Tamil Sanjikai

சென்னையை அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மீது கற்கள் வீசி துன்புறுத்திய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைப்புலி மீது கல்லெறிந்து காயமடையச்செய்த சுற்றுலா பயணிகள் 6 பேருக்கு தலா ரூ.500 என ரூ.3000 அபராதம் விதித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வசூலித்த அபராதத்தொக்கை ரூ.3000 காயமடைந்த புலியை பராமரிக்க பயன்படுத்தப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment