Tamil Sanjikai

கீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி மீண்டும் தொடங்க உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘5-ஆம் கட்ட ஆய்வுக்காக மத்திய அரசிடம் ரூ.2 கோடி கேட்டுள்ளோம். மாநில அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது. அரசியல் சாயம் கூடாது என்பதற்காக நாங்கள் 5-ஆம் கட்ட ஆய்வுக்காக கீழடிக்கு செல்லவில்லை. தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன் அங்கு செல்கிறார். தமிழர்களின் தொன்மையை தடுக்க விரும்பும் எந்த சக்தியும் வெற்றி பெறாது’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment