Tamil Sanjikai

தங்களது பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது, பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான மிகசிறந்த திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.ரூபாய் 96 க்கு ரீசார்ஜ் செய்தால் போதும். 6 மாதங்களுக்கு அன்லிமிடெட்டாக பேசும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்துக்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த திட்டத்தில், 21 நாள்களுக்கு ஒரு நாளைக்கு தலா 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பவும் இயலும்.

மொத்தத்தில், ஃபேஸ்புக், வாட்ஸ் -அப் உள்ளிட்ட டேட்டா அதிகம் தேவைப்படும் பயன்பாடுகளுக்காக இல்லாமல், பிறருடன் பேசுவதற்காக மட்டுமே மொபைல்ஃபோனை பயன்படுத்துவேன் என்போருக்கு, இந்த 96 ரூபாய் திட்டம் நல்ல வரபிரசாதமாகும்.

0 Comments

Write A Comment