Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது இதன் மூலம், அந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் மீண்டும் நான்காவது இடத்துக்கு முன்னேறி, அரையிறுதியில் நுழைவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டுள்ளது.

பர்மிங்ஹாமின் எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இப்போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக, அந்த அணி வீரர்கள் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். அதன் பயனாக, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது.

338 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான ராகுல், ரன் எதுவும் எடுக்காமல் டக் -அவுட் ஆகி வெளியேறினார்.

அதையடுத்து, ரோஹித் சர்மாவுடன் கேப்டன் கோலி ஜோடி சேரவே, அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. இருப்பினும் கோலி அரைசதத்துடனும், ரோஹித் சர்மா சதம் அடைத்ததும் அவுட்டாகி வெளியேறவே இந்திய அணிக்கு தோல்வி முகம் தெரிய ஆரம்பித்தது.

அதன் பின் ரிஷப் பண்ட், ஹர்த்திக் பாண்டியா, தோனி என அனைவரும் அணியின் வெற்றிக்காக போராடினாலுமம் வெற்றிக்கான இலக்கை இந்தியாவால் எட்ட முடியவில்லை. 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணியால், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்களையே எடுக்க முடிந்தது. இதையடுத்து, இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக, ரோஹித் சர்மா - 102, விராட் கோலி - 66, ஹர்த்திக் பாண்டியா -45, தோனி - 42 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணியின் லைம் புலன்கிட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

0 Comments

Write A Comment