Tamil Sanjikai

பாகிஸ்தான் விமானப்படையுடன் ஏற்பட்ட மோதலின் போது மாயமான இந்திய போர் விமானி, சென்னையை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்ட மிக் 21 ரக விமானங்கள் புறப்பட்டன. நடுவானில் நடைபெற்ற மோதலில் இந்தியா ஒரு மிக் 21 ரக விமானத்தை இழந்தது. அதில் பயணித்த விமானி ஒருவர் மாயமானதை உறுதிப்படுத்தியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அவரை பாகிஸ்தான் தங்கள் வசம் வைத்திருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளதாகவும் ஆனால் அந்த தகவலை அந்நாடு இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்தது.

இதனிடையே மாயமான விமானி சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்றவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment