Tamil Sanjikai

கோவா மாநிலத்தில் திருமணம் செய்வதற்கு முன்னர், தம்பதிகள் இருவரும் கட்டாயமாக எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளும் வகையிலான சட்டத்தை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், வருகிற மழைக்காலக் கூட்டத் தொடரில் சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். கோவா மக்களிடம் இருந்து வரும் பல்வேறு புகார்களை அடுத்து இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment