Tamil Sanjikai

கோவை அருகே பல் வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கரும்புகடையை சேர்ந்தவர் முஸ்தபா (24). இவர் கார் இருக்கைகள் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் கடுமையான பல் வலியில் அவதிப்பட்து வந்த அவர், அதே பகுதியில் உள்ள செல்வம் மெடிக்கலில் மாத்திரை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து மாத்திரையை பிரித்து சாப்பிடபோகும் போது, மாத்திரையில் ஏதோ இருப்பதை கண்டுள்ளார். உற்று நோக்கியபோது, அது இரும்பு கம்பி என்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மட்டுமின்றி மெடிக்கல் கடை உரிமையாளரே அதிர்ச்சியடைந்துள்ளார்.

0 Comments

Write A Comment