Tamil Sanjikai

பாலைவனச் சோலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் நேற்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜசேகர் பாரதிராஜாவின் முதல் படமான நிழல்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற ’இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலின் இவர் மிகவும் பிரபலமானார்.

சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உள்ளிட்ட திரைப்படங்களையும் ராஜசேகர் இயக்கியுள்ளார். இவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜசேகரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment