Tamil Sanjikai

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை சோதனைகள் நடந்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் களியங்காடு சாலையில் இன்று மாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். ஒரு தேர்தல் அதிகாரி, உதவியாளர்கள் மற்றும் காவலர்கள் மூன்று பேர் அடங்கிய குழுவும் வீடியோ ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு கேமரா மேனும் இந்தச் சோதனையில் பங்கேற்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த நிறைய வாகனங்கள் நிறுத்தப் பட்டு சோதனை செய்யப் பட்டன. அதில் ஓரிரு வாகனங்களில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முடிவில் அந்தப் பணத்துக்கான ஆதாரங்கள் ஒப்படக்கப் பட்டதால் அந்த வாகனங்கள் விடுவிக்கப் பட்டன.

அந்நேரத்தில் அங்கு ஹெல்மட் போடாமலும், செல்ஃபோன் பேசியபடியும், அதிவேகத்திலும் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் நிறையபேர் பிடிபட்டு போலீசாரால் எச்சரித்து அனுப்பி வைக்கப் பட்டனர்.

0 Comments

Write A Comment