பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தம் மீதும் தமது குடும்பத்தினர் மீதும் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாகக்கூறி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக ஜெயராமனிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரது வீட்டில் வைத்து 3 மணிநேரம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது, தம் மீது யார் யார் தவறான கருத்துகளை பரப்பினார்கள் என்பது குறித்த தகவலை போலீசாரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தாக கூறப்படுகிறது.
0 Comments