Tamil Sanjikai

பலராலும் வரவேற்கப்பட்ட சர்வதேச Airbnb நிறுவனம் மூலம் அயர்லாந்தில் வீடு ஒன்றை வாடைக்கு பிடித்த நியுசிலாந்து தம்பதி, நடுவறையில் ரகசிய கேமரா ஒன்று இருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நியுசிலாந்தை சேர்ந்த நீலி -ஆன்ட்ரியூ தம்பதி, சுற்றுலா பயணமாகதங்களது 5 குழந்தைகளுடன் அயர்லாந்து வந்துள்ளனர். Airbnb நிறுவனம் மூலம் ஆன்லைனில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த அவர்கள், 33 நாட்களுக்கு மேலாக அங்கு வசித்துள்ளனர்.

ஐடி துறையில் பணியாற்றும் ஆன்ட்ரியூ, ஏதோ அவசரத்துக்காக அங்குள்ள வைபையுடன் தனது செல்போனை இணைக்க முயன்றபோது, நடுவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புகார் அளித்தும், வீட்டு உரிமையாளர் சரியாக பதிலளிக்காததால், அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறிய அவர், மறுநாள் Airbnb நிறுவனத்திடம் இதுகுறித்து புகார் செய்தார். இதற்கு மன்னிப்பு கோரிய அந்த நிறுவனம் வாடகை பணத்தை திரும்ப கொடுத்ததோடு, விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள தம்பதி, தங்கும் இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக என்பதை அறிந்து முன்னெச்சரிக்கையாக செயல்படும்படி வலைதளவாசிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

0 Comments

Write A Comment