Tamil Sanjikai

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த 3 முறை உலக சாம்பியனான கரோலினா மாரினை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், போட்டி முழுவதும் கரோலினா மாரின் ஆதிக்கம் செலுத்தினார். 40 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில், 16-21, 13-21 என்ற செட் கணக்கில் சாய்னா தோல்வி அடைந்து போட்டித்தொடரில் இருந்து வெளியேறினார். இறுதி போட்டியில் மாரின் தாய் நாட்டை சேர்ந்த ரட்சனோக் இன்டனோன் அல்லது மலேஷியா நாட்டை சேர்ந்த கோஹ் ஜின் வெய்யை எதிர்கொள்வார்.

0 Comments

Write A Comment