Tamil Sanjikai

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது, முன்னாள் வீர்ரகள் கெளவுரவிக்கப்படுவார்கள். அவர்கள் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைப்பார்கள். நேற்றைய போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்தார். அசாருதீன் மீது சூதாட்ட புகார் ஏற்கெனவே கூறப்பட்டது. இதனால் அவருக்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வெற்றி பெற்றார்.

நேற்று அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈடன் கார்டன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக்குழு) மற்றும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தோல்வியடைந்து விட்டது. அசாருதீன் போட்டியை தொடங்கி வைத்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment