Tamil Sanjikai

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள அமலக்கத்துறை அலுவலகத்தில் இன்று கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

0 Comments

Write A Comment