Tamil Sanjikai

ஸ்விக்கி, உபெர் ஈட்ஸ் உள்ளிட்ட தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதால் அந்நிறுவளங்களின் மேலாளர்களுடன் போக்குவரத்து காவல் துறை இன்று ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனையின்போது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தனியார் உணவு விநியோக நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. விதிமீறல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று உணவு விநியோக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உணவு விநியோக ஊழியர்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக. சென்னையில் மட்டும் இதுவரை 2,051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.,

0 Comments

Write A Comment