Tamil Sanjikai

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 25-வது ஐ.பி.எல் லீக் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட், தீபக் சாஹர் 2 விக்கெட், சாண்ட்னெர் 1 விக்கெட், தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், சுரேஷ் ரெய்னா 4 ரன், கேதர் ஜாதவ் 1 ரன், டு பிளிஸ்சிஸ் 7 ரன், என அடுத்தடுது சொற்ப ரன்களில் சென்னை அணி தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இருப்பினும், அம்பத்தி ராயுடு மற்றும் டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டம் அணியின் ரன் வேகத்தை அதிகரித்தது.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து (155 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன்மூலம் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

சென்னை அணியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு 57 (47) ரன்கள், டோனி 58 (43) ரன்கள் எடுத்தனர்.

0 Comments

Write A Comment