Tamil Sanjikai

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், பாஜக செயல்வீரர் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர்,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் தற்போது 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான் என்று தமிழிசை கருத்து தெரிவித்தார்.

மேலும் 5 மாநில தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என கருத்து தெரிவித்த அவர், மத்திய அரசின் நிவாரண பணிகளை, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்வது சரியல்ல என்றும் குறிப்பிட்டார்.

0 Comments

Write A Comment