Tamil Sanjikai

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் விலையில் மாற்றம் செய்ய பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மானியமில்லாத சிலிண்டரின் விலை (ஜூலை -1ம் தேதி) இன்று நள்ளிரவு முதல் ரூ.100.50 காசு குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வரை ரூ.737.50 ஆக விற்கப்பட்டு வந்த மானியமில்லாத சிலிண்டர் நாளை முதல் ரூ.637 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மானிய விலை சிலிண்டரின் விலையில் குறிப்பிடத்தகுந்த வகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்று வரை ரூ.497.37 ஆக விற்கப்பட்ட மானிய விலை சிலிண்டர் நாளை முதல் ரூ.494.35 ஆக விற்கப்படும். சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம் காரணமாக இந்த விலை குறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் எரிவாயு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment