Tamil Sanjikai

"இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதம் பயன்படுத்தாது" என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் முன்னுக்கு பின் முரணாக பலவற்றை பேசி வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தற்போது தன் நிலைப்பாட்டில் மீண்டும் ஒரு யூ டர்ன் அடித்துள்ளார். அதாவது, ஏற்கனவே, இந்தியாவுடன் போர் தொடுப்பேன் என மிரட்டல் விடுத்த அவர், அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என கூறினார்.

இந்நிலையில் தற்போது, தன் நிலைப்பாட்டில் யூ டர்ன் நடித்துள்ள அவர், நாங்கள் முதலில் அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment