Tamil Sanjikai

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காஷ்மீருக்கு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அப்போது ராகுல் காஷ்மீருக்கு வந்து இங்கு உள்ள நிலைமையை பார்வையிட தயார் என்றால் அவருக்கு ஹெலிகாப்டர் அனுப்பத் தயார் என்று காஷ்மீர் ஆளுநர் தெரிவித்திருந்தார். இதையடுத்து காஷ்மீருக்குத் தான் வந்து ஆய்வு செய்யத் தயார் என்று கூறினார்.

அதன்படி இன்று அவர் காஷ்மீருக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரும் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment