Tamil Sanjikai

பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதையடுத்து அங்கு இந்திய ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இன்று ஜம்மு காஷ்மீரில் ஊரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். ஆனால், இந்திய ராணுவம் அவர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .

மேலும், பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயற்சி செய்துள்ளதால் எல்லையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment