சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களுக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சத்வைந்தர் குமார் மற்றும் ஹர்ஜீத் சிங் ஆகிய இருவருக்கும். கொள்ளையடித்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், மற்றொரு இந்தியரான ஆரிஃப் இமாமுதின் என்பவரை அவர்கள் இருவரும் கொலை செய்துள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இந்த இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சவுதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலேயே இருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments