சர்வதேச சமூகம் அனைத்தும் ஒன்றுபட்டு, தீவிரவாதத்திற்கு எதிராக, செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி சியோலில் கூறியுள்ளார்.
தென்கொரிய தலைநகர் சியோல் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு போர் வீரர்கள் தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் மாளிகையான "நீல இல்லம்" பிரதமர் மோடி சென்டர். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தென்கொரிய அதிபர் மூன்-ஜே-இன், அவரது மனைவி கிம்-ஜங்-சூக் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்தனர். இரு நாட்டு கொடிகள் தாங்கிய சிறார்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் தென்கொரிய அதிபர் மாளிகையில் மூன்-ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு தலைவர்கள் முன்னிலையில், முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
0 Comments