Tamil Sanjikai

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, அவதூறு கிளப்பும் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பா.ஜ.க இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காள அரசியலில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், பிரியங்கா சர்மா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், விடுதலையானவுடன் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment