் விமான நிலையத்தில், பயணிகளிடம் சாேதனையில் ஈடுபட்டிருந்தபோது, பெண் பயணி ஒருவரிடம் இருந்து, 11 கிலோ எடையிலான தங்க பிஸ்கட்டுகள், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். …

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க வென்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி, வரும் 30ம் தேதி, டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார். …

விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் துணைத் தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்பட 4 பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. …

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். …

புற்றுநோயை தொடக்க நிலையிலேயே மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்கும் சிடி ஸ்கேன் கருவி, தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னை தரமணியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நிறுவப்பட்டு உள்ளது. …

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கான முன்னோட்ட சூழல் தொடங்கி உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. …

ஹரியானாவில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் சுற்றித் திரிந்த, போலந்து நாட்டை சேர்ந்த நபரை, போலீசார் கைது செய்தனர். …

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழா வரும் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. …

நிலத்தடி நீரை எடுக்க ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 27-ந்தேதி (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.. …

லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது . இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. …

சென்னை அமைந்தகரையில் உள்ள விடுதி ஒன்றில் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பெண்ணை கடத்தி அறையில் அடைத்து வைத்து தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த திலகவேணி, கடந்த 2012 -ஆம் ஆண்டு சகாயராணி என்பவரிடமிருந்து தற்போது வசித்துவரும் வீட்டை 50 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி 35 லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். மீதப் பணத்தை 2 ஆண்டுகளுக்குள் கொடுத்துவிடுவதாக …

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 11 பேருக்கு ஒரே நாளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையை இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. …

ஆந்திராவில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக வரும் 30ஆம் தேதி பதவியேற்க உள்ளார். …

மணப்பாறை பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் கடும் இன்னல்களுக்குளாகி வருகின்றனர். இந்நிலையில் வையம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை எனவும், தண்ணீர் வரும்போது சிலர் மின்மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால் …

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. …

நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாந தகவல் வெளியாகியுள்ளன.. குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார், மேலும் அத்துடன்,அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேன உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்கிறார்கள். …

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா 39.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்களை நிர்ணயித்தது. …

ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தனது தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். …

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களின் ஆதரவு கடிதத்தையும் பாஜக தலைவர் அமித்ஷா குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். அப்போது, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். …

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ‘நாசா’வுக்கு இணையாக பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல சாதனைகளை புரிந்து வருகிறது. …

2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடந்து வந்தது . போட்டியின் கடைசி நாளான நேற்று நடந்த பந்தயங்களில், இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்தியா மொத்தம் 12 தங்கப்பதக்கங்களை அள்ளியது. …

தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் எந்த வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். …

மோடி தலைமையில் அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பு ஏற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. …

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. …

தமிழ்நாடு அனைத்து ஆட்டோமொபைல் பெடரேசன் சார்பில் பழமையான கார்களை மிகவும் விருப்பத்துடன் பராமரிக்கும் கார் பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும்வகையில் திருச்சியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி முதன்முறையாக வெள்ளிக்கிழமை (நேற்று) அன்று நடைபெற்றது. …

குஜராத் மாநிலம் சூரத் நகரில், சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை மாலை (நேற்று) வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீயால், ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 18 என்று அறிவிக்கப்பட்டது, கடைசியாக கிடைத்த தகவலின் படி இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது .அதில் 10 பேர் மாணவர்கள். …

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெற்று பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். …

மக்களவைத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடியும், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும் சென்றனர். அப்போது அவர்கள் இருவரையும் கட்சித் தொண்டர்கள் ரோஜா இதழ்களை தூவி வரவேற்றனர். தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் மோடி கையசைத்தார். …

பாகிஸ்தான் ராணுவம் நாட்டின் பாதுகாப்புக்காக அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி சோதித்து வருகிறது.இந்நிலையில், 1,500 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை கொண்ட ‘சாகின் 2’ ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.. …

பால்கர் மாவட்டம், வசாயில் உள்ள ஒரு மதுபான பாரில், அழகிகளுடன் வாடிக்கையாளர்கள் ஆபாச நடனத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு புகார் வந்தது. …

சந்திராப்பூர் மாவட்டம் ரஜூரா பகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சுபாஷ் தோதே நர்சிங் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கல்லூரியின் செயலாளராக இருப்பவர் அருண் தோதே. இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த கல்லூரியின் முதல்வர் அங்கு படித்து வரும் மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. …

கேரளாவில் ஆட்சி செய்யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலப்புழா தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 19 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றி உள்ளது. …

36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன, மேலும் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. …

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லே மெல் (வயது 53). இவர் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதோடு, தனக்கு சொந்தமாக சில விமானங்களை வைத்துள்ளார்.. …

தென் மாவட்டங்களில் முக்கியமான தொகுதியான தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழிசையும் போட்டியிட்டனர். …

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது …

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட சேட்டிலைட் எந்தவொரு பருவ மாற்றங்கள் இருந்தாலும் உடனே புகைப்படங்களை அனுப்பும் …

அமெரிக்காவின் கடற்படை விமானமான ஏ.வி-8 பி ஹாரியர், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர். …

2019 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகளை அரசு ஊடகமான பிரசார் பாரதி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, யூட்யூப் (youtube )மூலமாக நாடு முழுவதும் நேரலை செய்யவுள்ளது. …

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். …

கொலிஜியம் பரிந்துரைத்த நான்கு நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், நான்கு மாநில நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார். …

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை துல்லியமாக, காலதாமதமின்றி வெளியிட தேவையான அணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். …

இணையதளத்தில் பேஸ்புக் எனப்படும் முகநூல் தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை விட டிக்டாக் செயலியை பார்த்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் 31 வரையான காலத்தில் உலகெங்கும் 18.80 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். …

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டனர் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினராக உள்ளன.அதில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. …

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திலுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டு இடத்தை ஒப்படைக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். …

அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக கூறி, தங்கள் மீது, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க கோரி பில்ரோத் மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. …

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். …

தமிழகம் முழுவதும் வரும் 27 ம் தேதி முதல் தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகள் ஓடாது என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அறிவித்துள்ளனர். …

தொடர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்ததால் 5 வயது சிறுமியை அவளின் தாய் அடித்ததில், அச்சிறுமி உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. …

கொல்லம் அருகே வீட்டுக்குள் 20 ஆண்டாக சிறை வைக்கப்பட்ட பெண்ணை போலீஸ் துணையுடன் பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகள் மீட்டனர். …

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் வீச்சு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

ஐ.டி. ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கானத்தூர் காவல் நிலைய காவலர்களுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.. …

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். …

கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை, தனியார் காப்பகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது. …

தமிழகத்தில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று சோதனை நடத்தியது. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ இந்த அதிரடி சோதனையை நடத்தியுள்ளது. …

அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். …

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்து வருகிறது. …

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. …

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்திரா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிட முடிவு செய்துள்ளார். …

சீனாவில், 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை செல்போன் சேவையை நடைமுறைப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களிடம் அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளதாக சீன தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. …

பன்றி இறைச்சியை கடத்தியதாக சவுதி அரேபிய இளவரசர் அடெல் அல் குதாய்பியை இஸ்ரேல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். …

திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. …

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள 1.300 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். …

கும்பகோணத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழ்ந்து வரும் பிரச்னை அனைத்துக்கும் பா.ஜனதா தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னணி கூறி வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜனதா, 4 இடங்களை பிடித்த …

சென்னை அயனாவரத்தில், தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி என்ற 10 வயதுச் சிறுமி, கோடை விடுமுறை விட்டதை அடுத்து , சென்னை, அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அச்சிறுமியின் அத்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை மருத்துவமனையில் அனுமதித்து உடன் தங்கி உள்ளார். …

உலகிலேயே முதல் முறையாக, குழந்தைகள் பொருத்தி விளையாடும் லெகோ பிளாக்குகளை கொண்டு, அதிவேக காரான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) மாடலில், கார் உருவாக்கப்பட்டுள்ளது. …

பின்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் 1884-1885 ஆம் ஆண்டுகளில் தனது அனுபவம் குறித்து கடந்த 1889ம் ஆண்டில் புத்தகம் ஒன்றை எழுதினார். …

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை …

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் ஏறி வருகின்றனர். …

ஒரு கிரிக்கெட் மேட்சில் ஒண்ணு அல்லது ரெண்டு பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் "டக் -அவுட்" ஆவதை பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு அணியின் 10 பேட்ஸ்மேன்களும் "டக் -அவுட்" ஆன கொடுமை, கேரளாவில் நிகழ்ந்துள்ளது. …

மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா அமர்வு தள்ளுபடி செய்தது. …

கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். …

அமேசான் இணையதளத்தில் டாய்லெட் சீட் கவரில் கடவுள்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால், #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. …

அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எஃப் 16 ரக போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கட்டிடம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. …

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வரும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. …

கமலின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மீது முட்டை, கல் வீசியது தொடர்பாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரூரில் நேற்றிரவு பிரச்சார மேற்கொண்டார். அப்போது, பிரச்சார கூட்டத்தில் அவர் மீது முட்டைகள், கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. …

கோவையில் சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு அவரை உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்அமைச்சர் எஸ்.பி வேலுமணி, . கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு தேர்தல் பிரச்சாரம் முடிந்து சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலை விபத்தில் சிக்கி …

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், ராஜீவ் குமார் சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் அதனால் அவரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றுவதற்காக, ராஜீவ் குமார் முயற்சிப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் …

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேவர்பண்ணையில் உள்ள முல்லியாற்றின் ஓரத்தில் இன்று காலை இரு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை கீழே கொட்டி பார்த்த போது அதில் இருந்து ஏராளமான ஆதார் அட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். …

கடந்த 1986-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் சில அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. …

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. …

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறை, முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. …

முல்லைப் பெரியார் அணை நீர் தேக்கப்பகுதியில் கார் நிறுத்துவதற்காக கேரள அரசின் கட்டுமான பணி தீவிரமடைந்துள்ளதால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. …

மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே முடித்து கொள்ளுமாறு அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. …

அமெரிக்காவை எதிர்க்க முழு வலிமையுடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்துக்கான ஈரான் தூதர் ஹமீத் பெய்தினிஜாத் ((Hamid Baeidinejad )) தெரிவித்துள்ளார். …

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. …

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவர் விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். …

இந்து தீவிரவாதி என்று பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளில் அரவக்குறிச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …

அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில்அஞ்சலி நடித்துள்ள படம் 'லிசா. இதனை ‘பி.ஜி. மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்துள்ளார். …

தமது வேண்டுகோளை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் தனது உறவினரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகியுள்ள பாஜக நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர். …

வாட்ஸ்ஆப் செயலியை சில ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளதாக செய்திகள் வந்துள்ளதையடுத்து, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்யுமாறு வாட்ஸ்ஆப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. …

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, அவதூறு கிளப்பும் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பா.ஜ.க இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காள அரசியலில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

இந்திய ராணுவத்தினரின் சீருடைகளுக்கு தைப்பதற்காக முன்னதாக காட்டன் துணிகளை பயன்படுத்தி வந்தனர். காட்டன் துணிகளை பராமரிப்பது சிரமமாக இருந்ததால் அதை மாற்றி டெர்ரிகோட் துணியாலான சீருடைகள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த துணிவகைகள் கோடை காலத்திலும், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போதும் பொருந்துவதில்லை என்று கூறப்படுகிறது. …

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் 3 வயது சிறுமி சில மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஸ்ரீநகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அதனை ஏற்று நேற்று பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தன. …

காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தில் உள்ள கூல் பகுதியில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், ராணுவத்தினருடன் சென்று அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர் …

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 இளநிலை பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. …

சரித்திர கதையான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கும் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. …

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. …

ஆளே இல்லாமல் எதிரிகளின் இலக்கை அதிவேகமாக சென்று தாக்கக்கூடிய பறக்கும் ஊர்தி ( அபியாஸ்) திங்கட்கிழமை (நேற்று) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. …

வெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர் தொகையை ஐஎம்எஃப் (The International Monetary Fund ) வழங்க உள்ளது. …

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 28-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

இங்கிலாந்து நாட்டில் உள்ள பெர்க்‌ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் பிராண்ட் (வயது 47). இவரது மனைவி ஏஞ்ஜெலா மிட்டல் (41).இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. …

மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் ஒன்றை எழுப்புவது என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு திட்டமாகும். …

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும். அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். …

அமெரிக்காவின் தொடர் அழுத்தம் காரணமாக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். …

பழவேற்காடு ஏரியில் அனுமதியின்றி படகு சவாரியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி எச்சரித்துள்ளார். …

ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை அணி. …

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. நான்காவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்பது அறிய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. …

இந்தியாவில் அனைத்து வகை பிரிவினரையும் கவரும் வகையில் ஸ்கோடா கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை அறிமுகம் செய்து இந்திய சந்தையில் முக்கிய பங்காற்றி வருகிறது. …

சென்னையில் உள்ள காதலனை பழி வாங்க, அவரை ஆள் வைத்துக் கடத்தி அடித்து துவம்சம் செய்த பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் , சென்னையில் மே 12 -ஆம் தேதி பாடகி சின்மயி போராட்டம் நடத்த, காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. …

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் வரும் விளம்பரங்களை, இதன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், அதற்கு சன்மானமாக டிஜிட்டல் வேலட் முலம் வருமானம் கிடைக்கும் வகையில், அந்த செயலி வடிவமைக்கபட்டுள்ளது. …

புதுச்சேரி ஆளுநரின் அதிகாரம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். …

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வேளாங்கண்ணி.இவர்கள் இருவரும் நேற்று மதியம் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த ஒரு வாலிபர் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குள் புகுந்து அண்டாவை திருடினார். அந்த நேரத்தில் அவரின் வீட்டின் அருகே உள்ள மற்றொரு சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்க வந்த நபர், அண்டாவுடன் வந்த வாலிபரை பார்த்ததும் சந்தேகம் எழவே. …

ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. …

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.. …

குறைந்த தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக, தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. …

ராஜஸ்தானை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இரண்டாண்டுகளுக்கு முன்னர், கேன்சல் செய்த டிக்கெட்டுக்கான பணத்தை தற்போது ரீ-ஃபண்ட் பெற்றுள்ளார். …

மொபைல்ஃபோனில் பேசியபடி காரை ஓட்டிய குற்றத்துக்காக, ஆறு மாதங்களுக்கு கார் ஓட்ட தடை விதித்து , இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமுக்கு, லண்டன் நகர நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு 750 பவுண்ட் (இந்திய மதிப்பில் 69 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

இமயமலையிலிருந்து சுமார் 5000 கிலோ குப்பை கழிவுகளை நேபாள ராணுவம் அகற்றியுள்ளது. இமயமலை பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றும் முயற்சியில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் நேபாள ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். …

ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணின் முகத்தில் ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டன் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகவும், அந்நிறுவனம் தொடர்பான ஆவணங்களில் தன்னை இங்கிலாந்து குடிமகன் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதாகவும் அண்மையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி பிரச்சினையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். …

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதை எதிர்த்து, அந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த 14 பேர்களில் மூன்று பேரின் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாஸ், ஜான் ஜோசப், மாலா ஆகியோரும், …

மத்திய மந்திரி நிதின் கட்காரி பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சரில் நேற்று பா.ஜனதா வேட்பாளர் ஹர்தீப் புரியை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது …

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால், ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. …

அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்த மாற்றுத்திறனாளியின் புகாரை ஏற்காமல், அவரை அலைக்கழித்த போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். …

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். …

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. …

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,. ஒரு சில இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. …

அல்- அஸிஸியா உருக்கு ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனை பெற்ற அவர், கடந்த டிசம்பர் 25-ம் தேதி லாகூரில் உள்ள கோட் லாக்பாத் சிறைக்கு மாற்றப்பட்டார். …

அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாநிலத்தில் உள்ள ஸ்டெம் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் 18 வயதுடைய ஒரு மாணவன் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.. …

பாகிஸ்தானில் வசிக்கும், அப்பாவி ஏழை கிறிஸ்தவ சிறுமிகளை, திருமணம் என்ற போர்வையில் சீனாவிற்கு கடத்திச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக, அதிர்ச்சி புகார் எழுந்திருக்கிறது. …

சென்னையில் சிறுமிகள் மூவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. …

குஜராத் மாநிலத்தில், வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நபரை, விஷப் பாம்பு ஒன்று கடித்தது. இதனால் கோபமடைந்த அந்த நபர் பாம்பை திருப்பி கடித்து அதை கொன்றுவிட்டார். எனினும், விஷம் ஏறியதில் சிகிச்சை பலனின்றி அந்த நபரும் பரிதாபமாக உயிரிழந்தார்.. …

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கை அணுகிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வழக்கறிஞர்கள் சிலரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து உச்சநீதிமன்றத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த இளைஞர்கள் போராட்டத்தை மையப்படுத்தி மெரினா புரட்சி என்ற பெயரில் புதிய படத்தை எம்.எஸ்.ராஜ் டைரக்டு செய்துள்ளார். நவின்குமார், சுருதி உள்பட பல புதுமுகங்கள்இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவினர் 2 முறை இந்த படத்தை வெளியிட தடை விதித்தனர். …

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் இருப்பது முற்றிலும் அவசியமான ஒன்றாகும் என பிரான்சு தெரிவித்துள்ளது. சமகால உண்மைகளை பிரதிபலிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மற்றும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும் எனவும் இதில் மறு கேள்விக்கே இடம் இல்லை, இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும் எனவும் பிரான்சு தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான பிரான்சின் நிரந்தர பிரதிநிதி …

திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுக வை சேர்ந்த தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். …

திருவள்ளூர் மாவட்டம் புழல் காவல்நிலையத்தில், பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புழல் காவல்துறை ஆய்வாளரைக் கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து கேரள மாணவி பாவனா என். சிவதாஸ் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார். …

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. …

மும்பை நட்சத்திர விடுதி ஒன்றில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட, பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவரையும், அவரது உதவியாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

ஹமாஸ் போராளிகள் நடத்திய சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அரசு ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளது. …

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க சிறைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். …

73 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 78 பேரை ஏற்றிக்கொண்டு, சூப்பர் ஜெட் விமானம் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முற்பட்டது. …

ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

சீன வனவிலங்கு பூங்காவில் இருக்கும் 17 வயதான கோலா கரடியைப் காண சுற்றுலா பயணிகள் பலரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். …

ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசு, 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. …

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை ,எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய தமிழ்நாட்டில் இருந்தும், தெலுங்கானாவில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வாரணாசி சென்றனர். இவர்களில் பலரை வேட்புமனு தாக்கல் செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், வேட்புமனு தாக்கல் செய்த 24 விவசாயிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. …

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். …

எகிப்தின் கடவுளான அபோபிஸ் ((Apophis)) என பெயர் சூட்டப்பட்டுள்ள மிகப் பெரிய விண்கல் ஒன்று 2029ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. …

கேம் சேஞ்சர்’ என்ற பெயரில் அப்ரிடி எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில், ‘37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது தனது வயது 19. மற்றவர்கள் சொல்வது போல் 16 வயது அல்ல என குறிப்பிட்டிருந்தார். …

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் முதல்வரான உம்மன்சாண்டி ஆட்சியின்போது, வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சக்திக்கான தகடுகள் அமைத்துக் கொடுப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரில் சரிதா நாயர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். …

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வீசும் காற்றால், ஆண்டிப்பட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 500 காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. …

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்று உள்ளாட்சி தேர்தல் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. …

மும்பை கிராபட் மார்க்கெட் பகுதியில் அக்கா, தங்கை 2 பேர் சம்பவத்தன்று டாக்சியில் வந்து இறங்கினர். அப்போது அவர்களது எதிரே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அக்கா, தங்கை இருவரையும் தனது செல்போனில் 2 பேரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட அவர்கள் வாலிபரிடம் தட்டிக்கேட்டனர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். …

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 66 எம்.எல்.ஏக்களுடன் மெஜாரிட்டி அரசாக ஆம் ஆத்மி அரசு திகழ்கிறது. நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்து வருகிறது. …

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான பால்பாண்டி என்பவர், முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

தனது வயது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி தனது சுயசரிதையில் தெரிவித்திருக்கும் தகவல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. …

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னும், அவரது நீண்ட நாள் காதலரும் திருமண நிச்சயம் செய்துக்கொண்டதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.. …

நடந்துவரும் பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியை காணவில்லை என்று அவர் போட்டியிடும் அமேதி தொகுதியில் இரவோடு இரவாக முளைத்த திடீர் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. …

ஐசிசி தரவரிசை கணக்கீட்டில் 2015-16-ம் ஆண்டு தொடரின் முடிவுகள் நீக்கப்பட்டன. இதே போல் 2016-17, 2017-18 ஆண்டு நடந்த போட்டிகளின் முடிவுகள் 50 சதவீதமும், நடப்பு சீசன் போட்டிகள் முழுமையாகவும் கணக்கில் கொள்ளப்பட்டு. இதன் அடிப்படையில் தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. …

ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 43). இவருடைய மனைவி நதியா. ஸ்ரீதர் ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது குடும்ப செலவிற்காக தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் 2 பேரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. …

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). முறுக்கு வியாபாரியான இவர் கடந்த மாதம் மேட்டுப்பட்டி காவலூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வெள்ளக்கரடு என்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், கணேசன் அடித்துகொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. …

சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமாக ஹூவாய் மூலமாக இங்கிலாந்தில் 5 ஜி என்னும் 5-ம் தலைமுறை தொலை தொடர்பு சேவையை வழங்க பிரதமர் தெரசா மேவின் அரசின் திட்டமிட்டது. …

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. ஃபானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. இந்த புயலானது, இன்று காலை 8 …

சென்னை அண்ணா சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் தொழில் அதிபர் கிரண் ராவ். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. இவர் தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் நகை கண்காட்சி நடத்தி வருகிறார். …

சிபிஎஸ்இ, பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 31 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி முடிந்தது. தேர்வு முடிந்த ஒரு மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. …

உத்தர பிரதேசம் மாவட்டத்தில் உள்ள ரேபரேலியில் உள்ள பொது கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நிருபர்களிடம் கூறியதாவது …

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் விளையாடக்கூடிய பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு கடந்த ஒரு சில ஆண்டுகளாக மக்களிடையே பிரபலம் அடைந்து உள்ளது. பலரும் இந்த விளையாட்டை விளையாடும் பலரும் இதற்கு அடிமையாக உள்ளனர். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வினோத சம்பவம் ஓன்று நடைபெற்றுள்ளது. …

அமெரிக்காவின் வாஷிங்டனில், கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. …

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து நடத்திய விசாரணையின் போது உரிய ஆவணங்கள் இன்றி சென்னையில் தங்கி இருந்த அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சிக்கினார். …

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இணைத்துள்ளது. …

சென்னையில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த பானி புயல், அதிதீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 3 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடக்கும். …

1950ம் ஆண்டிற்கு பிறகு அப்போதைய பம்பாய் மாகாணத்தில் குஜராத்தி பேசும் மக்கள் மகாகுஜராத் என்ற இயக்கத்தையும், மராத்தி பேசும் மக்கள் சம்யுக்த மகராஷ்டிர அந்தோலன் என்ற இயக்கத்தையும் தொடங்கி தங்களது மொழி பேசுவோருக்கு என மாநிலங்களை பிரிக்கக்கோரி போராடி வந்தனர். …

புதுச்சேரி அருகே முகலாயர்களின் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது நவீன கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. …

விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில், சட்ட ஒழுங்கு காவல்துறை தலைவர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்திற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நட்டம் ஏற்பட்டு வரும் நிலையிலும், மக்களின் தேவைக்காக தொடர்ந்து இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் சேவையை, முடங்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என போராட்டகாரர்களுக்கு பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். …

போதைமருந்து எடுத்து கொண்டது சோதனையில் தெரியவந்ததை அடுத்து, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அந்த அணியின் பேட்ஸ்மேனான அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளார். …

குஜராத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. …

அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து , சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் மனு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது. …

கடந்த 2009-ம் ஆண்டு FL 2017 எனும் புதுவகை உருளைக்கிழங்கை கண்டறிந்து பெப்சி நிறுவனம் அதற்கான காப்புரிமை பெற்றுள்ளது. லேஸ் சிப்ஸ் தயாரிக்க பயன்படும் இந்த உருளைக்கிழங்கிற்கு பெப்சி நிறுவனம் காப்புரிமை பெற்றது தெரியாமல் குஜராத்தில் 9 விவசாயிகள் அவற்றை பயிரிட்டுள்ளனர். …

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அனுமதியை 2017-ல் மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநரான கிரண்பேடிக்கு சிறப்பு அனுமதி கொடுத்திருந்தது. …

பெற்றோர்கள் முதல் அரசாங்கம் வரை அனைவருக்கும் பப்ஜி விளையாட்டு, பிரச்சினையாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேறெந்த விஷயத்திலும் கவனத்தை செலுத்தவிடாமல் அவர்களை முடக்கி விடுகிறது. …

தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பானி’ புயல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் புயல் காரணமாக உருவான சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் பேசினேன். …

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் (62), 2 முறை திருமணமாகி விவாகரத்தானவர். இந்நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை (52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார். …

தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சேகரின் நியமனத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் தொடர்ந்துள்ளார் விஷால். இந்த வழக்கை நாளை விசாரிக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். …

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. …

வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்த தயார் என விஜய் மல்லையா மீண்டும் கூறியுள்ளார். …

கோவையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனது குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் லா லிகா கால்பந்து தொடர் சீசனில் வழக்கம் போல் இந்த ஆண்டும் 20 கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் லெவன்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. …

பஞ்சாப் மாநிலம் படின்டா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் அகல் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். …

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின. இந்த போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …

இலங்கையில் சமீபத்தில் தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நடந்தது போல மேலும் பல மத ஸ்தலங்களில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. …

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபனி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்று ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.76 கோடி மதிப்புள்ள, 5.33 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். …

தெலுங்கானாவில் பக்கத்து வீட்டு குளியலறைக்குள் தவறி விழுந்த, 7வயது சிறுமி அங்கிருந்த தண்ணீரை மட்டும் குடித்து 4 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில், இன்று உயிருடன் மீட்கப்பட்டார். …

இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொஞ்சம், கொஞ்சமாக தீவிரமடைந்து தற்போது ‘ஃபானி ’ புயலாக உருவெடுத்து இருக்கிறது. இந்த புயல் தீவிர புயலாக இன்று உருமாறுகிறது …

பிரேசிலில் உள்ள சாவ் பவுலோ நகரில் நடைபெற்ற பேஷன் ஷோவில், பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஆண் மாடல் டலஸ் சுவாரஸ் கலந்துக் கொண்டார். …

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார், …

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரெண்டே நாட்களில் உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. …

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த பின்னர் வெற்றிவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “அதிமுக விலுள்ள எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்லாமல்; தேர்தலை சந்திப்போம். எங்களது ஸ்லீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் உள்ளனர். சிலர் அமைச்சர்களாகவும் உள்ளனர்” என்றார். …

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்–வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. …

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. எனினும் சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தும் வருகிறது.. இந்நிலையில் வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. …

சவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர், 27 ஆண்டுகளுக்கு பிறகு கோமா நிலையிலிருந்து திரும்பியுள்ளது அவரது குடும்பத்தினர் மத்தியில் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

கர்நாடக மாநிலத்திலுள்ள ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் டவுன் வாகிசா நகரில் வசித்து வந்தவர் நீலம்மா. இவருக்கு சொந்தமான இன்னொரு வீடு காலியாக இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று நீலம்மா வீட்டில் தனியாக இருந்தார். …

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். …

இங்கிலாந்தில் உள்ள டாடா ஸ்டீல் ஒர்க்ஸ் ((TaTa Steel Works)) தொழிற்சாலையில் பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. …

லண்டனில் கைதான இந்திய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு. நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது …

36 வயதினிலே', 'நாச்சியார்', 'மகளிர் மட்டும்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களை தொடர்ந்து ஜோதிகா கதாநாயகியாக நடித்து, அவரது கணவர் சூர்யா தயாரித்துள்ள படத்தை கல்யாண் டைரக்டு செய்கிறார். …

பனிப்போர் காலத்தில் ரஷியாவை உள்ளடக்கிய கம்யூனிஸ்டு கூட்டமைப்பான, சோவியத் ஒன்றியத்துக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்தது. ராணுவம் மற்றும் வணிக ரீதியில் இந்த நட்புறவு பேணப்பட்டு வந்தது. …

பாராளுமன்ற தேர்தலில், கடந்த முறையை போல இந்த முறையும் உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் தான் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வாரணாசி மக்களவை தொகுதிக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். …

வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது …

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. மேலும் நிலவி வரும் கடும் நிதி நெருக்கடியின் காரணமாக அனைத்து விமான சேவைகளையும் அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. …

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த புகார் பற்றி விசாரிக்க நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது …

காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்த ரஷ்ய நடிகை ஜேன் கட்டாரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, விளம்பரப்பட நடிகர் ரூபேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் 99 வயதான இசேபியா லியோனார் கார்டெல் என்ற பாட்டி படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்டதன் காரணமாக தற்போது அவர் பள்ளியில் சேர்ந்துள்ளார். …

தமிழகத்தில் வரும் 27,28 ம் தேதிகளில் புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். …

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மூன்றாவது தங்கத்தை வென்று கொடுத்துள்ளார் பி.யூ.சித்ரா. …

இலங்கையில் கொழும்பு நகரில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி, ஈஸ்டர் பண்டிகை அன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 359 பேர் பலி ஆனார்கள். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் என உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா கடந்த சில மாதங்களாக, தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று மாறியிருந்தது. அமெரிக்காவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிந்ததால், மீண்டும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை சமீபத்தில் வடகொரியா சோதித்து பார்த்தது. …

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார். இதற்காக நாளை அந்த தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். …

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. …

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிக் டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம் என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து, நடிகை கஸ்தூரிபேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. …

வடமேற்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியானவர் உதித்ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். …

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் திவாரி (வயது 40) டெல்லியில் வசித்து வந்தார். கடந்த 16-ந் தேதி ரோகித் சேகர் திவாரி அவருடைய வீட்டில் மூக்கில் ரத்தம் வடியமயங்கி கிடந்தார். …

ஆரஞ்சு மிட்டாய்,’ ‘ஜுங்கா,’ ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களை தயாரித்த விஜய்சேதுபதியின் சொந்த பட நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்,’ ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ஆகிய படங்களை தயாரித்த 7 சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கும் படம் ‘லாபம்’. …

மதுரை மத்திய சிறையில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலையடுத்து, சுவர் மேல் ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர். மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் போலீசார் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய அதிரடி சோதனை நடத்தினர். …

இலங்கையில் ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை 45 குழந்தைகள் உள்பட 321 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் 35 வெளிநாட்டவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகளப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். …

மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பிரதமர் மோடி வாக்களித்தார். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை எனக் கூறியுள்ள அவர், சிறந்த எதிர்காலத்தை தேர்வுசெய்ய அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். …

64 வயதான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் பெண் ஊழியர் (வயது 35) ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். …

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. …

இலங்கையில், நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. …

7 மக்களவைத் தொகுதிகள் உள்ள டெல்லியில், 4 தொகுதிகளுக்கு பா.ஜ.க ஏற்கெனவே தனது வேட்பாளரை அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கொண்டு 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா இன்று வெளியிட்டது. …

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். …

இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எத்தகைய உதவியும் செய்ய தயாராக இருப்பதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. …

நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவம் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தான் நீட். இந்த தேர்வுகள் மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக சுமார் 15 லட்சம் மாணவ மாணவிகள் பெயர் பதிவு செய்துள்ளனர். …

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் தேர்தலை புறக்கணித்ததால், அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 410 வாக்குகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. ஐந்து ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அல்லாடும் மக்களின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. …

ஆணி படுக்கையில் 1 மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்து சென்னையைச் சேர்ந்த மாணவி புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. …

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நடந்த கோவையை சேர்ந்த தொழிலதிபர் பரந்தராமன் கொலை சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகளை கோவை மாநகர போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். …

தமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். …

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றபோது அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. …

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 215 பேர் பலியாகினர். …

நேற்று கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. …

மதுரை மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து சில ஆவணங்களை நகல் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் …

இலங்கையில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் பலர் தேவாலயங்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொழும்பு நகரின் 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 ஓட்டல்களில் இன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் …

நாட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். …

சீக்கு, கிங் கோலி என்ற செல்லப் பெயர்களைக் கொண்ட விராட் கோலிக்கு “லிட்டில் பிஸ்கட்” என்று ஏபிடி வில்லியர்ஸ் புதிய பெயர் சூட்டியுள்ளார். …

நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார். வயநாடு பகுதியில் பிரச்சாரத்தின் போது ராகுல், காங்கிரஸ் கட்சியின் சிறப்பான திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினால்தான் ஸ்ரீதன்யா சுரேஷ் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. …

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. …

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த இளம் கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. …

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் பொதுச் செயலாளரும், அவரது சகோதரியான பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, …

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தம்மை கைது செய்து சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தமது சாபத்தால் தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பிராக்யா கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. …

ஹவுராவில் இருந்து புதுடெல்லி வரை செல்லும் பூர்வா விரைவு ரயில், பிரக்யராஜ்ஜில் இருந்து புறப்பட்டு அதிகாலை 1 மணியளவில் ரூமா என்ற கிராமம் வழியாக செல்லும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர். …

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரத்தில் உள்ள போலீசார், பப்ஜி, ப்ளேயர் ஆன்லைன் பேட்டில் கிரவுன்டு விளையாட்டை கூகிள் ப்ளே ஸ்டாரில் இருந்து பதிவிறக்கம் செய்ய ராஜ்கோட் நகரத்தில் உள்ள அன்ரொய்ட் நுகர்வோர்களுக்கு தடை விதிக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கடிதம் அனுப்பி ஒரு மாத காலமாகியும் கூகுள் நிறுவனத்திடமிருந்து இதுவரை அவர்களுக்கு பதில் எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது …

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதையடுத்து …

குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர் ஹர்திக் பட்டேலை கன்னத்தில் ஒருவர் அறைந்த சம்பவம் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. …

புலந்த்சஹரின் சாந்திபூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார். 25 வயதான இவர் பகுஜன் சமாஜ் சார்பில் யோகேஷ் சர்மாவுக்கு வாக்களிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் போது, தவறுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக வேட்பாளர் போலா சிங்குக்கு வாக்களித்து விட்டார். …

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 91 புள்ளி 3 சதவிகிதம் மாணவமாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், …

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி தங்கியிருந்த தூத்துக்குடி வீட்டில் கடந்த 16-ந்தேதி, உள்ளூர் போலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழுவினருடன் இணைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். …

மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது அங்குள்ள ஒரு ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார். …

சக்தி வாய்ந்த போர் தளவாடங்கள் அடங்கிய புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. மேலும், இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் நேரில் கண்காணித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. …

சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களுக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது. …

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ (BCCI - Board of Control for Cricket in India) ஆலோசனைக் குழுவிலிருந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி, விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

டெல்லி பாஜக தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி எம்.பி. ஜிவிஎல் நரசிம்மராவ் மீது காலணி வீசப்பட்டது. …

சென்னை முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறை அதிகாரிகள் ஈடுப்பட்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு மசாஜ் சென்டர் நடத்த லஞ்சம் வாங்கி சிக்கிய உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார். …

தேர்தலில் வாக்களிக்கவும், தொடர் விடுமுறை காரணமாகவும் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். …

உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. இந்த அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். …

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், கடனில் மூழ்கியுள்ள நிலையில் தமது விமான சேவைகள் முழுவதையும் இன்றுடன்(நேற்று இரவுடன்) தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. …

53 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்றதொரு கிரகம் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள கோள்களைக் கண்டறிவதற்காக, டெஸ் எனப்படும் கோள்களைக் கண்டறியும் செயற்கைக்கோளை நாசா கடந்த ஆண்டு விண்ணில் ஏவியது. …

நாளை தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடை பெற இருப்பதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. …

புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …

கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கடந்த 3-ந் தேதி ‘டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. …

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி வட்ரா போட்டியிட தயார் என, அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதுவரை வேட்பாளர் எவரும் அறிவிக்கப்படவில்லை. …

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் குறிஞ்சி நகரில் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். …

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிக அளவில் பணம் கைப்பற்றதை அடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஆம்பூர், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாரீசில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும், பிரான்சின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்து வரும் இந்த தேவாலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. …

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மறுநாள் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தல் விதிமுறைகளின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை 6 மணியுடன், பிரசாரம் நிறைவடைகிறது. …

டிக் டாக் செயலியில் இந்தியர்களின் பதிவேற்றம் செய்த 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. டிக் டாக் செயலி மூலம் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், அதனால் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. …

இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான், இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெறுவது வழக்கம். அதேபோல் சல்மான் கான் நடித்து தற்போது வரும் ‘பாரத்’ படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. …

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை உள்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக இந்திய கிரிக்கெட் …

பிரித்தானியாவில் உள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்தாய் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, பல ஆண்டுகளாக வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஈக்வேடார் அதிபர் லெனின் மொரெனோ தெரிவித்துள்ளார். அசாஞ்சேவின் கைது குறித்து ஈக்வேடார் அதிபர் லெனின் மோரெனோ பேசிய போது, அவர் தூதரகத்தை வேவு பார்க்கும் மையமாக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். …

பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்தான புதிய பயண அறிவுறுத்தலை அமெரிக்க அரசு, வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளை வகைப்படுத்தப்பட்டு பட்டிலிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தானை பொதுவாக அபாயம் நிறைந்த 3-வது நிலையில் வைத்துள்ளது. பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், …

இந்திய முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தொடக்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். …

முஸ்லிம் பெண் எம்.பி. இல்கான் ஒமருக்கு (Ilhan Omar) எதிராக, வன்முறையை தூண்டியதாக அதிபர் டிரம்ப் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது. …

தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. …

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த சசிதரூர், திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எடைக்கு எடை காணிக்கை வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்ட போது அவரது தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. …

தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியீடுள்ளார். அதில் தமிழகத்தில் கோடைமழை காலத்துக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன. இது மகிழ்ச்சியான செய்தி என்று தெரிவித்துள்ளார் …

ரபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்து இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் ஊடகங்களில் கசிந்தன. எனவே அவற்றை ஆதாரமாக கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. …

இரட்டை அர்த்த வசன பாடல்களுக்கு ஆட்டம் போடும் பள்ளி மாணவிகளின் வீடியோக்களை ஆபாச இணைதளங்கள் பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என பலரது வேண்டுகோளாக இருந்தது, மேலும் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று சிலர் வழக்கும் தொடுத்திருந்தனர். …

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவியாவார். சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைவேலு இறந்து விட்டதால் ரத்தினம் தனியாக வசித்து வந்தார். …

டெல்லியில் ஓட்டல் உரிமையாளர், கட்டிட வல்லுனர், கட்டுமான அதிபர், ஏ.சி. விற்பனை உரிமையாளர்கள், மருத்துவர், பேக்கரி உரிமையாளர் என பல வசதி படைத்த தொழிலதிபர்களை தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு 2 பேர் மிரட்டி வந்துள்ளனர். …

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 11ந்தேதி தொடங்கியது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தது. …

நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் இன்று காலமானார். சின்னப்புள்ள' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், 2008-ல் வெளியான 'நாயகன்' படத்தில் நாயகனாகவும், பெண்சிங்கம் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்தார். …

இந்தியாவிற்கு நேட்டோ ((the North Atlantic Treaty Organization) கூட்டு நாடு என்ற அந்தஸ்தை வழங்கக் கோரும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …

எகிப்தில் ஆபாச நடனமாடியதற்காக பெண் ஒருவருக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரீவா என்ற இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அரைகுறை ஆடையுடன் நடனமாடியுள்ளார். …

மும்பையில் மின்சார ரெயில், பெஸ்ட் பஸ் சேவைகளுக்கு அடுத்தபடியாக டாக்சி மற்றும் ஆட்டோக்களை தான் பெரும்பாலான மக்கள் போக்குவரத்து தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பலரும் பயணிகள் அழைக்கும் குறைந்த தூர பயணத்திற்கு அவர்களை ஏற்றி செல்வதில்லை. …

சென்னையில், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு இன்று முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. …

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டின் வருமான வரியாக 70 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார். அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. …

நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில், நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு பென்ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோபால் சர்ச்சையில் சிக்கியது. நடுவரான உல்ஹாஸ் காந்த்தே நோ பால் கொடுத்து விட்டு, பின்னர் தனது முடிவை மாற்றி நோபால் இல்லை என்று அறிவித்தார். பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்தபோது, இந்த சர்ச்சை எழுந்ததால், களத்தில் நின்ற சான்டநெற் மற்றும் ஜடேஜா, இருவரும் …

இந்தோனேசியாவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு, பின்னர் 20 முறைக்கும் மேல் பல்வேறு அளவுகளில் நில அதிர்வு உணரப்பட்டது. …

இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், கண்தெரியாத தனது மாமியாருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, நள்ளிரவு 3 மணியளவில் தனது வீட்டின் முன் பட்டாசுகளை வெடித்துள்ளார். …

ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நேற்று சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூரில் வைத்து நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் போட்டியில், கடைசி ஓவரின் , கடைசி பந்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் போது கடைசி ஓவரில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென்ஸ்டோக்ஸ் வீசினார். புல்டாசாக ஒரு பந்தை பென்ஸ்டோக்ஸ் …

உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. …

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 25-வது ஐ.பி.எல் லீக் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. …

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரிக்க அந்த கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். …

இந்திய தேர்தல் கமி‌ஷன் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது. தண்டனை பெற்ற கைதிகளை பரோலில் விடுவிப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக கருதப்படும். சில குறிப்பிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக தண்டனை கைதிகளை பரோலில் விடுவிக்க வேண்டுமானால் மாநில அரசு மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். …

பிரேசிலில் தனது நண்பரைத் துப்பாக்கியால் சுட்டவனை, தனது உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாமல், உயிரைப் பணயம் வைத்து பிடித்தவர் பற்றி வீடியோ வெளியாகி உள்ளது. …

தேர்தல் பரப்புரையில், இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதால் நடிகை குஷ்பு அவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

மதுரை மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதியை மீறி வாக்கு சேகரித்ததாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் பேரில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …

மராத்தி புத்தாண்டையொட்டி தாதர் சிவாஜி பார்க்கில் கடந்த 6-ந் தேதி நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களை நவநிர்மாண் சேனாவினர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டனர். …

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்களுக்கு பொது மருத்துவ இன்சூரன்ஸ் வழங்குவதற்காக 1960ஆம் ஆண்டுல் மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் என 11 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் விரிவடைந்துள்ளது. …

பிக் பேங்க் தியரி (Big Bang theory) எனப்படும் பெரும் வெடிப்பின் மூலம் தான் இந்த உலகம் உருவானதாக அறிவியல் கோட்பாடு கூறுகிறது. ஆனால், அதற்கு முன்பாக இந்த அண்டம் எப்படி உருவாகியிருக்கும் என்று கேட்பவர்களுக்கு, மற்றொரு கோட்பாடாக கருந்துளையில் (Black Hole) இருந்து தான் அண்டம் உருவானது என்று. பதிலாக சொல்லப்பட்டது, …

இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு 5வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘கென்னெசெட்’((knesset))என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. …

நவிமும்பை, ஐரோலி பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு 2 முறை கவுன்சிலர் பதவி வகித்தவர் ராமாஷிஸ் யாதவ்(வயது47). இவர் மீது 27 வயதான நவிமும்பை மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவர் ரபாலே எம்.ஐ.டி. போலீசில் பரபரப்பு புகாா் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- …

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான ஹரியானவை சேர்ந்த மன்பிரீத் கவுர் (29 வயது) கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார். இந்த போட்டியில் அவரிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. …

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், பிரதமர் ஆனபின்பு அவர் நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவை இந்த படத்தில் உள்ளன. …

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவரும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவருமான யாசின் மாலிக்கை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ கைது செய்தது. …

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சீனிவாசன் நகர் நடராஜன் தெருவில் வசித்து வருபவர் பானு பிரசாத் (வயது 35). இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக அம்பத்தூரில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மம்தா வயது 30, இவர்களது மகன் ராஜ் வயது 4. …

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. …

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்,ஐ.பி.எல் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. …

கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் நடந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரிக்க, நியுசிலாந்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. …

ஹாலிவுட் நடிகையான பெலிசிட்டி ஹப்மன் ((felicity huffman)), கல்லூரி நுழைவுத் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். …

பி.எம்.நரேந்திரமோடி என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. …

கவுகாத்தி அருகே உள்ள மதுப்பூர் வாரச் சந்தைப்பகுதியல் பல ஆண்டுகளாக பிஸ்வாந்த் சாரியலி கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது68) என்ற முதியவர் மாட்டிறைச்சி உணவு சமைத்து தனது ஓட்டலில் விற்பனை செய்து வருகிறார். …

ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். …

மராட்டிய மாநிலம் லதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது …

2018ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் பணிபுரிவோர் அவரவர் தாயகத்திற்கு அனுப்பிய மொத்த தொகை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது உலக வங்கி . அதன்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள்தான் தாயகத்திற்கு அதிக தொகை அனுப்பியுள்ளனர். …

பலராலும் வரவேற்கப்பட்ட சர்வதேச Airbnb நிறுவனம் மூலம் அயர்லாந்தில் வீடு ஒன்றை வாடைக்கு பிடித்த நியுசிலாந்து தம்பதி, நடுவறையில் ரகசிய கேமரா ஒன்று இருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். …

சர்வதேச கடல் எல்லையை தாண்டி பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியாவை சேர்ந்த 355 மீனவர்கள் உள்பட 360 இந்தியர்களை பாகிஸ்தான் கைது செய்து அங்குள்ள சிறைகளில் அடைத்துள்ளது. இந்தநிலையில், அவர்களை நல்லெண்ண அடிப்படையில் 4 கட்டங்களாக விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. …

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சுரேஷ்கோபி, பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் பா.ஜ.க கட்சியின் சார்பில் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். …

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அளிக்கப்படும். இதனால் இந்த திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர். …

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளை சாமி. இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பிரகதிக்கு நாட்டுதுரை என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. …

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 117 நாட்கள் கடந்துள்ள நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக லண்டன் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. …

முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. …

டெல்லியிலிருந்து புவனேஷ்வர் வரை செல்லும் ராஜ்தானி விரைவு ரெயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 20 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. …

வெப்பமயமாதல். பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து வருகிறது. கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கிய கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு 1,900 கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அந்நாட்டில் உள்ள் 15 மாகாணங்களில் 2,199 சாலைகள், 84 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 141 ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரைகள் உடைந்து …

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படேல், சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா -வின் (FIFA ) கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியன் கால்பந்து கான்ஃபெடரேஷன் கூட்டம் நேற்று நடைபெற்றது. …

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு "எம்.ஜி.ஆர். ரயில் நிலையம்" என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. …

பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ். இவருக்கும், மியான் பைசல் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆஸிஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். …

பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த கருத்துகணிப்பு ஒன்று சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. ஆனால் வெளியிடப்பட்ட அந்த கருத்து கணிப்புக்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று லயோலா கல்லூரி விளக்கம் அளித்துள்ளது. …

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் மதுரையில் 6-ந் தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். …

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பொது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். …

தண்டனைக் காலம் முடிந்தும் பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 10 கைதிகள், 385 மீனவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த 3-ம் தேதி வலியுறுத்தியது. …

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று அமேசான். ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். 1994-ல் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் இருவரின் திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது. …

தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக, பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக புகார் அளித்துள்ளது. …

காஷ்மீரில் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்தியா அடித்து விரட்டியது. அப்போது இரு நாட்டு போர் விமானங்களும் பரஸ்பரமாக தாக்கிக் கொண்டன. …

ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துவங்கியது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயற்சித்தவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர். …

இந்தியா, ஏவுகணை மூலம் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை நடத்தியதை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இச்சோதனையால், 400 சிதைவு பாகங்கள் உருவானதாகவும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இதனால் ஆபத்து என்றும் கூறியது. …

விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் .பி.எம்.நரேந்திர மோடி. பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு படத்தை வெளியிடுவதால் தேர்தல் விதி மீறல் என தடை விதிக்குமாறு காங்கிரஸ் கோரியிருந்தது. பட வெளியீடு தொடர்பான வழக்கில் மும்பை, டெல்லி உயர்நீதிமன்றங்கள் தலையிட மறுத்துவிட்டன. …

20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி அவசியமாகும். ஆனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கருவை நீதிமன்ற அனுமதியின்றி மருத்துவர் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரியளவிலான தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. …

உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அன்று 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. …

தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. …

குடகு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளமும் சூழ்ந்து கொண்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் செய்து கொடுத்தனர். …

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால் 22-20, 15-21, 10-21 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்து வீராங்கனை போர்பவீ சோச்சுவாங்கிடம் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் நாடு வீராங்கனையான அயா ஓஹோரியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு …

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் மிக தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது. மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. …

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்த வித ஒப்பந்தமின்றி வெளியேறுவதற்கு இங்கிலாந்து எம்பிக்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்று முறை எம்பிக்களின் போதிய ஆதரவின்றி இந்த முயற்சி தோல்வியடைந்தது. …

சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் இரவு பகலாக சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. …

ஐக்கிய அரபு எமிரேகத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான சயித் பதக்கத்தை அந்நாட்டு அரசு பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் உறவுகளை பராமரிப்பதில் அவரின் முயற்சிகளை பாராட்டியுள்ளது. …

எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டு எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. …

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். …

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சியிலிருந்து 5 கோடி ரூபாய் பணத்தை காரில் பதுக்கி கொண்டு செல்வதாக திருச்சி ஐஜி அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. …

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், பிரச்சாரத்திற்காக நேற்று காலை தனது வீட்டிலிருந்து காரில் வில்லுக்குறி பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வில்லுக்குறி சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மத்திய அமைச்சர் பிரச்சாரத்திற்கு வருவதை அறிந்த அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி, மத்திய மந்திரி என்று கூட பாராமல் சோதனை நடத்தினர். …

பாரிஸில் செயல்படும் FATF (Financial Action Task Force) எனப்படும் சர்வதேச நிதி அமைப்பின் தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். …

கடந்த புதன்கிழமை நடந்த சோதனை மூலம் ஆபத்து ஏற்படுத்தும் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா தற்போது இடம் பிடித்துவிட்டது. புவி வட்டப்பாதையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும் செயற்கைகோளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவது என்பது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த ஒரு தோட்டாவை 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மற்றொரு …

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நம்பகத்தன்மையற்ற வகையில் செயல்பட்டு ஸ்பாம் தகவல்களை பரப்பிய காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பாக். ராணுவத்தின் ஆதரவுடன் இந்தியாவை குறிவைத்து செயல்பட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது ஃபேஸ்புக். …

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …

கொட்டும் மழையையும் பாராமல் தனது கடமையை கண்ணும் கருத்துமாக பார்த்த போக்குவரத்து காவலர் ஒருவரை சமூக ஊடகங்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றன. …

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு அறிந்து இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். …

ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்து வரும் கல்யாண்சிங், சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும். அவரே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருந்தார் …

தமிழக சினிமாவிற்கு ஆடு புலியாட்டம், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற பல தரமான படங்களை வழங்கியவர் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள்- திரை …

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை கோவை எஸ்.பி பாண்டியராஜன் வெளியிட்டார், அதனால் போலீஸ் சூப்பிரண்டு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறிய மதுரை ஐகோர்ட்டு, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட காரணத்தால் கோவை எஸ்.பி பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். கோவை …

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரும், அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பிசோஸின் ஃபோனை சவுதி அரசு ஹேக் செய்துள்ளது, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஜெஃப் பிசோஸின் ஃபோன் சவுதி அரசால் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அவரது பாதுகாப்பு அதிகாரியான கெவின் டி பெக்கர் உறுதி செய்துள்ளார். அண்மையில் ஜெஃப் பிசோஸ் மற்றும் பிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளர் லாரன் சான்செஸ் இடையிலான தகவல் பரிமாற்றத்தை வெளியிட்ட …

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தல், நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் என ஜூஜூனா கபுடோவா குறிப்பிட்டார். …

பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமாக, ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்து விட்டோம்” என்று கூறியிருந்தார். இதையடுத்து, விஜய் மல்லயா பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- …

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹஸில். இவர் வெளியிட்ட ”விக்டரி லேப்” என்ற ஆல்பம் இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பமாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. 33-வயதான நிப்சி ஹூஸல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார் . வழக்கம் போல், துணிக்கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, நிப்சி ஹூஸல் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. …

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- “சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நான் சந்தித்து பேசினேன். ஆனால், அவர் மக்களவை தேர்தலுக்காக ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட மறுப்பு தெரிவித்து விட்டார்” என்றார். அப்போது, டெல்லி …

சென்னையில் நாளுக்குநாள் வெப்பம் படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று சென்னை மாநகரின் மையப் பகுதிகளில் வெப்பநிலையானது 36.8 டிகிரி செல்சியஸ் இருந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. புறநகர் பகுதிகளில் 39.2 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டில் தற்போது வரை சென்னையில் பதிவானதில் அதிகப்படியான வெப்பம் ஆகும். இன்று சென்னையில் 37 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால், நேற்று …

கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக காணப்படும். கடந்த ஆண்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. …

சென்னை போர் நினைவுச் சின்னம் அருகில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கம்பால் அடித்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜவுக்கு வாக்களிக்க வேண்டாம் என வெற்றிமாறன், கோபி நயினார் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள சுமார் 100 கும் மேற்பட்ட இயக்குநர்கள் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்தில் வசித்து வரும் சிந்தி மக்களுக்கு எதிராக மனித உரிமை விதிமீறல்கள் நடந்து வருகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி லண்டனை அடிப்படையாக கொண்ட உலக சிந்தி காங்கிரஸ் அமைப்பின் பொது செயலாளரான லக்கு லுஹானா கூறும்பொழுது, சிந்தி இன மக்கள் அவர்களது வரலாற்றில் மிக மோசம் நிறைந்த அராஜகங்களை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார். …

ராபர்ட் பிங்க் என்ற அந்தப் பேராசிரியர், மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் கடந்த 1969-ம் ஆண்டு பட்டம் பெற்றார். அதற்கு வாழ்த்து தெரிவித்து அவரது குடும்ப நண்பர்கள் அனுப்பிய தந்திதான் இவ்வளவு ஆண்டுகள் கழித்து அவர் கையை வந்து அடைந்திருக்கிறது. …

இந்திய அரசியலமைப்பின் படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு எதிரான தனியார் பள்ளிகளின் விகிதம் 7: 5 என்ற நிலையில் உள்ளது. …

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது. தமிழகத்தில் தேர்தல் அதிஜாரிகளின் சோதனையில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

வருகின்ற மார்ச் 31-ம் தேதி நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும். அதனால் இதையொட்டி அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். …

விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது என பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கான தனது உரையின்போது பேசினார். இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. …

செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் போதிய பருவமழை பெய்யாதது, நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடியை கடந்து சென்றது, கால்நடைகளும் மனிதர்களும் தண்ணீர் இன்றி தவிப்பது, அணைகள் தூர்வாரப்படாமல் தண்ணீர் சேமிக்க முடியாதது உள்ளிட்டவை அந்த மனுவில் …

மக்களவை தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்கும் வகையில்,பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவும் பகலுமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் நேற்றிரவு குகையை அடுத்துள்ள திருச்சி பிரதான சாலையில் தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி ஆனந்த் யுவனேஷ் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது.. அப்போது, வேகமாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட முயன்ற போது, காரில் …

அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாக இருப்பதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். …

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதின் தலைவர், மசூத் அசார். இவன், நாட்டையே உலுக்கிய பல்வேறு தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக விளங்கி வருகிறான். அவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் இந்தியா பலமுறை நடவடிக்கை எடுத்தது. …

காஷ்மீர் மாநிலம் பட்காமில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய ராணுவம் மும்முரமாக மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 2 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். …

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் தொடங்கியபின் முதன்முறையாக தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, முந்தைய அரசுகள் பாதுகாப்பு தொடர்புடைய ஒப்பந்தங்களில் ஊழலில் ஈடுபட்டன. …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்ததையடுத்து, வழக்கு எப்போது ஒப்படைக்கப்படும்? என நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடைமுறைகள் நடந்து வருகிறது என தெரிவித்தார். …

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் ஹிந்தி அல்லது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நேற்று முன்தினம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் நிருபம், மிலின்டா தேரா ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். …

பாடி முல்லைநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). தே.மு.தி.க. பிரமுகரான இவர், பொறியாளர் பிரிவில் பதவியில் உள்ளார். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம் தி.நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார். …

தமிழில் பூந்தோட்டம் படத்தில் தேவயானி தங்கையாக . ‘பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய் தங்கையாகவும், சூர்யா ஜோடியாகவும் நடித்து இருந்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும், சமீபத்தில் திரைக்கு வந்த மீசையை முறுக்கு படத்திலும் நடித்தவர் விஜயலட்சுமி. இவர் கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். …

உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938-ம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியம் ஒன்றை தீட்டினார். …

இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். …

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சி எஸ் புட்ட ராஜுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல், வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. …

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும், பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. …

வங்கி மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ள விசாரணையின் போது ஜாமீன் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …

ஐபிஎல் லீக் டி 20 போட்டியில், வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. …

குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் இணைந்து கூட்டாக சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஈரான் நாட்டு படகு ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது படகில் 100 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. …

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி அறிவித்தபடி குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம் கூறியதாவது, ஏழைக் குடும்பங்களுக்கு 72 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும். …

நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘‘பி.எம். நரேந்திரமோடி” எனும் திரைப்படம் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது …

மிஷன் சக்தியின் வெற்றியை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அந்த உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட அம்சங்கள் வருமாறு: …

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. அவருடைய மனைவி பானுமதி. இவர்களுடைய மகன் சக்திவேல் (வயது 28). சாயப்பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஜோதிகா (22) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. …

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். …

சவுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்காக 43 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். …

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக மிகவும் அதிருப்தியில் இருக்கும் அந்நாட்டு மக்கள் பல்வேறு நூதன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். …

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த புதைபடிம ஆய்வாளர்கள், சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்களை கண்டுபிடித்தனர். …

சென்னை வேளச்சேரியில் தலைமை காவலரின் மனைவியை பின் தொடர்ந்து தகாத முறையில் நடக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேளச்சேரி நேருநகரை சேர்ந்த ஆறுமுகம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தலைமைக் காவலர் ஒருவரின் மனைவியிடம் தவறாக நடக்க முயண்றதாக கூறப்படுகிறது. …

சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக பயணிகள் விமானம் நேற்று மதியம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து 263 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மும்பையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். …

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ்சிங் அடித்த அரைசதம் (35 பந்துகளில் 53 ரன்கள்) ஆறுதல் அளித்ததே தவிர, அணியின் வெற்றிக்கு உதவவில்லை. …

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். …

பாஜகவின் மிக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, இருவருக்குமே, இதுவரை எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ஏற்கனவே, அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதி அமித்ஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. …

தென் ஆப்பிரிக்காவில் வனஉயிரின புகைப்படக் கலைஞர் ஒருவர் காட்டு யானையின் காலுக்கு அருகில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. …

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. …

கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாராவி, ‘சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் லெஜண்ட் ஆவார்கள். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது தமக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பது பெரிய விஷயமாகும். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். …

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL - Bharat Heavy Electricals Limited) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது திருச்சி கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. …

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில், வரும் ஏப்ரல் 18ம் தேதி 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. …

இந்திய விமானப்படை வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் 4 ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்தது. இதற்காக சுமார் 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவிடம் இருந்து 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு ஹெலிகாப்டர்கள் தற்போது இந்தியா வந்துள்ளது. …

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பாகிஸ்தான் எல்லையிலும் புகுந்த இந்திய விமானப்படை, அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து அழித்தது, இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவு பதற்றமான சூழலை எட்டியது. …

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் "தலைவி" படத்தில், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க,பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. …

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-வது கட்டமாக மே 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. …

விருதுநகர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் நடவடிக்கை எதுவும் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் காவல்நிலையம் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஆய்வாளரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. …

மதுரையை சேர்ந்த கார் ஓட்டுநர் பிரவீன் குமார் இன்று காலை தனது காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்துகொண்டிருந்தார், அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகே போக்குவரத்து காவலரான ரமேஷ், பிரவீன் குமாரை தடுத்து நிறுத்தி வேட்புமனு தாக்கல் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் செல்ல போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது, எனவே வேறு பக்கமாக செல்லுமாறு தெரிவித்து உள்ளார், ஆனால் கார் …

ஈராக் நாட்டின் மொசூல் நகரில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் நவுரூஸ் என்று அழைக்கப்படும் குர்து புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர்.பிரபல சுற்றுலா தலத்துக்கு சென்று புத்தாண்டை கொண்டாடுவதற்காக 150-க்கும் மேற்பட்டோர் பெரிய படகு ஒன்றில் டைகரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்தனர். …

இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. …

பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. …

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் 2 முறை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது. …

ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர்களின் கவனக்குறைவால் எச் ஐ வி ரத்தம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. …

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். …

லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை 29ம் தேதி வரை காவலில் வைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

நிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக சுமதலா தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் சென்றார். ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால் மண்டியா நகரமே காலை கட்டியது. இந்த அளவுக்கு கூட்டம் கூடியதை பார்த்து குமாரசாமி உள்ளிட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே நிகில் குமாரசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக இருந்தது. …

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒரு வாரம் முன்பே …

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியான சஜ்ஜத் கான், டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். …

திருவண்ணாமலையில், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அத்துடன், அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா(30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார் நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. …

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், அருண் ஜெட்லியை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். சமீபகாலமாக அவர் பாஜக சார்பாக டெல்லியில் உள்ள மக்களவை தொகுதி ஒன்றில் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், பாஜகவில் இன்று முறைப்படி தன்னை இணைத்துகொண்டுள்ளார் கம்பீர். மக்களவை தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார். …

பெங்களூருவில் உள்ள பிலிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்கில் உள்ள பொருட்களை வகை, எடை, எண்ணிக்கை ரீதியாக பிரித்து, கன்வேயர் பெல்ட்டில் இருந்து பொருட்களை எடுத்து குறிப்பிட்ட பின்கோடுக்கு செல்லும் பெட்டிகளில் கொண்டு சேர்க்கும் பணியில் இந்த ரோபோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. …

நிரவ் மோடி லண்டனின் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு தலைமறைவான நிரவ் மோடி, ஸ்காட்லேண்ட் யார்ட் போலீசாரால் நேற்று லண்டனில் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து, லண்டனின் மிகப்பெரிய சிறையான வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். …

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- …

2007-ஆம் ஆண்டு மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. கருத்துகணிப்பு வெளியிட்டதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. …

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து, ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற சினிமா தயாராகி உள்ளது. மோடியின் தொடக்க காலத்தில் இருந்து அவர் முதல்-மந்திரி, பிரதமர் பதவிகளை வகித்தது வரையிலான நிகழ்வுகள், அப்படத்தில் இடம்பெற்றுள்ளன. …

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவருமான மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். …

கோவா முதல் அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரின் மரணத்தையடுத்து, புதிய முதல்வராக பிரமோத் சவாந்த் நேற்று முன் தினம் நள்ளிரவு பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பிரமோத் சவாந்த் வெற்றியம் பெற்றார். இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியை நள்ளிரவு நடத்தியதை பாஜக் கூட்டணியில் இடம் பிடித்துள்ள சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. …

வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக நாடெங்கும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்றும் இன்றும் கொண்டாடப்படுகிறது. …

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது. இதை கண்டித்து, தங்கள் மீது வழக்குப்பதிவு செய்த்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் விடியவிடிய உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜக்மீத் சிங், இவர் கனடா நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். …

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைரவியாபாரி நீரவ் மோடி திடீரென இந்தியாவிலிருந்து தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத்துறை அறிவித்தது. …

பெல்ஜியம் நாட்டின் மேற்கு பிளாண்டர்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஜோல் வெர்ஷெட் (வயது 63). இவர் பந்தய புறா ஒன்றை வளர்த்து வந்தார். அர்மாண்டோ என பெயரிடப்பட்ட இந்த புறா, தொடர்ந்து 3 பந்தயங்களில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. …

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட் (Brexit - British exit)’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29–ந் தேதி முடிவடைகிறது. ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. …

மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுகிறது. இதையடுத்து, அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவையின் 60 இடங்களில் 54 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்தத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட பலருக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் …

நெதர்லாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான உட்ரெச்சில் நேற்று முன்தினம் டிராம் வண்டியில் எரிய மர்மநபர் ஒருவர் திடீரென அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 3 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். …

லண்டனில் தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியைக் கைது செய்ய இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …

இயக்குநர் அட்லி இயக்கும் படமொன்றில் நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காசிமேடு அருகே உள்ள கடற்கரையில் இரவு நேரத்தில் நடைபெற்றது. …

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, நீதிபதி முன்னிலையில் மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தம் மீதும் தமது குடும்பத்தினர் மீதும் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாகக்கூறி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். …

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை கண்காணிப்பது குறித்து சமூகவலைதள நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் சுனில் அரோரா. …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. …

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார். …

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை சோதனைகள் நடந்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் களியங்காடு சாலையில் இன்று மாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். …

கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. …

புதுக்கோட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருசக்கர வாகனத்தின் டேங்கில் 18 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக காட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. …

கோவாவில் தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென ஆளுநருக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. 40 தொகுதிகள் கொண்ட கோவாவில், முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது, பாஜக 11 இடங்களையும் கொண்டுள்ளது. …

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வீட்டிற்கு செல்ல காசு இல்லாததால் காவல் உதவி எண் 100-ற்கு அழைத்து காவல்துறை வாகனத்தில் லிஃப்ட் கேட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. …

சீனாவில் பிரபலமாக விளங்கும் Xiomi நிறுவனம், இந்தியாவில் அதன் வணிகத்தை விரிவுபடுத்த 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. …

நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர், நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. …

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 5 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். …

அ.தி.மு.க.வின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு தான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். …

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.11 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த மக்களும் பீதி அடைந்தனர். …

பொள்ளாச்சியில் பலவருடங்களாக இளம் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகாரினால் அம்பலமானது. இதன்பேரில் போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது …

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் நடிகை அனிஷா ரெட்டி தம்பதியின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து இந்த வருட ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் அறிவித்திருந்தார். அதாவது 'பெல்லி சூப்லு', 'அர்ஜுன் ரெட்டி' ஆகிய படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதை உறுதி செய்யும் …

சென்னையில் வரும் 23ம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ளதால், இன்று காலை முதல் டிக்கர்ட் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான …

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில், கோம்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ளார். இதைக் கண்ட பொது மக்கள் அந்தப் பெண்ணை மீட்டு விசாரித்த போது, ஆட்டோ ஓட்டுநர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறியுள்ளார். இதை அடுத்து ஆட்டோவை விரட்டி சென்று, குறிப்பிட்ட தொலைவில் ஆட்டோவை மடக்கினர். பின்னர் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்தனர். …

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில். இவர்களுக்கு நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை கண்காணிக்க தமிழக காவல்துறை விசாரணை அமைப்பு .ஒன்றை உருவாகியுள்ளது . புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளனர். …

நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவன் கைது செய்து ,அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது. …

கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் தமிழ் ஈழம். சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். மற்றொரு மகள் ஓவியா துடியலூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். …

கடந்த புதன்கிழமை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உடனான ஒரு சந்திப்பில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார். …

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துவந்த க்ரிஸ் காக்ஸ் அந்தப் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். ஃபேஸ்புக்கின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்குவகித்துவந்த அவர் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டகிராம், மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றையும் கவனித்துவந்தார். …

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

அமெரிக்காவின் CBS தொலைக்காட்சி நடத்திய தலைச்சிறந்த திறமைகளுக்கான தேடுதல் நிகழ்ச்சியான "The World's Best" நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பட்டம் வென்று அசத்தியதுடன் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றுள்ளார். …

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடை விதிக்க ஐ.நா. மூலம் இந்தியா நீண்ட காலமாக முயன்று வருகிறது. ஆனால் தொடர்ந்து மூன்று முறை தனது வீட்டோ சக்தியை உபயோகித்து அதை தடை செய்தது சீன. எனினும் புல்வாமா தாக்குதலுக்குப்பின் மீண்டும் அந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. …

நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் முதல் கட்டமாக 6 பேர் பலியானதாக தகவல் வந்தது. தற்போது பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது. …

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது 47). தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இவரது மனைவி சந்திரா (42). …

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கடமடை கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் சிவில் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இவர் செல்போனில் ‘டிக்டாக்’ வீடியோ பதிவு செய்து, அதை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்டு வந்துள்ளார். இதை திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த பிளஸ்-1 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்த 17 வயது இளம்பெண் பார்த்துள்ளார். மேலும், இவர்கள் 2 பேரும் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பேசி பழகி வந்ததாக …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி அறிவிப்பு. குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை தமிழகத்தில் பிரளயத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், …

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக ஒரு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாலிவுட், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. …

சென்னையில் ஓலா, உபேர் நிறுவனங்களை கண்டித்து 30 ஆயிரம் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஓலா, ஊபர் கால் டாக்சிகளுக்கான பயணக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. …

சென்னை உழைப்பாளர் சிலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் மதுபோதையில், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுது. …

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது.தேர்தல் நேரமாக இருப்பதால் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்து இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. …

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை அ.ம.மு.க கட்சியின் தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. …

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. …

குழந்தை முதல் அனைவரையும் கவர்ந்திழுத்து அரேபிய கதைகளுள் ஒன்றான "அலாவுதீன்" படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அலாவுதீனின் பூத வேடம் தரித்து கலக்குகிறார். . வால்ட் டிஸ்னி தயாரித்துள்ள புதிய அலாவுதீன் படத்தின் டிரைலர் வெளியாகி உலகம் முழுவதும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. …

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ்ரீன் சோட்டோடே என்பவருக்கு 148 கசையடிகளுடன் சேர்த்து 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. …

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைய விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பார் நாகராஜ் வால்பாறை சாலையில் உள்ள மதுக்குடிப்பகம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நாகராஜ் நடத்தி வருகிறார். இவர் நடத்திவரும் மதுக்குடிப்பகத்தை இன்று இளைஞர்கள் சூறையாடினர். …

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சியும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது. …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். …

சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில்' மோடியை கட்டித் தழுவியது ஏன்?" என மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி …

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக, 2016, ஜூன் 23ஆம் தேதி, அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வந்தது. …

அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி விவகாரத்தில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாபர் மசூதி-ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்துள்ள 3 நபர் மத்தியஸ்த குழு இன்று அயோத்தி சென்று ஏற்பாடுகளை பார்வையிட உள்ளது. …

நியூசிலாந்தில் கடலில் விழுந்த ஒருவர் தமது ஜீன்ஸ் பேன்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 6-ம் தேதி பிற்பகலில் தொலாகா பே என்ற கடற்பகுதியில் கரையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர். …

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பயங்கரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது. இதற்கிடையே இவ்விவகாரத்தில் கோபம் அடைந்த மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். …

தமிழில் ‘பசங்க’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விமல் தொடர்ந்து களவாணி, வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, நேற்று இன்று, மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னிராசி, களவாணி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். …

மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்தானா தீவிர கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தனது வெற்றித்தொகுதியான வாரணாசியிலேயே போட்டியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. …

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. …

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம், இளம்பெண்களிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி 7 வருடமாக பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல்.. …

தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித். அந்த வகையில் சமீபத்தில் அவரின் "நீலம் பண்பாட்டு மையம்" ஒருங்கிணைத்து நடத்திய "வானம் கலைத் திருவிழா" மூன்று நாள் நிகழ்வு பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. …

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. …

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. …

எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இதே ரக விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர். இரு விமானமும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள் சிக்கியது. …

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14–ந் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்த ஒருவர் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். …

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் 2005-ஆம் ஆண்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி உள்ளம் கேட்குமே, பட்டியல், நான் கடவுள், மதராச பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், பாஸ் என்கிற பாஸ்கரன், கஜினிகாந்த் உள்பட பல படங் களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது. …

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்டில் விவசாயத்துக்காக பசுமைக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கலப்பின முறையில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. …

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத 39 கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. …

543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3-ந் தேதி முடிகிறது. அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்தி, முடிவுகள் அறிவித்து 17-வது நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட வேண்டும். என தேர்தல் ஆணையம் அதற்குண்டான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இன்னொரு பக்கம் தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு எடுத்து, தொகுதி பங்கீட்டிலும், தொகுதிகளை அடையாளம் காண்பதிலும் மும்முரமாக உள்ளன. …

சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலைப் பார்த்து, ‘‘எழுந்திரு, எழுந்திரு!’’ என்று மத போதகர் ஒருவர் கத்துகிறார். உடனே, இறந்தவர் மெதுவாக எழுந்து நேராக உட்காருகிறார். அங்கு கூடியிருப்போர் ஆச்சரியமடைகின்றனர். ஆரவாரம் செய்கின்றனர். இந்தக் காணொலி தென்ஆப்பிரிக்காவில் சமீபத்தில்பெர்ம் பரபரப்பையும், சர்ச்சையையும் உண்டாக்கியது. இது ஒரு நவீன கால அற்புத செயலாக கூறப்பட்டாலும், பலரும் இதை நம்பத் தயாராக இல்லை. …

இங்கிலாந்தில் செல்போன் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். லண்டன் அருகே உள்ள பெக்ஹாம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் செல்போன் கடையில் 3 கொள்ளையர்கள் புகுந்தனர். …

மகராஷ்டிர மாநிலம் மும்பையின் தெற்குப்பகுதியில் கடற்கரையை ஒட்டி நீரவ் மோடிக்கு சொந்தமான ஆடம்பர சொகுசு பங்களா ஒன்று அமைந்துள்ளது. 33,000 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் பரந்து விரிந்து அமைந்துள்ள இந்த பங்களாவில் நீச்சல் குளம், விலையுயர்ந்த பொருட்கள், சொகுசு தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. …

தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்,வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு, போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பிகள் வழங்க தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. …

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த மைக்கேல் பாளையம்; ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது சமத்துவபுரம். இங்கு 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமத்துவபுரம் உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் தொழிற்கூடம், சமுதாயக் கூடம் சிறுவர் விளையாட்டு திடல், நூலகம், ரேஷன் கடை, ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய மோட்டார் அறை, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளிட்ட வசதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது. …

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், அங்குள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக் எடுத்து கொள்ளுமாறு கூறி இருந்தது. …

ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ரபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் திடுக்கிடும் …

ஒடிசா மாநிலம் ஜெய்போரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது …

பாகிஸ்தானில், 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்குவதாகவும், இதில், 9 பயிற்சி முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்திற்குச் சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. …

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கி வந்த முன்பதிவில்லாத தினசரி ரயில் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீடிக்கப்பட்டு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் இன்று முதல் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். …

ஐ.நா. முன்னேற்றத் திட்ட நல்லெண்ணத் தூதராக தமிழகத்தில் பிறந்த அமெரிக்கவாழ் இந்தியரான பத்மலக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையில் பிறந்த அவர் தமது தாயின் மருத்துவப் பணியை ஒட்டி அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு இடம் பெயர்ந்தார். படித்துக்கொண்டிருக்கும் போதே மாடலிங் செய்ய தொடங்கிய இவர் பல தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்கியதுடன் ஒரு சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் , திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். …

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். திமுக, அதிமுக என இரு தரப்பினருடன் தங்கள் கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுவதே தவறு, மேலும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. …

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. நூற்றுக்கணக்கான படங்களுக்கும் மேல் நடித்துள்ள கோவை சரளா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1983 ஆம் ஆண்டு கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான கோவை சரளா …

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக பிரித்து ஒப்பந்தம் செய்து அதற்கேத்தாற்போல ஊதியமும் வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. …

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒழிப்பில் ராணுவ வீரர்கள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ஹசாத் ஷாபி என அழைக்கப்படும் அணிதிரள் படை வீரர்கள். இவர்கள் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிடுவதால் துணை ராணுவ வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள் …

ரஷ்யாவிடம் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எஸ் -400 என்ற ஏவுகணை அமைப்பை பெற 5.4 பில்லியன் டாலர் தொகைக்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை சற்றும் பொருட்படுத்தாது, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது, ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய தொகைக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய பாதுகாப்புத்துறை கையெழுத்திட்டுள்ளது. …

அணு ஆயுத கைவிடல் நடவடிக்கையாக களைக்கப்பட்ட ஏவுதளத்தை வடகொரியா மீண்டும் அதிவேகத்தில் கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. …

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு பேருந்து நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடித்ததில் 28 பேர் காயம் அடைந்தனர். …

காஷ்மீர் புலவாமாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாலகோட் என்ற இடத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினரின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின. …

அமெரிக்காவின் குடியரசு கட்சியின் செனட்டர் மார்த்தா மெக்கல்லி. இவர் ராணுவத்தில் விமானபடையில் பணியாற்றியவர் ஆவார். தான் ராணுவத்தில் பணியாற்றும் பொது பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக செனட் ஆயுதப்படை துணை கமிஷனின் விசாரணையின் போது மெக்கல்லி தெரிவித்து உள்ளார். …

தமிழக கேரள எல்லை பகுதியான வயநாடு மாவட்டம் லக்கிடியில் உள்ள வைத்திரி பகுதியில், நேற்றிரவு தனியார் விடுதி ஒன்றில் புகுந்த மூன்று மாவோயிஸ்டுகள் அங்கு இருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். …

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 ற்கும் மேலான வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலால் வெகுண்டெழுந்த இந்தியா, ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் ஆதரவோடு …

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பூங்காநகரில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 22 நரிக்குறவர்களின் குழந்தைகள் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி உண்டு உறைவிட பள்ளியில் படிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் முதன் முறையாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாயத்தில் இருந்து 2 மாணவிகள், 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத உள்ளனர். …

கணவரிடம் கூடுதல் பராமரிப்பு தொகை கேட்பதற்காக, தனது 3 வயது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலம் தானே மும்ராவை சேர்ந்தவர் பையாஸ் சேக். இவருக்கும், ஹீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். …

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னர் உள்ள 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கின்றனர். …

மலேஷிய நிதியமைச்சகத்துடன் தொடர்புடைய நிதி நிறுவனம் க்ராடில் ஃபண்ட் ((Cradle Fund)) இதன் தலைமைச் செயலதிகாரியாக இருந்த நசீர் ஹுசேன். இவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். …

தமிழகத்தில் மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல் மற்றும் விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது ஆனால் அதை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், 2020க்குள் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை கோரி மனு அளித்தும் பலன் இல்லை என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார். …

புலவாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவுகிறது. புலவாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிற விதமாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பயங்கரவாதிகள் முகாம்கள் மீது லேசர் குண்டு மழை பொழிந்து அழித்தன. …

ஆண்டு தோறும் போர்ப்ஸ் இதழ் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். …

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா அடித்து விரட்டியது. அப்போது இரு நாட்டு போர் விமானங்களும் பரஸ்பரமாக தாக்கிக் கொண்டன. …

இந்திய வம்சாவளி பெண் பிரீத்தி ரெட்டி (32) ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அன்றைய தினம் இரவு அவர் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த அவருடைய தங்கை நித்யா போலீசில் புகார் அளித்துள்ளார். …

பாகிஸ்தான் விமானப்படையை தயார் நிலையில் இருக்கும்படி அதன் தளபதி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் தாக்குதல்கள் இனியும் தொடரும் என்பது போல் இந்திய விமானப் படைத் தலைவர் தானோவா பேசியிருப்பதையடுத்து சவால்கள் முடிந்துவிடவில்லை, தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு பாகிஸ்தான் விமானப் படைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. …

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அந்நாட்டு அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து களமிறங்கிய அவர், தோல்வியடைந்தார். …

அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் 2 வாரத்தில், கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. …

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். …

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- திமுக கூட்டணி காட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு பணிகள் நிறைவு பெற்றது. …

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு அதிக வரி விதிப்பதால் இந்தியா மீது அந்நாட்டு அதிபர் கோபம் கொண்டுள்ளார். மேலும் இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தையும் அவர் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். …

சென்னை தலைமை செயலகத்தில் ரூ.133 கோடி மதிப்பீட்டில், தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்து கழகங்களுக்காக 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு செல்ல குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. …

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான http://www.bjp.org ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து பாஜக தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இணையதள பக்கத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக காரணமாக இணையத்தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. …

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். இந்த விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் நிடைபெறும் சிறப்பான நிகழ்வுகளில் ஒன்றாகும். …

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் தாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு ராணுவ மேஜர் ஜெனரல் கஸ்ஸம் சோலிமானி ((Qassem Soleimani)), பாகிஸ்தான் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். …

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குச் சொந்தமான கட்டிடத்தில் இருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திக்குறிச்சி வழியாக காரில் கொண்டு செல்லப்பட்ட புகையிலைப் பொருட்கள் முதலில் போலீசிடம் சிக்கின. இருவரைக் கைது செய்து விசாரணை செய்த பொது செறுகோல் பகுதியில் உள்ள குடோனில் இருந்து அந்த புகையிலைப் பொருட்கள் எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். இதை அடுத்து அந்தக் …

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அம்மா உணவகங்களில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் ஒரு செட் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணவுகள் அதே விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

பீகாரில், பாட்னா நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி தற்கொலைப்படையினர், நமது துணை ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி தருகிற வகையில் மிகுந்த வீரமிக்க நமது விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும். ஆனால் …

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் கட்சியின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. …

பயங்கரவாதிகளின் முகாம் மீதான தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக கோவை சூலூரில் விமானப்படை தலைமை தளபதி பி.எஸ். தனோவா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயங்கரவாதிகளின் முகாம் மீது நமது விமான படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாமில் எத்தனை பேர் இருந்தனர், எவ்வளவு பேர் இறந்தனர் என்பதை நம்மால் கணக்கிட முடியாது. …

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி உள்ளது. மேலும் தே.மு.தி.க.வையும், த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது. அதேசமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் …

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இந்திய அணிக்கான புதிய ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அணியின் உலக கோப்பைக்கான புதிய ஆடையை கேப்டன் கோலி, அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோனி, பிரித்வி ஷா, ரஹானே, ஜஸ்பிரித் பும்ரா ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆகியோர் பங்கேற்றனர். …

முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல் உள்பட பல தமிழ் படங்களில் நடித்ததுடன். தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார் லைலா. …

அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில், மேரிலேண்ட் புறநகர் பகுதியில் நடந்த கூட்டமொன்றில் அதிபர் டிரம்ப் பேசினார். அவர் கூறும்பொழுது, இந்தியா அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. நாம் ஒரு மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பும்பொழுது அதற்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. …

காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையை சேர்ந்த 40 கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். …

பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்து உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என ஆணையிட்டது. …

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்ட விமான பயணச் சீட்டுகளை கொண்டு தங்களது விமானத்தில் பயணிக்க கண்டிப்பாக அனுமதி இல்லை என ஏர் இந்தியா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. …

பிரபல ஹாலிவுட் நடிகரின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவில் 100க்கும் மேற்பட்ட அறிய வகை திமிங்கலங்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். …

ஒப்பந்தத்தை மீறி, எஃப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம் செய்ததா என்பது குறித்து தகவல்களை திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. …

இந்தியாவுக்குள் கடந்த 27ந்தேதி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். மேலும் அவர்களது எப் 16 ரக ஜெட் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த நிலையில், லண்டனை சேர்ந்த வழக்கறிஞரான காலித் உமர் என்பவர் வெளியிட்டுள்ள தகவலில், கற்பனையை விட சில சமயங்களில் உண்மை வேறுபடுகிறது. பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபொழுது அது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளது. …

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கஜோரி, போஜ் மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் புகுந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். …

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் போர் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த பொது இந்திய போர் விமானிகள் அவற்றை துரத்தி அடித்தன. இந்தத் தாக்குதலின்போது அபிநந்தன் என்ற விமானி ஓட்டிய மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் …

தேர்தலின்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பது பற்றி, பொய்யான புகார் அளித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார். …

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தே.மு.தி.க நிறுவனர், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பின் முதல்முறையாக இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்துக்கு வந்தார். அவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். …

2011 முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான, 8 ஆண்டுகளில், கலைச்சேவையாற்றிய கலை வித்தகர்கள் 201 பேருக்கு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. …

இந்திய போர் விமானி அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லை வழியாக விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறி உள்ளார். இதற்கிடையில், ஜெனிவா ஒப்பந்தப்படி பாகிஸ்தானில் செயல்படும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. …

குமரி மாவட்ட மக்களுக்கான ரூ 40 ஆயிரம் கோடி செலவில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டம் வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர். …

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடன். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு வந்த நிலையில், அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்து 2011 வருடம் சுட்டு கொல்லப்பட்டார். இவரது மகன் ஹம்சா பின்லேடன். …

தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து. பாகிஸ்தானிடம் பிடிபட்டார் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன். …

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. …

பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி, அமேசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இணைந்துள்ளார். …

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களின் கோரிக்கையை, ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்தது. …

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் இருநாடுகள் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அந்நாடு தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

சிரியாவில் விமானப்படைத் தாக்குதலில் இடிந்த கட்டடத்தில் இருந்து 2 நாட்களுக்குப் பின் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். வடமேற்குப் பகுதியில் போராளிகளைக் குறிவைத்து அரசுத் தரப்பினர் செவ்வாய்க்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில், ஏற்கனவே சிதிலமடைந்த கட்டடங்கள் மேலும் இடிந்து விழுந்தன. …

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். …

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ், அவரது மகன் திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் மற்றும் கார் வாங்கி விற்பனை செய்யும் வேலையும் செய்து வருகிறார். வட்டிக்கு கொடுக்கும் பணத்தை வசூலிக்கும் வேலையை பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் செய்து வந்தார். …

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் பலியாகினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். …

ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த இஸ்ரேலிய முன்னாள் அமைச்சருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …

பாகிஸ்தான் விமானப்படையுடன் ஏற்பட்ட மோதலின் போது மாயமான இந்திய போர் விமானி, சென்னையை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. …

சென்னை, தலைமை செயலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மழலையர் காப்பகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். …

வில்லனாக அறிமுகமாகி பின்னர் நாயகனாக என பல்வேறு வேடங்களை ஏற்று பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகர் ரஞ்சித். இவர் பா.ம.க. மாநில துணை தலைவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அக்கட்சியில் இருந்து அவர் திடீரென விலகியுள்ளார். …

பாகிஸ்தானின் அத்துமீறல்களைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அமிர்தசரஸ் பகுதியில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வந்து செல்லக் கூடிய விமான சேவைகள் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. …

இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் விமானங்களை, இந்திய விமானங்கள் திருப்பி தாக்கியதால் திரும்பி சென்றன. திரும்பி செல்லும் போது போர் நிறுத்த ஒப்பந்த பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் 4 இடங்களில் குண்டு வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. …

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ந்தேதி பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இதில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய 2 தமிழர்களும் அடங்குவர். …

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உலகின் ஆரோக்கியம் மிகுந்த நாடுகள் பட்டியலை “BLOOMBERG“ நிறுவனம் வெளியிட்டுள்ளது. …

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 6வது முறையாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை ஓ.பன்னீர்செல்வம் எழுப்பி இருந்தார். …

சென்னை மங்களூரு இடையேயான விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மங்களூரில் இருந்து நேற்று புற்றப்பட்டு, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதிகாலை 6:30 மணி அளவில் கேரள மாநிலம் சோரனூர் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது …

டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. …

ஹெதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. அந்த வகையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. …

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து. …

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நம் இந்திய வீரர்கள் 40 கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் …

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. அவரது கணவர் ராபர்ட் வதேராவை, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்து, உத்தரபிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. …

இந்தியாவிற்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதிய முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் …

நெல்லையில் டி.வி.எஸ் - எக்ஸ்.எல் வாகனத்தை மட்டும் குறி வைத்து திருடி வந்தவனை போலீசார் கைது செய்துள்ளனர். …

பிறக்கும் போது மூளையின்றி பிறந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது. …

சவுதி இளவரசி ரீமா பிந்த்பாண்டர் அல்சவுத் (Reema bint Bandar al-Saud) அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை சவுதி அரேபியா தூதராக நியமித்துள்ளது. …

சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க 5 லட்சத்து 80 ஆயிரத்து 188 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். …

ஒரு அணுகுண்டை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார். …

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும், முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. அண்மையில், ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது இந்திய அணி, தனது சொந்த மண்ணில், வீழ்த்தி வாகை சூடும் ஆர்வத்துடன் உள்ளது. நியூசிலாந்து …

தமிழக மக்களால் அன்பாக அம்மா என்றழைக்கப்படும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் அதிமுக தலைமையகம் புறப்பட்டார். …

தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்தார் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து.. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் சர்வதேச போர் விமானங்கள் கண்காட்சியை பார்வையிட்டார், பேட்மிண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை பிவி சிந்து . பின்னர் தேஜாஸ் போர் விமானத்தில் அவர் பயணித்தார். …

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் கவலை அளிப்பதாகவும், அது மிகவும் ஆபத்தானது என்றும் குறிப்பிட்டார். …

பெங்களூரில் நடைபெற்ற ஏரோஇந்தியா ஷோ நிகழ்ச்சி மைதானத்தில், கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகின. …

வரும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். …

புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைநகரில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. …

ட்விட்டர் நிறுவனர்களுள் ஒருவரான இவான் வில்லியம்ஸ், அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். …

அதிமுக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜேந்திரன் ( வயது 62) . இவரது கார் விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் நிலை தடுமாறி மோதியதில் பலியானார். இன்று காலை சென்னைக்கு வந்த போது, திண்டிவனம் அருகே எம்.பி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. …

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் இந்திய துணைராணுவ படையினர் 40 கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது …

பிரான்சிடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க,ஒப்பந்தம் செய்ததில் மத்திய அரசு முறைகேடுகள் செய்த்துள்ளதாக , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. …

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் காஷிமிராவில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று காலை திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு வந்து பார்த்தனர். அப்போது, அங்குள்ள மும்பை - ஆமதாபாத் சாலையில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்து இருந்தது தெரியவந்தது. இதனால் பதறி போன அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். …

ஈக்வேடர் நாட்டின் காலபோகோஸ் தீவுப் பகுதியில் ஒரு அரிய வகை ராட்சத ஆமையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். …

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தொடர்ந்து நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 75 நீதிபதிகள் பணியிடம் உள்ளது. அவற்றில் ஏற்கெனவே 59 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவி ஏற்றுக் கொண்டார். தலைமை நீதிபதி தஹில் ரமணி அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். …

சிகிச்சை முடிந்து திரும்பிய தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்திடம், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு. நேரில் சென்று நலம் விசாரித்தார். …

சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

உலகளாவிய அமைதி, நட்புறவை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் சியோல் அமைதிப் பரிசு தென்கொரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. 1988ஆம் ஆண்டில், 160 நாடுகள் பங்கேற்று, வெற்றிகரமாக சியோல் ஒலிம்பிக் நடத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில், சியோல் அமைதிப் பரிசு ஏற்படுத்தப்பட்டது. உலகளாவிய அமைதி, நட்புறவை ஊக்குவிக்கும் வகையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசை சியோல் நகரில் நடைபெற்ற …

சர்வதேச சமூகம் அனைத்தும் ஒன்றுபட்டு, தீவிரவாதத்திற்கு எதிராக, செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி சியோலில் கூறியுள்ளார். …

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சவிதா பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 அறைகள் எரிந்து சேதமடைந்தன. …

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துளார் சிக்சர் மன்னனான கிறிஸ் கெய்ல். …

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். …

அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்க வியட்நாம் செல்லும் வடகொரிய அதிபரின் பயணத்திட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரயில் மூலம் சீனா சென்று அங்கிருந்து கார் மூலம் வியட்நாம் தலைநகர் ஹனோய் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசுகிறார். …

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசியுள்ளார். …

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே துணைமின் நிலையம் கட்டுமான பணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். …

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. …

சென்னை மற்றும் வேலூரில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர், மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். …

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த கார் குண்டு தாக்குதலில் 40 கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். …

2020 அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார்.77 வயதான பெர்னி சாண்டர்ஸ் தமது கல்லூரி நாட்களில் இருந்தே இன சமத்துவத்துக்கான போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். சுயேட்சையாகப் போட்டியிட்டு சில முறை வென்ற பெர்னி சாண்டர்ஸ் கடந்த அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டார். …

இந்தியா, தங்கள் மீது ராணுவ ரீதியிலான தாக்குதல் நடத்தினால்; அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருக்கிறார். …

வெளிப்புற இதயத்துடன் பிறந்திருக்கும் உலகின் அபூர்வமான வெள்ளை ஆமை, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் அல்பினோ எனப்படும் அரியவகை வெள்ளை நிற ஆமைகளை ஆராய்ச்சியாளர்கள் வளர்த்து வருகின்றனர். …

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துவிட்டு ஆலையை மீண்டும் திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது. இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியதாவது:- …

மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானில் இன்று காலை 7.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஷாம்லி அருகே உள்ள கந்த்லா என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த …

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டனர். கல்லூரி மாணவிகளை பாலியல் பேரத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய …

காஷ்மீரில், இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக, உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவால் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய நிலையயில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில், தேமுதிக-பாஜக இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..... …

நாடு முழுவதும் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் குமரி மாவட்டத்திலும் 3 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது. …

சென்னை அடையாறை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவர், சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். என்ஜினீயரிங் பட்டதாரியான நான், பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கு 2014-ஆம் ஆண்டு மூளை நரம்பு மற்றும் தசை சம்பந்தமான பிரச்சினை ஏற்ப்பட்டது. இதனால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2017-ஆம் ஆண்டு ஊட்டிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றேன். …

பெங்களூரு மாநகராட்சியில் நேற்று ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி நிர்வாகம், 2019-20-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. …

உலகில் 2-வது முறையாக ஈராக்கில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலை மூடப்பட்டது. …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. …

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதிகாலை 4.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கஅனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. …

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். …

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். …

அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்காமல், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்திற்கும் கேடு ஏற்படுத்தியதாக தமிழக அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. …

காஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. பயங்கரவாத தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. …

நேற்று முன் தினம் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர், நடந்த இந்த கோர சம்பவம் பற்றி விளக்குவதற்காகவும், விவாதிப்பதற்காகவும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. …

டெல்லியில் இருந்து வாரணாசி வரை செல்லும் இந்தியாவின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று டெல்லியில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். ரயிலின் முதல் ஓட்டத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ரெயில் தொடக்க ஓட்டத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை புரிந்தது. …

உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். …

ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் டாலர் பிரச்னை இல்லாமல், ரூபாயில் வர்த்தகம் செய்யவும், பண்ட மாற்று முறையில் கச்சா எண்ணெயை பெறவும் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. …

சமீபத்தில் சான் ஃப்ரான்சிஸ்கோவில், Goldman Sachs நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ட்விட்டர் செயல் அதிகாரி ஜாக் டார்சே " ட்விட்டர் பயனாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான எடிட் ஆப்சன் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்ததோடு, ட்விட்டர் எடிட் ஆப்சன் எவ்வாறு செயல்படும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். …

புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே கவர்னராக கிரண்பெடி நியமிக்கப்பட்டார். அப்போது இருந்தே அவருக்கும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்காமல் கோப்புகளை திருப்பி அனுப்புவதாக நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார். …

பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்தார் , அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக தேர்தல் பொறுப்பாளராக தான் நியமிக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், தமிழகத்தில் அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். …

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தேபாரத் அதிவேக விரைவு ரயிலை பிரதமர் நரேந்திரமோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். …

புல்வமா தாக்குதல் குறித்து இன்று மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்வீடனில் இருந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசரமாக நாடு திரும்பினார். …

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது திடீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ற்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பொது அவர்கள் வாகனம் மீது தற்கொலைபடை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 40 கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களின் பலி ஆனார்கள், படுகாயம் அடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது …

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 18 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 44 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், வந்த நிர்மலா தேவியிடம் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. …

உடல்நல குறைவால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் நாடு திரும்புவதாக அக்கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது. …

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி உலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளான். முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளான். …

குடிசை மாற்று வாரிய வீடு வாங்கி தருவதாக கூறி பல பெண்களிடம், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து இந்த சேவையை தொடங்கி வைத்தார். …

நேற்று`பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் என்பதால், பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில், எதிரே அமர்ந்திருந்த மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று பேசினார். …

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே வெகுநாட்களாக அதிகார மோதல் நிலவி வந்தது. பல்வேறு விஷயங்களில் இரு தரப்பும் தங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது என மோதி கொண்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். …

15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு, நாசா பிரியாவிடை கொடுத்தது. வெறும் 90 நாட்கள் மட்டுமே ஆயுட்காலத்தைக் கொண்ட ஆப்பர்ச்சுனிட்டி ரோவர் 2003 ஜூன் மாதம் அனுப்பப்பட்டு, 2004 ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. …

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்விக்கி நிறுவனம்,தற்போது உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது, அதனுடன் கூட மளிகை பொருட்களையும் நேரடியாக விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. …

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டு வனப்பகுதியில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த வனஉயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லைக்கெப்பியா ((Laikipia)) என்ற இடத்தில் அரிய மற்றும் அபூர்வ வகையான கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர், குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தானியங்கி கேமராக்களை பொருத்தினார். …

சிரியா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையுடன், மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் மற்றும் சிரிய ஜனநாயக படைகளும் இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. …

கேபிள் மற்றும் DTH சேவையில், விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறையை TRAI அறிமுகம்செய்தது. இதையடுத்து விரும்பிய சேனல்களை, சந்தாதாரர்கள் தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தும் புதிய நடைமுறைக்கு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக TRAI தெரிவித்துள்ளது. …

ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன்வடிவுகள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. …

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், இவர் சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக உள்ளார். இவர் சவாரிக்காக பழவந்தாங்கலில் இருந்து மேடவாக்கம் சென்றுள்ளார். அப்போது சென்னை வேளச்சேரி மேம்பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, அவ்வழியாக மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தக்காவலர், கார் ஓட்டுநர் ரஞ்சித்தை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. …

ஐதராபாத்தின் நர்சிங்கி என்ற பகுதியில் PBEL City என்ற அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இருந்த மின்சார கம்பியை அங்கே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் தவறுதலாக பிடித்ததால் அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. …

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். …

வெனிசுலாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அந்நாட்டு அதிபர் மதுரோ முடிவு செய்துள்ளார். …

வங்கக் கடலில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் அதிகாலை 7 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு - வட கிழக்கில் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழிப்பேரலை தொடர்பாக எச்சரிக்கை …

ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும்செயலியான டிக் டாக்கை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்” என்று சட்டசபையில் தமீமுன் அன்சாரி விடுத்த கோரிக்கைக்கு, “டிக் டாக் செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார். …

சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலேயே இன்றைய அலுவல்கள் முடியும் வரை ஒரு மூலையில் அமர்ந்திருக்குமாறும் நாகேஸ்வரராவுக்கு அதிரடியாக தண்டனை விதிக்கப்பட்டது. …

மறைந்த முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் முழுஉருவப் படம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாஜ்பாயின் முழுஉருவப் படத்தை திறந்துவைத்தார். …

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கர்ஜி-பிலோனியா இடையேயான ரெயில் தடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். …

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. …

ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மதிக்காமல், விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் பணிகளை மேற்கொண்டார். …

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக தொடங்கியுள்ளதால், இன்று ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது மெட்ரோ ரயில் திட்டம். கடந்த 2009ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. 42கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடத்திட்டத்தில் நீல நிற வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடம் …

சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் கிராமி இசை விருதுகள் நேற்றிரவு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றன. இவ்விழாவில் 15 முறை கிராமி விருதை பெற்றவரான அலிசியா கீஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற சில முக்கிய இசை நட்சத்திரங்களின் தொகுப்பு இதோ. …

பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக்கான பாப்டா விருதுகள் லண்டனில் நேற்றிரவு வழங்கப்பட்டன. ஸ்பானிஷ் படமான "ரோமா" சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. the favourite ஏழு விருதுகளைத் தட்டிச் சென்றது. …

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ் (வயது 27). இவர் சென்னையில் கமாண்டோ படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். உடல் நலம் இல்லாத தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு செல்ல சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்ட சென்னை-நெல்லை சுவிதா ரெயிலில் ஏறினார். …

2003ஆம் ஆண்டு மும்பையில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் முகமது ஹனிப் சையத் என்பவர் உள்பட மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நாக்பூர் மத்திய சிறைச்சாலையில் இருந்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. …

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து சாதகமான நடவடிக்கை எதுவும் இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். …

ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரை தொடங்கியுள்ளதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது. ஈராக் எல்லையோரப் பகுதியில் உள்ள குறுகிய இடத்தில் மட்டுமே முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் கடைசி நடவடிக்கையில் சிரிய ஜனநாயகப் படையினர் களமிறங்கி உள்ளனர். இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. …

நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்றால் மக்கள் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். …

நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது "பொதுநலன் கருதி" திரைப்படத்தின் இயக்குநரும், இணை தயாரிப்பாளரும், சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 7ஆம் தேதி வெளியான திரைப்படம் பொதுநலன் கருதி. ஸியோன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் 3 கதாநாயகர்கள் உள்ளனர், அதில் ஒருவராக கருணாகரன் நடித்து இருக்கிறார். அவர் மீது தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில். படத்தின் இயக்குனர் ஸியோனும், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தும் புகார் அளித்துள்ளனர். …

பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடித்து வெளிவந்த "ஏக் லட்கி கோ தேகா தோ ஐஸா லகா" படத்தை ஆஸ்கர் நூலகத்தில் வைக்கப்போவதாக வெளியான செய்தி தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆஸ்கரின் அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அதிகாரபூர்வ நூலகத்தில் உலக அளவில் வெளிவந்துள்ள முக்கியப் படங்கள் இடம் பெறுவது வழக்கம். முழுக்க முழுக்க ஆஸ்கர் நிபுணர்கள் குழுவுக்குப் படம் பிடித்தால் மட்டுமே இந்நூலகத்தில் …

ஆப்பிள் நிறுவனத்தின் பேஸ்டைம் என்னும் வீடியோ காலிங் செயலியின் குறைபாட்டைக் கண்டுபிடித்துக் கூறிய 14 வயது சிறுவனுக்கு கல்வி உதவித் தொகைக்காக சன்மானம் வழங்கி பாராட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம் . ஆப்பிளின் பேஸ்டைம் எனும் வீடியோ காலிங் செயலியில் குரூப் வீடியோ காலிங்கில் ஒருவருக்கு அழைப்பு மேற்கொண்டு அவர் அதை ஏற்கும் முன்னரே அவரது கேமராவை தானாகவே ஆன் செய்ய வைக்கக் கூடிய குறைபாடு இருந்தது. இதை அமெரிக்காவைச் சேர்ந்த 14 …

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சயன், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் …

சென்னை அசோக் நகர் காவல்நிலையத்தில் வைத்து டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். …

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. …

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. 7 முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஹெலினா ஏவுகணை, 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில். மிகவும் நவீனமானதாக கருதப்படும் இந்த ஏவுகணை, எதிரி நாட்டு டேங்குகளை மிகத்துல்லியமாக குறிவைத்து தாக்கி அழிக்கும் தன்மை வாய்ந்தது. …

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் பாண்டஸி/சயின்ஸ் பிக்க்ஷன் படமான "Alita: Battle Angel" உலகம் எங்கும் வசூலை வாரிக்குவிக்கிறது. …

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் …

நியூஸிலாந்து அணி உடனான 2வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 அவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. நியூஸிலாந்து அணியில் கோலின் டி கிராண்ட்ஹோம்மே அதிகபட்சமாக 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்தார். …

தென் ஆப்பிரிக்காவில் வரும் மே மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். …

பாலாவின் இயக்கத்தில் திருப்தியில்லாத காரணத்தால் வர்மா படம் தற்போது எடுக்கப்பட்ட பாணியில் வெளியாகாது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. …

சாரதா நிதிநிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் நாளை ஷில்லாங்கில் விசாரணை நடத்த உள்ளனர். …

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 2019 - 20- ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அதன் படி பள்ளிக்கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. …

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத, வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையுள்ள பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். …

பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான, அனுஷ்கா சர்மாவை போலவே தோற்றத்தை போன்று கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் இருப்பதை அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர். …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகத்தின் நேரடி தலையீடு உள்ளது என குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி கூறுகையில், “ ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரான்சிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது. ரபேல் மோசடியில் பிரதமர் மோடி தவறு செய்துள்ளார். மோசடி நடைபெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. …

சென்னையில் நடிகரும், இயக்குநருமான ராம்தாஸின் இல்லத்திருமண விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். விழாவின் பொது ஒருவர் செல்போனில் நடிகர் சிவக்குமாரோடு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருடைய செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டுவிட்டு நடந்து சென்றார். …

கான்ராட் ராய் என்ற 18 வயதான நபர், கடந்த 2014-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு அப்போது உதவிய 17 வயது இளம்பெண் குற்றவாளிதான் என மசாசுசெட்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. …

தமிழ்நாட்டில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? அடுத்தகட்டமாக மூடப்படவுள்ள கடைகள் எதனை? என்பது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. …

கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் போக்குவரத்து போலீசார் மீதுதான் தவறு என்பது விசாரணை அறிக்கையில், அம்பலமாகியுள்ளது. வேலூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநரான ராஜேஷ் கடந்த மாதம் 25ஆம் தேதி மறைமலைநகரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக தனது தற்கொலைக்கான காரணத்தை அவரது செல்போனில் பேசி பதிவு செய்திருந்தார். …

உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம், ஜனவரி இறுதியுடன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். …

திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. …

குடும்ப பிரச்சனைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. …

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. …

பாகிஸ்தானின் தேசிய விலங்கானது மார்க்கோர் காட்டு ஆடு. இது மிக அறிய வகை விலங்குகளில் ஒன்றாகும். இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர் (இமயமலை பகுதி), தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற பனிமலைப் பிரதேசங்களில் பரவலாக காணப்படுகின்றன. பன்னாட்டு உயிரின பாகுதுகாப்பு சங்கம் இதனை மிகவும் அரிய விலங்கினங்களில் பட்டியலில் வைத்துள்ளது. நீளமான முடி மற்றும் சுருள் சுருளான இந்த கொம்புகள் இதனை தனித்தன்மையுடன் காட்டுவதாக உள்ளன. …

தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி 14பேர் உயிரிழந்தனர். 34பேர் காயமடைந்தனர். பொலிவியத் தலைநகர் லா பாஸ் அருகே மலைப்பகுதி வழியாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. …

திருச்சி கோட்ட ரயில்வேயில், சோலார் முறையில் மின்சார உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. …

திருச்சி மாவட்டம் கீரமங்கலம் அருகே ஒரே பெயர் கொண்ட இருவருக்கு, ஒரே பான் கார்டு எண் வழங்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கீரமங்கலத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், சமயபுரத்தில் உள்ள கனரா வங்கியில் தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். …

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் இம்மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். …

தகுதியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் தேர்தலில் தமது மகன் போட்டியிட உரிமை உள்ளது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். …

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் "காபி வித் கரண்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா பெண்கள் பற்றி ஆபாசமாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. …

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 2–ந்தேதி 50 வயதுக்குட்பட்ட கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இது இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. …

மேற்கு வங்க மாநில முன்னாள் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்பட்டவருமான பாரதி கோஷ், பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

கனடாவில் உறைந்து போன ஏரி ஒன்றில் அடுக்கடுக்காக பனி உறைந்திருப்பது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. …

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை கண்டுபிடிக்க தவறியதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை இயக்குநர் வசந்தபாலன் கடுமையாக விமர்சித்துள்ளார். …

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொள்ளையன் என நினைத்து தாக்கப்பட்ட வடமாநிலத்தவர் உயிரிழந்தார். …

சாரதா சீட்டு மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐ விசாரணைக்கு மேகாலயத் தலைநகர் சில்லாங்கில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராஜீவ் குமாரைக் கைது செய்யக் கூடாது என்றும் சிபிஐக்கு அறிவுறுத்தியுள்ளது. …

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெய்ப்பூர் மாவட்டம் சக்சு ((Chaksu)) நகரில் 25 பயணிகளுடன் ராஜஸ்தான் மாநில அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஷீத்லா அணை ((Sheetla)) அருகே உள்ள பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் விழுந்தது. …

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். …

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. …

பிரிட்டனை சேர்ந்த இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கடந்த மாதம் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா ஸ்கைப் மூலம் உரையாடினார். அப்போது, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். …

ஆப்பிரிக்க தீவுகளில் ஒன்றான கேப் வெர்டேவில் ஒன்பதரை டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது, அதை போலீசார் தீயிட்டு அழித்தனர். …

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

சென்னை தண்டையார்பேட்டையில் முன்விரோதம் காரணமாக தள்ளுவண்டிக் கடைக்காரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்(British" and "exit) என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு அளித்தனர். முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார். …

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, திருச்சி காந்தி சந்தை பகுதியில் உள்ள மகளிர் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். இளம் வயதுடைய இவருக்கு இன்னும் திருமணமாகவில்ல, நேற்று மாலை, கேகே நகர் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில், செந்தமிழ்ச்செல்வி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செந்தமிழ்ச்செல்வியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் இடையே நடந்த மோதலால் ஒருவர் மீது ஒருவர் சரமாரி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது. …

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர். …

சட்டவிதிகளை மீறிய ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரஷ்யா அரசு 54 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்நாட்டில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு புதிய சட்டம் ஓன்று இயற்றப்பட்டது. …

சிறு-குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தமிழகத்தில் 73 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு. 6 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் 73 லட்சத்து 40 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவார்கள். …

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நடிகர் பார்த்திபன் அந்த பதவியில் இருந்து திடீரென விலகி உள்ளார். அந்த பதவிக்கு அவர் சமீபத்தில் தான் சங்கத் தலைவரான விஷால் மற்றும் நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் தமது ராஜினாமா கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பி உள்ளார். …

விசா மோசடி விவகாரத்தில், குடிபெயர்வுத்துறை விதிகளை மீறியதாக 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு முதல் முன்னுரிமை கொடுத்து, 129 மாணவர்களின் உதவிக்காக இந்திய தூதரகம் 24 மணி நேர ஹாட்லைன் வசதி ஏற்படுத்தியுள்ளது. …

இசைஞானி இளையராஜாவின் 75 வது பிறந்தநாளையொட்டி இன்றும் நாளையும் அவருக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து பாராட்டு விழா நடைபெறுகிறது. இன்று நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். …

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு தனமாக மின்சாரம் எடுக்கப்படுவதாக மின்வாரிய அமலாக்கத்துறையினருக்கு ரகசிய தகவலில் கிடைத்தது. அதன்படி, ஜனவரி மாதத்தில் மட்டும், மூன்று கோடியே 90 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. …

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.. …

பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். …

ஆவின் பால் கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் ஆவின் பாலுக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. …

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அப்போது சிலநேரங்களில் தங்கக் கட்டிகள் சிக்கும். இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து வந்த ஒருவரிடம் சிறுத்தைக்குட்டி சிக்கி உள்ளது. …

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சோபியான் பகுதியைச் சேர்ந்த இஷ்ரத் முனீர் 25 வயதே ஆனா இந்த பெண், ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத அட்டூழியங்களை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். …

யூடியூபில் அதிக சந்தாதாரர்களைக் கொண்டிருப்பது யார்? என்ற உலகளாவிய போட்டியில் முதலிடத்தில் உள்ள ஸ்வீடனைச் சேர்ந்தவரின் பீயூ டி பை சேனலுக்கும், இந்தியர் ஒருவரின் டி சீரீஸ் சேனலுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. …

பெங்களூருவில், மிரேஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து இரு விமானிகளும் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 8-ஆம் தேதி பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாகவும், அன்று காலை 10 மணிக்கு 2019 - 2020-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். …

வங்கிகளுக்கு தான் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படும் நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, ஆனாலும் தான் 9 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஓடி விட்டதாக கூறுவது எந்த விதத்தில் நியாயம் என விஜய் மல்லையா தனது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது புதிதாக …

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து அவர் பேசினார். …

கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை வாரண்ட் இல்லாமல் கைது செய்தது தொடர்பாக சட்ட விளக்கத்தை அளிக்குமாறு அம்மாநில காவல் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

நடிகர் அஜித் குமார், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தலைமையில் இயங்கிய தக்சா குழு பல்வேறு வெற்றிகளையும், பாராட்டுகளையும் குவித்திருந்தது. …

பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடர். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார். …

மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் கைதாகவோ, நாடுகடத்தப்படவோ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை, இணையதள தொடராக சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். …

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக' அனுசரிக்கப்படும் என அம்மாநிலத்தின் கவர்னர் ராய் கூப்பர் அறிவித்துள்ளார். …

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 வயது மூதாட்டி ஒருவர் மாணவர்களுக்கு முழுநேரமாக உடற்கல்வி பயிற்சி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். …

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இன்றைய நவீன உலகில், 10 வயது சிறுவன் முதல் 80 வது முதியவர் வரை அனைவரும் ஸ்மாா்ட் போன்கள் உபயோகிப்பவர்களாகவே உள்ளனர். தொழில்நுட்பத்திற்கு ஏற்ப செயலிகள் வரவும் அதிகரித்து விட்டது. அதேபோல் புதுப்புது விளையாட்டுகளும் வரத் தொடங்கியுள்ளன. அவ்வாறு இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் ஆன்-லைனில் விளையாடப்படுவது ‘பப்ஜி' விளையாட்டு தான். …

அமெரிக்காவில் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள லாஸ் வில்லே நகரத்தில் சுவாமிநாராயண் என்ற இந்துக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்குள்ள சாமி படங்கள் மீது கருப்பு பெயிண்ட்டை வீசியும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். …

குமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். …

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் கம்பீரமாக முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இன்று காலை இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. பணிச்சுமை காரணமாக இந்திய கேப்டன் …

மாணவர்கள், மக்கள் ஆகியோரின் நலன் கருதி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். …

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 47மாடிக் கட்டடத்தில், வெளிப்புறச் சுவர் வழியாக ஏறிச்சென்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலந்தி மனிதர் அலைன் ராபர்ட் சாதனை படைத்துள்ளார். …

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாரதம்மா என்பவர் பயணித்துள்ளார். அப்போது ரயிலில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட்டை அவர் தவறாக பயன்படுத்தவே, அவரது வலது கால் கழிவறை தொட்டிக்குள் சிக்கிக்கொண்டது. …

கார்த்தி நடித்து கடந்த வருடம் கடைக்குட்டி சிங்கம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலும் பார்த்தது. தற்போது தேவ் என்ற படத்தில் நடித்துவருகிறார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல்பிரீத் சிங் நடிக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். ரஜத் ரவிசங்கர் இயக்குகின்றார். …

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் நிதி மோசடி குறித்த அம்சங்களை விசாரித்து வருகிறது. …

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மற்ற பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாடங்கள் நடத்திட அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. …

பாகிஸ்தான் நாட்டில் நீதிபதியாக பதவியேற்க உள்ள முதல் இந்துப் பெண் என்ற அந்தஸ்தை சுமன் குமாரி பெற்றுள்ளார். எல்.எல்.பி படிப்பையும், கராச்சியில் உள்ள ஸாபிஸ்ட் ((Szabist)) பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை சுமன் குமாரி படித்தார். …

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், சி.பி.ஐ நீதிமன்றத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மாறன் சகோதரர்களின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கின் விசாரணை, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் புதிதாக குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்பட இருப்பதால், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் …

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தின் விஜய்பூர் தொகுதியில் (ஷியோபூர் மாவட்டம்) பாஜக சார்பில் போட்டியிட்ட சீதாராம் ஆதிவாசி பலம்வாய்ந்த காங்கிரஸ் வேட்பாளரான ராம்நிவாஸ் ராவத்தை வீழ்த்தி முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். …

தருமபுரி மாவட்டம் செட்ரப்பட்டி கிராமத்தில், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திரு ஸ்டாலின் அவர்கள் , விவசாயிகளின் தற்கொலை தொடர்வதாகவும், விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பிரதமர் அவர்களுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார். …

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் …

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வெற்றி கொண்ட நிகழ்வின் 75வது ஆண்டு விழா ரஷ்யாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. …

உதகையிலுள்ள ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. …

ஜெஜெ டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணுக்கருவிகள் வாங்கியது தொடர்பாக அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. …

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர். …

திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு ஐந்து லாக்கர்கள் உடைக்கப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். …

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பணிகள், கல்வி பணிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. …

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைதாகி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட 422 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். …

அழிந்து விட்டதாகக் கருதப்பட்டு வரும் ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் தென்பட்டதால் கடல் ஆய்வாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுப் பகுதியில் கடலில் துள்ளி விளையாடிய சுறா ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது. …

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து பிரதமர் மோடி, விழா முடிந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நடந்த பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். …

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஆடம்பரச் செலவு செய்வதாகவும், ஊழல் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கடந்த மாதம் சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தைப் பூட்டினர். இதை எதிர்த்துத் தொடுத்த வழக்கில் சார்பதிவாளர் முன்னிலையில் அலுவலகத்தைத் திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதேநேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆவணங்கள் உள்ள அறையைப் பூட்டி வைக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. …

குடியரசு தினத்தையொட்டி டெல்லி அமர்ஜவான் ஜோதியில், பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிர் நீத்த வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ராஜ்பாத் பகுதிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வருகை தந்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வருகை தந்தார். இருவரையும் பிரதமர் மோடி வரவேற்றார். …

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஒற்றையர் போட்டியின் காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான கிடம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் கலந்துகொண்டு பலப்பரீட்சை நடத்தினர். முன்னதாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை Pornpawee Chochuwong-வை 21-7 மற்றும் 21-18 என்ற நேர் செட்கணக்கில் எதிராளியை எளிதில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழியான பதர் சையத் வழக்கறிஞர், SITE மகளிர் கல்லூரியின் நிரந்தர உறுப்பினர், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ , வக்பு வாரிய தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். …

குடியரசுத் தினக் கொண்டாட்டங்களின் போது டெல்லியின் முக்கிய இடங்களில் தொடர் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். …

பொலிவியா நாட்டின் "புதுவருட நம்பிக்கை விழா" வழக்கமான உற்சாகத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. தாங்கள் விரும்பும் பொருட்களின் வடிவங்களை வாங்கி வைத்து, பிரார்த்தனை செய்தால், இந்தாண்டில், அந்த பொருள் தங்களுக்கு கிடைக்கும் என்பது பொலிவியா நாட்டு மக்களின் நம்பிக்கையாகும் …

திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வத்தை காட்டும் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா எனப்படும் ஆளில்லா குட்டி விமான குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அஜித்தின் ஆலோசனையின் பேரில் ஆளில்லா குட்டி விமான உருவாக்கத்தில் அந்த குழுவினர் ஈடுபட்டிருந்தனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்துமுடிந்த `Medical Express 2018 UAV Challenge’ சர்வதேசப் போட்டியில் தக்‌ஷா அணிக்கு 2-வது இடம் கிடைத்தது. …

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி C-44 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்றிரவு 11.37 மணியளவில், பிஎஸ்எல்வி C-44 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட், புவி மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட “மைக்ரோ சாட்- R“ மற்றும் 'கலாம் சாட்' ஆகிய 2 செயற்கைக்கோள்களும் …

கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் கடலை சுத்தப்படுத்தவும், 12 வயது சிறுவன் ஒருவன் புதிய கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புனேவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹசாக் ஹசி. இவர், கடலில் இருக்கும் மாசுக்களை சுத்தப்படுத்தும் நோக்கிலும், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் விதத்திலும், கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளார். எவ்ரிஸ் ( Evris) என்று அந்த கப்பலுக்கு பெயர் வைத்து, TedEx, Ted8 போன்ற சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தி …

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. …

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. …

இரண்டாவது முறையாக அண்மையில் பதவியேற்ற வெனிஸுவேலா நாட்டு அதிபராக நிக்கோலஸ் மதுரோ. ஆனால் தேர்தலில் முறைகேடு செய்து தான் அவர் வெற்றிபெற்றார், அதனால் தேர்தலை மீண்டும் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளார். …

ட்ராய் நிறுவனத்தின் புதிய கொள்கை கட்டளைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை இன்று நிறுத்தி வைத்துள்ளது கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கம். …

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக . இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. …

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ உட்பட ஏழு பேர், முதலமைச்சருக்கு எதிராக பேசவும், தவறான ஆதாரங்களை வெளியிடவும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நல குறைவால் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால், மத்திய நிதி அமைச்சக பொறுப்பு பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். …

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட 6 பேரிடம், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். …

மெக்சிகோ நாட்டின் எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடும் கண்டனம் …

சுமார் 20 லட்சம் வீரர்கள் வீரர்களுடன் உலகிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட நாடாக சீனா விளங்கி வருகிறது. ராணுவத்தை சீரமைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பின் உத்தரவிட்டதன் பேரில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. …

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. …

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. காங்கிரஸ் தேர்தல்களில் தோல்வியை தழுவும்போதெல்லாம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. …

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரியும், ஆளுநர் நடவடிக்கை எடுக்கக் கோரியும் வரும் வியாழக்கிழமை ஆளுநர் மாளிகை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) இன்று அறிவித்த 2018 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது இந்திய அணியின் தற்போதய விக்கெட் கீப்பர் ரிஷப்பந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. …

தன்னை காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

இந்திய உணவுப் பொருட்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தவறான தகவல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. …

ரஷ்ய கடல் பகுதியில் 2 எரிபொருள் கப்பல்கள் தீ பிடித்து விபத்துக்குள்ளாகின. இதில் இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான 2 கப்பல்களிலும் தான்சானியா நாட்டுக்கொடி பறந்துள்ளது. ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயும் (எல்.என்.ஜி.) மற்றொரு கப்பலில் காலியான டாங்க்கும் இருந்துள்ளது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் மாற்றம் செய்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாக …

துருக்கியில் பன்னெடுங்காலமாக நடந்து வரும் ஒட்டகச் சண்டைப் போட்டிகள் தொடங்கியுள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தப் போட்டிகளில் ஆயிரத்து 200க்கும் அதிகமான ஒட்டகங்கள் பங்கேற்றன. …

சென்னை புளியந்தோப்பில் முன் விரோதம் காரணமாக ரவுடியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பர்கர் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. …

நேபாளம் மற்றும் பூடான் நாட்டிற்கு செல்ல குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விசா இல்லாமல் ஆதார் அட்டையை மட்டும் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. …

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக, தற்போது ஆட்சி நடத்திவரும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், பாதுகாப்பு கருதி சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடயே அடிதடி மோதல் ஏற்பட்டு, அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. …

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண வைபத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். …

உதகை தாவரவியல் பூங்காவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்களை பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது, பலரும் அதன் அழகை ரசித்து செல்கின்றனர். …

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன், நிலத்தின் ஈரப் பதத்திற்கு ஏற்ற வகையில் தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரை வடிவமைத்துள்ளார். …

ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரியா சரபோவாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா சரபோவா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லே பார்த்தி ஆகியோர் விளையாடினர். …

கர்நாடகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 4பேர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைப் பணங்கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைக்க பாஜக முயல்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. …

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 54 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் இடையேயான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் விரிவாக்கம் செய்யப்பட்டது, அப்போது, 2 அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி உட்பட 5க்கும் மேற்பட்டோர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் முகாமிட்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின. …

சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 7 வனச்சரங்கள் உள்ளன. ஆண்டுக்கு இருமுறை மழைபொழிவுக்கு முன், பின் என இங்கு கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன்படி, மழைக்காலத்திற்கு பின் நடத்தப்படும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு இன்று முதல் தொடர்ந்து 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது. …

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் செல்ல முயன்ற பெண்கள் இருவரை கேரள போலீஸார் திருப்பி அனுப்பினர். …

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது. தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …

இடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் 3 நாள்கள் சர்வதேச மாநாடு நடைபெற்றுவருகிறது.. …

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த 3 முறை உலக சாம்பியனான கரோலினா மாரினை எதிர்கொண்டார். …

இந்திய ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றுபெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. …

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உட்பட மூன்று பேர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டனர். …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. …

புகழ்பெற்ற அமெரிக்க பாடகியும், நடிகையுமான ரிஹானாவும் பென்டி பியுட்டி என்ற பெயரில் அழகு சாதனப்பொருட்கள் நிறுவனம் ஒன்றை 2017–ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். மேலும் உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் இவர் சொந்தமாக நடத்தி வருகிறார். …

மகாராஷ்டிராவில் நடன பார்களுக்கான சட்டத்தின் சில பிரிவுகள் பற்றி நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. இதில், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் பார் அறைகளில் ஆபாச நடனம் மற்றும் மகளிர் கண்ணியம் பாதுகாப்பு (பணியில் இருப்போர்) சட்டம், 2016-ன் சில பிரிவுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. …

இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற லேண்ட்ரோவர் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. …

இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியானதையடுத்து காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள சீன எல்லையில் படைகளை குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ் என்ற பெயரில் நிபுணத்துவம் பெற்ற துணை ராணுவப்படையின் வடமேற்கு எல்லைப்புற பிரிவை லே பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளது. …

இந்தோனேஷியாவில் 14 அடி நீளமுள்ள பிரமாண்ட முதலை ஒன்று இளம் பெண்ணை கடித்து குதறி கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. …

விருதுநகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ரின் 102வது பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமமுகவினர், அதிமுக கொடியை கிழித்தெறிந்ததால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. …

எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. …

ஜம்முவில் இருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது. 12266 எண் கொண்ட துரந்தோ எக்ஸ்பிரெஸ் ரயில் இன்று அதிகாலை ரயில் டெல்லி ரோஹில்லா ரெயில் நிலையம் அருகே வந்தபொழுது, ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பயணிகளை மிரட்டி அவர்களிடமிருந்து கொள்ளை அடித்துள்ளனர். …

நிகோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வரவில்லை. …

ஜெர்மன் கார் நிறுவனமான வோல்க்ஸ்வேகன், இந்தியாவில் 3.23 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் தனது வாகனங்களில் காற்று வெளியேற்றும் சோதனையில் மோசடி செய்யும் வகையிலான கருவியை பயன்படுத்தி விதிகளை மீறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி சாதமும், மகேந்திர சிங் தோனி அரை சாதமும் அடித்து அசத்தினார். …

நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். …

சென்னை போரூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 40 மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிபுரிபவர்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராகவோ, உதவி பேராசியராகவோ பணியாற்றவில்லை என்ற அதிர்ச்சி தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. …

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என்றால், அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். …

அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையை பொருட்படுத்தாமால் ஈரான் நேற்று செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவியது. ஆனால், இந்த ஏவுகணை திட்டமிட்ட படி இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிவடைந்துவிட்டதாக ஈரான் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி முகம்மது ஜரோமி தெரிவித்துள்ளார். …

அமெரிக்க பூர்வகுடி மக்கள் குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிலவை ‘வுல்ஃப் மூன்’ என அழைத்து வருகின்றனர். இந்த ‘வுல்ஃப் மூன்’ வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார். …

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சித்தரிக்கும் புதிய பாலிவுட் திரைப்படமான ஸ்ரீதேவி பங்களாவின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியார். ஸ்ரீதேவின் வாழ்க்கையில் சில அறியாத பக்கங்களை சித்தரிப்பதைப் போன்ற காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் ஓட்டலின் குளியலறை நீர்த்தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். …

2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என அக்கட்சியின் கட்சி தலைவர் மாயாவதி கூறினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் பரிசாக கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என தொண்டர்களை மாயாவதி கேட்டு கொண்டார். …

பொங்கல் பரிசு வாங்காமல் தவறவிட்டவர்கள், பொங்கல் முடிந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், வாகன ஓட்டுனர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,கலந்துகொண்டு பொங்கல் பரிசுகளை வழங்கிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். …

நிகோலஸ் மதுரோ கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக வெனிசுலா நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஜூவான் கெய்டோ, தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார். …

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்று அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களால் செல்ல முடியவில்லை. …

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி மீது குற்றம்சாட்டிய சயன், மனோஜ் இருவரிடமும், 7 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

கொடநாடு விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டது, சர்வாதிகாரத்தின் உச்சம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். …

போலி மருத்துவப் படிப்பு சான்று வழங்கி சென்னையில் 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் பணிக்குச் சேர்ந்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். …

தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. …

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்பர்ன் நகரில் இன்று தொடங்கியுள்ளன.தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 37 வயதான நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் இப்போட்டியில் களமிறங்குகிறார். …

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களின் படகுகள் மீது தங்களது கப்பலால் மோதி சேதப்படுத்திய இலங்கை கடற்படை, மீன்பிடிக்க சென்ற 28 மீனவர்களையும் கைது செய்துள்ளது. …

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கோடநாடு தொடர்பான புலனாய்வு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ்.. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

சபரிமலையில் இன்று பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தெரியும், இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். இதனையடுத்து ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. …

போகி பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. …

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. முதல்நாளிலேயே இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் காத்திருந்து பதிவுசெய்துகொண்டனர். …

ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் இயற்பியல் கோட்டுபாடுகள் தவறு என்றும் பூமி தன்னை தானே சுற்றுகிறதே தவிர சூரியனை சுற்றி வரவில்லை என்பதை நிரூபிக்க தயார் என தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் மற்ற விஞ்ஞானிகளுக்கு சவால் விடுத்துள்ளார். …

கோடநாடு எஸ்டேட் கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக புலனாய்வு மேற்கொண்டு வந்த தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ், இந்த சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக, குற்றம்சாட்டியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

மும்பையில் கட்டுமான அதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாதா குரு சாட்டம் கூட்டாளிகளான அமோல் விஜாரே, பாரத் சோலாங்கி, ராஜேஷ் அம்ப்ரே, பிபின் தோத்ரே மற்றும் தீபக் லோதியா ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். …

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடித்து நம்மை எல்லாம் பெருமை அடைய செய்ந்திருக்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். …

பாலியல் புகார் தொடர்பாக உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் DNA பரிசோதனைக்காக ரத்த மாதிரியை வழங்குமாறு வெகாஸ் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். …

பாராளுமன்றத்தில் நடந்த ரபேல் போர் விமானம் குறித்தான விவாதத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாராளுமன்றத்தில் விவாதத்திலிருந்து தான் தப்பித்துக்கொள்ள பெண் ஒருவரை நியமித்துள்ளார் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி விவாதத்தில் நேரடியாக கலந்து கொள்ளாமல் நிர்மலா சீதாராமனை விட்டு காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க வைத்ததற்காக ராகுல் இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. …

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையையும் மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்திய ரூபாயின் மூலமே செலுத்தி இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது இந்தியா. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா, அந்நாட்டுடன் எந்த நாடும் வர்த்தகம் மேற்கொள்ளக்கூடாது என இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தடை விதித்தது. ஆனாலும் இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக ஈரானுடனான வர்த்தகத்திற்கு விதித்த தடையை ஓரளவுக்கு தளர்த்தியது அமெரிக்கா. …

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ இந்த படம் இன்று திரையிடப்பட உள்ள நிலையில், படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. …

பழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியதற்கு, பாஜகவுடன் தி.மு.க கூட்டணி வைக்க போவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். …

உடல் உறுப்பு தானத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த தமிழகம், 2018 ஆம் ஆண்டில் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளின் எண்ணிக்கை 131 ஆக இருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்து, 2017 ஆம் ஆண்டில் 160 ஆக உயர்ந்திருந்தது. …

திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முறையான விசாரணை செய்து யாராக இருந்தாலும் கைது செய்வோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

உலகின் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் செயலிகளில் முதன்மையானது வாட்ஸ் அப்.. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான இந்த செயலியை பயன்படுத்தாத இந்தியர்கள் வெகு சிலரே. தொலைத்தொடர்பில் அத்தியாவச செயலியாக மாறிவிட்ட வாட்ஸ் அப் கடந்த 10 ஆண்டுகளாக பல மாறுதல்களுடன் பயன்பாட்டில் உள்ளது. அவ்வப்போது இதில் பல சுவாரஸ்யமான மாறுதல்களையும், மேம்படுத்தல்களையும் அந்நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதி ஒன்றினை …

சீனா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள சூழ்நிலையை இந்திய ராணுவம் சிறப்பாக கையாளுகிறது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள சூழ்நிலையை இந்திய ராணுவம் சிறப்பாக கையாளுவதாகவும், இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று ராணுவ தளபதியான பிபின் ராவத் தெரிவித்துள்ளார். …

த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது . மன்மோகன் சிங் பிரதமரானது மற்றும் அவர் பிரதமரான கால கட்ட நிகழ்வுகளை தழுவி, த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. …

சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரம் வரையறுக்கப்பட்டு உள்ளதால் இனிமேல் பெண் காவலர்களுக்கு பெண் காவலருக்கு நைட் டியூட்டி கிடையது என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். …

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில், நடந்து செல்லும் கார் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், வடிவமைத்து வரும் இந்த கார், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. …

தமிழகத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,௦௦௦ வீதம் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதாய் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. …

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக . இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர். இதனால் அலோக் வர்மாவையும் , ராகேஷ் அஸ்தானாவையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன் இவர்களுடைய அதிகாரங்களையும் பறித்தது. மேலும் இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியான நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது. …

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவிற்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருந்தது. …

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பயணிகள் ஆதரவு இல்லாததால் நஷ்டத்தில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், மெட்ரோ ரயிலில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 19,000 பேர் பயணிக்க வேண்டிய நிலையில், 2016-17ம் ஆண்டுகளில் சராசரியாக 10,964 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளதாகவும் …

மகா சங்கராந்தி விழாவையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 30வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. இதில், தென்கொரியா, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்தோரும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். …

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் திடீரென முதல்வர் பெயரில் கல்வெட்டு வைப்பதாக எம்எல்ஏ அறிவித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. …

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் ஒப்புகைச் சீட்டு கருவியை, அனைத்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்திலும் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசும், தலைமைத் தேர்தல் ஆணையமும் பதிலளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

கடலூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 5 லட்சம் ரூபாய் அபராதமும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. …

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. …

பஞ்சாப்மாநிலத்தில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் 300 மாணவர்கள் மாணவர்கள்,சேர்ந்து கூட்டாக இந்தியாவிலேயே முதன்முறையாக ஓட்டுநரில்லாமல் இயங்கும் சோலார் பேருந்தை தயாரித்து அசத்தியுள்ளனர். …

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருவாரூரில் வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்தலை ஒத்தி வைக்க கோரி திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்தன. …

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வங்கிகளில் பெற்ற சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறி தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்து லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவின் செலுத்தாத கடனுக்காக அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. …

தற்போது இசையமைப்பவர்கள் இசை அமைப்பாளர்களே கிடையாது என இசையமைப்பாளர் இளையராஜா விமர்சித்துள்ளார். இளையராஜாவின் 75ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியின் நிறைவு விழாவை சென்னை ராணிமேரி கல்லூரி கல்லூரி மாணவிகளுடன் இசையமைப்பாளர் இளையராஜா கொண்டாடினார். அப்போது இசை பயணத்தின் போது நிகழ்ந்த இன்ப துன்பங்களை மாணவிகளுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் இளையராஜா கேக் வெட்டி ஆசிரியர்களுக்கு வழங்கினார். …

டிசம்பர் மாதம் முதலே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து பல குழப்பமான தகவல்கள் பரவி வரும் நிலையில் அவருக்கு விரைவில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன. …

ரெயில்களில் காலியிடத்தை பயணிகளே பார்த்து தங்களின் வசதிக்கேற்ற இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விமான நிறுவன இணையதளங்களில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அந்த நிறுவனத்தின் விமானங்களில் உள்ள இருக்கை அமைப்பு படமாக காட்டப்படுகிறது. அதில், முன்பதிவு செய்த இருக்கைகளும், காலி இடங்களும் வெவ்வேறு நிறங்களில் வேறுபடுத்தி காட்டப்படுகிறது. அதை பார்த்து, பயணிகள் தங்கள் வசதிக்கேற்ற இருக்கைகளை தாங்களே தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து …

'பெங்களூரில் நடிகர்கள் புனித் ராஜ்குமார், நான் ஈ' சுதீப் உள்ளிட்ட கன்னட முன்னணி நடிகர்கள் 4 பேர் வீடுகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமார், புனீத் ராஜ்குமார் ஆகியோரின் வீடுகள், நான் ஈ', புலி போன்ற தமிழ் படங்களில் நடித்த சுதீப், சமீபத்தில் வெளியான, ‘கேஜிஎப்’ திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் யஷ், 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கேஜிஎப் …

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது . திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையடுத்து, ஜனவரி 28-ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி …

சென்னை அருகே அம்பத்தூர் தொழிற்பேட்டையில், கலப்பட பெட்ரோல் விற்பனை செய்த பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. …

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. …

சென்னை ஆவடியை அடுத்த அன்னனுரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அப்பகுதியில் ஒரு ரவுடியைப் போல செயல்பட்டு வந்துள்ளார். அவர் மீது ஆவடி, அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. …

நாகர்கோவிலில் நடந்த இன்போசிஸ் நிறுவன வேலைவாய்ப்பு வளாக தேர்வில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர் முதலிடம் பெற்றனர். …

சென்னையில், ஹோட்டல் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பிரபல உணவகங்களின் தலைமையகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. …

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை நோக்கி காகிதத்தில் செய்த ராக்கெட்டுகளை வீசி எறிந்தனர். …

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தில் சென்று யார் படிக்கப்போகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாக கூறியுள்ளார். …

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர் டி.ஆர்.பாலுவா என்பது குறித்து வரும் வெள்ளிகிழமை மாலை தெரியவரும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை, மேகதாது விவகாரம் மற்றும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. …

சபரிமலையில் இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து, கேரளாவின் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில், நேற்று காலை இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கு அனுமதி வழங்கியதற்காக, முதல்வர் பினராய் விஜயன் பதவி விலகக் கோரி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம், கோழிக்கோடு, ஆலப்புழா, நெய்யாற்றின் கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சாலையில் அமர்ந்தும், ஊர்வலமாக சென்றும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி …

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என ஆளுநர் பன்வாரிலால் சட்டப்பேரவை உரையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூடியதும், ஆளுநர் பன்வாரிலால் உரையை தொடங்கினார். அப்போது உரையாற்றிய அவர், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார். …

இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை தனது இல்லத்துக்கு அழைத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் புத்தாண்டு விருந்து அளித்தார். ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையுடன் உள்ளது. சிட்னியில் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 3-ம் தேதி தொடங்க உள்ளது. …

கடந்த 1996-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம்‘இந்தியன்’. லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருத்தியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தா கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. …

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசத் தொடங்கினார்.ஆனால் அவருக்கு மைக் ஆன் செய்யப்படாமல் , அவரது கோரிக்கையை பிறகு கூறி விவாதிக்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியுள்ளதாக வந்த தகவலை அடுத்துக் கோவில் நடை சாத்தப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிலிருந்து 50வயதுக்குட்பட்ட பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்தும் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. …

பாகிஸ்தானில் பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்களும் விமானத்தை ஓட்டுவதாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் …

காவல் துறைக்கு பயந்து கிணற்றில் பதுங்கிய திருடனை கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினருடன் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் சந்திரசேகரபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகம்படும்படி சுற்றி திரிந்த நபரை அழைத்து விசாரிக்க முயன்ற பொழுது அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். …

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. …

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக -விற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தனது அடித்தளத்தை வலுவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். …

புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் மற்றும் எழுத்தாளர் காதர் கான் உடல்நில குறைவால் தனது 81 வயதில் காலமானார். அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் காதர் கான். …

குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 முதல் கூட்டப்பட்டது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. …

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். …

கோவை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி விவசாயிகள் சின்ன வெங்காயத்தை ஒரு கிலோ ஒரு ரூபாய் எனவும் ஒரு கிலோ வாங்கினால், ஒரு கிலோ இலவசம் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விற்பனை செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். …

தனது சொத்துக்களை விற்று மகளுக்காக சொந்தமாக கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி கொடுத்த தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார் அவரின் மகள். …

சட்டவிதிகளுக்கு உட்பட்டு துணைவேந்தராக அவர் தேர்வு செய்யப்படவில்லை என வழக்கு தொடரப்பட்ட நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றிய செல்லத்துரையின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. …

மாநிலங்களவை இன்று காலை கூடியதும், மேகதாது அணை விவகாரத்தை முன் வைத்து தமிழக ஆளும் கட்சியும், எதிர்கட்சியுமான அதிமுக மற்றும் திமுகவின் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியதும், தொடர் அமளி நீடித்தது. …

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க, சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. நாளை 2019ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், இன்று இரவிலிருந்தே சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் …

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு பயிலும் மாணவி மகாலட்சுமி என்பவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். ஆலங்காயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், சிறப்பு வகுப்புக்காக வந்துள்ளனர்.தில் மகாலட்சுமி என்ற மாணவி, பள்ளியின் மேல்தளத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். …

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று கடும் வெள்ளப் பெருக்குடன் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. முக்கியமாக, நிலச்சரிவின் காரணமாக பிகால் பகுதி மற்றும் கிழக்கு விசாயஸ் ஆகிய பகுதிகளில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. …

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது இதனால் உடனடி முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. …

எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கான முயற்சியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தொடர்ந்து மூன்று காலாண்டுகளிலும் தலா ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்துவருவதாகவும் அதனால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது . …

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டிருப்பதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவரது உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்று மூடப்படும் என தமிழ்நாடு, பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. …

வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நவம்பர் மாதம் 17ஆம் தேடி தொடங்கிய எல்லோ வெஸ்ட்('Yellow vest') போராட்டம் தற்போது தைவான் நாட்டைச் சென்றடைந்துள்ளது. தைவானில் வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். …

சென்னை கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையைக் கடத்தியவரைத் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர். தெருவோரம் வசித்து வந்த தம்பதியின் 4 வயது மகளை நேற்று காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை பெண் ஒருவர் கையைப்பிடித்து அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. …

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரியுடன் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. …

புத்தாண்டு நெருங்குவதையொட்டி, சென்னை நகர் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு. இரவு முழுவதும் ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. …

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர், தான் நேசிக்கும் பெண்ணிற்காக ஆணாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அர்சனா ராஜ். இவருக்கு, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவருடன் அடிக்கடிஏற்பட்ட சண்டையின் காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். …

தெலங்கானா மாநிலத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் தீபிகா. இவர், பி.டெக் முதலாம் ஆண்டு மாணவி , தேர்வு இருப்பதால் தனக்கு பெற்றோர்கள் உறவினர் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தீபிகாவை அழைத்தபோது நிகழ்ச்சிக்கு வரவில்லை எனக்கூறிவிட்டு வீட்டிலேயே இருந்தார். …

10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கங்காயான்(Gangayaan) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 வல்லரசு நாடுகள் மட்டுமே இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அந்தப்பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது. …

2019 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டாயம் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். …

பரபரப்பான அரசியல் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். அவர் வருகையை அறிந்த நிருபர்கள் பீளமேடு விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது அவரின் வருகை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு தனது சொந்த விஷயமாக தான் கோவை வந்துள்ளதாக பதில் அளித்துவிட்டு உடனடியாக காரில் ஏறி சென்றுவிட்டார். …

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் (30 வயது) ஒருவர், சவாரி முடித்து மீதாப்பூர் பாலம் வழியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது, பாலத்தில் தொங்கியபடி தாய் மற்றும் குழந்தை உயிருக்கு போராடியதை பார்த்து, அவர்களுக்கு உதவ அருகில் விரைந்துள்ளார். எனினும் கை நழுவி, அந்த பெண் மற்றும் …

ரஷ்யாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சிறுவனின் ஆசையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவன் ஒருவன் கடுமையான நோய் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அந்த சிறுவனுக்கு ரஷிய அதிபர் புடினுடன் கைக்குலுக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை இருந்து வந்துள்ளது. …

மும்பை சேம்பூரில் உள்ள திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் நேற்று மாலை திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது, இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்க பட்டது. …

வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோர் வசதிக்காக ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து 14காம் தேதி வரை,நான்கு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார். இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்படும் என்றார். …

தாய்லாந்து நாட்டில் 6 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கு நடைபெற்ற வினோத திருமணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை செத்தேஸ்வர் புஜாரா முறியடித்துள்ளார். …

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி டிபிஐ வளாகத்தில் திங்கட்கிழமை தொடங்கி 4வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 4வது நாளாக நீடிக்கும் நிலையில், அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். …

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் கவனக்குறைவால் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியாது. இந்நிலையில் HIV ரத்தம் தானம் செய்த அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுக்கான நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. …

வரும் 2019, ஜூலை மாதம் முதல் உணவுக்காக கடல் திமிங்கலங்கள் பிடிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. …

உத்தரப்பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை பாஜக பிரமுகர் துன்புறுத்தி விரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது. பாஜக பிரமுகர் முகமது மியா, சாலையில் நடந்து சென்ற ஒரு மாற்றுத்திறனாளியிடம், பேசிக் கொண்டிருந்த போது அவர் சமாஜவாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்குத்தான் தமது ஓட்டு என கூறினார். …

மாணவர் சேர்க்கைக்கு ஆதார் என்னை கேட்க கூடாது என பள்ளிகளுக்கு ஆதார் எண் வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் வலியுறுத்தி உள்ளது. …

மகாராஷ்டிராவில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது ஜீப் மோதியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 94வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டிச் சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் திரு நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ஆகியோரும் இருந்தனர். …

ரஷ்யாவில், அச்சின்ஸ்க் ((Achinsk)) என்ற இடத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை சீண்டிய பெண்ணின் கையை பழுப்புக் கரடி கடித்து துண்டித்தது. …

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையை எதிர்த்து பொதுத்துறை வங்கிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர், அதனால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. …

மருத்துவர்களின் அலட்சியத்தால், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். …

தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள குட்கா ஊழல் வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. …

பாகிஸ்தானை தாண்டிச் சென்று ஈரானுடனான தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த ஈரானின் சாபஹர் துறைமுகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து, தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். …

அந்தமான் - நிக்கோபர் கடல் பகுதியில் ராஸ், நீல் மற்றும் ஹேவ்லாக் ஆகிய 3 தீவுகளின் பெயரையம் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதற்கான நடைமுறைகளை பெரும்பாலும் மத்திய அரசு முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. …

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநில கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இதில் மாணவர்களுக்கான தோ்வு நுழைவு சீட்டை (ஹால்டிக்கெட்) ஒவொரு வருடமும் கல்வி வாரியம் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து வந்தது. …

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சரியாக செயல்படவில்லை என்றால், அதற்கு கட்சியின் தலைவரே காரணம் என பாஜக தலைவர் அமித் ஷாவை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறைமுகமாக விமர்சித்துள்ளார். …

அஜித் நடித்து சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. …

தனது கட்சி நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்டதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசிய அவர், ''கொலைகாரர்களை இரக்கமின்றி கொல்லுங்கள்; அதனால் பிரச்னை வராது'' என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இந்த பேச்சு கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது …

டிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளில் இரட்டை அர்த்த வசன பாடல்களுக்கு ஆட்டம் போடும் பள்ளி மாணவிகளின் வீடியோக்களை ஆபாச இணைதளங்கள் பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் அதனை தவிர்க்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர் …

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஏழு வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு. மூன்று முறை பிரதம மந்திரியாக இருந்த நவாஸ் செரீப்பால் சவுதி அரேபியாவில் அவருக்கு சொந்தமாக இயங்கி வரும் உருக்கு ஆலையை வாங்கியதற்கான வருமான ஆதாரத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து பாகிஸ்தானில் இயங்கி வரும் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் நவாஸ் ஷெரீபிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு …

நாட்டிலுள்ள அனைத்து கணிணி தகவல்களையும் ஐபி எனப்படும் மத்திய உளவு துறை, போதை பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், அமலாக்கத்துறை இயக்குனரகம், சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, வருவாய் நுண்ணரிவு பிரிவு உட்பட பத்து மத்திய அமைப்புகள் இடைமறித்து பார்க்கவும் பகுப்பாய்வு செய்யவும் மத்திய உள்துறை அண்மையில் உத்தரவு வழங்கி இருந்தது. இது தொடர்பான கெசட் அறிவிப்பு கடந்த வெள்ளி அன்று வெளியாகி இருந்தது. …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரை சேர்ந்த 15 பேர் நேற்று முன் தினம் இரவு ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 4.45 அளவில் வேன் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வந்துக் கொண்டிருந்த்து போது சாலையில் சாரல் மழை தூறிக்கொண்டிருந்த்து. …

கடந்த ஆண்டைவிட, நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 18 மாதங்களில் மாநிலங்களின் வருவாய் இழப்பு பெருமளவு குறைந்திருக்கிறது. இலக்கை எட்டாத மாநிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடு, முதல் ஆண்டைவிட இரண்டாவது ஆண்டில் குறைந்துள்ளது. …

அணு ஆயுதங்களை தாங்கி 4000 கிலோமீட்டர் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய அக்னி-4 ஏவுகனை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இருபது மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட அக்னி-4 ஏவுகனை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். ஏற்கனவே அக்னி-4 ஏவுகனை கடந்த ஜனவரி 2ம் தேதி பரிசோதனை செய்துப் பார்க்கப்பட்டது. அந்த வகையில் நேற்று இந்த ஏவுகணை 7ஆவது முறையாக பரிசோதனை செய்துப்பார்க்கப்பட்டது. …

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்கள், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த இளம்பெண்களை இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தி மறியல் செய்ததாலும் போலீசார் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முன்வராததாலும் அவர்கள் திரும்பி சென்றனர். …

பள்ளிகளில் அரை ஆண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்தும் தங்கள் குடும்பத்துடன், நண்பர்களுடனும் படையெடுத்து வந்த பயணிகள், அருவிகளில் குளித்து மகிழ்ததுடன், குடும்பத்துடன் பரிசல் சவாரியும் செய்து உற்சாகமாக பொழுதைக் கழித்தனர். …

இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் 15-ஆவது வீரராக ஆர்ச்சி ஷில்லர் என்கின்ற 7 வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ள சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது. சுழற்பந்து வீச்சாளரானஆர்ச்சி ஷில்லர் (Archie Schiller) என்ற சிறுவன் அடிலெய்ட் டெஸ்ட்டிற்கு முன்னதாக இந்தியாவுடன் நடந்த பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்றுள்ளார். அப்போதே 3-ஆவது டெஸ்ட்டில் Archie Schiller 15-ஆவது வீரராக சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. …

கடந்த சனிகிழமை இந்தோனெசியாவின் சும்த்ரா மற்றும் ஜாவா தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கின. அனாக் கிரக்கடாவ் என்ற எரிமலை வெடிப்பும் அதை தொடர்ந்து கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவும் இந்த சுனாமி பேரலைகள் ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடைப்பட்ட சுந்தா ஜலசந்தியில் உள்ள எரிமலை கடந்த பல மாதங்களாக எரிமலை குழம்ம்புகளையும் சாம்பலையும் உமிழ்ந்து கொண்டே இருந்துள்ளது. …

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. …

100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 31ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் …

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நிர்வாகிகளுடன் அலுவலகத்திற்கு சென்று பூட்டை அகற்ற முயன்றார். அப்போது போலீசாருடன் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஷாலை, கைது செய்து காவலில் அடைக்கப்பட்டார், பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார் . …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. …

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 39வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. அந்த பட்டமளிப்பு விழாவில் பொறியியல் ஆராய்ச்சி(PhD) மாணவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

நடிகர் தனுஷ் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் மாரி 2 , அதை திரைப்படம் வெளிவந்த அதே நாளில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. …

நாட்டிலுள்ள அனைத்து கணிணி தகவல்களையும் இனி மத்திய அரசின் உளவு மற்றும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கும். மேலும் சந்தேகத்துக்கு உள்ளான தகவல்கள் அடங்கிய கணிணிகளை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழன் அன்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஐபி எனப்படும் மத்திய உளவு துறை, போதை பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், அமலாக்கத்துறை இயக்குனரகம், சிபிஐ, தேசிய …

பட்டாசு வெடிக்க உயர்நீதிமன்றம் பல்வேறு நேர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும், குறிப்பிட்ட ரசாயனங்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தக்கூடாது என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் காரணமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பட்டாசு தொழிலில் ஈடுப்பட்டுள்ள பல்லாயிர கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். …

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகள் இலங்கை தமிழர்களான நடேசன்-பிரியா தம்பதிகளின் வீட்டில் ஒரு அதிகாலை சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பிரியாவின் விசா காலாவதியானது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பிரியா அவரது கணவர் நடேசன் மற்றும் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வைத்து பிறந்த குழந்தைகளான கோபிகா மற்றும் தருனிகா ஆகியோர் அதிகாரிகளால் அவர்களது வீட்டிலிருந்து தடுப்பு காவலில் எடுக்கப்பட்டனர். …

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாசிரியருமான பீட்டர் மாஸ்டர்சன் தனது 84வது வயதில் காலமானார். கடந்த 14 வருடங்களாக பார்கின்சன்ஸ் என்னும் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வந்த பீட்டர் மாஸ்டர்சன் நியுயார்க்கில் உள்ள கிண்டர் ஹுக் பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த செவ்வாய் மாலை 6 மணியளவில் திடீரென நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். மருத்துவ முதலுதவி கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என அவரது மகள் …

டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் சரணடைய ஒரு மாதம் அவகாசம் அளிக்க விடுத்த கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களான சத்வாந்த சிங் மற்றும் பீண்ட் சிங்கால் சுட்டுக்கொல்லப் பட்டார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. …

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக தமிழகத்துக்கு ஜனவரி மாத இறுதியில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் நாடு முழுவதுக் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. …

தென் தமிழக கடலோர மாவட்டத்தில் இன்று மாலை முதல் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டத்தில் இன்று மாலை முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. …

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க சிசிடிவி காமிரா பொருத்துவது குறித்து, இரண்டு வாரரங்களுக்குள் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு, சென்னை அபிராமபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில், கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளர் தலைமையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்த அதிகாரிகள், கீதா என்ற ஊழியரை பணியிடை நீக்கம் செய்தனர். …

ராமநாதபுரம் அருகே, ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் பணத்தை, ஊழியர்களே திருடி, பதுக்கிவிட்டு பணம் மாயமாகிவிட்டதாக நாடகமாடியது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கிகளுக்கு பணம் எடுத்துச் சென்று நிரப்பும் பணியில் ஈடுபடும் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் நான்கு பேர், சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். …

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான சரியான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு சில நாட்களுக்கு முன்பு விதித்த தடை உத்தரவை நிறுத்திவைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க கோரித் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. …

தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அண்மையில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது அனால் இதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான எந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டதாக அவர் கூறினார். எந்திரங்களில் கோளாறு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை …

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களின் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகிவிட்ட நிலையில் நேற்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம், தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. …

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை தகர்த்து, கால்பந்து விளையாட்டில் அதிக முறை கோல்டன் ஷூ விருதிற்கான சொந்தக்காரராக மாறி புதிய சாதனையை படைத்துள்ளார் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி. அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகின் நிகழ்கால சாம்பியன் வீரராக வலம்வருகிறார். அந்த நாட்டின் தேசிய அணிக்காகவும், பார்ஸிலோனா கிளப் அணிக்காகவும் சிறப்பாக விளையாடி பல கோல்களை அடித்துள்ளார். …

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், தான் சரணடைய 30 நாள் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலர்கள் சத்வாந்த சிங் மற்றும் பீண்ட் சிங்கால் 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் விளைவாக சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. அதில் நூற்றுக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் …

தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியினர் போட்ட பூட்டு, பதிவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது அவரது எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர், இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. …

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்த ஆளும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ, தனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் அரசுப்பேருந்தில் ஏறிச்சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் தெந்தலூரு தொகுதியின் எம்.எல்.ஏவும், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவருமான சிந்தாமனேனி பிரபாகர், காரில் தனது குடும்பத்தினருடன் விஜயவாடா நோக்கி நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தார். …

மும்பையில் 2008ஆம் ஆண்டு நடந்த 26/11 தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரை ஐ.நா., மற்றும் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகிறார். ஹபீஸ் சயீத் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரை …

அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்னரே வெளியானதால் கடந்த 3 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆர்.எம்.கே. மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

ஆளுநரோ, முதல்வரோ, அமைச்சரோ இடும் வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக்கூடாது என, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக அபராதம் விதிக்க ஆளுநர் கிரண்பேடி வாய்மொழி உத்தரவிட்டதை அடுத்து, உத்தரவுப்படி உடனடியாக அபராதம் விதிப்பதில் மட்டுமே போலீஸார் கவனம் செலுத்துவதால் போக்குவரத்து சீரமைப்பு உள்பட இதர பணிகளில் ஈடுபடுவதில்லை என்ற புகார்கள் எழுந்தன, இதையடுத்து காவல் துறை உயரதிகாரிகளுடன் …

தமிழகம் முழுவதும் பொது இடங்களில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் விதிகளை மீறி சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர் வைப்பதை தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஏற்கெனவே பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, கருணாநிதி சிலை திறப்பு விழா, நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் …

கடந்த 45 ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த சென்னை ராயபுரம் ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன் காலமானார் அவருக்கு வயது 71. சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர் கடந்த 45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். …

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், மதுரை மாவட்டம் தோப்பூரில் 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்து, நிதி ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். …

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு பெற்றதில் நடந்த விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு பெருந்தொகை லஞ்சமாக வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாய்நாட்டிற்கு திரும்பியா இந்தியர். சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான தோழியை பார்க்க கடந்த 2012ம் ஆண்டு உரிய ஆவணம் இல்லாமல் பாகிஸ்தான் சென்றுள்ளார், மும்பையை சேர்ந்த ஹமீது அன்சாரி. …

டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து ரயில் பயணிகளிடம் பணம் பறித்து வந்த 68 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். மும்பை தகிசரை சேர்ந்தவர் ஹரேஷ். இவர் சம்பவத்தன்று அந்தேரிக்கு மின்சார ரெயிலில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர், அவரை மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணம் செய்ததாக கூறி, அபராதம் செலுத்தும் படி கூறினார். …

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கியது. …

ரிமா தாஸ் இயக்கத்தில் வெளியான அசாம் திரைப்படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், .2019 ஆண்டிற்கான இந்தியாவின் பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது. …

கேரளா மாநிலம் சபரிமலையில் இருமுடி கட்டிவந்த திருநங்கைகளுக்கு தலைமை தந்திரி அனுமதியளித்தை அடுத்து அவர்கள் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் சேலை அணிந்து சென்று தரிசனம் செய்தனர். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்துள்ளது. ஆனாலும் பக்தர்கள் போராட்டம் …

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், ஆணும் பெண்ணும் செல்போனில் பேசிக்கொள்வது மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்வது இயல்பான விஷயம். ஆனால், அதுவே அபுதாபியை சேர்ந்த இளைஞர் ஒருவரருக்கு வினையாக முடிந்திருக்கிறது. அபுதாபியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தினமும் வாட்ஸ் அப்பில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் அந்த பெண்ணை விளையாட்டாக ‘முட்டாள்’ (அராபியில் - ஹப்லா) என கூறியுள்ளார். …

ஜெயலலிதா 100 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மோடி அவரை வந்து பார்க்கவில்லை. வெளிநாட்டிற்கு சிகிட்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். நாகர்கோவிலில் இருந்து காஷ்மீருக்கு நடைபெறும் இளைஞர் காங்கிரஸ் ரதயாத்திரை தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, முன்னாள் திமுக தலைவரான …

கூகுள் மேப்ஸ் வழங்கிய புதிய அப்டேட் மூலம் இனி ரூட் மேப் மட்டுமல்லாமல் ஆட்டோவில் செல்லும் போது ஆகும் பயணக் கட்டணம், ஆகியவற்றைக் காண முடியும். தற்போதைக்கு இந்த அப்டேட் டெல்லி மக்கள் மட்டுமே பெற முடியும். …

சென்னை விமான நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து திடீரென பீப் சத்தம் எழுந்ததால், அப்பகுதியில் இருந்த மக்கள் அது வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதியில் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில், பயணிகள் வருகை பகுதிக்கு எதிரே, கார்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களாக ஒரு சொகுசு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் உரிமையாளர், காரை நிறுத்திவிட்டு, விமானம் …

தஞ்சை ரயில் நிலையம் முன்பு இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் சிலையை அமைத்தது யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இரவோடு இரவாக திடீரென அந்த சிலையை அங்கு அமைத்தது யார் என்ற குழப்பம் அ.தி.மு.க.வினர் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. …

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி அருகே சென்று கொண்டிருந்த மினி லாரியின் டயர் வெடித்தது. …

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், அதற்காக காங்கிரஸ் கட்சியுடனோ, மம்தா பானர்ஜியுடனோ கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். …

மாற்றுத்திறனாளிகளை மட்டும் பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது, ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள "தி டெய்லி கிரைண்டஸ்" என்ற உணவகம் …

ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளது. …

ஆன்லைன் மருந்து விற்பணிக்கான சரியான விதிமுறைகளை வகுக்கும் வரை, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்கு பின், கஜா புயல் காரணமாக கடந்த மாதம் கனமழை பெய்தது. இம்மாத தொடக்கத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி பொழிவு அதிகம் இருந்து வருகிறது. பனி காரணமாக அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் காய்கறி தோட்டம், தேயிலை தோட்டகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த முறை வழக்கத்தை விட …

இந்தியாவில் ரப்பர் தொடர் விலை சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த ஏழு மாதத்தில் 3.15 லட்சம் டன்னாக ரப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ்.4 கிரேடு ரப்பர் கிலோ ரூபாய் 176.82 என்று சராசரி விலை இருந்து வந்தது. தற்போது விவசாயிகளுக்கு 121 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. கோட்டயம் மார்க்கெட்டில் ஆர்எஸ்எஸ் 4 கிரேடு கிலோ 123.50 ரூபாயாகவும், கொச்சியில் கிலோ 123 …

இன்று பிற்பகலில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் ஆந்திராவில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்கிநாடா மார்க்கத்தில் செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் உள்ள 350 கிராமங்களுக்கும், ஒடிசாவிற்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

தமிழகத்தில் மட்டும் 2018-19-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 757.34 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து ஒரு ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டு நடைமுறையில் இருக்கிறது. ஆனாலும், ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தாமல் போலி பில்களை காட்டி வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். ஜிஎஸ்டி …

2018-ஆம் ஆண்டுக்கான 67-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி, தாய்லாந்தில் உள்ள நான்தாபுரி மாநிலத்தில் உள்ள முவாங்தாங் எனும் நகரில் நடைபெற்றது.. 94 நாடுகளைச் சேர்ந்த 92 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். கடந்த 1992, 2005-ம் ஆண்டுக்குப் பின் தாய்லாந்து 13 ஆண்டுகளுக்குப்பின் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியை நடத்தியது. …

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக்கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர் தமிழக அரசு இலங்கையிடம் மன்றாடி அவர்களை விடுதலை செய்வதும் வாடிக்கையாக நிகழும் நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவு முதல் மீன்பிடித்து வந்துள்ளனர். …

துபாயில் வசித்துவரும் 13 வயது இந்திய வம்சாவளி, சிறுவன் ஒருவன் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல்,ட்ரை நெட் சொலுஷன்ஸ என்ற சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. …

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. …

கடந்த மாதம் இந்திய சந்தையில் ஜாவா பிரான்ட் பைக்குகள் ரீ-என்ட்ரி கொடுத்தது. மூன்று புதிய பைக்குகளை முதற்கட்டமாக அறிமுகம் செய்திருக்கும் ஜாவா அவற்றிக்கான முன்பதிவுகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது. புதிய ஜாவா பைக்குகளின் விநியோகம் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில், ஜாவா பைக்குகளின் இரண்டு விற்பனை மையங்களை பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுக்க 105 விற்பனை …

ரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்ரேஷன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பலில் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. …

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தவறான தகவல் கொடுத்திருப்பதாக நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் ட்மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாடியுள்ளார். …

கேரள மாநிலம் சபரி மலைக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16- ஆம் தேதி திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால் கோவில் நடை திறந்தபோது பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. வெளியூர் மற்றும் …

மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் சோனியா காந்தி கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். …

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. …

ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. ஆலையை திறக்க அனுமதிக்க …

திரைப்படங்கள் மற்றும் பிரபலமான தொலைக்காட்சி சீரிஸின் ரேட்டிங்கை வெளியிட்டுவரும் பிரபல இணையதளமான ஐ.எம்.டி.பி (இந்தியன் மூவி டேட்டாபேஸ்) 2018ம் ஆண்டிற்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சில தமிழ்படங்களும் இடம்பெற்றிருப்பது தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே போலீசார் செயல்பட்டு வருகின்றனர் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலையில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் கவர்னர் அதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. …

பெங்களூர், அல்சூரில் தனியாருக்கு சொந்தமான எலெக்ட்ரீக்கல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தென்கொரியா நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரீக்கல் உபகரணங்களை வாங்கி விற்பனை செய்து வந்தது. …

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ்சில், போதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். …

மும்பையில் உயர்தர ஓட்டல்கள் உட்பட பெரும்பாலான ஓட்டல்கள், சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து அவர்கள் மும்பையில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். …

அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்துள்ளனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அருவில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 3 மாதங்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். …

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. நவம்பர் மாத இறுதி நாட்களில் பனிக்காலம் தொடங்கும். கடந்த கோடை சீசனையொட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். …

இந்தியாவின் 2000, 500 மற்றும் ரூ.200 நோட்டுக்களை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுக்கள் வெகுநாட்களாக நேபாளத்தில் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும், கையில் வைத்திருக்கவும் வேண்டாம் என்று நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. …

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து உறுப்பினர் பதிவேட்டில் செந்தில் பாலாஜி கையெழுத்து இட்டார். …

வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் ராகுல்காந்தி தான் வெற்றி பெறுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பாஜகவிற்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. …

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதையடுத்து, அந்த வழக்கை சிறப்புப் புவனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். …

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு அரசியல் சட்டத்திற்கு விரோதமனது என்றும், எனவே அந்த உத்தரவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கேவுடனான மோதலை அடுத்து, அவரை பதவில் இருந்து நீக்கி, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா. …

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,900 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் கூடுதலாக மேலும் 350 கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களை தமிழக அரசு சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்.பி.பி.எஸ் இடங்கள் 3,250ஆக அதிகரிக்கும். …

கோவை மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கின்ற வகையில் கடந்த 2003-ஆம் ஆண்டில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் தொடங்கிய முகாம் தொடர்ந்து அங்கேயே 4 ஆண்டுகள் நடைபெற்றது. அதன்பின் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே …

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக விரைவில் அவரது உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னாள் பிரதமரும் பா.ஜ.கவின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து அவரை கவுரவப்படுத்தும் வகையில் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்புறவுக்கு அடையாளமாக, கானா தலைநகர் அக்ராவில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. கானா அரசு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சிலையை, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன் கானா பயணம் செய்த போது, அக்ரா நகரில் உள்ள கானா பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்திய சிலையை திறந்து வைத்தார். உலக அமைதி சின்னமாக இது திறந்து வைக்கப்பட்டது. கருப்பின …

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 2019ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ள 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளையும், 20 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இந்த சாதனையை படைத்தது 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படத்தின் டிரைலர் தான், வெளியாகி 24 மணி நேரத்தில்,2 கோடியே 30 லட்சம் …

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் முக்கிய மாவட்டங்களான கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 50-க்கும் மேலானவர்கள் சமீபத்தில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களில் 5 பேரை துருக்கி போலீசார் கைது …

கேரளா மாநிலம் சபரிமலையில் 144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 3-ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கடந்த இரு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். …

கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்த மருத்துவக்கழிவுகள் அகற்றம் தொடர்பாக அறிக்கை தர நெல்லை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க துணைத்தலைவர் சிதம்பரம் ஐகோர்ட் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், நெல்லை மாவட்டம் புளியங்குடி, சொக்கம்பட்டி கிராமங்களில் கொட்டி வருகின்றனர். மருத்துவக்கழிவுகளை இப்பகுதியில் கொட்டுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது. …

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக குறைந்த கட்டணத்தில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. சில்லறை விலையை விட குறைந்த விலையில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் , ஆவின் மாதாந்திர பால் அட்டை விநியோகத்தில் இம்மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி மாதம் தோறும் 16-ஆம் தேதிக்கு பிறகு மாதாந்திர பால் அட்டை வாங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. …

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கூகுள் மேப் உதவியுடன் பணக்காரர்களின் வீடுகளை தேடிக் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் இருவரை சென்னை போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே போல் தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளிலும் வசதியானவர்களின் வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. …

வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியின் நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி,மற்றும் அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் 13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. …

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களும், அக்டோபர் மாதம் தொடக்கத்திலும் பருவமழை பெய்யும். 6 மாதம் மழை கொட்டி தீர்த்தவுடன், அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனி விழத் தொடங்கும். தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் உறைப்பனி தொடங்கும். ஆனால், இம்முறை தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி, கடந்த மாதம் வரை பெய்ததால், உறைப்பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது. …

கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த மாதத்தில் மூன்று முறை மலப்புரம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் வன கிராமங்களுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வைகடவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அலக்கல் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று மாவோயிஸ்ட்கள் சீருடையுடன் அணிந்து துப்பாக்கியுடன் சென்று மக்களை சந்தித்து சுமார் ஒருமணிநேரம் பேசிவிட்டு …

மதுரை மாவட்டத்திற்கு மிக அருகில் உள்ள கிராமம் பொதும்பு கிராமம். 1941-ஆம் ஆண்டு பொதும்பு கிராமத்தில் அம்மை, காலரா போன்ற பல்வேறு நோய்கள் பரவி வந்துள்ளன. அந்த நோயை கட்டுப்படுத்த அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு எருதுக்கட்டு விழா கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா நடத்தப்பட்ட பின்பு அந்த கிராமத்தில் எந்த வித நோய்களும் வரவில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள். …

நாட்டின் வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர், உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதனால் மரங்கள் மீதும், வீடுகள், கட்டிடங்களின் கூரைகளின் மீதும் பனி உறைந்துள்ளது. மலைமுடிகளில் பனி உறைந்துள்ளதால் அவை வெள்ளித்தகட்டால் மூடியதுபோல் காணப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பல இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. பிர் பிஞ்சால் பகுதியில் நேற்று முன் …

கஜா புயல் பாதிப்புக்களை சீர் செய்ய தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 136 கோடி ரூபாய் நிதியுதவி பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19-ஆம் தேதி கஜா புயல் பாதிப்புக்களை சீர் செய்ய பொதுமக்களும் உதவுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். …

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று பெங்களூரு சிறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் மற்றும் சசிகலா பங்குதாரராக உள்ள அணைத்து நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். …

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுக்கு பின் உருளைக்கிழங்கு அறுவடையில் உழவு மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. டீசல் விலை உயர்வால் அதிகமாகும் டிராக்டர் வாடகை காரணமாக நவீன இயந்திரங்களை விவசாயிகள் தற்போது தவிர்க்க தொடங்கி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி காய்கறி தோட்டங்களில் உழவு செய்வதற்காகவே உழவு மாடுகள் வளர்க்கப்பட்டன. விவசாயிகள் அவர்களது தோட்டங்களில் உழவு பணிகளை மேற்கொள்ள மாடுகளை பயன்படுத்தினர். …

ஏலகிரி மலையில் உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா சாகுபடி உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா என்று டிரோன் கேமரா மூலம் வேலூர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு 3 டிஎஸ்பிக்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் பி.கீதா, ஜூலியர் சீசர், மார்டின் ராபர்ட் ஆகியோர் தலைமையில் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர், நிலாவூர், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் …

மிசோரம் மாநில முதல்வராக சோரம் தங்கா நாளை மறுநாள் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்தும் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்ட சந்திரசேகர் ராவ் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் …

சமீபத்தில் வெளியான மஹா’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் காட்சியில் நடிகை ஹன்சிகா காவி உடை அணிந்து புகைப்பிடித்தபடி இருக்கிறார். பின்னணியில் காசி கோயில் காட்டப்படுகிறது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சர்கார்' பட ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட்டுடன் போஸ் கொடுத்ததற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க,தான் ஹன்சிகா விவகாரத்திலும் முதலில் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க சமூக நீதி பேரவை மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் …

இந்தியா, மதத்தின் அடிப்படையில் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போதுதான் இப்படியான கருத்தினை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டுக்கான (2019) நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய அளவில் ஒட்டு மொத்த எம்.பி.க்களின் வருகை பதிவேடு 80 சதவீதமாக உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 63.6 சதவீதமாக உள்ளது. …

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து பெரும் போராட்டங்கள் கேரளாவில் வெடித்தது. தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை 4 கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது 3-ஆம் கட்டமாக டிசம்பர் 14 முதல் 29-ம் தேதி வரை 4026 போலீசார் பாதுகாப்பு …

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பகுதியில் இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஊட்டி மற்றும் குந்தா வட்டாரங்களில் மட்டும் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. …

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியில் நாளுக்குநாள் யானைகள் முகாமிடுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், 100க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனத்துக்கு விரட்டப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் ஒற்றை யானை உள்பட 7 யானைகள் போடூர் பகுதியில் முகாமிட்டிருந்தன. இந்நிலையில், தற்போது ஓசூர் வனப்பகுதிக்கு 25-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. நேற்று சினிகிரிப்பள்ளி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வந்த இந்த யானைகள் சான …

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவானது இப்பருவகாலத்தில் ஏற்பட்ட முதல் கடுமையான பனிப்பொழிவு என பதிவு செய்யப்பட்டுள்ளது. முகல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பனிப்பொழிவால் சாலைகளும் நேற்று மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. …

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் கூச்சல் குழப்பத்திற்கிடையே சில உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பினராயி விஜயனிடம் ,அப்போது பேசிய சுயேட்ச்சை உறுப்பினர் பி.சி.ஜார்ஜ், முல்லை பெரியாறு அணைக்கு அருகில் உள்ள பேபி அணையும் உடையும் தருவாயில் உள்ளது என புகார் தெரிவித்தார். …

கொச்சி முசிறிஸ் பினாலே என்னும் சர்வதேச கலைச் சங்கமமானது கொச்சியில் 12-12-2018 (புதன்கிழமை) தொடங்கி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த கவின் கலைஞர்களின் படைப்புகள் இங்கு காட்சியப்படுத்தப்படுகின்றன. …

நகர்புறங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முந்தைய காலங்களில் தொழிற்சாலைகளால் மட்டுமே காற்று மாசு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது இருசக்கர வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில் , பராமரிப்பில்லாத, காலாவதியான வாகனங்களை இயக்குவது நிறைய மாசு உருவாகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகை, சாலையில் மண் இல்லாதவாறு பராமரிக்கத் தவறுவது உள்ளிட்ட பல காரணங்களால் நகர்புறங்களில் புழுதியும், காற்று மாசும் மிகுந்து காணப்படுகிறது. …

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பெண்களுக்கு உதவுவதற்காக 181 ஹெல்ப் லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார். பாலியல் சீண்டல், மன அழுத்தம், குடும்ப பிரச்சனை, போலீஸ் மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதற்காக பெண்களுக்காக பிரத்யேக உதவி மையமாக இது செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த உதவி மையத்திற்கு போன் செய்தால் அவர்களது புகார் மற்றும் தேவையின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் …

பெரும்பாலானவர்கள் தங்களது ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் டைரியில் எழுதி வைக்கின்றனர். தங்கள் தொழில், பயண விபரம், வரவு செலவு, வருடாந்திர முக்கிய நிகழ்வு நாட்கள் உள்ளிட்டவைகளை முன்னதாக குறித்து வைத்து திட்டமிடவும் பலருக்கு டைரி உதவுகிறது. இவர்களுக்காக ஆண்டுதோறும் புதிய டைரிகளும் பலவிதங்களிலும் பல விலைகளிலும் தயாரிக்கப்படுகின்றன. டைரிகளில் உள்ள தகவல்கள், பக்கங்கள் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப விலைகள் மாறுபடுகின்றன. …

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது. கஜா புயல் பாதிப்புகள் குறித்து இறுதி அறிக்கை தயாரிப்பதற்கு முன்னதாக கேட்ட சில சந்தேகங்களுக்கு தமிழக அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி …

வீட்டில் கழிவறை கட்டித்தருவதாக கூறி ஏமாற்றிய தந்தை மீது காவல்நிலையத்தில் ஆம்பூரை சேர்ந்த 7 வயது சிறுமி புகார் அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடராஜபுரம் பகுதியைச் சேரந்த் எஹசானுமல்லா, மெஹ்ரீனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வீட்டில் கழிவறை இல்லாத நிலையில், விரைவில் கழிவறை கட்டித்தருவதாக எஹசானுமல்லா தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. …

உலகின் மிகச் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் ஊழலற்ற நாடு என்ற பெயரை தக்க வைத்துகொள்வதற்காக லஞ்ச புகார்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கிறது. ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு 2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள உலகின் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் ஆறாவது இடத்தை வகிக்கிறது. …

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் உள்ள வன விலங்குள் சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் புயல் காற்றில் வேரோடு சாய்ந்தன. …

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மேகதாது ஆய்வறிக்கைக்கு தடைவிதிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. …

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க மேலும் 2 இடங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. …

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜிநாமா செய்த நிலையில், ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இருந்த சக்திகாந்த தாஸ், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக இருந்த இவர், மூன்று வருடங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். …

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெற்கு சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட சைன்போரா பகுதியில் உள்ள காவல் சாவடியில் இன்று 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் காவல் சாவடிக்குள் இருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இந்த எதிர்பாராத இந்த தாக்குதலில் அப்துல் மஜித், மன்சூர் அஹமத், முஹம்மது அமின் ஆகிய 3 காவலர்கள் …

நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராக உள்ள ராஜஸ்தானிலும், மூன்றாவது முறையாக பாஜகவின் ரமன் சிங் முதல்வராக உள்ள சத்தீஸ்கரிலும், மூன்று முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்த மற்றொரு பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் பாஜக தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. …

ஞாயிறன்று காலை விவசாய நிலங்களைப் பார்வையிடுவதற்காக அரசு அதிகாரிகளுடன், சூடான் நாட்டின் மாகாண ஆளுநர் புறப்பட்டார். எத்தியோபியா எல்லை அருகே சென்று கொண்டிருந்த பொது கடாரப் மாநில ஆளுநர் சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராவிதமாக தரையில் மோதி வெடித்துச் சிதறியது. …

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தமுள்ள 40 இடங்களில் தற்போது வரை ஆளும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 21 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த சக்மா, தைசாவ்ங் தொகுதியில் வென்று அம்மாநிலத்தின் முதல் …

ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என விவதாங்கள் எழுந்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது . ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜக-வை வீழ்த்த இரு பெரும் தலைகளை முன்னிறுத்தினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஆன அசோக் கெலாட் ஒரு புறமும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் மற்றொரு புறமும் காங்கிரஸின் …

பெயர்பெற்ற பொருளியல் வல்லுநரான சுர்ஜித் பல்லா பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து விலகியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு நிதி ஆயோக்கின் உறுப்பினரான விவேக் தேவ்ராயைத் தலைவராகக் கொண்டது. இந்தக் குழுவில் பொருளியல் வல்லுநர்களான சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், ஆசிமா கோயல், சமிகா ரவி ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்கள் பொறுப்பு வகித்து வந்தனர். …

இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. …

ஆர்.பி.ஐ கவர்னர் பதவியில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 72.60 ஆகச் சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திங்கட்கிழமை சந்தை நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 50 பைசா சரிந்து 71.32 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. உர்ஜித் படேல் நேற்று மாலை ராஜினாமாவை அறிவித்ததை அடுத்து இன்று ரூபாய் மதிப்பு 72.60 ரூபாயாகச் சரிந்துள்ளது. …

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில தேர்தலில் வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். கடந்த 7-ஆம் தேதி தெலங்கானா மாநில பொதுத்தேர்தலில் தனது பெயர் வாக்காளர் பெயர்ப் பட்டியலிலேயே இல்லை என பிரபல பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்திருந்தார். …

பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்துவரும் மஞ்சளாடைப் போராட்டத்தின் விளைவாக சட்டப்பூர்வ குறைந்தபட்சக் கூலியை உயர்த்தவும், வரிச்சலுகைகள் அளிக்கவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் ஒப்புக்கொண்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், வாழக்கைச் செலவுகள் அதிகரிப்பது உள்ளிட்ட பிற பிரச்சினைகளையும் முன்னிறுத்தியது. …

இந்தியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவராக பெயர் பெற்ற விஜய் மல்லையாவின் மொத்த கடன் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கிறது. கிங்ஃபிஷர் பீர் உற்பத்தி ஆலையை நடத்திவந்த மல்லையா, பிறகு கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தை தொடங்கினார். போர்ஸ் இந்தியா பார்முலா ஒன் அணியின் இணை நிறுவனராகவும் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை …

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகமாக நிலவி வந்தது, இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் வகித்து வரும் தற்போதைய ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக கூறியுள்ளார். …

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவியை உதகையில் கடத்திவைத்திருந்த பைனான்சியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவைச் சேர்ந்த மசூர் ஆலம் என்ற பைனான்சியரிடம், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார், அதில் 95 லட்சம் ரூபாயை திருப்பிக்கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. …

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். …

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு …

மத்தியப் பிரதேசத்தில் அனுமதி பெற்று, உத்தரப் பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள சோன் என்கிற தங்க ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இங்கு நேற்று இரவு திடீர் சோதனை நடத்திய தமிழரான மணிகண்டன் ஐஏஎஸ் அதிகாரி , 11 லாரிகளுடன் மணல் கொள்ளையரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார். உ.பி.யில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கொண்ட ஒரே மாவட்டமாகக் கருதப்படுவது சோன்பத்ரா. …

சென்னை விமான நிலையத்தில் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார், செய்தியாளர்களிடம் பேசும்போது , மேகதாது அணை இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். சேமிக்க வேண்டிய நீரை ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலுக்குச் செல்வதை தடுக்க மேகதாது அணை தேவை. மேகதாது அணை கட்டினால் அதில் 67 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா 177 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும். சரியான அளவு மழை இல்லாத …

2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல மராத்திய மொழி செய்தி நிறுவனமான லோக்மட், நாடாளுமன்றத்தில், சிறந்து பணியாற்றும் எம்.பிக்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவிக்கும். அந்த அடிப்படையில், 2018ம் ஆண்டிற்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி பெயரும் இடம்பெற்றுள்ளது. …

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில், இடைதேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது, மேலும் இது தொடர்பாக தேர்தல் கமிஷன் மற்றும் 18 எம்எல்ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் இது குறித்து ஜனவரி 4- ம் தேதி 18 எம்எல்ஏ.,க்கள், தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. …

சமீபத்திய ஐபிசிசி ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகள் முந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக கூறியது. இதனை அடிப்டையாகக் கொண்டு போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. …

தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் எப்படி சிக்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த வாரம், அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் சிறுவயது நீர்நாயின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்த வகை நீர்நாயை 40 வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையை கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து தான் …

உலக நாடுகளின் வரிசையில் காற்றின் ஆற்றலை பயன்படுத்துவதில் இந்தியா ஐந்தாவது இடத்தை இருக்கிறது. காற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் இதில் முன்னணியில் உள்ளது. 1000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலைகளின் செயலாக்கத்தின் மூலம் குமரிமாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வீசும் காற்றுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை தான். ஆனால் காற்றாலைகளின் விசிறிகளினால் சுற்றுப்புற வானிலை பாதிக்கப்படுவது கண்ணுக்குத் தெரியாது. …

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் டாட்டா நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்பட்ட காலகட்டத்தில் கேரள மாநிலம் கண்ணூர் நகருக்கு விமானங்கள் வந்து சென்றன. அதன் பின்னர் இந்த பகுதிக்கு நேரடியாக விமானச் சேவைகள் கிடைக்கும் வகையில் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு மத்திய அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, இங்குள்ள மாட்டானூர் பகுதியில் சுமார் …

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, கடந்த ஜூன் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். …

ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவன அதிபரின் மகள் கைது பின்னணியில் ரகசிய உளவு, வர்த்தக போர் உள்ளிட்டவை இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாயின் அதிபரின் மகளும் ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த 1-ஆம் தேதி கனடாவின் வான்குவார் நகரில் கைது செய்யப்பட்டார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் அங்கு அமெரிக்க …

1950-ஆண்டு வாக்கில் 68 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புடன் உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்த ஏரல் கடல், அதன் நீராதாரமாக விளங்கிய ஆறுகள் பாசனத்திற்கு திருப்பி விடப்பட்டதால், அதன் மொத்த அளவில் 10 சதவீதமாக சுருங்கிவிட்டது. உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரி, நான்கு சிறு ஏரிகளாக சுருங்கியது. உலகின் மிகமோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் ஏரல் கடலின் சிதைவு ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து,தற்போது கஜகஸ்தான் நாடு …

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. …

வரும், ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் …

தென்னிந்தியாவில் அதிக காற்று மாசு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தி லான்செட் (The Lancet) என்ற ஆங்கில பத்திரிகை, இது தொடர்பாக ஆய்வு ஓன்று நடத்தியது, ஆய்வில், தென்னிந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் காற்று மாசு கொண்ட மாநிலமாக கர்நாடகா விளங்கிவருவதாக தெரியவந்துள்ளது. …

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கியது தொடர்பாக, 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கடத்தல் தங்கம் கைமாற்றப்படுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. ஹோட்டலை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தபோதும், கடந்த 30-ஆம் தேதி தொழிலதிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். …

நாடு முழுமையாக தேங்கியுள்ள வழக்குகளை தீர்வு காணும் வகையில் இன்று மாநில அளவிலான லோக் அதலாத் நடைபெறகிறது. இதில் 2,50,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடவுள்ளது. நாடு முழுமையாக தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அளவில் லோக் அதலாத்தும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய அளவில் நாடு முழுதும் மொக லோக் அதலாத் நடத்தபடுகின்றது. …

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். …

கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய பின்பு அடிக்கடி மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது.அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. …

நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து ,தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கடலூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் சுமார் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு, ஸ்கேன் பிரிவு, மகப்பேறு மருத்துவ …

ஒபெக் நாடுகள் ,கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சவூதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது குறைத்து உறுப்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. விலையை உயர்த்தும் பொருட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் ஒருமனதாக …

தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் தகுதி உள்ள நபர்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கவும், 6 மாதங்களில் அதற்கான சிறப்பு வரன்முறை திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமாக வீடு வழங்கவும், ஆக்கிரமிப்புகளை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், கிராமங்களில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம் குறித்தும் அறிவிக்கப்பட்டது. …

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையாலும் வாகன நெரிசலைக் குறைக்கவும் ,மக்கள் அனைவருக்கும் பஸ், ரயில், ட்ராம் என அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளும் முற்றிலும் இலவசம் என லம்ஸம்பெர்க் நாடு அறிவித்துள்ளது. உலகின் முதல் நாடாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுப் போக்குவரத்து இலவசம் என லக்ஸம்பெர்க் அறிவித்துள்ளது. …

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசுபாட்டால், அந்த ஆலையை மூட தூத்துக்குடியில் நடந்த போராட்டங்களின் பின்னணியில் நக்சலைட் அமைப்பினர் இருந்ததாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கூறப்பட்டதற்கு தமிழக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக தாங்கள் ஒருபோதும் கூறவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. ஆலையை மூடும் அதிகாரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டுமே உண்டு என்றும் ஸ்டெர்லைட் தரப்பில் …

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த 1 வருடத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உதவியாளர், கார் ஓட்டுநர், அவரது அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவன் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, சசிகலாவின் குடும்பத்தினர் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் …

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த உணவகம் புறம்போக்கு இடத்தில் கட்டியிருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் முறையின்றி கட்டப்பட்ட அம்மா உணவகத்தை இடிக்க உத்தரவிட்டனர். …

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு மேலும் 3 ஆயிரத்து 48 கோடியே 39 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 14 மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தது. மேலும், 400க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தின் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். …

பேட்ட படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சிங்கார் சிங் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். …

உலகின் பல்வேறு நாடுகள் 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.சீனாவில் 5G சேவையை அறிமுகப்படுத்தும் வகையில் அதற்கான பரிசோதனை முயற்சியை China Telecom நிறுவனம் மேற்கொண்டது. தெற்கு சீனாவின் Shenzhen நகரம் உட்பட 6 நகரங்களில் முதற்கட்டமாக 5G சேவைக்கான கட்டமைப்புகளை அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சராசரியாக 1 நொடியில் 1 ஜிகா பைட் அளவிற்கு டேட்டாவை தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது என்றும், 3 ஜிகா பைட் …

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான "மஞ்சள் ஜாக்கெட்" என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார். …

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தடுக்க நினைக்கின்றனர் என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்றது. இந்தப் பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் அதிகப்படியாக வெளியேறுவதற்கு ஆதரவு அளித்திருந்தனர். …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. …

தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் 34 ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள், ஏ.சி. இல்லாத 2 படுக்கை வசதி பஸ்கள், 10 கழிவறை வசதி கொண்ட அல்ட்ரா கிளாசிக் பஸ்கள், 6 ஏ.சி. படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ்கள் என 52 சொகுசு பஸ்களை தற்போது இயக்கி வருகிறது. நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, போடி, கீழக்கரை, கோவை, பெங்களூர், எர்ணாக்குளம், தஞ்சை, சேலம், திண்டுக்கல் …

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காகக் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டுமென்ற தி.மு.கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. …

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது பேஸ்புக் பக்கம் மூலம் 4 கோடிக்கும் அதிகமான லைக் குவித்திருக்கும் அவர், தனது ட்விட்டர் தளத்தில் 4.3 கோடி பின்தொடர்பாளர்களையும் கொண்டிருக்கிறார். …

வங்கி கணக்கு,மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் தரும் வகையில் வழங்கப்பட்ட ஆதார் விவரங்களை ஒருவர் விரும்பினால் திரும்பப் பெறும் வகையில் புதிய சட்டம் விரைவில் வருகிறது. …

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் சிறிய புல் மைதானம் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா தலமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் அதிகமானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும், பூங்கா எப்பொதும் புதுப் பொலிவுடன் வைக்கப்படுவது …

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதில் 5,912 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், மேகதாது திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற காவிரி வழக்கில், காவிரி ஆற்றின் …

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதில் 5,912 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், மேகதாது திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற காவிரி வழக்கில், காவிரி ஆற்றின் …

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரதன்னாபேட்டை பகுதியில் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் 3 கோடி ரூபாயை போலீசார்,பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் பணம் நடமாட்டத்தை தடுக்க மாநிலம் முழுவதும் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. …

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை குடியரசுத் தலைவர் நியமித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜக நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் குடியரசுத் தலைவர் நியமித்தார். …

திமுக பொருளாளர் துரை முருகன் தனது பாஸ்போர்ட்டில் புத்தக பக்கங்கள் காலியானதால் புது பாஸ்போர்ட் வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார், அனால் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்து, விண்ணப்பத்தை திருப்பி அளித்து விட்டது. …

தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் தொடர்ச்சியாக தவில் இசைத்து புதிய உலக சாதனை புரிந்து, ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு ரிக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் ராமசாமி என்பவர். …

நாகாலாந்தில் திருவிழாக்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹார்ன்பில் திருவிழாவை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். இந்த ஆண்டு இந்த திருவிழாவின் 19வது ஆண்டு ஆகும். …

நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசியதாக வள்ளியூர் போலீசில் பி.இ பட்டதாரி புகார் அளித்துள்ளார்.வள்ளியூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மகரஜோதிபாபு. பி.இ பட்டதாரியான இவர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர், வள்ளியூர் போலீசில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார். …

கர்நாடகா மாநிலத்தில் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து அந்த ஏரியில் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட அவலம் நடந்துள்ளது. ஹுபாளி பகுதியில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் உள்ள மோராப் கிராமத்தில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மாதம் 29-ஆம் தேதி அப்பகுதியில் இருந்த ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த ஏரி நீரில் எச்ஐவி கிருமி பரவி விட்டதாகவும் …

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட 45 மாதங்களில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மருத்துவமனை கட்டுமானத்திற்காக மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியானது. இதனால், மருத்துமனைக்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாத …

செம்மரம் வெட்ட சென்றதாக 13 தமிழர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஜத்தேபள்ளி வனப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதிகளில் செம்மரங்கள் செழித்தோங்கி வளர்ந்துள்ளன. வெளிநாடுகளில் இந்த செம்மரங்களுக்கு அதிக மவுசு உள்ளது. இதனால் செம்மரங்களை வெட்டிக் கடத்தி வருகிறார்கள். செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர மாநில போலீசார் சிறப்பு காவல் படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மரக் …

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், போக்குவரத்து வாகனங்களில் ஏற்படுத்தியுள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் இல்லை. அவர்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்களில் போதிய வசதி செய்து தருமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வக்கீல் முருகானந்தம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் …

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் ஆஜராக்கோரி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அந்த டைரியில் அமைச்சர் …

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி பிறந்தார். நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரான அவர் சுதந்திரத்திற்கு பிறகு முதல் சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்தார். 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவருக்கு …

இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2014-ம் ஆண்டு வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1966-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன். 18 சிறுகதைத் தொகுப்புகள், சஞ்சாரம், உபபாண்டவம்,யாமம் உள்பட 9 நாவல்கள், 36 கட்டுரைத் தொகுப்புகள், 8 திரைப்பட நூல்கள், குழந்தைகளுக்கென 15 புத்தகங்கள், இரண்டு வரலாற்று நூல்கள், …

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் பெரும் பாதிக்கப்பட்டிருந்த ‘நெல்’ ஜெயராமான் இன்று அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். …

சாகித்ய அகாடமி விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. …

அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் இன்றும் நாளையும் போராட்டம் நடத்த உள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், புயல் பாதிப்பால் சேதம் அடைந்த அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற …

பாம்பன் இரயில் பாலத்தில், வழக்கம் போல் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பணியாளர்கள் பாலத்தின் மத்திய பகுதியை இணைக்கும் இணைப்பு கம்பிகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடிக்தனர் …

அடிலெய்டிலில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஆஸ்திரேலிய லெவன் மற்றும் இந்திய அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டமும் சமனில் முடிந்தது. …

2018- ம் ஆண்டின் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் சர்கார் படம் முதலிடத்தை பெற்றிருக்கிறது. முதல் பத்து இடங்களை தென்னிந்திய சினிமாக்கள் கைப்பற்றியிருக்கின்றன. …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்குவதற்கு ஒரு வாரம் காலம் தேவைப்படுகிறது என்று தமிழக அரசு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. நவம்பர் 15-ஆம் தேதி, நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. அந்த கஜா புயலால் சுமார் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின் கம்பங்கள் அனைத்தும் சரிந்து விழுந்ததால் அந்த மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் முற்றிலுமாக …

மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு எத்தகைய சூழலில் விடுமுறை விடலாம் என்பதற்கான நெறிமுறைகள்குறித்து அனைத்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளார். …

தாய்லாந்து நாட்டில், உணவு தேடி நகோன் ராட்சசிம்மா (Nakhon Ratchasima) என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த வந்த கரடி குட்டி ஓன்று அங்கிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 6வது தளத்தின் பின் பகுதியிலுள்ள இடுக்கில் சிக்கிக் கொண்டது. …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களை, இரவு நேரத்தில் பூச்சிகள் அதிகமாக தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளிடம் இருந்து 50 சதவீத மானியத்துடன் விவசாயிகள் தானியங்கி விளக்குப்பொறிகளை வாங்கி விளைநிலங்களில் வைத்துள்ளனர். …

2018-ஆம் ஆண்டின் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபலங்களின் டாப்-100 Forbes பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளார் நடிகர் சல்மான் கான். …

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி இந்திய வங்கிகளில் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். மல்லையாவை விசாரணைக்காக லண்டனிலிருந்து நாடு கடத்தக்கோரி இந்தியா தொடுத்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், விஜய் மல்லையா தான் முழுக்கடனையும் திரும்பச் செலுத்திவிடுவதாக வேண்டுகோள் விடுத்துள்ளார். …

நடிகர் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் முதல் பாடலை வெளியிட்டிருக்கும் படக்குழு டிசம்பர் 21-ம் தேதி படம் …

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நிலையில், வரியைக்குறைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை குறிப்பிட்ட சதவிகிதம் பிரான்ஸ் அரசு உயர்த்தியது. முதலில் சமூக வலைதளங்கள் மூலமாக தொடங்கிய அரசுக்கு எதிரான பிரசாரம், போராட்டமாக மாறியது. பாரீஸ் உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் திரண்டு வந்து அரசுக்கு எதிராக போராடி …

தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த வரிசையில், அதிவேக இணையதள சேவைகளை வழங்குவதற்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-8 ராக்கெட் மூலம் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ …

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எதற்காக தமிழக சட்டமன்றம் கூடுகிறது என்ற எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்டமாக, தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிகிறது . இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர்எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக-வினர் பேரணியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். …

எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு, நவம்பர் மாதம் பைக் விற்பனை சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு முதல் ஜாவா மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை 6 சதவீதம் வரை சரிந்து 65,744 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. …

ரஜினியின் "பேட்ட" படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார். இதனால் பேட்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. …

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் 6 நாட்கள் உயர்வுக்குப் பிறகு இன்று சரிவுடன் முடிந்தது. நாளை ஆர்பிஐ நாணய கொள்கைக் கூட்டம் நடைபெற இருப்பது மற்றும் 2019 பொதுத் தேர்தல் முன்பு நடைபெற்றுள்ள மூன்று மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக வரும் செய்திகள் போன்ற காரணங்களினால் முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பங்குகளை விற்றுள்ளனர். …

கடந்த 1996-ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் "இந்தியன்". இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியன் படத்திற்குப் பிறகு 22 வருடங்களாக கமல்ஹாசனும் - ஷங்கரும் இணைந்து பணியாற்றவில்லை. இருந்த போதிலும் இந்தக் கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் இந்தியன் 2 படத்துக்கான …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்காது. தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணரும் என்று மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். …

இந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு எக்கானமி வகுப்பில் வழங்கி வந்த இலவச உணவினை நிறுத்த முடிவு செய்துள்ளது. நஷ்டம், கடன் போன்றவற்றில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் செலவுகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்ல அதன் பங்குகளை டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு விற்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜெட் ஏர்வேஸ் பங்குகளை …

கடந்த ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை சென்னை ஐஐடியில் முதல்கட்டமாக 3 நாட்கள் நடைபெற்ற வளாக நேர்காணலில் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிக மாணவர்கள் வேலைக்கு தேர்வு பெற்றுள்ளனர். …

மஹாராஷ்டிராவில் 2 ஏக்கர் நிலத்தில் விளைந்த கத்தரிக்காயை கிலோ 20 பைசா என்ற விலையில் கொள்முதல் செய்ததால் வேதனையடைந்த விவசாயி தோட்டத்தை மொத்தமாக அழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகர் மாவட்டத்தில் உள்ள சகுரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பவேக், மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது 2 ஏக்கர் நிலத்தில் கத்தரிக்காய் பயிரிட்டுள்ளார். …

நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்தப் படத்ததைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இரு பரிமாணத்திலும் முப்பரிமாணத்திலும் …

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் …

முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், மாநில அளவிலும், தேனி மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவித்தார். …

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …

சபரிமலை விவகாரத்தில், கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து, திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில், பா.ஜனதா நேற்று தனது காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியது. சபரிமலை விவகாரத்தில் எம்.பி. சரோஜ் பாண்டே உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் இருந்து பா.ஜனதா பிரமுகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள். …

கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உள்பட 2 தனியார் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்து அரசு ஒப்புக்கொண்டுள்ளது. …

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, வெளி நபர்களின் ஆதிக்கத்தில் செயல்பட்டு வந்ததாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியதாக நீதிபதியாக இருந்த குரியன் ஜோசப் உள்ளிட்ட 4 பேர், கடந்த ஜனவரி மாதத்தில் குற்றம்சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. …

இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் 50 சதவீதத்தை மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் தான் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் அங்குள்ள நிபாட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் சாத்தே வெங்காயத்தின் விலை குறைந்ததால் வேதனை அடைந்து பிரதமர் மோதியின் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வைத்தார். கடந்த வாரம் தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை மொத்த விற்பனைச் சந்தைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். …

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் பசுவதை வதந்தியில் வன்முறை கும்பல் போலீஸ் அதிகாரியை கற்களை வீசி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே உள்ள மஹாவ் என்ற கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர். பசு மாட்டை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் போராட்டதில் இறங்கினர். …

அமெரிக்க கடற்படையின் உயரதிகாரியான் ஸ்காட் ஸ்டீர்னி (Scott Stearney) பஹரைன் நாட்டில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு பகுதிகளுக்கான வைஸ் அட்மிரலாக இருந்த ஸ்காட் ஸ்டீர்னி பஹ்ரைன் நாட்டு கடற்படைத்தளத்தின் பொறுப்பாளராகவும், ஹோர்மஸ், செங்கடல், அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் ரோந்து செல்லும் அமெரிக்கக் கப்பல்களின் முக்கியப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துவந்தார். …

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பாரீசில் போராட்டம் நடத்தியதோடு, அரசு மற்றும் தனிநபர்களின் சொத்துகளை சூறையாடி, வன்முறையில் ஈடுபட்ட 400 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். பிரான்சில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரி உயர்வையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தையும் கண்டித்துத் தலைநகர் பாரீசில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், நேற்று நடந்த போராட்டத்தின் போது சாலையோரங்களில் நின்றிருந்த கார்களையும் தீவைத்துக் …

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தென் இந்திய தேசிய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், காவிரி விவகாரத்தில் மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். …

சிட்டிக்குருவி இனம் அழிவதற்கு செல்ஃபோன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள்தான் காரணம் என்றொரு குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் நெதர்லாந்து நாட்டில் செல்போன் கதிர்களால் நூற்றுக்கணக்கான பறவைகள் கொத்துக் கொத்தாய் செத்துப் போன புகார் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பறவைகள் உயிரிழந்ததற்கு 5ஜி அலைக்கற்றையின் சோதனை நிகழ்ச்சியே காரணம் என்றும் கூறப்படுகிறது …

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், பாஜக செயல்வீரர் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர்,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் தற்போது 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான் என்று தமிழிசை கருத்து தெரிவித்தார். …

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்ககளில் அருவிகளில் தண்ணீர் அதிகரித்து நல்ல குளுமையான சூழ்நிலையும் காணப்படும். இதனால் இந்த மூன்று மாதங்களிலும் பல்வேறு இடங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் குற்றாலத்துக்கு படை எடுத்து வருவர். …

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரக்யராஜ் மாவட்டத்தில், 3 மாதங்களுக்கு திருமணம் செய்ய மாநில அரசு தடை விதித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யராஜ் பகுதியில், 2019 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கும்பமேளா, புத்த பூர்ணிமா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன, அதனால் கங்கையில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அதனால் இந்த மூன்று மாதத்தில் திருமண நிகழ்ச்சில் நடத்த அந்த அரசு தடை விதித்துள்ளது. …

இந்திய-அமெரிக்க விமானப்படைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் 12 நாட்களுக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா, பானாகார் ஆகிய 2 விமானப்படை தளங்களில் கூட்டு பயிற்சியில் ஈடுபடவிருக்கின்றன. …

இமயமலையில் 8.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகும் பயங்கர நிலநடுக்கத்தால், உத்தரகாண்ட் முதல் மேற்கு நேபாளம் வரை பாதிப்புகள் இருக்கக்கூடும் என இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் நேபாள- இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு இமயமலை சரிந்து விழக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி நள்ளிரவு தொடங்கி 30-ந் தேதி அதிகாலை வரை கோரத்தாண்டவம் ஆடிய ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏராளமான உயிரிழப்புகளும், பொருட்சேதமும் ஏற்பட்டன. அதில் இருந்து மக்கள் இன்னமும் முழுமையாக மீளவில்லை. ஒகி புயல் தனது கோர முகத்தை காட்டி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி ஒகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு கடற்கரை கிராமங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம், கடல் ஆசீர்வதிப்பு …

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். …

சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பிரபல ஹோட்டல் கார் பார்கிங்கில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மயிலாப்பூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில், ஹவாலாப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அந்த ஹோட்டலைக் …

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 23 பலியானதை அடுத்து, தடை விதிக்கப்பட்ட ட்ரெங்கிங்-க்கு தற்போது மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற 23 பேர் பலியான சம்பவம் தமிழகம் மற்றுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, அங்கு டிரெக்கிங் செல்ல …

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் புல்லட் வெளியிடப்பட்டது. புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எஸ். விலை ரூ.2.13 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களிலும் முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபேக்ட்ரி-கஸ்டம் வெர்ஷன் ஸ்டான்டர்டு மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. …

குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் எண்களுக்கு வரும் அழைப்புகளை துண்டிக்க கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான நாள் முதல், அதிரடி சலுகை மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. முதலிடத்தில் இருந்த ஏர்டெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனம் சரிவை சந்தித்தன. அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் வசதி இருப்பதால், பெரும்பாலும் ஜியோவை முதல் தேர்வாக …

ஐடி நிறுவனங்களின் அழகில் கவரப்பட்டு இளைஞர்களுக்கு அதன் கிளையாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஆன்லைன் விளையாட்டு. இன்று உலகளாவிய ஒரு விளையாட்டாக இது மாறியுள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு துறையில் தற்போது முக்கிய இடத்தை பிடிப்பது அமெரிக்காவும் ஜப்பானும். தற்போது 160 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் 3% இடத்தை மட்டுமே கொண்டுள்ள இந்திய நாடு இன்று வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை இந்த ஆன்லைன் விளையாட்டு துறை ஆகும். ஆன்லைன் …

திருப்பதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஸ்வீட் பாக்சில் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரும்பி பெற்றுச்செல்வது லட்டு பிரசாதம். இதற்காக தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டுகளை பக்தர்கள் கொண்டு செல்வதற்காக தேவஸ்தானம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. …

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 11.1.2012 அன்று முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. …

சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் சம்மேளனத்தின் ‘தி ப்ளூ க்ராஸ்’ வழங்கிய கவுரப் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை துப்பாக்கிச்சுடுதல் வீரர் அமினவ் பிந்த்ரா பெற்றுள்ளார். ஆண்டுதோறும் ‘ப்ளூ க்ராஸ்’ சார்பில், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பைத் தரும் வீரர், வீராங்கனைகளுக்கு கவுரவப் பட்டம் வழங்கி வருகிறது. …

அமெரிக்கா நாட்டில் பணியாற்ற வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா பெறுவதற்காக மீண்டும் ஒரு புதிய விதிமுறையை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவது தான் ஹெ1பி விசா. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் ஹெச்1பி விசா பெறும் முறைகளில் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. …

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி கஜா புயல் தமிழகத்தை தாக்கியது. இதில் தஞ்சை, நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் தென்னை விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னை விவசாயம் அடைந்துள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் …

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். …

கேரள மாநிலத்தில் சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து தீவிரமாக போராட்டங்கள் நடத்திய பாஜக, உள்ளாட்சி இடைத்தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அமல்படுத்துவோம் என்று பினராய் விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கூறிய நிலையில், அங்கு பாஜக மற்றும் பல இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் …

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு ஆலோசனை இன்று நடக்க உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 14 லட்சம் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு …

நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் என்கிற முதுகுத் துடுப்புடைய அரிய வகை திமிங்கில வகை உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளது கடல் வாழ் உயிரின ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. …

ஜி 20 நாடுகளின் மாநாட்டிற்காக அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் ஏர்ஸ் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற அமைதிக்கான யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாநாட்டின் போதே ஐ.நா சபை பொதுச்செயலாளர் ஆன்டணியோ குட்ரெசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். போலந்து நாட்டில் நடைபெற உள்ள சுற்றுச்சூழல் குறித்த மாநாட்டு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார். …

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இதில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன. படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். …

இந்தியாவுடன் ஒற்றுமையாகவும், நட்பாகவும் இருக்க வேண்டுமெனில் பாகிஸ்தான் முதலில் மதச்சார்பற்ற நாடாக மாற வேண்டும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் தாங்கள் நல்லுறவைப் பேண விரும்புகிறோம். பல போர்களுக்குப் பிறகும், பிரான்ஸ் - ஜெர்மனி ஆகிய நாடுகள் அமைதியாக வாழ முடிகிறது என்றால், இந்தியா மற்றும் பாகிஸ்தானால் அது ஏன் முடியாது? என அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார். மேலும் சமாதானத்திற்கு …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கடந்து 10 நாட்கள் ஆகியும் மக்கள் மீளாத்துயரில் தவித்து வருகிறார்கள் .பல்வேறு கட்சியினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். …

நடிகர் அஜித்- இயக்குநர் சிவா - கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான். …

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற விசாரணையில் தாம் பொய் சொன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் மைக்கேல் கோஹன் ஒப்புக்கொண்டார் . மாஸ்கோவில் உள்ள டிரம்பின் ரியல் எஸ்டேட் திட்டம் ஒன்று குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தியதாகவும் அதிபர் டிரம்பின் மீதுள்ள விசுவாசத்தால் இவ்வாறு செய்து விட்டதாகவும் கோஹன் தெரிவித்துள்ளார். …

பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சி மிகுந்த காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நிரப்பி குடிநீர் மற்றும் நீர்ப்பாசன தேவைகளுக்கு பயன்படுத்துவதுதான் அத்திக்கடவு - அவிநாசி திட்டம். …

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி தலைவி வீடு மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும். மதுரை பங்கஜம் காலனி பகுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி மகாலட்சுமியின் வீடு உள்ளது. நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடினர். …

பாகிஸ்தான் நிகழ்ச்சியின் போது காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்த சித்துவை கைது செய்து அவர் மீது தேச துரோக சட்டத்தின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். …

பேட்டரியில் ஓடும் ஆட்டோக்களை ஆட்டோமொபைல் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரியோ’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆட்டோக்கள் கடந்த வாரம் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டன. பேட்டரி வாகனங்களில் மிகப் பெரும் குறையாக இருப்பது, அதில் உள்ள மின்சக்தி (சார்ஜ்) வெகுவிரைவாக தீர்ந்துவிடுவதுதான். அந்த குறையை நிவர்த்தி செய்ய மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய புது மாடலான டிரியோவில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும், அதேசமயம் அதிக தூரம் ஓடக்கூடிய லித்தியம் …

சார்க் அமைப்பின் 8 உறுப்பு நாடுகள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு நடத்தும். இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய 8 நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். …

வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதனுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் மூலம் நேற்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. …

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நியாயமான கொள்முதல் விலை, விவசாய கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலையிலிருந்து தலைநகர் டெல்லி ராம்லீலா மைதாத்தில் குவிந்தனர். இந்த விவசாயிகள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று …

இந்தியாவில் இனி சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு இனி மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறத் தேவையில்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நச்சுக்கழிவுகளை வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடப்பொருளாக வெளியேற்றும் ஆலைகள், அனல்மின் நிலையங்கள் மற்றும் அணு உலைகள் அமைப்பதற்கு, மத்திய மாநில சுற்றுச்சூழல் துறையுடன் சேர்த்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெற வேண்டும் என்ற சட்டவிதிமுறை இருந்து வருகிறது. …

செவ்வாய் கிரகத்திற்கு முதலில் யாரை அனுப்பவது என்பது தொடர்பாக தற்போது இந்தியா - அமெரிக்கா தொழிலதிபர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இந்த பணிகளில் ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியாவின் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். …

இந்தியா - பாகிஸ்தான் நட்புறவுடன் தொடர வேண்டுமானால், பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இந்திய பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. …

இன்று என் வாழ்க்கையின் கருப்பு தினம்’என்று மிதாலி ராஜ் உருக்கமாக ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு சர்ச்சையான செய்திகள் வெளியாகின. இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடம் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் தனித்தனியாக விளக்கம் கேட்டனர். அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐக்கு மிதாலி …

முன்னணி நிறுவனமான ஹார்லிக்ஸ் நிறுவனம் விரைவில் கைமாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் ஹார்லிக்ஸ் 72.5 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இது சுமார் 21,000 கோடிக்கு கைமாற உள்ளது. இதை வாங்க நெஸ்ட்லே நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது. இதுபோல், இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிலைப்படுத்தும் நோக்கில் யூனிலீவர் நிறுவனமும் ஆர்வம் காட்டுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. …

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. …

இன்று அதிகாலை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. …

திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிக ஆர்வமுள்ளவர் நடிகர் அஜித்குமார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா எனப்படும் ஆளில்லா குட்டி விமான குழுவின் ஆலோசகர பணியாற்றி வரும் அஜித் தனது தக்‌ஷா குழுவினரோடு சேர்ந்து இந்திய அளவில் பல சாதனைகளை புரிந்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. …

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. டிசம்பர் 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 16 நாட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, ‘சி’ பிரிவில் பெல்ஜியம், இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா, …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், அதுபோல திதிலி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி ‘கஜா’ புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்றது. இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கின்றன. பள்ளிகள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு …

தமிழகத்தில் கஜா புயலால் குடிசைகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கஜா புயல் சீற்றத்தால் நாகை மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் குறித்த எச்சரிக்கை பெறப்பட்டவுடன், விரிவான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. …

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது. புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் மூலம் இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. …

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் அரசு மக்களுக்கு கொடுக்கும் இலவசங்களை தவறாக விமர்சித்திருப்பதாகவும், படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்திருப்பதாகவும் கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில திரையரங்குகளில் சர்கார் படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, தமிழக அரசின் எதிர்ப்புக்குள்ளான சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கைது செய்யப்படுவார் என்ற தகவல் பரவியதால் …

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் என நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ரயிலில் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் கஜா புயல் நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்ல சரக்குக் …

இந்தியாவின் பல மாநிலங்களிலும், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் குருத்துவரா என்றழைக்கப்படும் சீக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளன. சீக்கிய மதத்தவர்களின் முதன்மை குருவான குரு நானக் தேவ் என்பவருக்கு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் மிக பிரமாண்டமான பொற்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. …

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் எமர்ஜிங் நேஷன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதியில் நேருக்கு நேர் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான எமர்ஜிங் நேஷன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 8 …

மணிரத்னம் இயக்கி சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தை அனைத்து ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர். படத்தின் திரைக்கதையும் நன்றாக இருந்ததால் ஓரளவு வெற்றியும் பெற்றது. …

திமுக கூட்டணியில் காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் மட்டுமே இருப்பதாக அதன் பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்த நிலையில், தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா? என்பதை ஸ்டாலின் தான் கூற வேண்டும் என வைகோ தெரிவித்திருந்த நிலையில், மதிமுக சார்பில் நடைபெறவிருக்கும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். …

கஜா புயலை அடுத்து ஒரு வாரத்துக்கும் மேல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்தது, அனால் கடந்த சில நாட்களாக மழை எதுவும் பெய்யாமல் ‘நேற்று வரை மிகவும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அது இன்று சற்று மாறும். நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. …

சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரும் , சீனாவின் முதல் பெரிய பணக்காரருமான ஜாக் மா அந்ந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார். முதலாளித்துவ கருத்தில் ஆர்வம் கொண்ட அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தவறு என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல தமிழக அரசு அனுமதி மறுப்பதாகவும், கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை செய்ய உள்ளே …

ஜேபி - தி லெஜெண்ட் ஆப் சந்திரபாபு என்ற பெயரில் நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் புனைவாக கே.ராஜேஸ்வர் எழுதிய நாவல் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அந்தப் படத்திற்கு “ஜேபி: தி லெஜெண்ட் ஆப் சந்திரபாபு” என பெயர் வைத்துள்ளனர். …

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியுள்ளது. புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் மூலம் நாளை காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதனுடன், வெளிநாடுகளுக்கான 30 சிறு …

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில்களில் நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் 10-ஆம் தேதிவரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். ரயில்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு …

கேரளாவில் உள்ள சபரிமலை சன்னிதானத்தில் எந்த விதப் போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜையின் போது சன்னிதானத்தில் பக்தர்களை கண்காணிக்க இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோரைக் கொண்ட மூன்று நபர் குழுவையும் நியமித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடந்த மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடரின்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது. …

தமிழகத்தின் பத்து நகரங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூபாய்.3500 கோடி கடனுதவியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியுடன், மத்திய அரசு நேற்று கையெழுத்திட்டுள்ளது.இந்தியாவில் நகரப்பகுதிகள் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் விளங்கினாலும், பல நகரங்களில் போதிய வசதிகள் இல்லை. 50 சதவீதத்துக்கும் குறைவான வீடுகளுக்கே குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுபோல 42 சதவீத வீடுகளுக்கு மட்டுமே கழிவுநீர் வடிகால் வசதி உள்ளது. …

ஏர் இந்தியா துணை நிறுவனத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 55,000 கோடிக்கு மேல் கடன் சுமையில் சிக்கி தவித்து வருகிறது. இந்தநிலையில் இதில் இருந்து மீட்க இந்த நிறுவன சொத்துக்களை விற்று மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏ.ஐ.ஏ.டி.எஸ்.எல் நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. …

மாருதி சுசூகி நிறுவனம் மாருதி ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பல மக்களின் கார் கனவை நனவாக்கியதில் மாருதி நிறுவனத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. சிறிய ரக கார் சந்தையில் மாருதி 800 முன்னணியில் இருந்தது. அதன்பிறகு மாருதி 800 கார் மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய மாடல்கள் களம் இறக்கப்பட்டன. மாருதி 800 உற்பத்தி நிறுத்திய பிறகு, ஆல்டோ 800 …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. இப்படத்தின் சில காட்சிகளுக்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சர்ச்சையாகி போன சர்காரில் சில காட்சிகளை படக்குழு நீக்கியது. …

கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் டியூக் 125 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் கே.டி.எம். நிறுவனத்தின் விலை குறைந்த பைக்காக புதிய டியூக் 125 இருக்கிறது. புதிய டியூக் 125 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு முன் தொடங்கியது. 1,000 ரூபாய் முன்பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட டியூக் 125 இந்திய விலை 1.18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. …

தெலுங்கானா மாநில சட்டசபை 119 இடங்களை கொண்டது. இதற்கு வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ,காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் …

கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அளவிற்கு முழுவதுமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாநில அரசு, மத்திய அரசிடம் 15000 கோடி நிவாரணமாக கேட்டது. …

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் சென்றார் . இஸ்லாமை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த மாதம் 19-ஆம் தேதி …

வீடு தான் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் என ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்களின் கணவன், பெற்றோர், சகோதரர்களால் ஆணவக் கொலை, வரதட்சணை பிரச்சினையால் உறவினர்களாலும் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர். எனவே பெண்கள் வாழ்வதற்கு அவர்களது வீடு ஆபத்தான இடம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது …

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 4 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர். …

மிதாலி ராஜை நீக்கியது ஏன் எனக் கேட்டு பயிற்சியாளருக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அண்மையில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடரின்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய …

தனது சிறுவது விடுமுறை நாளில் தான் சந்தித்த பெண் தோழி ஒருவரை ட்விட்டர் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடித்துள்ளார் ப்ரீ எனும் பெண்மணி. …

பண்டிகை காலங்களில் வெளிவரும் பெரிய ஹீரோக்களின் படத்திற்கு, திரையரங்குகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட மிக அதிகமாக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர் இதனால் ரசிகர்களும், பொதுமக்களும் அதிகவிலை கொடுத்து தங்கள் விரும்பிய ஹீரோக்கள் நடித்த படங்களை பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை தடுக்க கடந்த 2017 ஆம் ஆண்டு அரசாணை ஓன்று பிறப்பிக்கப்பட்டது. அதில் திரையரங்குகளில் வாகன கட்டணம் மாநகராட்சியை பொறுத்தவரை கார் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், நகராட்சிகளில் …

ஆஸ்திரேலியாவில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6- ஆம் தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த விராட் கோலி மட்டும் …

உலகக் கோப்பை ஆடவருக்கான ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேலும் கட்டாக்கில் உள்ள பிராபாட்டி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. …

காவிரியின் குறுக்கே மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 5192 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வரைவு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. …

இந்திய கைப்பந்து சம்மேளனம் மற்றும் பேஸ்லைன் இந்தியா நிறுவனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடக்கிறது. …

மிகவும் முக்கியமான நேரத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் போலீசார் கவனம் செலுத்துவதை தவிர்பதற்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், மத்திய அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. சிபிஐ விசாரணை நடத்திய வழக்குகளில், குற்றவாளிகளை விடுவிக்கும் மாநில அரசின் முடிவை தடுக்கும் விதிகள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. …

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கி சாதனை புரிந்துள்ளது. தி இன்சைட் எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. பூமியை தவிர செவ்வாயில் மட்டும்தான் இது போன்ற ஆராய்ச்சி நடக்கிறது. …

இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாய்க்குள் மத்திய அரசுக்கு வழங்கலாம் என பேங்க் ஆப் இந்தியா மெரில் லின்ச் என்ற முதலீட்டு வங்கி கணித்து கூறியுள்ளது. …

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியோடு முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். சுனில் அரோரா டிசம்பர் 2-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். …

நடிகர் அஜித் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பிங்க் தமிழில் ரீமேக் ஆவதை படத்தின் இந்தி தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார் அவரின். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றவை. அதனால் அவர் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. …

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலுள்ள ஏ.டிஎம் இயந்திரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்படலாம் என ஏ.டிஎம் தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பணமதிப்பு நீக்கத்தின்போது எப்படி மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-கள் முன்பு நின்றார்களோ அதே போன்ற நிலை வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது அரசின் புதிய விதிகளின்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான மானியம் …

உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் நாட்டு எல்லைக்குள் தான் இருக்கிறது. ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதற்க்கு தமிழக அரசு சார்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை அடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தருண் …

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த மேத்யூ தாமஸ், இன்று திடீர் என பதவியை ராஜினாமா செய்துள்ளார். பினராயி விஜயன் தலைமையிலான கேரள அமைச்சரவையிலிருந்து கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சரான மேத்யூ டி தாமஸ் பதவி விலகியுள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்தனம்திட்டை மாவட்டம் திருவல்லா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி சார்பில் …

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரக்ஸிட் எனப்படும் வெளியேறும் முடிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு வந்தது. …

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதை அறியவும், ஆய்வு செய்யவும் இன்சைட் விண்கலத்தை அனுப்பியது. கலிபோர்னியா நகரில் விண்ணில் பறந்த இன்சைட் விண்கலம், சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணித்து, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது. …

அடுத்த மாதம் முதல் டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. …

லக்னோவில் நடந்த சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சமீர் வர்மா 16–21, 21–19, 21–14 என்ற செட் கணக்கில் சீனாவின் லு குவாங்ஜூவை போராடி வீழ்த்தி மீண்டும் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 1 மணி 10 நிமிடங்கள் நீடித்தது. …

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை சேமிக்க, விரைவில் மூன்று புதிய அணைகளை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிந்து நதி உடன்படிக்கையின்படி இந்தியா அதிகபட்சமாக 94 சதவீத தண்ணீரை பயன்படுத்தி வருகிறது. மீதமுள்ள ஆற்று நீர் உபரிநீராக பாகிஸ்தானுக்கு அனுப்படுகிறது. சிந்துநதி நீர் பகிர்வு ஒப்பந்தப்படி, சட்லஜ், பீஸ் மற்றும் ராவி நதிகளில் பாயும் தண்ணீர், இந்தியாவிற்கு சொந்தமானது. செனாப், ஜீலம் மற்றும் இந்தூஸ் …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார். கடந்த 10 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகிறார். இந்தநிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கும் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்ட மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் …

சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதம் செய்த கேரள ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திராவின் கம்பீரமான மற்றும் கறாரான போக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான யதீஷ் சந்திரா, கடந்த 2015-ஆம் ஆண்டு கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் கேரளாவின் ஆளும் கட்சியாக காங்கிரசும், எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தன. அப்போது ஆளும் அரசை கண்டித்து கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம் …

கஜா பாதித்த பகுதிகளில் 3-வது நாளாக மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கஜா புயலால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திந்துள்ளனர். ஆனாலும், மிகுந்த தைரியத்துடன் அவர்கள் உள்ளனர் என்று மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், நேற்று, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, புதூர், புலவன்காடு, நெம்மேலி, ஆலடிக்குமுளை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, மல்லிப்பட்டினம் ஆகிய …

அமெரிக்கா நாட்டில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு சிரமம் அடைந்து வருகின்றனர். சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு …

புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் சென்னையில் ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. ஐராவதம் மகாதேவன் கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டவர். சிந்துசமவெளி எழுத்துகளுக்கும், திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவினை சொன்னவர். சிந்துவெளி ஆய்வு குறித்த …

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 150 கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூபாய் 65,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 150 கிளாசிக் எடிஷன் பிளாக், பிளாக் மற்றும் ரெட் ஹைலைட்கள், பிளாக் மற்றும் சில்வர் ஹைலைட்கள் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் 2018 பல்சர் 150 …

இந்தியாவில் அதிகமான இளைஞர்களால் எதிர்பார்க்கப்பட்ட கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். வெர்ஷனின் விலை 1.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 200 பைக் இந்தியாவில் கே.டி.எம். நிறுவனத்துக்கு அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதுவரை கே.டி.எம். டியூக் 200 மாடலில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படாமல் இருந்தது. ஏப்ரல் 2019 முதல் இந்தியாவில் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளின் படி கே.டி.எம். …

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பா் மாதம் 28ம் தேதி தீா்ப்பு வழங்கியது. மேலும் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு ஜனவரி 22ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், முந்தைய தீா்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தொிவித்து விட்டனா். …

தற்போது டெல்லியில் நடந்து வரும் 10–வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி போட்டியில் அரியானாவைச் சேர்ந்த 21 வயது இந்திய வீராங்கனை சோனியா சாஹல், வடகொரியாவின் ஜோ சன் வாவை எதிர்கொண்டார். மூன்று ரவுண்ட் கொண்ட இந்த ஆட்டத்தில் இருவரும் களத்தில் ஆக்ரோ‌ஷத்தை வெளிக்காட்டினர். முதல் இரண்டு ரவுண்டில் இருவரும் சரிசம ஆதிக்கம் செலுத்தியது போன்றே தெரிந்தது. 3–வது …

சிறுவர்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச செய்திகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது. தற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட பிறகு 3 ஆண்டுகளுக்கு குறையாமலும் 5 ஆண்டுகள் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும். …

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்து சாமியார்கள் தற்போது அக்கட்சிக்கு எதிராக அணி திரண்டு நிற்பதால், அம்மாநில பா.ஜ.க.வினர் கலங்கிப்போயுள்ளனர். மத்திய பிரதேசத்தில், இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக முதல்வர் செயல்படவில்லை என்றும் நர்மதையின் களங்கத்தை நீக்கவில்லை என்றும் கூறி, சாமியார்கள் பாஜக-வுக்கு எதிராக சாமியார்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். …

தென்கொரியாவில் உள்ள மிகப்பெரிய நாய்கள் வதைமுகாமை இடிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரியா தலைநகர் சோலின் தெற்கே அமைந்துள்ள சங்னாம் நகரில் உள்ள டெப்யோங்-டாங் நாய்கள் வதைமுகாம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பூங்கா உருவாக்கப்படும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் ஆறு நாய்கள் வதைக்கூடங்கள் செயல்பட்டு வந்தன. …

இந்தோனேஷிய விமான விபத்தில் உயிரிழந்த 125 பயணிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து பங்கால் பினாங் நகரத்திற்கு கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி லயன் ஏர் நிறுவனத்தை சேர்ந்த போயிங் 737 விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் அருகேயுள்ள ஜாவா கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 189 பபயணிகள் பலியானார்கள். கடலில் …

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. …

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்து உள்ளது. இந்த காலத்தில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என்பதற்காக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சபரிமலையில் போராட்டம் நடத்தினார்கள். …

கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்.எச்.370, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் விழுந்தது? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. என்ன நடந்தது? …

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கடந்து 10 நாட்கள் ஆகியும் மக்கள் மீளாத்துயரில் தவித்து வருகிறார்கள். பல்வேறு கட்சியினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை …

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடங்களை 2-வது நாளாக பார்வையிட சென்றார். …

தமிழர்களின் மிக தொன்மையான விழாக்களில் திருக்கார்த்திகை தீபம் முக்கியமாகும். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் இப்போது காணாமல் போய்விட்டன. ஆனால் திருக்கார்த்திகை தீபம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை திருக்கார்த்திகையின் சிறப்பு தான். அதிலும் தென்தமிழகத்தின் பனை ஓலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்திப்பெற்றது. …

சீன தூதரகத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களை அடுத்து கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதையடுத்து, பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின மாவட்டமான அவுராக்சாய் மாவட்டத்தில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள கலயா பகுதியில் உள்ள …

ஆஸ்திரேலியாவில் வீசிய புழுதிப்புயல் காரணமாக, நாட்டின் தென் கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள புழுதி புயல் காரணமாக அங்கிருந்து சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 500 கிமீ நீளமும், 1000 கிமீ. அகலமும் கொண்ட இந்த புயல் சிட்னி, வேல்ஸ், நியூ வேல்ஸ் ஆகிய பகுதிகளை தாக்கியுள்ளது. மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பெர்ன் ஆகிய பகுதிகளும் இந்த புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. …

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் 27-ஆம் தேதி தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. …

தெலுங்கானா மாநிலத்தில் ,வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில். மாநிலம் முழுவதும் பல்வேறுகட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்க்கோண்டு வருகின்றன. தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தம்மை அடிக்க தாமே வாக்காளர்களிடம் செருப்பு வழங்கும் சுயேட்சை வேட்பாளர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். …

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. …

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–14, 21–9 என்ற நேர்செட்டில் சக வீராங்கனை அமோலிகா சிங் சிசோடியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். …

உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட மணிப்பூரைச் சேர்ந்த 35 வயது இந்திய வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார். …

இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால் அந்த முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் மின்னணு வாக்கு எந்திரத்திற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிடக் கோரி நியாய பூமி என்ற தனியார் தொண்டு …

நமது உணவு பழக்க வழக்கம் மாறுவது காரணமாக அன்றாடம் மனிதன் பல்வேறு நோயால் பாதிக்கப் படுகிறான். மேலும் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு காரணமாகவும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களாலும் நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக நீரழிவு நோயாலும், இதய நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். …

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கடந்த 17-ஆம் தேதி வந்த ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் ரயிலில் மீன் இறைச்சி என்ற பெயரில் 20 பெட்டிகள் வந்து இறங்கின. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை வீசியதாலும் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். …

கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த 27 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, சுகாதாரதுறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக அந்த மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டது. தற்போது அம்மாநிலத்தில் பயன்படுத்த முடியாத பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. …

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டயை சேர்ந்த தனியார் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் ஆற்று மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தது. அந்த மணலை விற்க தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த ஆற்று மணலை தமிழக அரசு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என முடிவு …

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியப் பிரிவுக்கான தலைவராக அபிஜித் போஸ் என்பவரை நியமித்துள்ளது. குறுஞ்செய்தி அனுப்பும் சேவை நிறுவனமான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சமீப காலங்களில் வாட்ஸ் அப்பில் பரவி வரும் வதந்திகளால் கூட்டு வன் முறைகள் பல இந்தியா முழுவதும் பரவலாக நடைபெற்றுவருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் நூற்றுக்கும் மேலானோர் பலியும் ஆகியுள்ளார். …

குடியேற்றத்துறை சோதனை தேவைப்படாத பாஸ்போர்ட் (ECNR - Emigration Check Not Required) வைத்திருப்பவர்கள், மத்திய வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்வது அவசியமாகும். …

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–10, 21–10 என்ற நேர்செட்டில் மொரிஷியஸ் வீராங்கனை காதே போ குனேவை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். …

ஜம்மு - காஷ்மீரில் மெகபூபா முப்தி, ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில், சட்டப்பேரவையை ஆளுநர் சத்யபால் சிங் அதிரடியாக கலைத்து உத்தரவிட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

கஜா புயல் குறித்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். …

இந்தியாவில் நவம்பர் 27-ஆம் தேதி ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹூவாய் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை என்றாலும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரைமரி கேமரா வடிவமைப்பை பார்க்கும் போது ஹூவாய் தனது மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. …

இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா முந்தைய மாடல்களைவிட நீளமாகவும், அகலமாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த எர்டிகா கார் 4,395எம்.எம். நீளமாகவும், 1,735 எம்.எம். அகலமாகவும், 1,690 எம்.எம். உயரமாகவும் இருக்கிறது. …

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கி, பலர் இறந்துவரும் வேளையில், தற்போது பறவை காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. …

சர்வதேச அளவில் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றது. …

இந்தியா - ரஷ்யா இடையே ரூ. 3,500 கோடி மதிப்பில், 2 போர்க்கப்பல்களை தயாரிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. …

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே இரு தரப்பு நேரடி கிரிக்கெட் போட்டி தொடருக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் இரு தரப்பு இடையிலான போட்டி தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து வருகிறது. …

புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்குவதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் விவரங்களில், கடலோரத்தில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடல்நீர் குளிரோட்ட பயன்படும் என்றால் கழிவு நிலை என்பது பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். …

கேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான எம்.ஐ ஷானவாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஷானவாஸ் உயிரிழந்தார். அவரது உடல் …

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு அக்டோபர் வரை சுமார் 85,000 குழந்தைகள் பலியாகி உள்ளனர் எனும் அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஏமனில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரின் காரணமாகவும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவும், 5 வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்து இருக்கக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. …

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் பூண்டி அருகே உள்ள கீழ்மடைப் பள்ளம் நீர்த்தேக்கத்தில் கஜா புயலின்போது உடைப்பு ஏற்பட்டது. சீறிப் பாய்ந்த வெள்ளம் விளைநிலங்களில் பயிர்களை அடித்துச் சென்றுவிட விவசாயம் நடந்த தடயமே இல்லாமல் அழிந்து போயுள்ளது. புயல் ஓய்ந்த 3 நாட்களுக்கு பின்பே இந்த பகுதி மக்களின் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடைந்து போன நீர்த்தேக்கத்தை சீரமைக்க அதிகாரிகளை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இதே போல் தாண்டிக்குடியில் புயலும், மழையும் …

ஐநா நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தன் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். …

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலையோரம் வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்களால் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி …

கடந்த 16-ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் சூறைக் காற்றுக்கு பயிர்கள் நாசமடைந்தன. …

தமிழகத்தில் கஜா புயல் தாக்கி 5 நாட்கள்முடிந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மின்கம்பங்களை சீரமைத்து மின்விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரிசெய்ய வெளியூர்களில் இருந்து மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. …

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை காலை பிரதமர் நரேந்திரமோடியை அவர் சந்திக்கிறார். …

இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஹோன்டா நிறுவனம் இருக்கிறது. ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் மட்டும் சுமார் 2.5 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இத்தனை ஸ்கூட்டர்களை ஒரே நிறுவனம் விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறை. ஹோன்டா நிறுவனம் இந்த மைல்கல் விற்பனையை கடந்த 17 ஆண்டுகளில் கடந்து இருக்கிறது. முன்னதாக ஒரு கோடி ஸ்கூட்டர் விற்பனையை ஹோன்டா 13 ஆண்டுகளில் கடந்த நிலையில், …

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2019 அபாச்சி ஆர்.டி.ஆர். 180 பைக் மாடலை வெளியிட்டுள்ளது. புதிய 2019 அபாச்சி ஆர்.டி.ஆர். 180 ஸ்டான்டர்டு மாடலின் விலை 84,578 என்றும், ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை 95,392 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. …

அமெரிக்க நாட்டின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள காம்பிரிட்ஜ் நகரில் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு படிப்பதே பெருமையாக உலகில் கருதிவரும் நிலையில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. …

மகாராஷ்டிர மாநிலம் வார்தா அருகே வெடிபொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். …

தமிழகத்தில் நவம்பர் 19-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் 13 பேரும், பன்றிக்காய்ச்சல் காரணமாக 27 பேரும் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது டெங்கு, பன்றிக்காய்ச்சல், வேகமாக பரவிவருவதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. …

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. புயல் மழையால் நாற்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். …

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. புயல் மழையால் நாற்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தானும் தங்கள் கட்சியும் உயிராகவும் உணர்வாகவும் உடனிருப்பதாகவும் விரைவில் நேரில் சந்திப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். …

இந்தியாவில், சாம்சங் நிறுவனத்தினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் முன்னதாக மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. புதிய கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது. …

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கல் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட நவம்பர் 21தொடர் நாளை நவம்பர் 21ஆம் தேதி துவங்கியிருக்கிறது. …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், பான்கிராட், வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடையும் பான்கிராப்டுக்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது. …

கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக, மாநில அரசு கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 30-க்கும் அதிகமான இருக்கைகள் இருக்கும் மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளில் புகைப்பிடிக்க தனியாக இடம் ஒதுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும் அங்கு 18 வயது நிரம்பாதவர்கள், புகைப்பழக்கம் இல்லாத பொதுமக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். …

ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் அத்துடன் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி மாநிலத் தலைவி பதவி வகித்து வருகிறார் ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி என்ற தமிழ்படத்தில் அறிமுகமாகி தென்னிந்தியாவிலுள்ள எல்லாமொழி படங்களிலும் நடித்துள்ளார். …

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தெலுங்கு பதிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்ததாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். …

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. …

டெல்லியில் காற்று மாசு கடுமையான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது. தீபாவளிக்குப் பின் காற்று மாசு உச்சத்தை எட்டிய நிலையில், இரவில் சாரல் மழை பெய்ததன் காரணமாக தற்போது சிறிதளவு மட்டும் குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். டெல்லியில் காற்று மாசைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்குகிறது. …

தமது சொத்து கணக்குகளை குறைவாக காட்டி நிதி முறைகேடு செய்துள்ளதாக நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் (Carlos Ghosn) மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து ஜப்பானில் கார்லோஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11-ஆம் தேதி உருவெடுத்து, பின்னர் தீவிர புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. இது கடலூர்-பாம்பன் இடையே நாகை அருகே புயலாக வலுக்குறைந்து …

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடந்துவரும் ஐக்மா சர்வதேச மோட்டார் சைக்கிள் கண்காட்சியில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 836சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . பாரம்பரியமான ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ரக மோட்டார் சைக்கிள் மாடல்களை தயாரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் வரிசையில், தற்போது பாபர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான …

உலகக் கோப்பை ஆடவருக்கான ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 27-ஆம் தேதி உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேலும் கட்டாக்கில் உள்ள பிராபாட்டி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 10-வது பெண்கள் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைபிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் வந்த இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியனுமான மேரிகோம், அய்ஜெரிம் கேசனாயேவாவுடன்(கஜகஸ்தான்) காளத்தில் இறங்கினார். இது தலா 3 நிமிடங்கள் வீதம் மூன்று ரவுண்ட் கொண்ட ஆட்டமாகும். முதல் ரவுண்டில் ஆதிக்கம் செலுத்திய மேரிகோம், 2-வது ரவுண்டில் கொஞ்சம் தடுமாறினார். சில குத்துகளை வாங்கிய …

பேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தோடு இணைந்து தங்களது போட்டியாளர்கள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைப் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பர்க் பதவி விலக வேண்டுமென அதன் முதலீட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். …

இந்தியாவில் தற்போது கவாசகி வெர்சிஸ் 1000 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்தியாவில் லிட்டர் கிளாஸ் அட்வென்ச்சர் டூரர் மாடலின் முன்பதிவு கட்டணம் 1.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவு டிசம்பர் 31-ஆம் தேதி அல்லது ஸ்லாட் இருக்கும் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் நவம்பர் 24-ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய எஸ்.யு.வி. காரின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னால் இந்த கார் யு400 எஸ்.யு.வி. என்ற பெயரில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அல்டுராஸ் ஜி4 மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. மேலும் இது மஹிந்திரா பேட்ஜிங் கொண்ட சங்யோங் …

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா குடும்பத்தினர் சார்பில் 50 லட்சம் ரூபாயை தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல்-மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனிடையே, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெறும் எனவும், இதனால், கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யத் தொடங்கும் எனவும் வானிலை மையம் …

கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தை புரட்டிச் சென்றது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் சேதமானது. இதில் குறிப்பாக கொடைக்கானல் மலைப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகர், மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்தது. …

தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சுழன்று அடித்த கஜா புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. …

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவில் மண்டல பூஜை, …

சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பிரியாணி கடைகள் அளவுக்கு அதிகமாக பெருகி வந்துள்ளது. இப்படி தெருவுக்குத்தெரு முளைத்துள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சியின் தரம் பற்றி பலருக்கு தெரிவதில்லை. சிக்கன் பிரியாணியில் கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்படுவதாக முன்னர் …

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.கடந்த மாதம் 17–ஆம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10–50 வயதுக்கு உட்பட்ட பெண்களை ஐயப்ப பக்தர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து …

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் கரையை கடந்தது. தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் நேற்று பிற்பகலுக்கு மேல் திண்டுக்கல், தேனி, போடி வழியாக கேரள மாநிலத்தில் நுழைந்து அரபிக்கடலுக்கு நகர்ந்தது. …

கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 61-வது குடியரசு தின விழா போட்டிகளுக்கான தொடக்க விழா வெண்ணெய்மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். …

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற 14-வது கூடுதல் நீதிபதியாக இருப்பவர் வரபிரசாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் தொடர்ந்து வந்தது. அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிபதியின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் அவருக்கு தெலுங்கானா மற்றும் மும்பையில் பல சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது. நீதிபதி வரபிரசாத் ஊழலில் ஈடுபட்டு வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்து …

அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்ள வடகொரியா ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரின் செண்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு பிறகு வடகொரியா எந்த வித அணு ஆயுத சோதனைகளையும் நடத்தவில்லை. அணு ஆயுத சோதனை தளத்தை அழிப்பதாகவும் வடகொரியா தெரிவித்தது. அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை …

கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உறுதியளித்துள்ளார். …

வங்கக் கடலில் உருவாகிய கஜா புயல், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நாகை, வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியது. இந்த புயல் இன்று அதிகாலை அதிராம்பட்டினத்தில் முழுமையாக கரையை கடந்தது. கஜா புயலின் தாக்கத்தினால் தமிழகத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். …

கஜா புயல் காரணமாக திருச்சியில் அதிகாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததோடு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. …

சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை நேற்று இந்திய மகளிர் அணியின் முன்னணி வீரராக மிதாலி ராஜ் படைத்துள்ளார். முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா நிகழ்த்திய இந்த யை தற்போது மிதாலி ராஜ் முறியடித்துள்ளார். …

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்து தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது. …

மார்ச் 29 ல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் 12வது சீஸனில் மகேந்திரசிங் தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணி குறித்த முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. அணியிலிருந்து மூன்று வீரர்களை விடுவிப்பதாகவும், 22 வீரர்களை அணியில் தொடர இருப்பதாகவும் அறிவித்துள்ளது. …

துருக்கியில் படுகொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகிஜி விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் சௌதி அரேபியாவை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.. …

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் நாள் கையொப்பமாகும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே பாதுகாப்புத் துறை ரீதியமன ஒப்பந்தம் கடந்த திங்கட்கிழமை அன்று கையெழுத்திடப்பட்டது. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இதில் கையெழுத்திட்டனர். …

1970, 80 களில் பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக ஜாவா இருசக்கர வாகனம் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை இந்தியாவில் 1970-களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் மனதை கவர்ந்த வாகனங்களில் முக்கியமானது ஜாவா. சீறிப் பாயும் ஜாவாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. ஆனால் பிற்காலத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. …

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 125 அடி உயர சிலை வைக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். மாண்டியா மாவட்டத்தில் ரூ.1,200 கோடி செலவில் காவிரி தாய்க்கு சிலை வைக்கப்பட இருக்கிறது. தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் ஜீவநதியாக விளங்கி வருவது காவிரி ஆறானது, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி கரைபுரண்டு ஓடி …

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

கஜா புயல் கரையை நெருங்குவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, கடலோரக் காவல்படை, பேரிடர் மீட்புக் குழு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தயார் நிலையில் உள்ளனர். கஜா புயல் பற்றிய எச்சரிக்கை வந்ததில் இருந்து 4 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன், குந்துக்கால் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் லேசான மழைத் தூறல் தொடங்கியுள்ளது. …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, சபரிமலைக்கு இளம்பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தரிசனத்துக்கும் பெண்கள் அதிகளவு வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போராட்டக்காரர்களை சமாளிக்கவும் இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

இரண்டு வருடங்களுக்கு முன்னர், கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த 'பிக்செல்' ஸ்மார்ட் போனில் இருந்த புகைப்படக் கருவியின் புகைப்படத்தின் தரம், வேறு எந்த ஸ்மார்ட் போனிலும் இல்லாத அளவில் தரமாக. அந்தத் தரத்தை மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் எட்டுவதற்கு முன்னரே கூகுள் பிக்செல் தனது ஸ்மார்ட் போனில் மேலும் ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது, இருட்டில்கூட மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும் படம் எடுக்கும் திறனை கொண்டது, இதனை ஆங்கிலத்தில் …

2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் 70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக இந்தியா …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். நடை திறக்கப்பட்ட மறுநாளான 17-ஆம் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடக்க இருக்கிறது. அடுத்த மாதம் 27-ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. …

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டு தோறும் குளிர்காலத்தின் போது உறை பனியும், பனிப்பொழிவும் கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் உறைபனி காணப்படுகிறது. ஸ்ரீநகரில் கடுமையான பனிமூட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த டால் ஏரி வெறிச்சோடி காணப்படுவதால் படகு சவாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் அடர்ந்த பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். …

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதி சீற்றமின்றி இயல்பாகவே காணப்படுகிறது. பாம்பன், தங்கச்சிமடம், தேவிபட்டினம், திருப்பாலைகுடி ஆகிய இடங்களில் கடலில் எந்த மாற்றமுமின்றி வழக்கம் போலவே காட்சியளிக்கிறது. இருந்த போதிலும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அரசின் அறிவுறுத்தலின் படி குறிப்பிட்ட இடைவெளிவிட்டு பாதுகாப்பாக படகை நிறுத்திவைத்துள்ளனர். இந்நிலையில் இராமேஸ்வரம் அக்னி …

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. …

தற்போது தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சுமார் 100 பேரும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 100 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருப்பதாகவும் தற்போது அரசு மற்றும் …

அக்னிஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்கிறார்கள். …

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002-ஆம் ஆண்டில் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். …

2019 ஜனவரி முதல் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக நோக்கியா நிறுவனத்தின் அனுபவமிக்க செயல் அதிகாரி ஆசிஷ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். …

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில் நுட்பத்தில் தொலைத்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு, சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி 18 நிமிட நேர 'கவுண்ட் டவுன்' நேற்று மதியம் 2 மணி 50 நிமிடத்தில் தொடங்கியது. இதையடுத்து செயற்கைக்கோளை …

டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் தமிழ்நாடு சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் தமிழக போலீசார் மீது திகார் ஜெயில் கைதிகள் மனித உரிமையை மீறி தாக்கியதாக புகார் செய்திருந்தனர். …

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிய இருக்கிறது. அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது . அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் பணிகள் ஒரு ஆண்டு முன்பே தொடங்கிவிடும். …

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார். ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை 14-ஆம் தேதி கூட்டி சிறிசேனா …

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்துக்குக் வடகிழக்கே 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறும் என்றும், பின்னர் வலுவிழந்து நாளை மாலையில் பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்தது. …

கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள். …

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார் . சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். …

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது 70-வது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. 7 அடி உயரத்தில் திறக்கப்பட்ட இந்தச் சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சிலையை மாற்றியமைக்க அ.தி.மு.க. …

36 ரஃபேல் ரக போர் விமானங்களை, பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. …

பாஜக எம்.எல்.ஏ. திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துலே சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் அனில் கோடே. இவர் கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றார். …

திமுக தலைவர் முக ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று நேரில் சந்தித்தார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். …

இந்தியாவில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் ஐபேட் ப்ரோ 2018 விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய வெளியீட்டு தேதியை ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மூலம் தெரியாவந்துள்ளது. மேலும் இரண்டு டேப்லெட் மாடல்களும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. …

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது வரும் ஜனவரி 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. …

நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் 26 ஆயிரத்து 300 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், 408 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் வழக்குகள் காரணமாக மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. …

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஐயப்ப பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடைத்திறக்கும் போது தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். இதுவரை சென்னையிலிருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரள மாநிலம் செங்கண்ணுார், திருவல்லா நகரங்களுக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து பத்தனம்திட்டா வழியாக தான் பம்பைக்கு அதிகளவில் ஐயப்ப …

3,000 கோடி ரூபாயை மேக் இன் ஒடிசா திட்டத்தின் கீழ் ஒடிசாவில் முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில், மேக் இன் ஒடிசா மாநாடு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்றது. …

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கார்களை குத்தகைவிட திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு காரை 5 வருடம் வரை குத்தகைக்கு எடுக்கமுடியும் என தெரிகிறது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கேயூவி 100, டியூவி 300, ஸ்கார்ப்பியோ, மராஸோ மற்றும் எக்ஸ் யூ வி500 கார்களை குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ளது. …

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16- ஆம் தேதி நிறுவ திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னாள் திமுக தலைவரான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது சிலையை, வரும் 15-ஆம் தேதி நிறுவ திட்டமிடப்பட்டது. …

ஏழு பேர் விவகாரம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்ற மாயையை உருவாக்குகின்றனர் எனவும், ஏழு பேர் குறித்த கேள்வியை தம்மிடம் தெளிவாக கேட்கவில்லை என்றும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வது குறித்த கேள்விக்கு, ஒருவருக்கு எதிராக பத்து பேர் ஒன்று சேர்ந்தால் யார் பலசாலி என்று ரஜினி எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். …

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தீபாவளிக்கு பின் 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. …

மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கீக்கு வழங்கப்பட்ட விருதைப் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேசனல் திரும்பப் பெற்றுக்கொண்டது. மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியதற்காக ஆங் சான் சூ கீக்குப் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேசனல் கடந்த 2009-ம் ஆண்டு அம்பாசடர் ஆப் கன்சயின்ஸ் என்னும் விருதை வழங்கிச் சிறப்பித்தது. …

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்கியதும் புயல் தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாகி உள்ளது. தற்போது தமிழகத்தில், கஜா புயல் பரபரப்பு ஏற்பட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை தாக்கிய முக்கியமான புயல்களை பற்றி தெரிந்துக் கொள்வோம். …

கடந்த 2013 -ம் ஆண்டு, இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் சமந்தா இணைந்து நடித்த அத்திரண்டிகி தாரேதி’ என்ற வெளியானது. இந்தப் படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தை கன்னடம் மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி தமிழில் இயக்குக்கிறார். …

தென் மேற்கு அயர்லாந்து கடற்கரை பகுதியில் பிரகாசமான வெளிச்சமும், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (பறக்கும் தட்டு?) ஒன்று, தென்பட்டதாக சொல்லப்பட்டது. குறித்து ஐரீஷ் விமான போக்குவரத்து ஆணையம் விசாரித்து வருகிறது. …

உலக நாடுகளை போல நதிகள் வழியாக உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1986-ம் ஆண்டு, கங்கை- பாகிரதி-ஹூக்ளி நதியமைப்பில் ஹால்தியா-அலகாபாத் இடையிலான ஆயிரத்து 620 கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நீர்வழி எண் ஒன்றாக அறிவிக்கப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வந்தது. …

மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் இன்று காலமானார்.மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தனது மதிப்புமிக்க நண்பரை இழந்து விட்டதாகவும் , இளம் வயதில் பொது வாழ்க்கையில் நுழைந்த அவர், சிறந்த தலைவராக விளங்கியதாகவும் ,அனந்தகுமாரின் நல்ல செயல்கள் அவரை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்றும் அந்த இரங்கல் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். …

மக்கள் விரும்பி சாப்பிடும் ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசிகள் இருந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …

நாகை மாவட்டத்துக்கு வடகிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், வரும் 15ஆம் தேதி முற்பகலில் நாகை-சென்னை இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. …

சான் பிரான்சிஸ்கோ நகரின் செயின்ட் போனிபேஸ் தேவாலயம் உறைவிடமற்ற ஏழை எளிய மக்களின் உறைவிடம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ளது செயின்ட் போனிபேஸ் தேவாலயம். இந்த தேவாலயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் கிட்டத்தட்ட 15 வருடங்களாக உறைவிடமற்ற ஏழை எளிய மக்களுக்கு தங்கள் தேவாலயத்தில் தங்கவும், தூங்கவும் இடம் கொடுத்துள்ளார்கள்.தினமும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தேவாலயத்தில் உள்ள நீளமான இருக்கைகளில் தூங்கவும், இளைப்பாராவும் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருபவர்களுக்கு ஆலயத்தில் கம்பளங்கள் …

முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாளை முன்னிட்டு பிரான்ஸில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற சிறப்பு மாநாடு நடைபெற்றது. 1914- ம் ஆண்டு ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினான்டு என்பவரை செர்பியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுட்டுக் கொன்றார். …

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையானதை தொடர்ந்து, மேலும் 52 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15ஆம் தேதி சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நிலையில், வட தமிழக பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவான கஜா புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 840 …

வாழ்வு என்பது பெருஞ்சிக்கல்கள்நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் மனிதர்களின்அக உலகம் அத்தனை ரகசியங்களைஉள்ளடக்கியதாக இருக்கிறது. உலகமெங்கும்எத்தனையோ கலைஞர்கள் மனித மனத்தின்வரைபடத்தை வரைந்து காட்ட இந்த கணம்வரை முயன்று வருகின்றனர். ஆனாலும்புதையலின் இடம்சொல்லும் துண்டுதுண்டாய்உலகெங்கும் வீசப்பட்ட வரைபடத்தாளின்துணுக்கு போல இன்னும் மீதி இருப்பதாகநீண்டு கொண்டே செல்கிறது.எப்படித் தான்மனித மனத்தை முழுவதுமாக அறிவதுஎன்றொரு கேள்வி என்றும் நம் முன் இருந்துகொண்டிருக்கிறது.மேலும் இங்கு நமக்கு பூரணதனிமனித சுதந்திரம் இருக்கிறதா ? என்றவினாவையும் தொடர்ச்சியாக எழுப்பியபடிதான் உள்ளோம். …

அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. …

பூடான் நாட்டை சேர்ந்த பூம்சு ஜாங்மோ என்கிற பெண்ணிற்க்கு கடந்த 15 மாதங்களுக்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் வயிற்றால் ஒட்டிப் பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது …

அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்கட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 1 முதல் 6-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்ததும், இவ்விவாகாரம் குறித்து சுகாதாரத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய 6 பேர் கொண்ட குழுவை மருத்துவமனை நிர்வாகம் அமைத்துள்ளது. …

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அரசியல் சூழ்நிலை பரபரப்பாக காணப்படுகிறது. …

சத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். ஜாக்தால்பூரில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நகரங்களில் வாழும் நக்சலைட்கள் குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். அவர்கள் வெளிநாடுகளில் படித்தவர்கள். …

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக இது குறித்து ரஷ்யா நாட்டின் ஏற்பாட்டின் படி மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்துக் கொள்ள இருக்கிறது. ரஷ்யா நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ம் தேதி இந்த பேச்சுவார்த்தைக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் நாடு திடீரென விலகியதால், அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தற்போது 2-வது …

நகர்புற நக்சல்கள், ஏசி அறைகளுக்குள் அமர்ந்துக் கொண்டு, அரசுக்கு எதிரான வெறுப்பு அரசியலை, பரப்பி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜக்தால்பூரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, வாக்குவங்கி அரசியலுக்காக, மாவோயிஸ்டுகளுக்கு பாதுகாப்பு அளித்து, காங்கிரஸ் அவர்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். …

விஜய் நடித்த சர்க்கார் படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லியை எதிர்மறையாக பயன்படுத்தியிருப்பதாகவும், இலவச திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் காட்சி இருப்பதாகவும் கூறி அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சர்கார் படத்தை திரையரங்குகளில் திரையிட முடியாத சூழல் ஏற்பட்டது. …

தமிழகம் முழுவதும் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ராவுத்தூரை சேர்ந்த புஷ்பா என்பவர் கடும் காய்ச்சலால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார். பன்றிக்காய்ச்சல் இருந்ததால் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். …

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்பட விவகாரத்தில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருக்கும் விவகாரத்தில்,பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. …

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் கட்சி ஏற்கெனவே வெளியேறிவிட்டது. …

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் …

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் அடுத்த வாரத்தில் நான்கு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்கா- ஆசியன் உச்சி மாநாடு, சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். …

வட இந்திய மக்களின் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்றான, ரசகுல்லா தற்போது நாடு முழுவதும் பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாக விளங்குகிறது. பால், எலுமிச்சை சாறு, சர்க்கரை பாகு ஆகிய கலவை மூலம் ரசகுல்லா தயாரிக்கப்படுகிறது. சர்க்கரைப் பாகில் பந்து வடிவில் ஊற வைத்துக் கொடுக்கப்படுவதால் ரசகுல்லா தனித்துவமான சுவையுடன் இருக்கிறது. …

தமிழகத்தில் ,தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி மறுத்தது. …

தமிழகத்தில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச லேப்டாப்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. …

முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா, யாக சாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், …

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று இரவு 8 மணி அளவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது என்றும், இதற்காக பிரதமர் மன்னிப்பு கேட்க கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நவம்பர் 8-ம் தேதி காங்கிரஸ் …

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து கேரளாவில் போராட்டம் தொடர்கிறது. கடந்த 5-ம் தேதி சிறப்பு பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டது, அப்போது இருமுடிக்கட்டு இல்லாமல் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினர் சங்கர்தாஸ் என்பவர் 18-ம் படியில் ஏறியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினராக பதவியேற்றப் போது இந்துமத வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதாக மேற்கொண்ட உறுதியளிப்பை சங்கர்தாஸ் மீறிவிட்டார் என்றுக் …

இந்தியாவில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் சிறப்பு விமானம் மூலம் நேற்று முன் தினம் டெல்லி வந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதன்பின் உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார். அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டு …

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும், மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும், 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 30-ம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் …

தென் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து தாழ்வு பகுதியாக மாறியுள்ளதால் தமிழகம், புதுவையில் கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சொல்லியிருக்கிறது. …

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாளிலும் தீபாவளி அன்றும் மதுவிற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியன்று டாஸ்மாக் விற்பனையில் ஒரு புதிய சாதனையே ஏற்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அடிதடியில் ஈடுபட்டவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். …

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமல்படுத்தியுள்ளது. நவம்பர் 5- ம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த பொருளாதார தடை இதுவரை இல்லாத மிக கடுமையானது என்று கூறப்படுகிறது. இந்தப் பொருளாதாரத் தடையால், அணு ஆயுதங்கள் தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. …

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜி‌.எல்.இன் சி.இ .ஓ.வான சுந்தர் ராமசாமி, தமிழ்நாட்டில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க தனி விமானத்தில், பாதுகாவலர்களோடு இந்தியா வருகிறார். அப்போது சுந்தரின் வாக்கை முகம் தெரியாத யாரோ ஒருவர் போட்டு விட கோபத்தில் சட்ட ரீதியான அணுகுமுறையின் மூலம் நீதி மன்றம் சென்று தனக்கான வாக்கைக் கைப்பற்றி, ஜெயித்த ஆளும் கட்சியின் பதவியேற்பு விழாவை ஒத்தி வைக்கிறார். சுந்தருக்கு நிகழ்ந்தது போன்றே தங்களுடைய ஓட்டைக் …

அமெரிக்க காங்கிரஸ் என்று அழைக்கப்படும், அமெரிக்க பாராளுமன்றம் செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 435 ஆகவும் இருக்கிறது. …

ஆப்கானிஸ்தானில் வடக்கே பன்ஷீர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் குழந்தைகள் அனைத்தும் உயிரிழந்து விட்டன. …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்களை 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. …

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அரிஹந்த் என்னும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட அணுசக்தி நீர்மூழ்கி போர் கப்பல் 2016-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. தொடர்ந்து 10 மாதங்கள் வரை கடலுக்கு அடியிலேயே இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல் தனது வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. …

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். …

கர்நாடக மாநில இடைத்தேர்தலில் நடந்த 5 தொகுதிகளில் 4 தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 3-ம் தேதி கர்நாடகாவில் ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை மற்றும் ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஷிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ராம்நகரம் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா …

பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'அத்தழப்பூஜை’ எனப்படும் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒருநாள் மட்டும் தரிசனத்துக்காக திறக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. அதனால், இன்று நடை திறக்கப்படுவதை முன்னிட்டு சபரிமலை பகுதியை சுற்றி கடந்த 24 மணிநேரமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலக்கல் மற்றும் பம்பை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதன்முறையாக, …

மகன் : எப்பா ! படக்கு வெடிக்காண்டாமா ? அப்பா : இரு மக்கழே ! பீசிமாரு நிக்கானுவளா’ன்னு பாத்துட்டு வாரென் ! மகன் : அது யாருப்பா ? அப்பா : போலீஸ்காரனுவோ ! மகன் : படக்கு உட்டா போலீசு என்னப்பா செய்யும் ? அப்பா : ஒன்னய ஒண்ணும் செய்யாது ! என்னயும் ஒங்க அம்மையையும் கொண்டு போயி கொல்லுவானுவோ ! …

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது, முன்னாள் வீர்ரகள் கெளவுரவிக்கப்படுவார்கள். அவர்கள் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைப்பார்கள். நேற்றைய போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்தார். …

ஆடி மாதத்தில் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குப் பிடித்த பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக நடக்கிறது. அதுபோல தான் இங்குள்ள அவ்வையார் அம்மன் வழிபாடுகளும் பிரசித்தம் பெற்றவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையார், முப்பந்தல்,சீதப்பால்,குறத்தியறை என மூன்று இடங்களில் வழிபடப்படுகிறார். சீதப்பால் மற்றும் குறத்தியறை ஊர்களில் உள்ள அவ்வையார் கோயில்கள் சமண சமயத்து …

இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆளுநர் சத்யபால் மாலிக் ஜம்முவில் தலைமை செயலகத்தில் நடந்த ராணுவ மரியாதை அணிவகுப்பில் கலந்துக் கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது அரசின் சாதனைகளை பற்றி குறிப்பிட்டார். அவர், கடந்த மூன்று மாதங்களில், தீவிரவாதத்தில் ஒரே ஒரு இளைஞர் இணைந்துள்ளார். …

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் …

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சர்வதேச புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். உலகின் பல நாடுகளில் இருந்து பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் கண்காட்சிக்கு வரும். இந்த ஆண்டு தமிழ் பதிப்பகங்கள் முதன் முதலாக கண்காட்சிக்கு வந்துள்ளன. இதனால் தமிழ் வாசகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். …

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியான ,பாண்டிப்போரா மாவட்டத்தில் காஷ்மீரின் குரேஸ் துறைக்கு சென்று அங்கு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2016 -ம் ஆண்டு பிரதமர் மோடி ஹிமாச்சல பிரதேசத்தில் தீபாவளியை கொண்டாடினார். …

வருகிற நவம்பர் 28-ம் தேதி மிசோரம் மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 40 பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. …

நிலவேம்புக் கசாயம் வழங்க திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“மக்கள் பணியே மகேசன் பணி” என அண்ணா வகுத்தளித்த நெறியில் கலைஞர் நடந்த வழியில், தி.மு.க. தொடர்ந்து தொய் வின்றிச் செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டையே அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. …

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலத்துடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமகள் துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சுடர்விடும் தீபங்களின் …

இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கைது செய்தது. அதன்பின்னும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் …

யாருக்கும் அடிமையில்லை. எதற்கும் உரிமையில்லை. நானாக நான் போகும் வழியில் எனக்காக நானே! எப்பொழுதும் நானே! துணையென்று ஏதுமில்லை. துயரென்றும் ஏதுமில்லை. மௌனங்களின் மோகனத்தில் ஓசைகள் தேவையில்லை. உன்னோடு நான் என்றெதலாம் வெறுமெழுத்தே. …

கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவராக நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி கார்த்திக் என்பவர் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நாங்குநேரி அருகே அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் மற்றும் சிலர் சேர்ந்து பஸ்கள் மீது கல்வீசியது தெரியவந்தது. …

கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி 4 ஆயிரத்து 72 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 158 கன அடியாக இருந்தது. இன்று 6 ஆயிரத்து 8 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. …

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இரண்டாவது முறையாக கோவில் திறக்கப்பட உள்ளது. சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்கள்கிழமையான இன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை …

நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என அந்நாடு மிரட்டல் விடுத்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் …

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி திருமணம் செய்தார். ஆனால், திடீரென சசிதரூருடன் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. …

தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க, கலாச்சாரத்தை பறைசாற்றும் பல கோயில்களும், வரலாற்றுச் சின்னங்களும் பராமரிப்பு இன்றி வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறைக்கு வடகிழக்கில் 4 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் ,திருவனந்தபுரத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும் ,மார்தாண்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் 'சிதறால் ’என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில் ’ இருப்பது மிகப் பெரிய குடைவரை …

10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலையை சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கான நில அளவீடு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ்மனூஸ், வளர்மதி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நில உரிமையாளர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். …

தூசி மண்டிக் கிடந்த பரணை தூர்வாரினேன்... எதேச்சையாக கல்லூரி புத்தகமொன்று கையில் கிடைத்தது.. என் விரல்ரேகைகளை விட அவளின் கைத்தடங்களே எஞ்சியிருந்தது.. …

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹேரியர் மாடலின் கான்செப்ட் கார் H5X என்ற பெயரில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாக இருக்கும் முன்னதாகவே ஹேரியர் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் பலமுறை லீக் ஆனது. அந்த வகையில் ஹேரியர் கார் பெங்களூருவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. …

இமாச்சலப்பிரதேசத்தின் முக்கிய பகுதிகளான சிம்லா, மணாலி, நார்கண்டா, கல்பா மற்றும் சாங்கலா ஆகிய மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இங்குள்ள மரங்கள் எல்லாம் பனியால் சூழப்பட்டிருக்கும். தற்போது இமாச்சலப்பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் சோலங்க் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பனிப்பொழிவால் அங்குள்ள சாலைகள் பனியால் மூடப்பட்டன. வீடுகளின் கூரைகளும், சுற்றுப்புற பகுதிகளும் பனியால் சூழப்பட்டுள்ள நிலையில் மரம், செடி, மீது பனி படர்ந்துள்ளது. …

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு சிலை. விளம்பர செலவுக்கு 5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளனர். …

மஹாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 13 பேரை அவ்னி என்ற பெண் புலி கடித்துக்கொன்றதாக நம்பப்பட்டது. யாவாத்மல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பீதியை கிளப்பிய அவ்னி புலியை கொல்ல உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆன்லைன் மூலமாக கோரிக்கைகள் அனுப்பட்டன. …

தினசரி நாம் கடந்து செல்லும் பாதைகளின் ஓரம் பழங்கால கல்மண்டபங்கள் காட்சி தரும். அதை கண்டும் காணாதபடி சென்றுக் கொண்டிருக்கும் போது, பெரிய நீண்ட வரலாறுகளை தன்னுள் மறைத்துக் கொண்டு காட்சி பொருளாக,சிதிலமடைந்து சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் மவுனமாக நிற்கிறது. காட்சிக் கொடுக்கிறது. கேட்பாரற்று நிற்கும் கல்மண்டபங்களை தனியார்களும் வளைத்துப் போட்டுள்ளனர். புராதான நினைவு சின்னங்களை காக்க வேண்டிய நமது அரசும் கண்டுக் கொள்ளாமல் இருப்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு வேதனையாகத் தான் …

அக்டோபர் 2-ம் தேதி, அது ஒரு வியாழக்கிழமை. இந்தியா முழுவதும் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடங்கள் களைக்கட்டி கொண்டிருந்தன. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 78 வயதை கடந்து 79 வது வயதுக்குள் காந்தி நுழைந்தார். சுதந்திர இந்தியாவில் அது தான் காந்தியின் முதல் பிறந்த நாள். சுமார் 40 ஆண்டுகள் நாட்டுக்காக, மக்களுக்காகபோராடியவர் காந்தி. ஆனால் இந்த பிறந்த நாள் அவருக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சியைத் தரவில்லை. …

கர்நாடகா மாநிலத்தில் காலியாக இருந்த ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததிருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. தேர்தல் நடக்கும் 5 …

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு வேகம் காட்டியது. கடந்த மாதம் 17-ம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை …

கீழடி குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "சிவகங்கை மாவட்டம் கீழடியில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் 2218 ஆண்டுகளுக்கு முந்தியவை என கரிமப் பகுப்பாய்வில் தெரிய வந்திருப்பதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது. தமிழர் நாகரிகப் பெருமையை குலைக்க பல சதிகள் நடந்தும், அவற்றை முறியடித்து இந்த உண்மை உறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. …

கடந்த சில மாதங்களுக்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் திருவாரூர் சட்டமன்ற தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியும் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. மேலும் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதையடுத்து காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் வரும் ஜனவரியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. இந்த இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி, தோல்வி ஆட்சியை நிர்ணயிக்கும் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக …

சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறை மீது வழக்கு பதிவு செய்யாததால், விசாரணை நடத்தும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் உள்பட 7 பேர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு ஐகோர்ட் மதுரை கிளை …

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவராக கடந்த மார்ச் மாதம் இயக்குனர் கே.பாக்யராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன் பின் பேச்சுவார்த்தை சமரசம் ஆகாததால், செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என்று …

கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே சுற்றுலா தான். அதில் முக்கியமான இடம் முட்டம். பல திரைப்படங்களில் அழகாகக் காண்பிக்கப்பட்டதும், 'கடலோரக் கவிதைகள்' படத்தின் கதைக்களமாய் அமைந்ததும், அந்தப் படத்தில் சத்யராஜ் மீன் பிடித்து வந்து கொடுத்த இடமும் முட்டம் தான். இந்தக் கடற்கரையில் தான் ஜெனிபர் டீச்சரான ரேகா குடை பிடித்தவாறு நடந்து வருவார். 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் சின்னப் பசங்ககூட கார்த்திக்கும், ராதாவும் ஒளிந்து விளையாடும் இடமும் முட்டம் தான். …

கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை முறையாக நடத்த இந்து சமய அறநிலையத்துறை தவறி விட்டதால், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழுவை நியமித்து கோவிலை நிர்வகிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதி கேசவலு அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. …

இராமாயணமும், புராணக்கதைகளும் பண்டைய காலங்களில் எளிய மக்களைச் சென்றடைய தோல் பாவைக்கூத்து என்னும் கலை ஒரு ஊடகமாகத் திகழ்ந்தது. இன்று இந்த கலை அழிவின் விளிம்பில் இருப்பது ஒரு ஆகப் பெரிய சோகம். தோல்பாவைக் கூத்தானது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இன்னமும் இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை,தூத்துக்குடி,கன்னியாகுமரி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடந்து வருகிறது. தோல்பாவைக் கூத்து தற்போதைய காலகட்டத்தில் நலிந்து …

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குனர் கே.பாக்கியராஜ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். சர்கார் பிரச்சனையில், எழுத்தாளர் சங்கத்தினர் தனக்கு ஆதரவாக இல்லை என்கிற குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த சம்பவம் சினிமா துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. …

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வனத்துறையில் 300 வனவர் பணிக்கும், 726 வனக்காப்பாளர் பணிக்கும், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் என மொத்தம் 1,178 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் இணையவழி (ஆன்லைன்) மூலமாக தேர்வு நடத்த உள்ளது. இந்தப் பணியிடங்களில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்வித் தகுதியாக, …

தீபாவளி பண்டிகை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் " தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ற தலைப்பில், பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும், …

தமிழகத்தில், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி மறுத்தது. …

தமிழகத்தில் முக்கியமான ஆறுகளான காவிரிக்கும் தாமிரபரணிக்கும் தமிழ் கலாச்சாரங்களோடு நெருங்கிய தொடர்பு உண்டு .காவிரி கரையில் எப்படி இசையும், நடனமும் வளர்ந்ததோ, தாமிரபரணி கரையில் தமிழும், தேசியமும் வளர்ந்தது. அப்படி தாமிரபரணி கரையில் கிடைத்த சோம சுந்தரநாவலர், கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை, தேவநேயபாவண்ணர், ஆப்ரகாம் பண்டிதர், திருக்கூட சுந்தரம்பிள்ளை, வ.உ.சி, வையாபுரி பிள்ளை போன்ற தமிழறிஞர் வரிசையில் தமிழுக்கு கிடைத்த சொத்து ச.வே.சு.என்று அழைக்கப்படும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன். …

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து மின்னல் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்து வந்ததது. …

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை 35 சதவீதம் வரை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால் பொருளாதாரத் தடை விதிப்பில் இருந்து அமெரிக்க நாடானது இந்தியாவுக்கு விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த நிதியாண்டில் 22 மில்லியன் டன் கச்சா எண்ணெயை ஈரானில் இருந்து இந்தியா …

உலக தங்க கவுன்சில் '3வது காலாண்டு தங்க "த்வை ட்ரெண்ட்ஸ்' அறிக்கையின் படி,மதிப்பு அடிப்படையில்,நாட்டின் செப்டம்பர் காலாண்டில் தங்கத்தின் தேவை 14 சதவீதம் உயர்ந்து 43,800 கோடி ஒப்பிடும்போது. 50,090 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இந்தியாவின் தங்கத்தின் தேவை செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்து 183.2 டன்னாக இருந்தது. இதனால், விலைகள் கணிசமாகக் குறைந்துவிட்டன என உலக தங்க கவுன்சிலான டபிள்யுஜிசி தெரிவித்துள்ளது. …

அனைத்து மக்களும், அவர்களுக்கான உரிமையைப் பெற்று வாழவேண்டும் என நினைத்தவர் பெரியார். அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக தான் போராடினார் எங்களுக்காக போராட வில்லை என்று தலித்திய அமைப்புகள் சரியான புரிதல் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தன. இந்த பிரச்சாரத்துக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் சிறுசிறு பிரசுரங்களை வெளியிட்டு வந்தன. ஆனால் இவை அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக ஒரு முழுமையான தொகுப்பு வரவில்லை. அதனை ப.திருமாவேலன்'ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் …

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது. நவம்பர் 1-ம் தேதி பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை …

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த மோதல் உச்சத்தை எட்டிவந்த நிலையில் கடந்த வாரம், விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக அதிபர் சிறிசேனா நீக்கிய , முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராகவும் நியமித்தார். …

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 21 முதல், ஜனவரி 18 வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரியப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யஉள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. …

ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் பீவெர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

வருகிற தீபாவளி அன்று 30 சதவீத போனஸ் வழங்கக்கோரி போரட்டம் நடத்த உள்ளதாக "108 ஆம்புலன்ஸ்" ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்து இருந்தனர். 5 -ம் தேதி இரவு முதல் 6 -ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு கொடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக சமூக ஆர்வலர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது …

உலகில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கமாக நடந்து வருகிறது. இது 50-க்குள் இருந்தால் நல்ல காற்று, 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசமானது, 301-400 மிக மோசமானது, 401-500 மிக மிக மோசமானது என்று அர்த்தம். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று முன் தினம் பகல் 3 …

பாகிஸ்தானும் சீனாவும் தங்களுக்கு இடையே எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக மட்டுமே சீனா எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேதான் எல்லைத்தொடர்பு இருந்தது. பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதால், இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை தொடர்பு தடைபட்டுள்ளது. …

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின், 143வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறதுது. இந்த நாளில் சரடர் பட்டேல் நம் நாட்டிற்காக செய்த தியாகங்களை போற்றும் வகையில் குஜராத் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்ட அவரின் உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். …

கேரளாவில் அக்ஷரலக்ஷம் என்ற திட்டத்தை மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தேர்வுளும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்பவர்களின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு அறிவு மற்றும் கணித அறிவு உள்ளிட்டவைக்கு சோதனை தேர்வு வைக்கப்படும் . அதில் தேர்ச்சி அடைபவர்களுக்கு "எழுத்தறிவு பெற்றவர்" என்று சான்றிதழ் வழங்கப்படும். …

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று, ஐயப்பனை தரிசிப்பதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் 28-ம் தேதி 5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும், சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக …

நவம்பர் 2- ம் தேதி 'பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் பத்திரிகையாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலை பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியா மீண்டும் ஒருமுறை இடம்பெற்றுள்ளது. கடந்த 11 ஆண்டாக இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறுகிறது. இதில் இந்தியா 14 வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் …

திருப்பதி திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி, ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து திருப்பதி கோயிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமலையில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் …

கடந்த வாரம் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் எனத் தெரிவித்திருந்தார் . 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா பேசியதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி ஜப்பான் …

இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிறுவன தலைவர் பதவியை அனுபம் கேர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு, கஜேந்திர சவுகானின் பதவிகாலம் முடிந்ததைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிறுவன தலைவராக அனுபம் கேர் நியமிக்கப்பட்டார். …

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஓன்று தொடரப்பட்டிருந்தது, அதில் சரியான மருத்துவச்சீட்டு இல்லாமலும், காலாவதியான போலி மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், மேலும் மருந்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் மருத்துவர் பரிந்துரை செய்யவேண்டும் என விதி உள்ளது, …

தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. தீபாவளி அன்று இரவு …

தமிழிலக்கியப் பரப்பில் மலையாள மொழிபெயர்ப்புக்கென தனி இடத்தை அடைந்திருப்பவர் கே.வி.ஜெயஸ்ரீ. மலையாளத்தில் இருந்து இவர் மொழிபெயர்க்கும் படைப்புகளுக்குத் தமிழில் பெரும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் பால்சக்காரியா கதைகள், மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள், சந்தோஷ் ஏச்சிகானத்தின் கதைகள் தமிழ் வாசகப் பரப்பில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவை. திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, நல்லி திசைஎட்டும் விருது, தினமணி …

அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை விசாரித்து வந்த 3-வது நீதிபதி சத்திய நாராயணன், கடந்த சில நாட்களுக்கு முன் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்தார். அதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்பது குறித்து டிடிவி தினகரனோடு தீவிர ஆலோசனை நடத்தினார்கள். …

இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேலின் சிலையில், தமிழ் மொழிபெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘statue of unity’ என பெயரிடப்பட்டுள்ளது. …

பொதிகைமலையில் உற்பத்தியாகி பெருஞ்சாணி அணைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு பல கிளைகளாகப் பிரிந்து பல்வேறு ஊர்களோடே பயணித்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றி விட்டு இறுதியாக மணக்குடி காயலில் கலந்து கடலோடு கலக்கும் உன்னத நீர்நிலைதான் பழையாறு. ஆறு கடலோடு கலக்கும் பகுதியை பொழிமுகம் ( Estuary ) என்று அழைப்பார்கள். மணக்குடி காயலில் அலையாத்திக் காடுகள் எனப்படும் மாங்க்ரோவ் காடுகள் உள்ளன. இந்தக்காடுகள் கடுமையான கடல் சீற்றம் மற்றும் பேரலைகளைத் தடுக்கும் …

மும்பையில் உள்ள பாந்த்ராவில் இன்று நண்பகலில் நடந்த தீவிபத்தினால் அறுபதுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. மும்பை பாந்த்ரா தீயணைப்பு நிலையத்துக்கு எதிரே உள்ள லால்மதி குடிசைப் பகுதியில் இன்று நண்பகலில் ஒரு வீட்டில் பிடித்த தீ காற்றின் வேகத்தினால் அருகில் உள்ள மற்ற வீடுகளிலும் வேகமாக பரவியதில் அறுபதுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாயின, தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் 12 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து …

''மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்'' அதாகப்பட்டது பேரன்புடையோரே! மலை போன்ற துன்பம் உங்களது முன்பாக அணிவகுத்து நின்று, நீங்கள் மண்ணாய்ப் போகும் தருணம் ஏற்பட்டு, காடு ( சுடுகாடு ) மேற்கொள்ளும் சூழ்நிலை வரும் போது, மணி போன்ற நீர் ( உற்சாகபானம் ) நிழல் போல நின்று உங்களை அரண்போல காக்கும் என்று மேற்கண்ட குறளை நீங்கள் மொழிபெயர்ப்பீர்களானால் திருவள்ளுவரின் ஆத்மா உங்களைப் பிய்ந்த செருப்பால் அடிக்கக் …

இந்தியாவில் முதல்முறையாக ஹௌராவிற்கும், புதுடில்லிக்கும் இடையே இஞ்சினில்லாமல் இயங்கக் கூடிய ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. இம்மாதிரியான ரயில் இந்தியாவில் இதுவே முதன்முறையாக அறிமுகமாகி உள்ளது . இந்த ரயிலுக்கு ரயில்-18 என பெயரிடப்பட்டுள்ளது. …

தடித்த மீசையும் வெடித்த பார்வையும் அழுக்கு கரங்களாக மட்டுமே அப்பாவை பலபேருக்கு தெரியும்... முந்தின வாழ்கையில் குடித்த மதுவும் பிந்தின வாழ்கையில் போட்ட சண்டைகளுமே அப்பாவுக்கான முகவரிகள்... கல்லுக்குள் ஈரம் என்று கவிஞர்கள் சொல்வது.. மற்றவர்களுக்கு எப்படியோ.... அப்பாவுக்கு மட்டும் அப்படியே பொருந்தும். .. …

தன் சுண்டு விரல் அசைவில் அவனை இல்லாமல் செய்கிறாள். தன் விழிப் பரப்பையே அவன் உலகாக்கினாள். தன் கைத்துப்பாக்கியால் அவனை தினம் கொல்கிறாள். அவன் உண்டிக்கலயம்தான் அவள் ஆசனம்! அவன் நெஞ்சில் காலூன்றி அவன் குரல்வளை நெரிக்கிறாள்! முத்தத்தின் பெயர் கூறி அவன் முகத்தில் எச்சில் செய்கிறாள். தன் உலகின் வண்ணங்களால், அவன் புதுச்சட்டைக்கு பொங்கலிடுகிறாள்! …

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பையே வழங்கியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை காரணம் ஏதுமின்றி சுப்ரீம் கோர்ட்டு அவரை மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக …

அந்த வார்த்தையைக் கேட்டதும் அழுகை பொத்துக் கொண்டு வந்து விட்டது. எத்தனையோ கோபமான , துக்கமான , பதட்டமான சூழ்நிலையில் கூட அந்த அளவுக்கு சோகம் என்னை ஆட்டிப் படைத்ததில்லை. ஒரு பெற்ற தாயிடமிருந்து கேட்கப் படக்கூடாத ஒரு வினா. இது வரையில் ஆண்ட கட்சிகளின் சீமைத்தனத்தாலும், கார்ப்பொரேட்டுகளின் கசவாளித் தனத்தாலுமே நான் இப்படி ஒரு கேள்வியை எதிர்நோக்கி நகர்ந்து வந்திருக்கிறேன். லஞ்ச, லாவண்யங்களின் மேல் விழுந்து , புரண்டு, நக்கி …

மழைவேண்டி திருமணம் செய்த கழுதைகள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. கோயிலுக்கு நேர்ந்த ஆட்டை வெட்டி உண்ணாமல் வெறுமனே மண்ணில் புதைத்ததில்லை. பலியில் வெட்டுப்பட மறுத்த கோழிகள் பூசாரியின் கையைக் கீறி ரத்தம் தெளிக்கின்றன. நேர்ச்சையின் மொட்டைக்குப் பின்னும் மயிர்கள் வளர்ந்த வண்ணம் இருக்கின்றன. …

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,இளைய தளபதி விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் சர்க்கார் . ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி, கத்தி' ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டாகியிருப்பதால் இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது. …

கறி விருந்தில் ஏற்படும் சண்டை, தொடர் கொலையில் முடிய, கொல்லப்பட்டவனின் மனைவி, கொன்றவர்களின் குடும்பத்திலுள்ள கடைசி வாரிசு வரையில் வேரறுக்க முயற்சி செய்வது வரையில், காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவன் ரெண்டெ முக்கால் மணிநேரம் காதில் ரத்தம் வழிய காத்துக் கிடப்பதே சண்டக்கோழி இரண்டாம் பாகம். சண்டக்கோழி முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் கதையின் ஓட்டத்தில் இருக்கும் சம்பந்தம் கூட படத்தின் ஓட்டத்தில் இல்லை. விஷால் மற்றும் ராஜ்கிரண் தவிர்த்து வேறு …

"புதிய தரிசனங்கள்" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் நாவலாசிரியர் பொன்னீலன், அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், மணிக்கட்டி பொட்டலில் இயற்கை சூழ வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டுதான் அவரது புதிய தரிசனம்,மறுபக்கம் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளி வந்தது. தற்போது "பிச்சிப்பூ" நாவலை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவரைச் சந்திக்க சென்றிருந்தோம். முகம் முழுக்க சந்தோஷத்தில் இருந்தவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம் …

வடசென்னைப் பகுதியின் வழக்கமான கேங்க்ஸ்டர் படம்தான் வடசென்னை என்றாலும் சமீபத்திய அரசியலின் குடிமக்களின் மீதான கடும்போக்கை முன்னிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.வெற்றிமாறன். …

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகமான ஆறுகளைக் கொண்ட இந்தியாவில் இதுவரை நீர் வழிப்போக்குவரத்து பெரிதும் பயன்படாமல் இருக்கிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் அளவு மிகவும் குறைவு. தற்போது அமெரிக்காவில் 21 சதவீத சரக்குகள் நீர்வழிப்போக்குவரத்தில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 0.1 சதவீத …

மனிதனின் வாழ்க்கையின் பெரும் பகுதியை கல்வி , வேலை, குழந்தைகள், குடும்ப பிரச்சனை போன்றவற்றில் கழிக்கிறோம். கல்வி பயிலும் காலத்தில் படிப்பு, படிப்பு என அலையும் நாம் படித்து முடித்ததும் எப்போது வேலை கிடைக்கும்? எங்கு வேலை கிடைக்கும்? என பல குழப்பத்தில் இருக்கின்றோம் மேலும் வேலை கிடைத்தவுடன் பணிச்சுமை காரணமாக சோர்ந்து போகின்றோம். எனவே நமக்கு கிடைக்கும் வார விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரத்தில் தூக்கத்திலும் …

மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பால் ஆலன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 65ஆம் வயதில் காலமானாா். ஆலன் பால் , மைக்ரோ சாஃப்டின் நிறுவனரான பில் கேட்ஸின் பால்ய நண்பர் ஆவாா். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய இருவரும் 43 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். ஆலன், நிறுவனத்தில் பல புதிய மாற்றங்களை கொண்டுவந்து மைக்ரோசாஃப்டை தனது 30 வயதுக்குள் புதிய உச்சம் தொட வைத்தாா். …

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நெல்லையில் அரசு மருத்துவர்கள் இருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். …

முதல் அமைச்சர். எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தபடி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 70 இலட்சம் மாணவா்களுக்கு "ஸ்மார்ட் காா்டு" வழங்கப்படும் என தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளாா். …

இயற்கை விவசாயத்துக்கு முன்னோடியாகத் திகழும் சிக்கிமிற்கு ஐ.நா.சபை விருது அறிவித்து கவுரவப்படுத்தியுள்ளது. …

மும்பையில் உள்ள சத்ரபதி ஷிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஏர்- இந்தியா விமானத்தில் இருந்து தவறி விழுந்த விமான பணிப்பெண் காயமடைந்தார் என்று விமான நிலையம் தெரிவித்தது. இச்சம்பவம் இன்று காலை ஏர் இந்தியாவின் புதிய டெல்லி-பௌண்ட் விமானம் ஏஐ864இல் நடைபெற்றதாக தெரிவிக்கப் பட்டது.இச்சம்பவத்தை விமான நிலையம் "துரதிர்ஷ்டவசமானது" என்றும் இதுகுறித்து விசாரணை தொடங்க உள்ளதாக தெரிவித்தது. …

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற 2 கிாிக்கெட் அணிகளுக்கான டெஸ்ட் தொடாில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இரு அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. …

சைக்கோ அனாலிசிஸ் த்ரில்லர் படம் ஒன்றை இயக்குவதற்காக கேஸ் ஸ்டடிகள் செய்து ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டே தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறான் அன்பு எனும் இளைஞன். வாய்ப்பு கிடைக்காமல் இறுதியாக குடும்பத்தினரின் வற்புறுத்தலின் நிமித்தம் அக்காவின் கணவர் மூலம் போலீசில் சேர்கிறான். அந்த சமயத்தில் தொடர்ச்சியாக பதினைந்து வயதுக்குட்பட்ட பள்ளிச் சிறுமிகள் கடத்தப் பட்டு இரண்டு நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப் படுகிறார்கள். போலீஸ் துப்புத் …

உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைன்ட் நேம்ஸ் அண்ட் நம்பர் (ICANN) என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு அனைத்து இணையதள சர்வர்களின் தொடர்பும் இழக்கக்கூடும் என முன்னரே ரஷ்யா எச்சரித்தது. …

கொழுந்தியார் ஐரோப்பாவிலிருந்து வந்து போன் செய்தாள். அத்தான்! வேயழ் ஆழ் ஈயவ் ? ( Where are you வைத்தான் இப்படி கசக்கிப் பிழிந்திருந்தாள் ) நான், என்னம்மோ தமிழ் மறந்துட்டா ? யாம்ணா கொப்பன் இங்க்லீசுகாரந்தானே ? ஒழுங்கா தமிழ்ல பேசாம்ட்டி ! ( சற்றே சுதாரித்தவளாக ) எத்தான் ! எங்க இருக்க ? நேத்தி சாயந்திரம் வந்தேன். நான் அவளிடம் கேட்டேன். தம்பி வரலியாடே ? ( அவளது கணவன் ) அவள், …

தன் இளமையால், இளையோர் கவரும் இடைச் சிறுத்த பாட்டன் வயதொத்த தென்னைமரங்கள்! ஓயாது முத்தங்கள் பரிமாறும், அழகிய நீரோடையும் அதன் கரைதனில் செழும்பச்சை நாணலும்! தன் வேர்களால் நீரோடையோடு …

இந்திய வம்சாவழி பெண்ணான நிம்ரதா ஹேலி(நிக்கி ஹேலி) தனது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அதை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. …

கூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் பயனாளர்களின் கணக்கு விவரங்களை பாதுகாப்பாக வைக்க தவறிய காரணத்தினாலும், வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்க தவறிய காரணத்தினாலும், விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருப்பதாலும் தனது சமூக வலைதள சேவையான கூகிள் பிளஸ் ஐ பொது மக்களுக்கு மூடப்போவதாகவும், என்டர்ப்ரைஸ் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை தொடர போவதாகவும் அறிவித்துள்ளது, …

புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சன் ஜெய்ன்ட்ஸ்- தபாங் டெல்லி அணிகளும் மற்றோரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. …

இந்த ஹால்ஸ்டாட் நகரத்து வீதிகளில் பெண்கள் நடமாடவில்லை, பேய்கள் நடமாடுகின்றன! என்று கத்திவிட்டு காலியான கோப்பையை உடைத்தான் அவன். அப்போதுதான் அவனைக் கண்டேன். அவனது அருகில் ஒரு கித்தார் இருந்தது. …

தமிழகத்தில் அதிக மழை பொழிவை தருவது வடகிழக்கு பருவ மழை ஆகும். இந்த மழையானது அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும். இந்த வருடத்திற்கான மழை அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.இருந்தாலும் நாம் பாதுகாப்பாக இருக்க சில விஷயங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னவென்று இங்கே நாம் பார்க்கலாம். …

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த பிரித்வி ஷா, குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. …

வருகிற 7-ம் தேதி அதீத கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. …

நீங்க, நீங்களாவே இருந்து , நான் நாயாவே இருக்கணும்’னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்க எதுவும் மாறாது சார்! என்று பரியன் ஜோவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு விடை கொடுப்பான். அப்போது கேமரா வைட் ஆங்கிளில் இருந்து ஜூம் இன் போய், அவர்கள் குடித்து விட்டு வைத்த இரண்டு காலி டீ கிளாஸ்களில் வந்து நிற்கும். அத்தோடு படம் முடிகிறது. …

சென்னையின் பெரும்புள்ளியான சேனாபதியைக் குண்டு வீசி கொல்ல ரெண்டு பேர் முயற்சிக்கிறார்கள். அதில் சேனாபதியும், அவரது மனைவி லக்ஷ்மியும் காயங்களோடு தப்பிக்கிறார்கள். சேனாபதியின் மகன்கள் வரதன், தியாகு மற்றும் எத்திராஜ் ஆகியோர் தங்கள் பெற்றோரைக் கொல்ல முயற்சித்தது தன் தந்தையின் தொழில் எதிரியான சின்னப்பதாசன்தான் என்று சந்தேகிக்கிறார்கள். அதில் சின்னப்பதாசனின் மருமகன் கொல்லப்படுகிறான். பகை வளர்கிறது. ஒரு கட்டத்தில் சேனாபதியைக் கொல்ல முயன்றது அவரது மகன்களில் ஒருவன்தான் என்று சேனாபதிக்கு …

இயக்குனர்.மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாளும், இயக்குனர். மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன. மனுவின் பெருமைக் கதைகளைப் பேசும் ஒருவரும், மனுவால் தாங்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்துப் பேசும் ஒருவரும் தத்தமது படைப்புகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது சாத்தியமா? மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தைக் கொண்ட ஒரு படமும், எவ்வித பிரபல்ய அடையாளமுமற்ற ஒரு சாமானிய முகத்தையுடைய ஒரு நடிகனின் படமும் எப்படி போட்டியிட முடியும்? அதுதான் வரும் …

இரண்டு Demonologistகள் சேர்ந்து, தாங்கள் அதுவரைக்கும் சந்தித்த, விரட்டிய வாதைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் Demonstration செய்வதன் தொகுப்பைப் பதைபதைப்புடன் படமாக்கி, ரசிகர்களைப் பதற வைத்து, தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுமளவுக்கு Demonitization ரேஞ்சில் வெளியான The Conjuring படத்தின் மூன்றாம் பாகம்தான் The Nun. இயக்குனர் James Van தன்னுடைய கதையான Conjuring சீரிஸின் முதல் இரண்டு பாகங்களை தானே இயக்கி விட்டு, மூன்றாம் பாகமான The Nun …