Tamil Sanjikai

நியூஸிலாந்து அணி உடனான 2வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 அவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. நியூஸிலாந்து அணியில் கோலின் டி கிராண்ட்ஹோம்மே அதிகபட்சமாக 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்தார்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், தவான் 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார் .தமிழக வீரர் விஜய் ஷங்கர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 18.5 ஓவர்களில் இந்திய அணி 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் இறுதியில் ரிஷப் பந்த் 40 ரன்களுடனும், தோனி 20 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

முதல் டி 20 போட்டியில் தோற்றதினால் இந்திய அணி தொடரை வெல்ல, வரும் 10ஆம் தேதி, ஹமில்டனில் வைத்து நடக்கவிருக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

0 Comments

Write A Comment