சென்னையில் ஓலா, உபேர் நிறுவனங்களை கண்டித்து 30 ஆயிரம் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஓலா, ஊபர் கால் டாக்சிகளுக்கான பயணக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.இதனால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, வேலைநிறுத்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments