Tamil Sanjikai

சென்னை அண்ணாசாலையில் மீண்டும் இருவழிப்பாதை மாற்றப்படவுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததால் மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது. அண்ணாசாலை ஜி.பி.ரோடு முதல் ஒயிட்ஸ் ரோடு வரை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளதால் செப்டம்பர் 11 மற்றும்12 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், வெலிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிக் கூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெமினி, தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் எல்ஐசி, டிவிஎஸ் வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம். அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment