Tamil Sanjikai

பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனவத் அளித்த புகாரின் பேரில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்யா பாஞ்சோலி மீது மும்பை, வெர்சோவா போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் "மீடூ" எனும் கோஷம் உலகெங்கும் அண்மையில் பிரபலமானது.

10 ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் ஆதித்யா பாஞ்சோலி தமக்கு பாலியல் ரீதியான பல தொல்லைகளை கொடுத்து வந்ததாக பிரபல நடிக கங்கனா ரனவத்,அப்போதே பொதுவெளியில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறி,கங்கனா ரனவத்மீது பாஞ்சோலி மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கங்கனாவின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆதித்யா பாஞ்சோலி மீது தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment