Tamil Sanjikai

நிகோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வரவில்லை.

கடலில் சீற்றம் எதுவும் இல்லாததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என Indian National Centre for Ocean Information Servicesஇன் தலைவர் எஸ்.பி.எஸ் ஷெனாய் தெரிவித்தார்.

இன்று காலை 8:45 மணியளவில் நிக்கோபார் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதமோ, பொருட்செதமோ குறித்த எந்த தகவலும் இதுவரை வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment