Tamil Sanjikai

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓளரவு சரி செய்யும் வகையில், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கி உதவ, கேரள அரசு முன் வந்துள்ளது.

சென்னையில், பருமழை பொய்ப்பு, கடும் வெப்பத்தின் காரணமாக, கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டும் கடுமையாக சரிந்ததால், குடிநீர், இதர தேவைகளுக்கான நீரும் பற்றாக்குறையாக உள்ளது.

இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு உதவும் வகையில், திருவனந்தபுரத்திலிருந்து, 20 லட்சம் குடிநீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக, கேரள அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழக மக்களுக்கு குடிநீர் வழங்கி உதவ கேரளா முன் வந்துள்ளது

0 Comments

Write A Comment