கடலூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை
பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 5 லட்சம் ரூபாய் அபராதமும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த வாரம் குற்றவாளிகள் 16 பேருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது
பாத்திமா மற்றும் கிரிஜா எனும் பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அன்பு என்கிற அன்பழகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிரியார் அருள்தாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை யம் வழங்கி கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
0 Comments