உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இந்திய அணிக்கான புதிய ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணியின் உலக கோப்பைக்கான புதிய ஆடையை கேப்டன் கோலி, அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோனி, பிரித்வி ஷா, ரஹானே, ஜஸ்பிரித் பும்ரா ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆடையை நைக்கி காலணி நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தோளில் இளம் ஊதா நிறத்திலும் ஏனைய இடங்களில் அடர் ஊதா நிறத்தையும் கொண்ட இந்த ஆடையின் முன் பகுதியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இலச்சினை இடம் பெற்றுள்ளது.
இந்த ஆடை கடந்த 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி பெற்றபோது அணிந்திருந்த சீருடையின் நிறமும், கடந்த 2007ம் ஆண்டு வெற்றி பெற்ற டி20 உலகக் கோப்பையின் நிறத்தையும் கலந்து இந்த புதிய ஆடை தயாரிக்கப்பட்டுள்ளதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
0 Comments