Tamil Sanjikai

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன மழையினால் ஏற்பட்டுள்ள நீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.

0 Comments

Write A Comment