Tamil Sanjikai

உக்ரைனில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஸ்ஹவுசை சேர்ந்த ரிஸ்வான் என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். உக்ரைனில் , மருத்துவம் படிக்கும் மாணவி, சென்னையில் படித்தபோது, அவரை ரிஸ்வான் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், மாணவி காதலிக்க மறுத்ததால், ரிஸ்வான் மாணவியின் புகைப்படத்தை ஆபசாமக மார்பிங் செய்து மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், தற்போது ரிஸ்வானை போலீசார் கைது செய்துள்ளனர்.

0 Comments

Write A Comment