டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை ஏன் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றக் கூடாது? என்றும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்திருக்கும் பார்களை ஏன் மூடக்கூடாது? எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விகள் அனைத்திற்கும் வரும் மார்ச் 12ந் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
0 Comments