Tamil Sanjikai

சிரியாவில் விமானப்படைத் தாக்குதலில் இடிந்த கட்டடத்தில் இருந்து 2 நாட்களுக்குப் பின் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

வடமேற்குப் பகுதியில் போராளிகளைக் குறிவைத்து அரசுத் தரப்பினர் செவ்வாய்க்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில், ஏற்கனவே சிதிலமடைந்த கட்டடங்கள் மேலும் இடிந்து விழுந்தன. இந்தத் தாக்குதலில் 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், 5 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பல மணி நேரப் போராடி அந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

0 Comments

Write A Comment