Tamil Sanjikai

மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பிரதமர் மோடி வாக்களித்தார். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை எனக் கூறியுள்ள அவர், சிறந்த எதிர்காலத்தை தேர்வுசெய்ய அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலத்துக்கு இன்று அதிகாலையில் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் தமது தாயார் ஹீரா பேன்னை சந்தித்து ஆசி பெற்றார்.

வீட்டுக்கு வெளியில் பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கமிட்ட மக்கள் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அகமதாபாத் நகரில் ராணிப் என்ற இடத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்ற பிரதமர் மோடியை காந்திநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், கட்சித் தலைவருமான அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது அமித்ஷா குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையுடன் பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்தார்.

இதைத்தொடர்ந்து வாக்குச் சாவடிக்கு சென்று தனது வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார்.

0 Comments

Write A Comment