ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் மற்ற செல்லுலார் நிறுவனகளை பின்னுக்கு தள்ளி லாபம் ஈட்டி வருகிறது இதனால், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் நெட்வொர்க்கை பலப்படுத்த அடுத்த 15 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிதித்துறை அதிகாரி அக்சயா மூன்ரா தெரிவித்துள்ளார்.
உரிமை பங்குகள் வெளியிட்டு 25 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டவும் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
0 Comments