Tamil Sanjikai

கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் தமிழ் ஈழம். சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். மற்றொரு மகள் ஓவியா துடியலூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள தங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளிக்க வந்திருந்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரத்தால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்திருப்பதாகவும், தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Write A Comment