Tamil Sanjikai

பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண், அந்த கருவைக் கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 வாரத்திற்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட வற்புறுத்துவதாக, பாலியல் வன்கொடுமையால் உருவான கருவைக் கலைக்க, சென்னையை சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதில், மத்திய அரசு சட்டப்படி, 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே மருத்துவ குழுவின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்றும், கருக்கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மத்திய அரசின் சட்டங்கள் குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருக்கலைப்பு குறித்து, போலீசாருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment