Tamil Sanjikai

இலங்கையில், நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.

அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 215 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள்.

மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மேலும் 75 பேர் உயிர் இழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. நாளுக்குநாள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது, இன்றைய தகவல்களின்படி பலி எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.

0 Comments

Write A Comment