Tamil Sanjikai

தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேமுதிக சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் கேக் வெட்டி, அப்பகுதி மக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும் என்றார்.

தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை என்ற விஜய பிரபாகரன், அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்புவார் என்றும் கூறினார்.

0 Comments

Write A Comment