Tamil Sanjikai

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16- ஆம் தேதி நிறுவ திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னாள் திமுக தலைவரான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது சிலையை, வரும் 15-ஆம் தேதி நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால், ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஆகியோர், விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்பட்டதால், சிலை திறப்பு விழா, அடுத்தமாதமான டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும், அப்போது, தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment