உதகையிலுள்ள ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மலைகளின் அரசி என்றழைக்கபடும் நீலகிரியில் பனியின் தாக்கம் குறைந்து, தற்போது இதமான காலநிலை நிலவுவதால் வெளி மாநிலக்களிலிருந்து சுற்றுலா பயணிகள், அதிகளவில் வருகை புரிகின்றனர். உதகையில் இடம்பெற்றுள்ள ரோஜா பூங்காவை பார்வையிடும் சுற்றுலா பயணிகள், சிவப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட பலவண்ண ரோஜா மலர்களை ஒரே இடத்தில் கண்டு பரவசம் அடைகின்றனர். ரோஜா மலர்கள் பூத்துகுலுங்கும் காட்சியை ஆர்வமுடன் பார்வையிடும் பயணிகள், அவற்றுடன் புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். குறிப்பாக இப்பூங்காவில் இடம்பெற்றுள்ள பச்சை நிற ரோஜா மலர்கள், சுற்றுலா பயணிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
0 Comments