தென் தமிழக கடலோர மாவட்டத்தில் இன்று மாலை முதல் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டத்தில் இன்று மாலை முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மலை சார்ந்த பகுதிகளில் பனி பொழிவு அதிகம் இருக்கும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
0 Comments