Tamil Sanjikai

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட சேட்டிலைட் எந்தவொரு பருவ மாற்றங்கள் இருந்தாலும் உடனே புகைப்படங்களை அனுப்பும், மேக மூட்டங்கள் இருந்தாலும், இரவு நேரமாக இருந்தாலும் பருவ நிலை மாற்றம் குறித்து தெளிவான படங்கள் கிடைக்கும் என்றும் இது போல் மேலும் சில விண்கலத்தை அனுப்ப முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

சந்திராயன் -2 விண்கலம் வரும் ஜுலை 9 ல் இருந்து 16ந் தேதிக்குள் செலுத்தப்படும் என்றும் , அது செப்டம்பர் 6ந் தேதி சந்திரனில் தரையிறங்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022ம் ஆண்டு ஆகஸ்டு 15ந் தேதிக்கு பின்னர் பரிசிலிக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

0 Comments

Write A Comment