Tamil Sanjikai

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் பெரும் பாதிக்கப்பட்டிருந்த ‘நெல்’ ஜெயராமான் இன்று அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தவரான நெல் ஜெயராமன் 9-ம் வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ளார். இயற்கை விவசாயியான நம்மாழ்வார் உடன் இணைந்து முதலில் இயற்கை விவசாயம் தொடர்பான பல விழிப்பு உணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். அதன் பின்னர் தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி பயணமானார் 169 பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து மீட்டெடுத்தார்.ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். தொடர்ந்து பல்வேறு இயற்கை விவசாயிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வந்தவர் கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.

முன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார். இந்தநிலையில் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ‘நெல்’ ஜெயாராமன் இன்று உயிரிழந்தார்.நெல்ஜெயராமன் இறந்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment