Tamil Sanjikai

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் நடிகை மதுமிதா. இவர் கடந்த வார இறுதியில் தன்னை தானே காயப்படுத்திய காரணத்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பிவரும் விஜய் டிவி சார்பாக மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஓன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் சேனல் நிர்வாகி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மதுமிதா தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளபாக்கியை விரைவில் தரா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மதுமிதா தனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியைத் தான் கேட்டேன். கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்காமல் விஜய் டிவி தான் மீது பொய் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment