Tamil Sanjikai

இசைஞானி இளையராஜாவின் 75 வது பிறந்தநாளையொட்டி இன்றும் நாளையும் அவருக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து பாராட்டு விழா நடைபெறுகிறது. இன்று நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் திரையுலகினர் திரளாகக் கலந்துக் கொள்கின்றனர். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் இசைஞானியின் பாடல்களைப் பாடி, நடனமாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

நாளை இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments

Write A Comment